search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public Examination"

    • 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் வெற்றி பெற்ற புதுவை பொதுப் பணித்துறை ஊழியர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் குழந்தைகளை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழா பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது.
    • நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் வெற்றி பெற்ற புதுவை பொதுப் பணித்துறை ஊழியர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் குழந்தைகளை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழா பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். பொருளாளர் இளங்கோ முன்னிலை வகித்தார். தலைமை பொறியாளர்

    சத்தியமூர்த்தி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். சங்கத்தின் துணைத்தலைவர் சேகர், இயக்குனர்கள் சரவணன், அண்ணாமலை , வெங்கடேஸ்வரன், குணசேகரபாண்டியன், கருணாகரன், வீரபுத்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மழைக்கால நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.
    • அரசு பொதுதேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அகில இந்திய குலாலர் முன்னேற்ற சங்க சார்பில் மாநில மகளிர் மாநாடு பற்றிய ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் தியாகராஜன் நீலகண்டர் தலைமை யில் நடந்தது. மாவட்ட தலைவர் கணேஷ் பால்பாண்டி வரவேற்றார்.

    அரசு பொதுதேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது. கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தமிழகத்தில் உள்ள அனைத்து மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண தொகை ரூ10ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும்.

    மண்பாண்ட தொழிலாளர்களுக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்பு களில் 5 சதவீத இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். மண்பாண்ட தொழில் செய்ய களிமண் எண் எடுக்க தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், குமார், அசோக் உள்படபலர் கலந்து கொண்டனர்.

    10, பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வை மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு பதிலாக மே மாதம் முதல் வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக சுமார் இரண்டு ஆண்டுகள் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடக்கவில்லை. ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டன.

    இந்த நிலையில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை கடந்த செப்டம்பர் 1-ந் தேதியும், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கடந்த 1-ந் தேதியும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வந்தன.

    தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு தொடர்ச்சியாக வகுப்புகளை நடத்த இயலாததால், மாணவர்களுக்கு பாடங்களை முழுமையாக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நிகழ் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகளை மார்ச், ஏப்ரல், மாதங்களில் நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை அரசு தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மாணவர்களுக்கு உரிய பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்போதுமான கால அவகாசம் இல்லை என கூறப்படுகிறது.

    எனவே மாணவர்கள் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 பொது தேர்வுக்கு தயாராவதற்கு வசதியாக 2 மாதங்கள் தள்ளிவைத்து பொதுத் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பள்ளிக் கல்வித்துறை

    அதன்படி மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு பதிலாக மே மாதம் முதல் வாரத்தில் பொதுத் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

    இதையும் படியுங்கள்...வடகிழக்கு பருவமழை- தமிழகத்தில் 61 சதவீதம் இதுவரை கூடுதலாக பெய்துள்ளது

    11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2 மொழி பாடங்களுக்கு பதிலாக ஒரு மொழி பாடத்தை அமல்படுத்துவதற்கான பரிந்துரையை தமிழக அரசுக்கு, பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ளது.
    சென்னை:

    பள்ளி கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பு ஏற்றது முதல் கல்வித்துறையில் பல அதிரடியான மாற்றங்களை புகுத்தி வருகிறார். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளை போன்று 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுத்தேர்வு முறையில் மீண்டும் மாற்றங்களை கொண்டு வருவதற்கு பள்ளி கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது.

    9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு மொழி பாடங்களான தமிழ் முதல் தாள், இரண்டாம் தாள் என்றும், ஆங்கிலம் முதல் தாள், இரண்டாம் தாள் என்றும் பிரிக்கப்பட்டு தற்போது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் முதல் தாள், தமிழ் இரண்டாம் தாள் என்று இருப்பதை தமிழ் என்று ஒரே தேர்வாகவும், ஆங்கிலம் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் என்று இருப்பதை ஆங்கிலம் என்று ஒரே தேர்வாகவும் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தன.

    இதேபோல 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளில் மொழி பாடங்களாக தமிழ், ஆங்கிலம் என்று 2 பாடங்களும், 4 முக்கிய பாடங்களும் என மொத்தமாக 6 பாடங்களில் தலா 100 மதிப்பெண்கள் வீதம் 600 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 2 மொழி பாடங்களுக்கு பதிலாக ஏதாவது ஒரு பாடத்தை அமல்படுத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆங்கிலம் அல்லது தமிழ் ஆகியவற்றில் ஏதாவது ஒரு மொழி பாடத்தை மாணவர்கள் தேர்வு செய்யலாம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மொழிப்பாடம் ஒன்று குறையும் பட்சத்தில் தேர்வுகளின் எண்ணிக்கை 5 ஆக குறையும். இவ்வாறு குறையும்போது 600 ஆக இருந்த மொத்த மதிப்பெண்கள் 500 ஆக குறையும். இந்த முடிவுகளை நன்கு பரிசீலித்த பள்ளி கல்வித்துறை இதற்கான பரிந்துரையை, தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசு அனுமதி கொடுத்தால் இந்த கல்வி ஆண்டு முதலே புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.



    1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தற்போது தமிழ் மற்றும் ஆங்கில பாடத்துக்கு தலா ஒரு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்துக்கு ஒரே தேர்வு நடத்தினால் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மொழி பாடங்களுக்கு ஒரு தேர்வு முறை என்பது அமலுக்கு வந்துவிடும். மொழி பாடங்களுக்கு தலா ஒரு தேர்வு நடந்தால், தேர்வு நடத்தப்படும் நாட்களின் எண்ணிக்கை குறையும். மேலும் விடைத்தாள் திருத்தும் பணியும் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகனிடம் கேட்டபோது, பொதுத்தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவருவதற்கான திட்டம் அரசிடம் இருப்பதாகவும், இறுதி வடிவம் கொடுப்பது குறித்து அரசு தான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.
    மதுராந்தகம் அருகே 10-ம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில் தோல்வி பயத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #SSLC #SSLCResult
    மதுராந்தகம்:

    மதுராந்தகத்தை அடுத்த தண்டரை புதுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சிவா. இவரது மகள் சந்தியா (15). இவர் மொரப்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    அவர் பொதுத்தேர்வை சரியாக எழுதவில்லை என்று தெரிகிறது. இதுபற்றி அடிக்கடி பெற்றோர் மற்றும் தோழிகளிடம் கூறி வருத்தம் அடைந்தார்.

    இந்த நிலையில் இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு எழுதியிருந்த சந்தியா தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் இருந்தார்.

    தேர்வு முடிவை பார்க்காத சந்தியா இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே மாணவி சந்தியா தேர்வில் தேர்ச்சி பெற்றாரா? என்று அவரது தோழிகள் இணையதளத்தில் பார்த்தனர்.

    இதில் அவர் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருப்பது தெரிந்தது. தமிழ் -39, ஆங்கிலம்-35, கணிதம்-37, அறிவியல் -45, சமூக அறிவியல் -35 என மொத்தம் 191 மதிப்பெண் பெற்று இருந்தார்.

    தேர்வில் வெற்றி பெற்ற நிலையில் அதனை பார்க்காமலேயே தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பே தோல்வி பயத்தில் சந்தியா தற்கொலை செய்த சம்பவம் அவரது தோழிகள், உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #SSLC #SSLCResult
    தமிழக கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. #SSLCExam
    புதுச்சேரி:

    தமிழக கல்வித்திட்டத்தை பின்பற்றும் புதுவையிலும் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. தேர்வுகள் முதல் முறையாக மதியம் 2 மணிக்கு தொடங்கி 4.45 மணிக்கு முடிவடைகிறது. மாணவர்கள் கேள்வித்தாளை படித்துப்பார்க்க 15 நிமிடம் அவகாசம் அளிக்கப்படுகிறது.

    புதுவையில் உள்ள 239 பள்ளிகளில் இருந்து 6 ஆயிரத்து 988 மாணவர்களும், 6 ஆயிரத்து 970 மாணவிகளும் என மொத்தம் 13 ஆயிரத்து 948 பேர் 36 மையங்களில் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்கள் ஆயிரத்து 294 பேர் 6 மையங்களில் தேர்வு எழுதினர்.

    காரைக்காலில் உள்ள 63 பள்ளிகளில் இருந்து ஆயிரத்து 335 மாணவர்களும், ஆயிரத்து 477 மாணவிகளும் என மொத்தம் 2 ஆயிரத்து 812 பேர் 13 மையங்களில் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களில் மொத்தம் 800 ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 144 நிலைக்குழுவும், 8 பேர் கொண்ட 2 பறக்கும் படையும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். #SSLCExam

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. சுமார் 10 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். #SSLCExam
    சென்னை:

    2018-19-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. வருகிற 29-ந் தேதி வரை இந்த தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடைபெறும். மற்ற பாடங்களுக்கான தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.45 மணி வரை நடக்கும். இன்று பிற்பகல் தமிழ் முதல் தாள் தேர்வு தொடங்கியது.

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12 ஆயிரத்து 546 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 மாணவ-மாணவிகளும், தனித்தேர்வர்களாக 38 ஆயிரத்து 176 பேரும் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர்.



    தமிழ்நாடு, புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு மொத்தம் 3 ஆயிரத்து 731 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 133 தேர்வு மையங்கள் அதிகம் ஆகும்.

    சென்னை மாநகரில் 567 பள்ளிகளில் இருந்து 213 தேர்வு மையங்களில் 50 ஆயிரத்து 678 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.  வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் உள்ள 152 சிறைவாசிகள் புழல், திருச்சி, பாளையங்கோட்டை மற்றும் கோவை ஆகிய 4 சிறைகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

    தேர்வுக்காக 49 ஆயிரம் ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வு பணியில் அனைத்து நிலைகளிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகள் சிறப்பான முறையில் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 5 ஆயிரத்து 500 எண்ணிக்கையிலான பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். #SSLCExam

    2019-ம் ஆண்டுக்கான பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. ஆகிய பொதுத்தேர்வு கால அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. #PublicExamination #TimeTable
    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகள் நடைபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு அட்டவணை வெளியிடப்பட்டு வந்தது.

    பொதுத்தேர்வுகள் தான் மாணவர்களுடைய எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிப்பதால் அவர்கள் எந்தவித மன அழுத்தம் இன்றி தேர்வு எழுதுவதற்கு வசதியாகவும், ஆசிரியர்கள் முன்னதாகவே மாணவர்களை தயார் செய்யும் வகையிலும் கடந்த ஆண்டு தமிழக அரசு புதிய யுக்தியை கையாண்டது.



    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

    தேதி பாடம்

    மார்ச் 14-ந் தேதி தமிழ் முதல் தாள்

    18-ந் தேதி தமிழ் இரண்டாம் தாள்

    20-ந் தேதி ஆங்கிலம் முதல் தாள்

    22-ந் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்

    23-ந் தேதி விருப்ப பாடம்

    25-ந் தேதி கணிதம்

    27-ந் தேதி அறிவியல்

    29-ந் தேதி சமூக அறிவியல்

    பிளஸ்-1 தேர்வு

    மார்ச் 6-ந் தேதி தமிழ்

    8-ந் தேதி ஆங்கிலம்

    12-ந் தேதி கணிதவியல், விலங்கியல், வணிகவியல், மைக்ரோ-பயாலஜி.

    14-ந் தேதி இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம்.

    18-ந் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்.

    20-ந் தேதி வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்.

    22-ந் தேதி கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், கணினி பயன்பாடுகள், பயோ-கெமிஸ்ட்ரி, சிறப்பு பாடம் (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல் மற்றும் புள்ளியியல்.

    பிளஸ்-2 தேர்வு

    மார்ச் 1-ந்தேதி தமிழ்

    5-ந்தேதி ஆங்கிலம்

    7-ந்தேதி கணிதவியல், விலங்கியல், வணிகவியல், மைக்ரோ-பயாலஜி.

    11-ந்தேதி இயற்பியல், பொருளாதாரம்.

    13-ந்தேதி வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்.

    15-ந்தேதி கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, சிறப்பு பாடம் (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.

    19-ந்தேதி உயிரியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்கியல் மற்றும் தணிக்கை.

    பள்ளிகள் தொடங்கியவுடன் பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதியும், தேர்வுப்பாடங்கள் அட்டவணையும் வெளியிடப்பட்டது. அதன்படி வருகிற கல்வி ஆண்டில் நடைபெற உள்ள பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. ஆகிய பொதுத்தேர்வுகள் அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பழைய பாடத்திட்ட மாணவர்களுக்கும், புதிய பாடத்திட்ட மாணவர்களுக்கும் ஒரே தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு கொண்டிருக்கின்ற தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதலாக நிதிகளை ஒதுக்கி வருகிறார்கள். பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    அதனடிப்படையில் மொழி பாடங்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டு தாள்களையும் (தேர்வு) ஒரே தாளாக மாற்றி 6 பாடங்களுக்கு தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

    மாணவர்களுக்கு மன அழுத்ததை குறைக்கின்ற வகையிலும், ஆசிரியர்கள், பொதுமக்கள், சிறந்த கல்வியாளர்களின் கருத்துகளை கேட்டறிந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

    தமிழக முதல்-அமைச்சர் இந்த கோப்பில் (அரசாணை) கண் இமைக்கின்ற நேரத்தில் கையெழுத்திட்டார்.

    தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் அட்டவணை கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தற்போதே வெளியிடப்படுகிறது. அதன்படி பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது. மார்ச் 19-ந்தேதி தேர்வு முடிவடையும். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19-ந்தேதி வெளியிடப்படும்.

    பிளஸ்-1 வகுப்புகளுக்கு மார்ச் 6-ந்தேதி தேர்வு தொடங்கும். மார்ச் 22-ந்தேதி தேர்வு முடியும். மே 8-ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 14-ந்தேதி தொடங்கும். மார்ச் 29-ந்தேதி தேர்வு நிறைவடையும். ஏப்ரல் 29-ந்தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    தமிழ், ஆங்கிலம் 4 தாள்களை (பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள்) 2 தாள்களாக மாற்றி இருப்பதால் 8 தேர்வுகள் எழுதிய மாணவர்கள் இனி 6 தேர்வுகள் எழுதினால் போதும் என்பதால், தேர்வு முடிவுகள் 10 நாட்களுக்கு முன்பாகவே வெளியிட அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- இந்த தேர்வுக்கான இடைவெளி குறைக்கப்பட்டுள்ளதே?

    பதில்:- கடந்த ஆண்டு 3 நாட்கள் இடைவெளிவிட்டு தேர்வு நடத்தப்பட்டது. இப்போது 2 நாட்கள் என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண் என்று 1,200 மதிப்பெண்கள் வகுத்து இருந்தோம். ஆனால் இந்த முறை 100 மதிப்பெண் என்ற முறையில் 6 பாடங்களுக்கு 600 மதிப்பெண் என்று இருப்பதால், இந்த கால அவகாசமே மாணவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது.

    கேள்வி:- புதிய பாடப்புத்தகம் கடினமாக இருப்பதாக கூறப்படுகிறதே?

    பதில்:- 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் படிக்கிற மாணவர்களுக்கு புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் தேர்ச்சி அடைய செய்வதற்காக அரசு பள்ளிகள் நடைபெறும் நாட்கள் 180 ஆக உயர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

    மாணவர்கள் சிறப்பான முறையில் கற்றுக்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ‘ஸ்மார்ட் கிளாஸ்’ கொண்டு வருகிற போது, மாணவர்கள் தங்களுடைய இல்லங்களில் இருந்து பாடங்களை செல்போன் மூலம் வீட்டில் இருந்து சிறப்பான முறையில் கற்றுதர நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த ஆண்டு 3 ஆயிரம் பள்ளிகள். வருகிற ஆண்டில் 2 ஆயிரத்து 200 பள்ளிகள் என 5 ஆயிரத்து 200 பள்ளிகளில் ஸ்மார்ட் ‘கிளாஸ்’ கொண்டு வர திட்டங்கள் இருக்கிறது. ஐ.சி.டி. என்று சொல்லப்படுகிற 9, 10, 11, 12-ம் வகுப்பில் படிக்கிற மாணவர்களை ஒருங்கிணைந்து அந்த திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

    கேள்வி:- ஆசிரியர்களுக்கு எப்போது பயிற்சி அளிக்கப்படும்?

    பதில்:- அரசு பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு மட்டும் பேராசிரியர்கள் மூலம் குழுக்களை அமைத்து அடுத்த மாதம் முதல் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலம் 15 நாட்கள் ஆகும்.

    கேள்வி:- ‘நீட்’ தேர்வுக்கு 2 ஆண்டுகள் பயிற்சி பெற்றால் தான் நல்ல மதிப்பெண் பெற முடியும் என்று முதல் மதிப்பெண், 2-வது மதிப்பெண் பெற்ற மாணவிகள் தெரிவித்துள்ளனரே?

    பதில்:- ‘நீட்’ தேர்வை பொறுத்தவரையில் தமிழகத்துக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை. இருந்தபோதிலும் கடந்த ஆண்டு நமக்கு கிடைத்த அவகாசம் 4 மாதங்கள் தான். இந்த ஆண்டு முழுமையாக இருக்கிற போது, 2 ஆண்டு காலம் பயிற்சிகள் தேவை இல்லை. ஓராண்டு காலத்திலேயே முழுப்பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. புதிய பாடத்திட்டத்தில் 11-ம் வகுப்பு படிக்கிற மாணவர்களுக்கு 40 சதவீதம் நீட் தேர்வுக்கான கேள்விகள் இடம் பெற்றுள்ளது. எனவே ‘நீட்’ தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் வெற்றிவாகை சூடும் நிலை தமிழகத்தில் உருவாகும்.

    கேள்வி:- ‘நீட்’ தேர்வை ஆன்-லைன் மூலம் எழுதும் முடிவை தமிழக அரசு ஏற்குமா?

    பதில்:- மத்திய அரசு திடீரென்று கொண்டு வருகிற திட்டங்கள், எங்களிடம் வரும்போது அதற்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

    கேள்வி:- ‘வெயிட்டேஜ்’ முறையில்...

    பதில்:- 2013-ம் ஆண்டு வெயிட்டேஜ். 2017-ம் ஆண்டு வெயிட்டேஜ் வேறுபாடு இருக்கிறது. அன்றைய மதிப்பெண் வேறு. இன்றைய மதிப்பெண் வேறு. ஆகவே தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் பதிலளித்தார்.

    பேட்டியின்போது பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், இயக்குனர் ரெ.இளங்கோவன், அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி இயக்குனர் க.அறிவொளி மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனர் எஸ்.கண்ணப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.  #PublicExamination #TimeTable  #Tamilnews 
    பீகாரில் நடைபெற்ற 12-ம் வகுப்பு தேர்வில் மொத்த மதிப்பெண்ணைக் காட்டிலும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #Bihar #GeneralExam
    பீகார்:

    பீகார் பள்ளி தேர்வு வாரியம் 12-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை நேற்று வெளியிட்டது. அதில் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலருக்கு தாங்கள் எழுதிய தேர்வின் மொத்த மதிப்பெண்ணைக் காட்டிலும், கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

    இந்த சம்பவம் குறித்து பீகாரில் அர்வால் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் பீம் குமார் கூறுகையில், “கணித பாடத்திற்கு மொத்த மதிப்பெண் 35. ஆனால் நான் 38 மதிப்பெண் பெற்றுள்ளதாக தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் எனக்கு ஆச்சரியம் இல்லை. காரணம் இது போன்று நீண்ட காலமாக நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

    இதேபோல் கிழக்கு சாம்பரனிலிருந்து மாணவர் சந்தீப் ராஜ் கூறுகையில், ‘இயற்பியல் பாடத்திற்கு மொத்த மதிப்பெண் 35. நான் 38 மதிப்பெண் பெற்றுள்ளேன். இது எப்படி சாத்தியமாகும்’ என்று தெரிவித்தார். இதுபோல் தர்பாங்கா பகுதியைச் சேர்ந்த ராகுல்குமார் 35 மதிப்பெண்ணுக்கு எழுதிய கணித தேர்வில் அவருக்கு 40 மதிப்பெண்களை பீகார் மாநில பள்ளி தேர்வு வாரியம் வழங்கியுள்ளது.

    மேலும் தேர்வுக்கே வராத மாணவர்கள் சிலருக்கு கூட மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பது மாணவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் பள்ளி கல்வி வாரியத்தின் இந்த குளறுபடி மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
    ×