search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனூர் அருகே பிளஸ்-1 மாணவி கடத்தல்- வாலிபர் மீது புகார்
    X

    வில்லியனூர் அருகே பிளஸ்-1 மாணவி கடத்தல்- வாலிபர் மீது புகார்

    வில்லியனூர் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தி சென்று விட்டதாக வாலிபர் மீது போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே ராமநாதபுரம் ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்தவர் சக்திவேலு. லாரி டிரைவர். இவரது 17-வயது மகள் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று பள்ளி விடுமுறையை அடுத்து வீட்டில் இருந்த மாணவியை திடீரென காணவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் மாணவி இல்லை.

    இதையடுத்து சக்திவேலு வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகளை லிங்காரெட்டி பாளையத்தை சேர்ந்த ஒரு வாலிபர் கடத்தி சென்று விட்டதாக கூறிஉள்ளார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×