என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "plus two student"
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள பஞ்சநதிக் கோட்டை ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த 16 வயது மாணவி மேல உளூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இவர் தினமும் காலை 9 மணிக்கு பள்ளிக்கு சென்று மாலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்து விடுவார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவி பள்ளிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வழக்கம் போல் சைக்கிளில் பள்ளிக்கு சென்றுள்ளார்.
பின்னர் மாலை நீண்ட நேரம் ஆகியும் மாணவி வீட்டிற்கு வரவில்லை. உடனே அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் எங்கு போனார் என்பது தெரியவில்லை.
இதைத் தொடர்ந்து பக்கத்து ஊருக்கு சென்று மகளின் தோழிகளிடம் கேட்டனர். அப்போது உங்கள் மகள் இன்று காலை பள்ளிக்கு வரவே இல்லை என்று அவரது தோழிகள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்தனர்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பசுபதி, சப்-இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவி பள்ளி செல்வதாக கூறிவிட்டு எங்கு சென்றார்? காதல் விவகாரத்தில் காணாமல் போனாரா? இல்லை யாரும் கடத்தி சென்றார்களா? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி செல்வதாக கூறி சென்ற மாணவி திடீரென மாயமாகிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில்:
அஞ்சுகிராமம் சிதம்பர நாதன்நகர் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் மூர்த்தீஸ்வரன் (வயது 17). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 22-ந் தேதி வீட்டில் இருந்து டியூசனுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவர் இல்லாததால் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை ஆகியோர் வழக்குபதிவு செய்து மாயமான மாணவரை தேடி வருகின்றனர்.
சேதராப்பட்டு:
திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டை அடுத்த பஞ்சவடியை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ்-2 படித்து வந்தார். இவருக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரை புதுவையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர்.
டாக்டர்கள் அவரை பரிசோதித்தனர். இதில் அந்த மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மாணவிக்கு 16 வயது தான் ஆகி இருந்தது. எனவே புதுவை குழந்தைகள் நல கமிட்டிக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விசாரணை நடத்தினார்கள்.
மாணவி விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி தலைவர் லட்சுமிபதிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்.
பின்னர் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை மேற்கொண்டார்.
அந்த மாணவியிடம் விசாரணை நடத்தியபோது தங்கள் பகுதியை சேர்ந்த ராம்கி (வயது 25) என்பவருடன் நெருங்கி பழகியதாகவும் அவர் தன்னை ஏமாற்றி கற்பழித்து விட்டதாகவும் கூறினார்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ராம்கி கைது செய்யப்பட்டு கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள கிழவிகுளம் முத்தாநதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் யமுனா (வயது 17). பிளஸ்-2 மாணவி.
கடந்த சில நாட்களாக யமுனா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன வேதனை அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கினார்.
ஆனால் அக்கம், பக்கத்தினர் யமுனாவை மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத் திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு யமுனா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கீழராஜ குலராமன் போலீசில், அவரது தாய் ரதி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நெல்லை மாவட்டம், ராயகிரியைச் சேர்ந்த மாடத்தி (36) என்பவருக்கும், ராஜபாளையம் முத்துச்சாமிபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் (45) என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை பிரிந்த மாரியப்பன், ரேகா என்பவரை மறுமணம் செய்தார்.
இதற்கிடையே பெற்றோர் வீட்டில் இருந்த மாடத்தி மனநலம் பாதிக்கப்பட்டார். அதற்கான சிகிச்சை பெற்று வந்த அவர், தாத்தா வீட்டில் உள்ள குழந்தைகளை பார்ப்பதற்காக முத்துச்சாமிபுரம் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் அங்குள்ள பாரதி நகர் கிணற்றில் மாடத்தி பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாடத்தி கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது குறித்து அவரது தாயார் கந்தம்மாள் கொடுத்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை ரெட்டியார் பாளையம் பவளக்காரன் சாவடியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 27). டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில் கார்த்திகேயன் அதே பகுதியில் பிளஸ்-2 படிக்கும் ஒரு மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார்.
இதுபற்றி அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து குழந்தைகள் நல குழுவிடம் முறையிட்டனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட குழந்தைகள் நலக்குழு சீனியர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தது.
அதனை ஏற்ற சீனியர் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராகுல் அலுவால் இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய ரெட்டியார் பாளையம் போலீசாருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் ரெட்டியார் பாளையம் போலீசார் கார்த்திகேயன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே ராமநாதபுரம் ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்தவர் சக்திவேலு. லாரி டிரைவர். இவரது 17-வயது மகள் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று பள்ளி விடுமுறையை அடுத்து வீட்டில் இருந்த மாணவியை திடீரென காணவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் மாணவி இல்லை.
இதையடுத்து சக்திவேலு வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகளை லிங்காரெட்டி பாளையத்தை சேர்ந்த ஒரு வாலிபர் கடத்தி சென்று விட்டதாக கூறிஉள்ளார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள வில்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குரு மகன் தங்கப்பாண்டி (வயது 30). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி விட்டது.
சம்பவத்தன்று தங்கப்பாண்டி பக்கத்து வீட்டைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 15 வயதுடைய மாணவியை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார்.
அப்போது அந்த மாணவியை மிரட்டி கற்பழித்ததாக தெரிகிறது. இதற்கு உடந்தையாக அதே ஊரைச் சேர்ந்த சுப்பையா மகன் அழகர் (25) என்பவர் இருந்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி வில்லூர் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் அழகரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான தங்கப் பாண்டியை தேடி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கருப்பையாபுரத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் கார்த்திகா(வயது17). இவர் கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இப்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச்சென்ற கார்த்திகா திடீரென மாயமானார்.
வெகுநேரமாகியும் கார்த்திகா வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த தாய் கவிதா அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தார். மேலும் கார்த்திகாவின் நண்பர்களிடம் விசாரித்தார். எங்கு தேடியும் கிடைக்காததால் கடமலைக்குண்டு போலீசில் கவிதா புகார் செய்தார்.
அந்த புகார் மனுவில் தனது மகளை ஆனைமலையான் பட்டியை சேர்ந்த கனிஷ்குமார், சிங்கராஜபுரத்தை வசந்த், ஒத்தப்பட்டியை சேர்ந்த நந்தீஸ்குமார் ஆகியோர் கடத்தியிருக்கலாம் என கூறியிருந்தார்.
இதையடுத்து அவர்களை தேடிச்சென்ற போலீசார் மேற்கண்ட 3 பேரும் தலைமறைவானதால் அவர்கள்தான் கார்த்திகாவை கடத்தியிருக்ககூடும் என்று வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்