search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையநல்லூர் அருகே கர்ப்பிணி பெண் திடீர் சாவு
    X

    கடையநல்லூர் அருகே கர்ப்பிணி பெண் திடீர் சாவு

    • கடையநல்லூர் அருகே உள்ள அச்சன்புதூர் பண்ணை வீட்டு தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் மனைவி முகிலா.
    • முகிலாவுக்கு திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

    நெல்லை:

    கடையநல்லூர் அருகே உள்ள அச்சன்புதூர் பண்ணை வீட்டு தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி முகிலா(வயது 19).இவர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவந்தபோது பாஸ்கரனை காதலித்து வந்துள்ளார்.

    பின்னர் அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்துள்ளனர். இதில் முகிலா கர்ப்பமானார். இதையறிந்த அவரது தந்தை மூக்காண்டி(40), முகிலாவை பாஸ்கரனின் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிட்டார். இதனால் அவரது பெற்றோர் கடந்த டிசம்பர் 17-ந்தேதி பாஸ்கரன்-முகிலாவுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

    திடீர் சாவு

    பாஸ்கரன் லோடுமேன் வேலைக்கு சென்று வந்தார். நேற்று மாலை அவர் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்த முகிலா படுத்திருந்தார். திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பாஸ்கரன் மற்றும் அவரது பெற்றோர் முகிலாவை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே முகிலா எவ்வாறு இறந்தார்? என்பது தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×