search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police security"

    • ஆயுதப்படை போலீசார் 51 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து பணி செய்து வருகிறார்கள்.
    • பகலில் 30 போலீசார் அரண் போல நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இரவு நேரத்தில் 21 போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடையேயான மோதல் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்வதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ராயபேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    அ.தி.மு.க. அலுவலகத்தில் புகுந்து ஓ.பி.எஸ். அணியினர் தாக்குதல் நடத்திய பின்னர் இந்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு 24 மணிநேரமும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    ஆயுதப்படை போலீசார் 51 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து பணி செய்து வருகிறார்கள். பகலில் 30 போலீசார் அரண் போல நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இரவு நேரத்தில் 21 போலீசார் கண்காணித்து வருகிறார்கள். அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

    இந்த சீலை அகற்றக் கோரி கோர்ட்டு உத்தரவிட்ட நேரத்தில் உரிய பாதுகாப்பு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமியிடம் அ.தி.மு.க. தலைமை கழக சாவியை கொடுத்த பின்னர் அ.தி.மு.க. கட்சி பணிகள் அங்கேயே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. இப்படி எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக கோர்ட்டு உத்தரவு இருந்த போதிலும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் தொடர்ந்து மல்லுக்கட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதன் காரணமாகவே அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பாதுகாப்பு தொடர்ச்சியாக போடப்பட்டு உள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இயல்பு நிலை எப்போது திரும்பும் என்கிற எதிர்பார்ப்பும் போலீசார் மத்தியில் நிலவுகிறது.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, அ.தி.மு.க.வில் இரு தரப்புக்கும் இடையே மோதல் சம்பவங்கள் சமீபகாலமாக நடைபெறவில்லை. இதனை கருத்தில் கொண்டு படிப்படியாக பாதுகாப்பை குறைக்கலாமா? என்பது பற்றி ஆலோசித்து வருகிறோம் என்றார்.

    • லாலாபேட்டையை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவில் மலை அடிவாரத்தில் திரண்டுள்ளனர்.
    • போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் முகுந்தராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காஞ்சனகிரி மலையில் 300 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் சுற்றுவட்டார பகுதிகளான அக்ராவரம், லாலாபேட்டை, நெல்லிக்குப்பம், மோட்டூர், டெல்லி குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    லாலாபேட்டையில் 7000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். முகுந்த ராயபுரம் மற்றும் லாலாபேட்டையை சேர்ந்தவர்கள் கோவிலை நிர்வகித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது சிவன் கோவில் முகுந்தராயபுரம் ஊராட்சியில் உள்ளதால் கோவில் சார்பில் அறக்கட்டளை தொடங்கி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அறக்கட்டளை நிர்வாகிகள் முகுந்தராயபுரத்தை சேர்ந்தவர்களாக மட்டும் இருப்பார்கள் என்றும் லாலாபேட்டை சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் லாலாபேட்டையை சேர்ந்தவர்களின் விவசாய நிலங்கள் முகுந்தராயபுரம் பகுதியில் உள்ளதால் அங்குள்ள 4 ஏரிகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் பயன்படுத்தக்கூடாது.

    சுடுகாடுகளை பயன்படுத்தக் கூடாது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலைக்கு வரக்கூடாது என கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த லாலாபேட்டை பகுதியை சேர்ந்த அனைத்து கட்சி பிரமுகர்கள் வியாபாரிகள் பொதுமக்கள் லாலாபேட்டை பஸ் நிலையம் அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று காலை திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் லாலாபேட்டையில் உள்ள அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல வைத்தனர்.

    மேலும் அறக்கட்டளை நிர்வாகிகள் இன்று தேர்வு செய்யப்பட உள்ளதால் லாலாபேட்டையை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவில் மலை அடிவாரத்தில் திரண்டுள்ளனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    • புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மதுரை மாநகரில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
    • இந்த தகவலை போலீஸ் கமிஷனர் அறிவித்துள்ளார்.

    மதுரை

    புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாளை (31-ம் தேதி) இரவு பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாக, அமைதியாக கொண்டாடும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

    அதன்படி நாளை இரவு பொது இடம், சாலைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். குடும்பத்துடன் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடுவது சிறந்தது. நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை.

    புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மதுரை நகரில் சுமார் 1300 போலீசார் மற்றும் 100 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மதுரை மாநகர் முழுவதும் வாகன சோதனைகள் நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் தேவையின்றி மோட்டார் வாகனங்களில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். அதிவேகமாக, கவனக் குறைவுடன் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மதுபானம் அருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது. மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.

    அனைத்து முக்கிய வழிபாட்டுத் தலங்களிலும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. வெளியூர் செல்பவர்கள் அருகிலுள்ள காவல் நிலை யத்தில் தகவல் தெரிவித் தால், அந்த பகுதியில் போலீ சாரின் ரோந்துக்கு ஏற்பாடு செய்யப்படும். இதனால் பூட்டிய வீடுகளில் திருட்டு சம்பவம் தவிர்க்கப்படும். கேளிக்கை விடுதிகளில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அனைவரும் போலீசாரின் நிபந்தனைகளை கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

    புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 2 மற்றும் 4 சக்கர ரோந்து வாகனங்கள் மூலம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் கண்காணிக்கப்படுவர். பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் பற்றி, போலீசாரின் கட்டணமில்லா தொலைபேசி எண்; 100-க்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தருவோர் பற்றிய விவரம் ரகசியமாக வைக்கப்படும். அவசர உதவி தேவைப்படுபவர்கள் "காவல் உதவி" என்ற அதிகாரப்பூர்வ செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்"

    மேற்கண்ட தகவலை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • கடலூர் மாவட்டத்தில் இன்று கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு நடைபெற்றது.
    • தேர்வர்களை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு பிறகு தேர்வு எழுத அனுமதித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் இன்று கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் 10 தாலுக்காவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு முன்னேற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளை வருவாய் துறை அதிகாரிகள் செய்திருந்தனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், சிதம்பரம், திட்டக்குடி உள்ளிட்ட 10 தாலுக்காவில் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு தேர்வு எழுத ஆயிரக்கணக்கான நபர்கள் விண்ணப்பித்தனர். இதில் 12 ஆயிரத்து 510 பேர் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு தேர்வு எழுதினர்.

    இன்று காலை 9.30 மணிக்குள் வருகை தந்த தேர்வர்களை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு பிறகு தேர்வு எழுத அனுமதித்தனர். பின்னர் காலை 10 மணிக்கு தொடங்கிய எழுத்து தேர்வு 11 மணிக்கு முடிந்தது இதனை வருவாய்த்துறை அதிகாரிகள் முழுவதும் தீவிரமாக கண்காணித்தனர். மேலும் தேர்வு மையங்களில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • வீடுகளில் பெட்ரோல் நிரப்பிய பைகளை மர்ம கும்பல் வீசி சென்றனர்.
    • விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    விழுப்புரம்:

    கோவையில் பா.ஜனதா அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். மேலும் பொள்ளாச்சியிலும் பல்வேறு இடங்களில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.பா.ஜனதா பிரமுகர்கள் வீடுகளில் பெட்ரோல் நிரப்பிய பைகளை மர்ம கும்பல் வீசி சென்றனர். இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கை யாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பா.ஜனதா, இந்து முன்னணி அலுவலகங்கள், பா.ஜனதா தலைவர்கள் வீடுகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் ெரயில் நிலையங்கள், கோவில், சர்ச், மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் முன்பும் தலைவர்கள் சிலைக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களி லும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போலீசார்மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே தீவிர வாகன சோத னையில் ஈடுபட்டனர். அதன்படி திண்டிவனம் நேரு வீதி நவாப் மஜித் அருகே விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன் தலைமையில் போலீசார் திடீரென தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.வாகன சோதனையில் பயங்கரவாதிகள் ஏதேனும் ஊடுருவி உள்ளார்களா? அல்லது பயங்கர ஆயுதங்களுடன் சந்தேகப்படும் படியான நபர்கள் யாரேனும் வருகிறார்களா? என போலீசார் வாகனங்களில் சோதனை நடத்தினர். திண்டிவனம் ஏ.எஸ்.பி. அபிஷேக் குப்தா, திண்டிவனம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு சீனிபாபு மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    • மகாளய அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே பொதுமக்கள் வருகை தந்தனர்.
    • தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியில் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கோபாலச முத்திரக்கரையில் மாதம் தோறும் அமாவாசை தினத்தில் ஏராளமானோர் தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம். ஆடி, தை, புரட்டாசி அமாவாசைகளில் மேலும் அதிகமானோர் இங்கு தர்ப்பணம் செய்ய வருவார்கள். அதன்படி இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே பொதுமக்கள் வருகை தந்தனர்.

    100 பேர்கள் கொண்ட குழுக்களாக பிரித்து அனுப்பி தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் நீண்ட நேரம் காத்திருந்து பலர் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். இேத போல பல்வேறு கோவில்களிலும் நடந்த பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    திண்டுக்கல்லில் நேற்று அதிகாலையில் பா.ஜ.க. நிர்வாகி குடோனுக்கு தீ வைக்கப்பட்டதால் வாகனங்கள் எரிந்து சேதமாகின. இதனைத் தொடர்ந்து போலீசார் பல்வேறு முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியில் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • கடந்த 3 நாட்களாக பல்வேறு இடங்களில் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வந்தது.
    • இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த 12 சிலைகள் முன்னீர்பள்ளம் பகுதியில் ஆற்றில் கரைக்கப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி சுமார் 300 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

    சிலைகள் ஊர்வலம்

    இதில் இந்து முன்னணி சார்பில் 100-க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. இதேபோல இந்து மக்கள் கட்சி, இந்து மகா சபா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பிலும் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக இந்து அமைப்புகள் சார்பாக பல்வேறு இடங்களில் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்ப ட்டு வந்தது.

    போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம்

    நெல்லை வண்ணார் பேட்டை உள்ளிட்ட மாநகர பகுதியில் இந்து மகா சபா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் தாமிரபரணி படித்து றையில் கரைக்கப்பட்டது.

    இந்து முன்னணி சார்பில் வண்ணார் பேட்டை, குறுக்குத்துறை, சுத்தமல்லி உள்பட மாநகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த 70 விநாயகர் சிலைகள் இன்று பிற்பகல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் தாமிரபரணி படித்து றையில் கரைப்படுகிறது.

    இதேபோல மேலப்பாளையம் மண்டல பகுதியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த 12 சிலைகள் முன்னீர்பள்ளம் பகுதியில் ஆற்றில் கரைக்கப்படுகிறது.

    புறநகர் பகுதி

    இதுதவிர திசையன்விளை பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் உவரி கடற்கரையிலும், களக்காடு பகுதியில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் நாங்குநேரி வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு உவரி கடலில் கரைக்கப்படுகிறது.

    சேரன்மகாதேவி, அம்பை, வீரவநல்லூர் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்படுகிறது.

    சிலைகள் ஊர்வலத்தையொட்டி மாவட்டம் முழுவதும் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்த நிலையில் 3 நாட்களாக சிலைகள் கரைக்கப்பட்டு வந்தன.

    கடைசி நாளான இன்று சுரண்டை, ஆழ்வார்குறிச்சி, கடையம்,சேர்ந்தமரம், ஆலங்குளம் உள்ளிட்ட இடங்களில் இருந்து மொத்தம் 77 சிலைகள் இன்று சுமார் 6 இடங்களில் கரைக்கப்பட்டன. இதனையொட்டி மாவட்டத்தில் சுமார் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    தூத்துக்குடி

    தூத்து க்குடி மாவ ட்டத்தில் இன்று 300 சிலைகள் கரை க்கப்பட்டன. முத்தை யாபுரம், கூட்டம்புளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செ ல்ல ப்பட்டது. மாநகர பகுதியில் தெர்மல் நகர், திரேஸ்புரம் உள்ளிட்ட இடங்களில் கரை க்கப்பட்டது. இதேபோல் மாவட்ட த்தில் வேம்பார், திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களில் கரைக்கப்பட்டன.

    இதனையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சத்யராஜ் தலைமையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • 5000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
    • அனைத்து சரக்கு வாகனங்களும் இரவு 10 மணி வரையில் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகர் மற்றும் மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தியையொட்டி 5000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த சிலைகளுக்கு தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இன்று மாலை விநாயகர் சிலைகள் விஜர்சன ஊா்வலம் நடக்கிறது. பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த ஊர்வலத்தில் விநாயகர் சிலைகள் அணிவகுத்து செல்கின்றன. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்பு நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்கின்றனர்.

    விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி திருப்பூர் மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மாநகரக் காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாநகரில் அனைத்து சரக்கு வாகனங்களும் இன்று இரவு 10 மணி வரையில் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விநாயகா் விசா்ஜன ஊா்வலத்தின்போது கோவை டிபாா்ட்மென்ட் ஸ்டோா் அருகிலிருந்து புறப்பட்டு புதிய பேருந்து நிலையம் வரை அவிநாசியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திருமுருகன்பூண்டியில் இருந்து பூலுவபட்டி வழியாக செல்ல வேண்டும்.

    திருப்பூா் புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் பிற்பகல் 12 மணி முதல் 60 அடி சாலையில் பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டுவிட்டு கேவிபி. சந்திப்பு, புஷ்பா சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். அதேபோல, பெருமாநல்லூா் சாலையிலிருந்து புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் அனைத்துப் பேருந்துகளும் பூலுவபட்டி சந்திப்பில் திருப்பி விடப்பட்டு திருமுருகன்பூண்டி சுற்றுச்சாலை வழியாக அவிநாசி சாலையை அடைந்து வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சந்திப்பு வழியாக சென்று புஷ்பா சந்திப்பில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும்.

    பெருமாநல்லூா் சாலையில் இருந்து புதிய பேருந்து நிலையம் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் பிற்பகல் 1 மணி முதல் பூலுவபட்டி நான்கு சாலையில் திருமுருகன்பூண்டி மற்றும் வாவிபாளையம் சாலையில் திருப்பி விடப்படும். அதேபோல, பொதுக்கூட்டம் நடைபெறும்போது நடராஜ் திரையரங்கம் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. மேலும், விநாயகா் விசா்ஜன ஊா்வலம் நடைபெறும்போது மில்லா் பேருந்து நிறுத்தம், திருப்பூா் பழைய பேருந்து நிலையம், வெள்ளியங்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.  

    • தொண்டி அருகே விநாயகர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 போலீசார் சிலையை பாதுகாத்து வருகிறார்கள்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் அம்மன் கோவில் உள்ளது.

    இங்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் நல இயக்கத்தின் தலைவர் இளையராஜா சார்பில் பக்தர்கள் வழிபாட்டிற்காக விநாயகர் சிலை வைக்கப்பட்டு அதற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிலைக்கு சேதம் ஏற்படாமலும், அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 போலீசார் சிலையை பாதுகாத்து வருகிறார்கள்.

    2 தினங்களில் பாகம்பிரியாள் அம்மன் கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து திருவெற்றியூர் கண்மாயில் இந்த சிலை கரைக்கப்படுகிறது.

    • விழா நடக்கும் இடங்களில் போலீசார் கேமராக்கள் மூலம் கண்காணித்தனர்.
    • முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    திருப்பூர் :

    சுதந்திர தினவிழாவையொட்டி திருப்பூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. திருப்பூர் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழா நடைபெறும் சிக்கண்ணா கல்லூரி மைதானம் ஆகியவை போலீசாரின் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டது. விழா நடக்கும் இடங்களில் போலீசார் கேமராக்கள் மூலம் கண்காணித்தனர்.

    ரெயில் நிலையம் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல் திருப்பூர் மாநகர் முழுவதும் போலீசார் ரோந்துப்பணிகள், வாகன சோதனையில் ஈடுபட்டனர். மாநகரில் 10-க்கும் அதிகமான இடங்களில் விடிய, விடிய வாகன சோதனைகள் நடத்தப்பட்டது. முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.இது தவிர மாவட்டத்தின் பிற பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

    • தனியார் ஆசிரமத்தில் 100-க்கும் மேற்பட்டோருக்கு மொட்டையடிக்கப்பட்டது
    • 2 இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    வடவள்ளி, ஜூலை.26-

    கோவை மாநகரில் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் என 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தங்கியிருந்த ஆதரவற்றவர்கள் மீட்கப்பட்டனர்.

    அவர்கள் கோவை அருகே தொண்டாமுத்தூர் கெம்பனூர் பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 100-க்கும் மேற்பட்டவர்களை மொட்டை அடித்து தாக்கி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் காப்பகத்தை முற்றுகையிட்டனர். அங்கிருந்த நிர்வாகிகளிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேரூர் தாசில்தார் இந்துமதி, கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் அந்த காப்பகம் அனுமதியின்றி செயல்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விழுப்புரத்தைச் சேர்ந்த காப்பக நிர்வாகி ஜிபின் பேபி (வயது 44), பி.என். புதூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் (43), சென்னையைச் சேர்ந்த செல்வின் (49), அருண் (36), தர்மபுரியைச் சேர்ந்த பாலச்சந்திரன் (46), சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜார்க் (45) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    அவர்கள் மீது மிரட்டல், தாக்குதல், அத்துமீறி அடைத்து வைத்தல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 6 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் மைதானத்தில் காப்பக நிர்வாகிகளை கண்டித்து போராட்டம் நடைபெற உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து மாரியம்மன் கோவில் மைதானத்திலும், அட்டுக்கல் பகுதியில் உள்ள தனியார் ஆசிரமம் முன்பும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு போராட்டக்காரர்கள் யாரும் நுழையாமல் இருக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். 

    • கவர்னர் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம் மற்றும் அவர் கார் மூலம் நீலகிரி செல்லும் சாலை, ஊட்டி ராஜ்பவன், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    • அங்கு கவர்னர் எந்தெந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

    ஊட்டி:

    தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 5 நாள் பயணமாக இன்று ஊட்டிக்கு வருகிறார்.

    சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் புறப்படும் கவர்னர், மதியம் கோவை விமான நிலையம் வந்தடைகிறார். இங்கிருந்து கார் மூலம் அவர் மேட்டுப்பாளையம், கோத்தகிரி, தொட்டபெட்டா வழியாக மாலையில் ஊட்டி சென்றடைகிறார். ஊட்டியில் ராஜ்பவன் மாளிகையில் அவர் தங்குகிறார்.

    வருகிற 9-ந் தேதி வரை அவர் ஊட்டியில் தங்கியிருக்கிறார். அங்கு அவர் எந்தெந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஏற்கனவே கடந்த மாதம் ஊட்டியில் நடந்த மலர் கண்காட்சி நிறைவு விழாவில் கவர்னர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

    இந்தநிலையில் அவர் ஊட்டிக்கு இன்று வருகை தர உள்ளார். 9-ந் தேதி காலை ஊட்டியில் இருந்து கோவை வந்து விமானம் மூலம் சென்னை செல்ல அவர் திட்டமிட்டு இருக்கிறார்.

    கவர்னர் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம் மற்றும் அவர் கார் மூலம் நீலகிரி செல்லும் சாலை, ஊட்டி ராஜ்பவன், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

    ×