search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஆண்டிப்பட்டி அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய கும்பல்
    X

    ஆண்டிப்பட்டி அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய கும்பல்

    ஆண்டிப்பட்டி அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள கருப்பையாபுரத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் கார்த்திகா(வயது17). இவர் கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இப்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச்சென்ற கார்த்திகா திடீரென மாயமானார்.

    வெகுநேரமாகியும் கார்த்திகா வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த தாய் கவிதா அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தார். மேலும் கார்த்திகாவின் நண்பர்களிடம் விசாரித்தார். எங்கு தேடியும் கிடைக்காததால் கடமலைக்குண்டு போலீசில் கவிதா புகார் செய்தார்.

    அந்த புகார் மனுவில் தனது மகளை ஆனைமலையான் பட்டியை சேர்ந்த கனிஷ்குமார், சிங்கராஜபுரத்தை வசந்த், ஒத்தப்பட்டியை சேர்ந்த நந்தீஸ்குமார் ஆகியோர் கடத்தியிருக்கலாம் என கூறியிருந்தார். 

    இதையடுத்து அவர்களை தேடிச்சென்ற போலீசார் மேற்கண்ட 3 பேரும் தலைமறைவானதால் அவர்கள்தான் கார்த்திகாவை கடத்தியிருக்ககூடும் என்று வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×