search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு
    X

    விநாயகர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு

    • தொண்டி அருகே விநாயகர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 போலீசார் சிலையை பாதுகாத்து வருகிறார்கள்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் அம்மன் கோவில் உள்ளது.

    இங்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் நல இயக்கத்தின் தலைவர் இளையராஜா சார்பில் பக்தர்கள் வழிபாட்டிற்காக விநாயகர் சிலை வைக்கப்பட்டு அதற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிலைக்கு சேதம் ஏற்படாமலும், அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 போலீசார் சிலையை பாதுகாத்து வருகிறார்கள்.

    2 தினங்களில் பாகம்பிரியாள் அம்மன் கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து திருவெற்றியூர் கண்மாயில் இந்த சிலை கரைக்கப்படுகிறது.

    Next Story
    ×