என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "procession"
- நகரில் மொத்தம் 41 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
- 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
சீர்காழி:
சீர்காழியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சீர்காழி நகர் மற்றும் புளிச்சக்காடு, நந்தியநல்லூரர், பட்டவி ளாகம், திட்டை, கோயில்பத்து, வினாயக ர்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆபத்து காத்தவிநாயகர், கணநாதர், சித்திவிநாயகர்,விஸ்வரூப விநாயகர்.
மாணிக்க விநாயகர், செங்கழுநீர் விநாயகர், ராஷ்ட்ர விநாயகர், சித்திவிநாயகர், வீரசக்திவிநாயகர், செல்வவிநாயகர் என 41 இடங்களில் விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டு 3தினங்கள் வழிபாடு நடைபெற்றது.இதனிடையே திங்கள்கிழமை 5விநா யகர்சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்ட நிலையில் செவ்வாய் இரவு மீதமுள்ள 36விநா யகர்சிலைகளும் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டது.
முன்னதாக சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு அனைத்து விநாயகர் சிலைகளும் சிறப்பு பேன்டு வாத்தியம், வாணவே டிக்கையுடன் ஊர்வலமாக பழைய பேருந்துநிலையத்தில் ஒன்றிணைந்து சிதறு தேங்காய் உடைக்கப்பட்ட பின்னர் ஊர்வலமாக உப்பனாற்றுக்கு சென்றது.
உப்பனாற்றில் அனைத்து விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டன.இதில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் கே.சர ண்ராஜ்,விநாயகர் சதுர்த்தி விழாக்குழு ஒருங்கிணை ப்பாளர் வி.கே.செந்தில்கு மார், மற்றும் பலர் பங்கே ற்றனர். சீர்காழி டி.எஸ்.பி.லா மெக் மேற்பார்வையில் , காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் ௨௦௦-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டி ருந்தனர். பூதலூர் ஆனந்த காவேரி வாய்க்கால் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்த விநாயகர் கோவில் அருகில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீ விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
நேற்று மாலை ஸ்ரீ விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கார ஊர்தியில் வைக்கப்பட்டு பூதலூர் பெரியார் புரத்தில் இருந்து அதிரடி இசை முழங்க ஊர்வலம் தொடங்கியது.ஊர்வலம் வடக்கு பூதலூர் வந்த போது மழை பெய்தது மழையில் நனைந்து கொண்டே விநாயகர் ஊர்வலம் சென்று வெண்ணாற்றில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.
- நீலாயதாட்சி அம்மன் கோவில் முன்பு யாகசாலை பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
- சிறிய விநாயகர் சிலை படகில் கொண்டு செல்லப்பட்டு வெட்டாற்றில் கரைக்கப்டுகிறது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 32 அடி உயர அத்தி மரத்திலான விஸ்வரூப விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதற்கு முன்னதாக ஒன்றரை அடி உயர களிமண்ணால் ஆன விநாயகர் சிலை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் வைக்க ப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடந்தது.
இதையடுத்து இரவு 32 அடி உயர அத்திமரத்திலான விநாயகர் சிலை ஊர்வல த்தையடுத்து நீலாயதாட்சி அம்மன் கோவில் முன்பாக யாக பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை ஊர்வல வாகனத்தில் எழுந்தருள செய்யப்பட்டது.
தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
ஊர்வலம் கோவில் முன் தொடங்கி நீலா கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி, அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி சாலை, காடம்பாடி, பால் பண்ணை ச்சேரி வழியாக நாகூர் வந்தது. ஊர்வலத்தின் முன்பாக மங்கள இசையுடன் பல்வேறு கச்சேரிகள் இசைக்கப்பட்டது.
இன்று(19ம் தேதி) காலை ஊர்வலம் நாகூர் வெட்டாற்று பாலத்தை வந்தடைந்ததும் விஸ்வரூப விநாயகருக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த சிறிய விநாயகர் சிலையை படகில் கொண்டு செல்லப்பட்டு வெட்டாற்றில் கரைக்கப்டு கிறது ஊர்வலத்தை முன்னிட்டு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- வடமாநிலத்தவர்கள் 380-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை தயார் செய்து வைத்திருந்தனர்.
- சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லலாம். ஆனால் அதனை நீர்நிலைகளில் கரைக்கக்கூடாது.
நெல்லை:
விநாயகர் சதுர்த்தி விழா நாளை(திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பாளை சீவலப்பேரி ரோட்டில் உள்ள கிருபா நகரில் வடமாநில தொழிலாளர்கள் தயாரிக்கும் விநாயகர் சிலைகளை இந்து அமைப்பினர் வாங்கி சென்று பிரதிஷ்டை செய்வார்கள். பின்னர் அதனை நீர்நிலைகளில் கரைப்பார்கள்.
இந்த ஆண்டும் வழக்கம்போல் அங்கு 380-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வடமாநிலத்தவர்கள் தயார் செய்து வைத்திருந்தனர்.
இந்து அமைப்பினரும் அந்த சிலைகளை வாங்குவ தற்காக முன்பணம் செலுத்தி வைத்திருந்தனர். அதில் ரசாயன கலவை இருந்ததால் சிலைகளை விற்க அனுமதி மறுக்கப்பட்டு குடோன் சீல் வைக்கப்பட்டது.
அனுமதி
அந்த விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி, பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தயாரான விநாயகர் சிலைகளை வழி பாட்டுக்கு எடுத்து செல்ல மதுரை ஐகோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது. உடனடியாக நேற்று இரவில் விநாயகர் சிலைகளை வழிபாட்டுக்காக இந்து முன்னணியினர் எடுத்து சென்றனர்.
தொடர்ந்து நாளை மாநகர பகுதியில் 78 இடங்கள் உள்பட சுமார் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த சிலைகளை வருகிற 24-ந்தேதி வரை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான போதிய வெளிச்சம் உள்ள இடத்தில் வைத்து பூஜை செய்ய மாநகர போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
அறிவுறுத்தல்
வருகிற 24-ந்தேதி இந்த சிலைகள் அனைத்தையும் ஊர்வலமாக எடுத்துச் செல்லலாம். ஆனால் அதனை நீர்நிலைகளில் கரைக்கக்கூடாது என்ற நிபந்தனைக்கு உட்பட்டு இந்து அமைப்பினர் சிலைகளை எடுத்து சென்றனர்.
மேலும் நெல்லை மாவட்டத்தில் மாசு விளைவிக்காத விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடங்களை இன்று மாலை போலீசார் அறிவிக்கின்ற னர். அந்த இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும் அந்த இடங்களில் தேவையான போலீஸ் பாதுகாப்பும் போடப்படுள்ளது.
- சீர்காழி நகரில் மட்டும் 40 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
- ஊர்வலமாக உப்பநாற்றுக்கு சென்று விசர்ஜனம் செய்யப்படுகிறது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்ட இந்து முன்னணி தலைவரும் மாவட்ட விநாயகர் கமிட்டி தலைவருமான சரண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் , சீர்காழி, மங்கை மடம், பூம்புகார், மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு ஆகிய இடங்களில் 147 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி அன்று இந்த விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்யப்பட்டு மறுநாள் அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகிறது.
சீர்காழி நகரில் மட்டும் 40 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மறுநாள் பழைய பஸ் நிலையத்தில் அனைத்து விநாயகர் சிலைகளும் ஒன்றி ணைக்க ப்பட்டு பின்னர் ஊர்வ லமாக உப்பநாற்றுக்கு சென்று விசர்ஜனம் செய்யப்படுகிறது.
விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் ஊர்வலத்தில் அனைத்து பொதுமக்களும், பக்தர்களும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வருகிற 24-ந்தேதி இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் நடைபெற உள்ளது.
- புதிய பஸ் நிலையத்திலிருந்து போலீசார் அணிவகுப்பு ஒத்திகை புறப்பட்டது.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையில் வருகிற 24-ந்தேதி இந்து முன்னணி சார்பில் 31-ம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முத்துப்பேட்டையில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக புதிய பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்ட அணிவகுப்பு ஒத்திகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில், ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை முன்னிலையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் விவேகானந்தன், சோமசுந்தரம், ஆயுதப்படை டி.எஸ்.பி. சந்திரமோகன், இன்ஸ்பெக்டர்கள் முத்துப்பேட்டை ராஜேஷ், பெருகவாழ்ந்தான் முணியான்டி, எடையூர் அனந்த பத்மநாதன், களப்பாள் விஜயா, திருக்களார் செந்தில்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.
- சிவகங்கையில் உலக கடிதம் எழுதும் தின ஊர்வலம் நடந்தது.
- இந்த கோரிக்கை மனு கலெக்டரிடம் அளிக்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கையில் உலக கடிதம் எழுதும் தினத்தையொட்டி ஊர்வலம் நடந்தது. சிவகங்கை அரண்மனை வாசல் முன்புள்ள வேலுநாச்சியார் சிலை முன்பு ஊர்வலம் தொடங்கியது. நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று வண்ண கையெழுத்துகளால் எழுதப்பட்ட கோரிக்கை மனு கலெக்டரிடம் அளிக்கப்பட்டது.
- சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசி தப்ரூக் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
- சந்தனக்குடம் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று தர்காவை வந்தடைந்தது.
மெலட்டூர்:
பாபநாசம் அருகே வடக்குமாங்குடி வஞ்சுவழி பள்ளிவாசலில் உள்ள ஹஜ்ரத் அஷ்ஷெய்க் சைய்யது முகமது இனாயத்துல்லா தர்ஹாவின் கந்தூரி உற்சவம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அஷ்ஷெய்கு பதர் மலங்கு சாஹிபு வலியுல்லாஹ்வுக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசி தப்ரூக் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
மேலும் பள்ளிவாசல் தர்காவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட சந்தனக்குடம் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று, ரவ்லா ஷரீபில் பாத்திஹா ஓதி மீண்டும் பள்ளிவாசல் தர்காவை வந்தடைந்தது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை வடக்கு மாங்குடி ஜமாத்தலைவர் மற்றும் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், முனாபிக்கத்துல் அனாம் சங்கம், காயிதே மில்லத் படிப்பகம் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- அடியார்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- பண்ருட்டி யூனியன் அலுவலகம் அருகில் இருந்து திருமுறை ஊர்வலம் நடைபெற்றது.
கடலூர்:
திருவாசகம் என்பது தமிழில் பாடப் பெற்ற ஒரு பக்தி நூலாகும். இறைவன் மீதான துதிப்பாடல்களை சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்காகவும் இறைவனிடம் அழுதும், தொழுதும் பாடியதாகும். இந்த திருவாசகத்தை திருவாசக சித்தர் திருக்கழுகுன்றம் தாமோதரன் உலகம் முழுவதிலும் உள்ள சிவன் கோவிலுக்கு குழுவினரோடு சென்று முற்றோதல் நிகழ்த்தி வருகிறார் கடலூர் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் திருவிழா இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் திருவாசக சித்தர் திருக்கழு குன்றம் தாமோதரன் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கி பண்ணி சையுடன் திருவாசகப் பாடல்களை பாடினார்.
விழாவிற்கு வர்த்தக சங்கத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். வர்த்தக சங்க மாவட்ட செயலாளர் வீரப்பன் முன்னிலை வைத்தார். விழாவில் பண்ருட்டி எம்.எல்.ஏ., வேல்முருகன், பண்ருட்டி நகர மன்ற தலைவர் ராஜேந்திரன், துணைத்தலைவர் சிவா, முன்னாள் அமைச்சர் எம்.சி. தாமோதரன், நகைக்கடை அதிபர் வைரக்கண்னு, எஸ்.பி அருள், தட்சணா கேஸ் அதிபர் வக்கீல் தட்சிணாமூர்த்தி, வக்கீல் தமிழரசன், அகில இந்திய முந்திரி சங்க தேசிய செயலாளர் ராமகிருஷ்ணன், பிரதிபா கேஷ்யூஸ். அதிபர் மாயகிருஷ்ணன், தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்க மாநில தலைவர் கே.என்.சி. மோகன், வானவில் ராஜா மற்றும் அடியார்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு திருவதிகை வீரட்டா னேஸ்வரர் கோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது. முன்னதாக பண்ருட்டி யூனியன் அலுவலகம் அருகில் இருந்து திருமுறை ஊர்வலம் நடைபெற்றது.
- விழா நாட்களில் சமையல் போட்டி, மெகந்தி போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
- அற்புத வினாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு கோவிலை அடைந்தது.
திசையன்விளை:
திசையன்விளை வடக்குத் தெரு சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா 20-ந் தேதி தொடங்கியது.
விழா நாட்களில் விளையாட்டு போட்டிகள், கோல ப்போட்டி, சமய சொற்பொழிவு, இன்னி சை கச்சேரி, நாடகம், 1008 மாங்கல்ய பூஜை, திருவிளக்கு பூஜை, கம்ப்யூட்டர் போட்டி, சமையல் போட்டி, மெகந்தி போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
நேற்று இரவு பள்ளி மாணவ -மாணவிகளின் பரத நாட்டியம், சுடலை ஆண்டவர் இந்து புது எழுச்சி மன்றம் சார்பில் இன்னிசை கச்சேரி, கரகாட்டம் மற்றும் கலைநிகழ்ச்சி கள், வில்லிசை நாதஸ்வர கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது.
நள்ளிரவில் அற்புத வினாயகர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க பால்குட ஊர்வலம் புறப்பட்டு கோவிலை அடைந்தது. தொடர்ந்து சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்ய ப்பட்டு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை முதல் அதிகாலை வரை கோவில் வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சேம்பர் செல்வராஜ் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.
- மவுன ஊர்வலம் மற்றும் தனியார் மண்டபத்தில் கருத்தரங்கமும் நடைபெற இருந்தது.
- ஒன்றிய பார்வையாளர் செந்தில் ஆகியோர் முன்னிலையில் ஊர்வலம் செல்ல முயன்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அம்பேத்கர் சிலை அருகே மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஆகஸ்டு 14 தேச பிரிவின் சோக வரலாறு தின மவுன ஊர்வலம் மற்றும் தனியார் மண்டபத்தில் கருத்தரங்கமும் நடைபெற இருந்தது. இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பா.ஜ.க.வினர் மாவட்ட தலைவர் அருள் தலைமையில், ஒன்றிய தலைவர்கள் ராமச்சந்திரன், வேல்முருகன், மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட பொதுச்செயலாளர்கள் வக்கீல்ஜெய்துரை, ராஜேஷ், ஒன்றியபொது செயலாளர் கோவிந்தன், முத்தையன், ஒன்றிய பார்வையாளர் செந்தில் ஆகியோர் முன்னிலையில் ஊர்வலம் செல்ல முயன்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்த தும் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார், சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி உள்ளிட்ட காவலர்கள் விரைந்து வந்து, ஊர்வலம் செல்ல முயன்ற பா.ஜ.க.வினர் 53 பேரை கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
- மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.
- உழவர்கரை மாவட்ட த்தில் மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் தலைமையில் மவுன ஊர்வலம் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக 76-வது தேசிய பிரிவினையின் பயங்கர தினத்தை நினைவுகூறும் விதமாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.
உழவர்கரை மாவட்ட த்தில் மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் தலைமையில் மவுன ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன், ஜான் குமார் எம்.எல்.ஏ, மாநில துணைத் தலைவர்கள் ரவிச்சந்திரன், முருகன், பா.ஜனதா மாநில செயலாளர்கள் லதா, ஜெயந்தி பட்டியலின மாநில தலைவர் தமிழ்மாறன், அலுவலக செயலாளர் கவுரிசங்கர் உள்ளிட்ட பா.ஜனதா மாநில மாவட்ட தொகுதி அணி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மவுன ஊர்வலம் கதிர்காமம் பெண்கள் கலைக்கல்லூரி அருகில் துவங்கி இந்திராநகர் தொகுதி வழியாக முருகா திரையரங்கம் அருகில் நிறைவடைந்தது.
- 500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டனர்.
- அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக பேரணியான சென்றனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி சார்பில் தாய்ப்பால் வாரவிழா கொண்டாடப்பட்டது.
விழாவில் கருத்தரங்கம், ஆரோக்கியமான குழந்தை களுக்கான போட்டிகள், தாய்ப்பால் குறித்து தாய்மார்களுக்கு விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவின் நிறைவு நாளை யொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஊரக மற்றும் சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் திலகம் தலைமை தாங்கினார். கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் கமருல் ஐமான், ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் டாக்டர்கள் பிருந்தா, ரேணுகா, சாய் கண்ணன், மகேஸ்வரன், ஜானகி, செவிலிய கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை செவிலியர்கள், செயின்ட் சேவியர், மன்னை நாராயணசாமி மற்றும் கோநகர் நாடு ஆகிய செவிலியர் கல்லூரிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஊர்வலமானது கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆஸ்பத்திரியில் வந்து முடிவடைந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்