search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் அருகே பிளஸ்-1 மாணவி கற்பழிப்பு: வாலிபருக்கு வலைவீச்சு
    X

    திருமங்கலம் அருகே பிளஸ்-1 மாணவி கற்பழிப்பு: வாலிபருக்கு வலைவீச்சு

    திருமங்கலம் அருகே பிளஸ்-1 மாணவியை மிரட்டி கற்பழித்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள வில்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குரு மகன் தங்கப்பாண்டி (வயது 30). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி விட்டது.

    சம்பவத்தன்று தங்கப்பாண்டி பக்கத்து வீட்டைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 15 வயதுடைய மாணவியை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார்.

    அப்போது அந்த மாணவியை மிரட்டி கற்பழித்ததாக தெரிகிறது. இதற்கு உடந்தையாக அதே ஊரைச் சேர்ந்த சுப்பையா மகன் அழகர் (25) என்பவர் இருந்துள்ளார்.

    இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி வில்லூர் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் அழகரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான தங்கப் பாண்டியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×