search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pregnant woman"

    • பிரசவ வலியால் துடித்ததால் பெண் கண்டக்டரான வசந்தம்மா, பாத்திமாவுக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்தார்.
    • பெண் கண்டக்டர் வசந்தம்மா கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் உதவியாளராக பணியாற்றி உள்ளார்.

    பெங்களூரு:

    அசாமை சேர்ந்தவர் பாத்திமா (வயது 22). இவரது கணவர் சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரேயில் உள்ள காபி தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான பாத்திமா கணவர் வேலை பார்க்கும் இடத்திற்கு பெங்களூருவில் இருந்து சிக்கமகளூரு நோக்கி புறப்பட்ட கர்நாடக அரசு பஸ்சில் சென்றார். அவருடன் மகன் மற்றும் மாமியாரும் சென்றனர்.

    அந்த பஸ்சில் வசந்தம்மா (52) என்ற பெண் கண்டக்டராக இருந்தார். பஸ், ஹாசன் அருகே உதயாபுரா பகுதியில் சென்றபோது, பாத்திமாவுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவரது மாமியாரும், பஸ்சில் பயணம் செய்த சக பயணிகளும் செய்வதறியாது திகைத்தனர்.

    பின்னர் அவரை பஸ்சில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால், பிரசவ வலியால் துடித்ததால் பெண் கண்டக்டரான வசந்தம்மா, பாத்திமாவுக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்தார்.

    இதையடுத்து டிரைவரிடம் பஸ்சை சாலையோரம் நிறுத்த சொல்லிய வசந்தம்மா, பஸ்சில் இருந்து பயணிகளை கீழே இறக்கிவிட்டார். பின்னர் தான் வைத்திருந்த பெட்சீட்டை வைத்து மற்ற பெண் பயணிகள் உதவியுடன் பஸ்சில் வைத்தே பாத்திமாவுக்கு வசந்தம்மா பிரசவம் பார்த்தார்.

    அப்போது அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே சக பயணிகள் ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்தனர். அந்த பெண், ஏழ்மையில் இருப்பதை அறிந்த வசந்தம்மா, தன்னிடம் இருந்த பணம் மற்றும் சக பயணிகளிடம் இருந்து பணம் வசூலித்து ரூ.1,500-ஐ அவரிடம் கொடுத்தார்.

    இதையடுத்து அந்த பெண்ணும், அவரது பச்சிளம் பெண் குழந்தையும் ஆம்புலன்ஸ் மூலம் சாந்திகிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர் தெரிவித்தனர்.

    பெண் கண்டக்டர் வசந்தம்மா கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் உதவியாளராக பணியாற்றி உள்ளார். அதன்பிறகு தான் அரசு பஸ் கண்டக்டராக பணியில் சேர்ந்தார். பிரசவ வார்டில் பணியாற்றிய அனுபவத்தை வைத்து பாத்திமாவுக்கு அவர் பிரசவம் பார்த்தார்.

    கர்ப்பிணி பெண்ணுக்கு மனிதாபிமானத்துடன் பிரசவம் பார்த்த கண்டக்டர் வசந்தம்மாவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

    • சுகந்தியை பிரசவத்திற்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
    • தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனிக்காமல் இரவு 8 மணி அளவில் பரிதாபமாக உயிர் இறந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் பெருமாள்கோவில்தெருவை சேர்ந்தவர் மணிவேல் இவரது மனைவி சுகந்தி (35)., இவர்பிரசவத்திற்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது சிகிச்சை பலனிக்காமல் இரவு 8 மணி அளவில் பரிதாபமாக உயிர் இருந்தாள் இது குறித்து பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.

    • மணிகண்டன் தனது தாய்க்கு சாதகமாக பேசியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • போலீசார், உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், கஜுவாக்கா பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் சாப்ட்வேர் என்ஜினியர். இவரது மனைவி சுவேதா (வயது 24). தம்பதிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

    மணிகண்டனின் தாய் அப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். சுவேதா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் அலுவலக வேலையாக ஐதராபாத் சென்றார்.

    இந்நிலையில் நேற்று மாலை மணிகண்டனின் தாய்க்கும் சுவேதாக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    பின்னர் மணிகண்டனின் தாய் ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்றுவிட்டார். மணிகண்டனுக்கு போன் செய்த சுவேதா உன்னுடைய தாய் அடிக்கடி என்னிடம் சண்டை போட்டு வருகிறார் என கூறினார்.

    அப்போது மணிகண்டன் தனது தாய்க்கு சாதகமாக பேசியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டை பூட்டிய சுவேதா பக்கத்து வீட்டுக்காரரிடம் சாவியை கொடுத்துவிட்டு விசாகப்பட்டினம் கடற்கரைக்கு சென்றார். அங்குள்ள காளி கோவில் அருகே சுவேதா கடலில் குதித்தார்.

    அவரை பல இடங்களில் தேடினர். அவரது மாமியார் இது குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்வேதாவை தேடி வந்தனர்.

    நள்ளிரவு 12 மணி அளவில் விசாகப்பட்டினம் கடற்கரையில் சுவேதா பிணமாக மிதந்தார்.

    ஸ்வேதாவின் பிணத்தை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் சுவேதாவின் அறையில் போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது ஸ்மைலி பொம்மையுடன் வெள்ளை பேப்பரில் 'எல்லாவற்றிற்கும் ஒரு பெரிய நன்றி' என்று சுவேதா மணிகண்டனுக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

    அதில் 'நான் இல்லாமல் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று எனக்கு எப்போதும் தெரியும். உங்களுக்கு உண்மையான வலி இருக்காது.

    எவ்வாறாயினும் உங்கள் எதிர்காலம். புதிய வாழ்க்கைக்கு ஆல் தி பெஸ்ட். பேசுவதற்கு நிறைய இருந்தாலும்.. நான் எதுவும் பேசவில்லை.

    உனக்கு எல்லாம் தெரியும். உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்' என தெரிவித்துள்ளார்.

    ரூ.10 லட்சம் வரதட்சணை போதவில்லை எனக்கூறி மாமியார் தொல்லையால் சுவேதா உயிரை மாய்த்துக்கொண்டதாக அவரது தாய் ரமா கதறி அழுதார்.

    இதுகுறித்து போலீசார், உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அனல் தாங்க முடியாத குழந்தை தன்னை தூக்கும்படி தாயிடம் கெஞ்சியது.
    • அனைவரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர ஒருவர் கூட அந்த பெண்ணுக்கு உதவ முன் வரவில்லை.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுவாதிகாவுக்கு நேற்று பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து அவர் ரெயில் நிலையத்தின் 1-வது நடை மேடையில் சக பெண் காவலர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே 2-வது நடைமேடையில் இருந்து கர்ப்பிணி பெண் ஒருவர் தனது 2 வயது குழந்தையுடன் கடும் வெயிலில் சிரமத்தோடு நடந்து வந்தார்.

    அந்த பெண் தனது குழந்தையை இடுப்பில் தூக்கி வைக்க முடியாமல் மூச்சு வாங்க தரையில் நடக்க வைத்து அழைத்து சென்றார். அனல் தாங்க முடியாத குழந்தை தன்னை தூக்கும்படி தாயிடம் கெஞ்சியது.

    இதை அங்கிருந்த அனைவரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர ஒருவர் கூட அந்த பெண்ணுக்கு உதவ முன் வரவில்லை.

    இதை பெண் காவலர்கள் கூட்டத்தில் இருந்த சப்-இன்ஸ் பெக்டர் சுவாதிகா கவனித்தார். அவர் உடனே கர்ப்பிணி பெண்ணின் நிலையை உணர்ந்து ஓடி சென்று அந்த குழந்தையை தூக்கிச் சென்று அவரது உறவினரிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ செய்தது. 

    • வழக்கு பதிவு செய்த போலீசார், ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.
    • 4 மாத கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே மணக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகள் சந்தியா (வயது 25). இவருக்கும் விழுப்புரத்தை அடுத்த சத்தியகண்டநல்லூரை சேர்ந்த திருமலை என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் ஆனது. இதில் கருவுற்ற சந்தியா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதையடுத்து தனது தாய் வீட்டில் சில நாள் தங்கி ஓய்வு எடுக்க சந்தியா மணக்குப்பம் கிராமத்திற்கு வந்தார்.

    இந்நிலையில் சந்தியாவிற்கு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து சந்தியாவை அவரது பெற்றோர், பாவந்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    பணியில் இருந்த நர்ஸ் சந்தியாவை பரிசோதித்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிந்துரைத்தார். இதையடுத்து 108 ஆம்புலன்சிற்கு போன் செய்யப்பட்டது.

    இதில் 108 ஆம்புலன்ஸ் தற்போது முண்டியம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், 1 மணி நேரம் கழித்தே வரும் என்று பதில் வந்துள்ளது. வேறு வழி இல்லாததால் அங்கேயே இருந்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து நள்ளிரவு 1.30 மணிக்கு ஆம்புலன்ஸ் வந்தது. இதில் சந்தியாவை ஏற்றும் போது அவர் மயக்க நிலைக்கு சென்றுவிட்டார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றவுடன், சந்தியாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சந்தியாவின் பெற்றோர் ஏழுமலை, சுமதி மற்றும் உறவினர்கள் அங்கு கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது. இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் சந்தியாவின் பெற்றோர் புகார் அளித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.

    ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததாலும், 108 ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்ததாலும், 4 மாத கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
    • கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை அதிகாரிப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தியா (வயது 23) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    தற்போது சந்தியா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு வாந்தியுடன், தலை சுற்றல் ஏற்பட்டது. கதவை திறந்து வெளியே வந்த சந்தியா, வாந்தி எடுத்த நிலையில் அருகில் இருந்த சாக்கடை கால்வாய் தவறி விழுந்தார்.

    இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்தியா பரிதாபமாக இருந்தார். தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

    சாக்கடை கால்வாயில் கர்ப்பிணி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சந்தியாவின் உடலை பார்த்து அவரது கணவர், உறவினர்கள் கதறி அழுதது காண்போர் கண்களை குளமாக்கியது.

    • கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு, கூல்டிரிங்ஸ் பாட்டிலில் விஷம் எடுத்து வந்து குடிக்க முயன்றார்.
    • உடனடியாக அமலாவிடம் இருந்து மருந்து பாட்டிலை பறித்து அவரை மீட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அடுத்த நரவலூரைச் சேர்ந்தவர் அமலா (வயது 25). இவர், நேற்று கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு, கூல்டிரிங்ஸ் பாட்டிலில் விஷம் எடுத்து வந்து குடிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக அமலாவிடம் இருந்து மருந்து பாட்டிலை பறித்து அவரை மீட்டனர்.

    பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது:-

    எனது முதல் கணவர் நோயால் பாதிக்கப்பட்ட தால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டோம். அதையடுத்து ராஜேஷ் என்பவரை 2-வது திரும ணம் செய்து கொண்டேன்.

    தற்போது நான் 3 மாத கர்ப்பமாக இருக்கிறேன். இந்நிலையில், என் மாமியாரும், அவரது ஆண் நண்பரும் சேர்ந்து, என்னை அடித்து துன்புறுத்துகின்ற னர். மேலும் எனது கணவரின் ஆண் நண்பர் என்னை தவறான தொடர்புக்கு அழைக்கிறார்.

    மேலும், வயிற்றில் உள்ள குழந்தை என்னுடையது இல்லை. அதனால், அதனை கலைத்துவிடும்படி கூறி கணவரும் அடிக்கடி அடித்து துன்புறுத்துகிறார். வேறு சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ததால், என் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்னை குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டனர். அதனால் சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்படுகிறேன்.

    இது குறித்து, நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் இதுவரை எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. அதனால், நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன் என்று கூறினார். தொடர்ந்து, அந்த இளம்பெண்ணை, போலீசார், சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலகம் முன், பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி யில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திண்டுக்கல்லில் வளைகாப்பு விழாவில் பங்கேற்ற ஒரு தரப்பினர் கர்ப்பிணியை சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அபிராமிகு ப்பத்தை சேர்ந்தவர் சக்திவேல்(32). இவருக்கும் தேனி மாவட்டம் தேவதா னப்பட்டியை சேர்ந்த நாகவேணிஎன்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    7 மாத கர்ப்பிணியாக இருந்த நாகவேணிக்கு நேற்று சிலுவத்தூர் சாலை யில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் பங்கேற்ற ஒரு தரப்பினர் திடீரென நாகவேணியை கர்ப்பிணி என்றும் பார்க்காமல் சரமாரியாக தாக்கினர். இதை தடுக்க வந்த அவரது கணவரையும் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.

    இதனால் மண்டபத்தில் பரபரப்பான சூழல் உருவானது. படுகாய மடைந்த 2 பேரும் திண்டு க்கல் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்ப ட்டுள்ளனர். இதுகுறித்து நகர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • டாக்டர்கள் நிஷாந்தினிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காமல் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.
    • மாவட்ட சுகாதாரதுறை அதிகாரிகளும், கர்ப்பிணி பெண் இறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கிர்த்திவர்மன். பூ வியாபாரி. இவரது மனைவி நிஷாந்தினி (வயது 22). இவர்களுக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் 2-வது பிரசவத்திற்காக மனைவி நிஷாந்தினியை நேற்று காலை வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அங்கிருந்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள், அரை மணி நேரத்தில் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர்.

    இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் நிஷாந்தினிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காமல் கால தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. பிரசவ வழியில் துடித்த நிசாந்தினி, சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    முறையான சிகிச்சை அளிக்காததாலும், கால தாமதம் செய்ததாலும் தான் நிஷாந்தினி உயிரிழந்துள்ளார் எனக் கூறி உறவினர்கள் மருத்துவமனையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் மாவட்ட சுகாதாரதுறை அதிகாரிகளும், கர்ப்பிணி பெண் இறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், நிஷாந்தினி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பணியில் இருந்த டாக்டர்களிடம் இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் கேட்டுள்ளது. 

    • கடையநல்லூர் அருகே உள்ள அச்சன்புதூர் பண்ணை வீட்டு தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் மனைவி முகிலா.
    • முகிலாவுக்கு திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

    நெல்லை:

    கடையநல்லூர் அருகே உள்ள அச்சன்புதூர் பண்ணை வீட்டு தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி முகிலா(வயது 19).இவர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவந்தபோது பாஸ்கரனை காதலித்து வந்துள்ளார்.

    பின்னர் அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்துள்ளனர். இதில் முகிலா கர்ப்பமானார். இதையறிந்த அவரது தந்தை மூக்காண்டி(40), முகிலாவை பாஸ்கரனின் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிட்டார். இதனால் அவரது பெற்றோர் கடந்த டிசம்பர் 17-ந்தேதி பாஸ்கரன்-முகிலாவுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

    திடீர் சாவு

    பாஸ்கரன் லோடுமேன் வேலைக்கு சென்று வந்தார். நேற்று மாலை அவர் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்த முகிலா படுத்திருந்தார். திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பாஸ்கரன் மற்றும் அவரது பெற்றோர் முகிலாவை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே முகிலா எவ்வாறு இறந்தார்? என்பது தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உறவினர்கள் தொட்டில் கட்டி அதில் சுமதியை உட்கார வைத்து தூக்கி கொண்டு நடைபயணமாக புறப்பட்டனர்.
    • வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த வனத்திற்கு நடுவே 3 கி.மீ தூரம் சுமதியை உறவினர்கள் தூக்கி வந்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அடுத்துள்ளது புதூர் ஊராட்சி.

    இங்குள்ள மண்ணா மலைக்கிராமத்தில் பழங்குடியின மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராம மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளுக்கு கூட பவானி ஆற்றை கடந்து தொங்கு பாலம் வழியாக தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுமதி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கு ஜனவரி மாதம் குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு சுமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவர் வலியால் துடித்தார். நள்ளிரவு நேரம் என்பதால் என்னசெய்வது என்று தெரியாமல் உறவினர்கள் தவித்தனர்.

    பின்னர் தொட்டில் கட்டி அவரை ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து உறவினர்கள் தொட்டில் கட்டி அதில் சுமதியை உட்கார வைத்து தூக்கி கொண்டு நடைபயணமாக புறப்பட்டனர்.

    தங்கள் ஊருக்கு நடுவே உள்ள பவானி ஆற்றை அங்குள்ள தொங்கு பாலத்தின் வழியே கடந்தனர். பின்னர் வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த வனத்திற்கு நடுவே 3 கி.மீ தூரம் சுமதியை தூக்கி வந்தனர். பிரதான சாலை வந்ததும், 108 ஆம்புலன்ஸ் மூலம் அங்குள்ள அட்டப்பாடி கோட்டத்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே கர்ப்பிணி பெண்ணை அவரது உறவினர்கள் தொட்டில் கட்டி தூக்கி வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    சாலை வசதி இல்லாததால் சாந்தியை ஆர்லா ஆஸ்பத்திரிக்கு 13 கிலோமீட்டர் டோலி கட்டி தூக்கி சென்றனர். அங்கிருந்து நர்ச்சிபட்டணம், அனகாபள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜ் மாவட்டம், கோயூர் மண்டலத்தில் ஜாஜிலபண்டா பகுதி உள்ளது. மலைப் பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து ஆர்லா பகுதி மருத்துவமனைக்கு செல்ல 13 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை வசதி இல்லை.

    மலை கிராம மக்கள் தங்களது சொந்த செலவில் சில கிலோ மீட்டர் தூரத்திற்கு தற்காலிகமாக சாலையை சீரமைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் சீரமைக்கப்பட்ட சாலை மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    இதனால் அப்பகுதி மக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு டோலி கட்டி ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்கின்றனர்.

    இந்த நிலையில் ஜாஜில பண்டாவை சேர்ந்தவர் சாந்தி. நிறைமாத கர்ப்பிணியான சாந்திக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. சாலை வசதி இல்லாததால் சாந்தியை ஆர்லா ஆஸ்பத்திரிக்கு 13 கிலோமீட்டர் டோலி கட்டி தூக்கி சென்றனர். அங்கிருந்து நர்ச்சிபட்டணம், அனகாபள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக மீண்டும் விசாகப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அலைக்கழித்தனர். நள்ளிரவு ஒரு மணியளவில் விசாகப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சாந்தியை பிரசவத்திற்காக அனுமதித்தனர். அங்கு அதிகாலை 3 மணி அளவில் சாந்திக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் கர்ப்பிணியை டோலிக்கட்டி தூக்கி சென்ற வீடியோ வைரலாக பரவியது.

    இதையடுத்து ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கலெக்டர் மற்றும் முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில் தற்போதாவது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சாலை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். 
    ×