search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pledge"

    • குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • அனைவருக்கும் தொடக்கக் கல்வி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    தமிழ்நாடு அரசு குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றிடும் நோக்கில் பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சிறார் அனைவருக்கும் தொடக்கக் கல்வி கட்டாயம் ஆக்கப்பட் டுள்ளது. கல்வி இடை நிற்றலை தடுப்பதற்கும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் குழந்தைகளின் அடிப்ப டை உரிமைகள் குறித்தும், குழந்தைத் தொழி லாளர் முறையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பொது மக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி குழந்தைத் தொழி லாளர் முறை எதிர்ப்புத் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்புத்தினத்தை முன்னிட்டு கலெக்டர் சங்கீதா தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இந்த நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், சமூக பாது காப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சவுந்தர்யா, மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் கார்த்தி கேயன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
    • பணியாளர்கள் உறுதிமொழியை சமூக இடைவெளியை கடைபிடித்து எடுத்துக் கொண்டனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் "உலக புகையிலை ஒழிப்பு தினம்" உறுதிமொழி தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள கால அலுவலகத்தின் அருகில் உறுதிமொழி ஏற்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் உற்பத்தி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பு முதன்மை பொது மேலாளர் வரதராஜன், எலக்ட்ரிக்கல் அன்ட் இன்ஸ்ட்ரூமென்டேசன் உற்பத்தி பொது மேலாளர்கள் ராஜலிங்கம், மகேஷ், பாதுகாப்பு துணை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், ஐடி உதவி பொது மேலாளர் பாலமுருகன் மற்றும் மனிதவளம் முதுநிலை மேலாளர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழியை சமூக இடைவெளியை கடைபிடித்து எடுத்துக் கொண்டனர்.



    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி எடுக்கப்பட்டது
    • வன்முறைகளை எதிர்க்கும் வகையிலும், அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகியவற்றை கடைபிடிக்கும் பொருட்டும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் உறுதிமொழி ஏற்புக் கூட்டம் நடைபெற்றது

    கரூர்,

    கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. வன்முறைகளை எதிர்க்கும் வகையிலும், அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகியவற்றை கடைபிடிக்கும் பொருட்டும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் உறுதிமொழி ஏற்புக் கூட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் துணைப் பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், முதுநிலை மேலாளர்கள் அசோகன், முத்துராமன், மேலாளர் வெங்கடேசன், காவல் ஆய்வாளர் வைத்தியநாதன் மற்றும் விழிப்புணர்வு அதிகாரி, மாதேஸ்வரன், துணை மேலாளர் (பாதுகாப்பு), சங்கிலிராஜன், துணை மேலாளர் (பாதுகாப்பு) ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை சமூக இடைவெளியை கடைபிடித்து எடுத்துக் கொண்டனர்.

    • வருகிற 31-ந் தேதி பிளாஸ்டிக் ஒழிப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    வேதாரண்யம்:

    உலக சுற்றுச்சூழல் தினம் அடுத்த மாதம் (ஜூன்) 5-ந்தேதி வருகிறது.

    இதனை யொட்டி நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா அறிவுரையின்படி, முதற்கட்டமாக கோடியக்காட்டில் புயல் பாதுகாப்பு கட்டிட வளாகப்பகுதியில் ஊராட்சி தலைவர் தமிழ்மணி தலைமையில், கோடியக்கரை வனச்சரகர் அயூப் கான் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி துணை தலைவர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன், ஊராட்சி செயலாளர் சுபா, வனவர்கள் சதீஷ்குமார், ராமதாஸ் மற்றும் வனத்துறை பணியாளர்கள் 100 மரக்கன்றுகளை நட்டனர்.

    தொடர்ந்து, உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    இதுகுறித்து கோடியக்கரை வனச்சரகர் அயூப் கான் கூறுகையில்:-

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வருகிற 22-ந் தேதி விழிப்புணர்வு முகாமும், 31-ந் தேதி பிளாஸ்டிக் ஒழிப்பு முகாமும், அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி கடற்கரை தூய்மை படுத்தும் பணியும், நிறைவாக 5-ந் தேதி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாத்தான்குளம், எட்டயாபுரம் ஆகிய போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு உறுதி மொழி எடுக்கப்பட்டது.
    • குற்றங்கள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம் என்ற அடிப்படையில் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி குரும்பூர், முத்தையாபுரம், தூத்துக்குடி வடபாகம், சாத்தான்குளம், எட்டயாபுரம் ஆகிய போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு உறுதி மொழி எடுக்கப்பட்டது.

    குரும்பூர் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமை யிலான போலீசார் குரும்பூர் பரதர் தெருவில் பொது மக்களிடமும், முத்தையா புரம் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமை யிலான போலீசார் முத்தையாபுரம் பகுதி பொது மக்களிடமும், தூத்துக்குடி வடபாகம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமை யிலான போலீசார் புதிய பஸ் நிலையம் வளாகத்தில் பொது மக்களிடமும், சாத்தான் குளம் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தலைமையிலான போலீசார் சாத்தான்குளம் சந்தோஷபுரம் பகுதி பொது மக்களிடமும், எட்டயாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் அங்காள ஈஸ்வரி தலைமையிலான போலீசார் எட்டயாபுரம் ஆர்.சி தெரு பகுதி பொது மக்களிடமும் மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலமாக கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டங்கள் குறித்தும், குழந்தை திருமண தடைச் சட்டம், குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், காவலன் எஸ்.ஓ.எஸ்.செயலி குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இலவச உதவி எண்களான 1098, 1091, 181 ஆகிய செல்போன் எண்கள் குறித்து எடுத்துரைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் போலீசார் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. நாம் நமக்காகவும் நம் சந்ததியினருக்காகவும் சாதி, மத வேற்றுமைகள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம் .

    குற்றங்கள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம் என்ற அடிப்படையில் உறுதி மொழி எடுத்துக் கொண்ட னர்.

    • தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் தென்பாகம் போலீஸ் நிலைய பகுதியில் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக போலீசாரின் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி தென்பாகம், தாளமுத்துநகர், முத்தையாபுரம், புதூர், சங்கரலிங்கபுரம் மற்றும் குரும்பூர் ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் தென்பாகம் போலீஸ் நிலை யத்தில் இளைஞர்களிடமும், தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் சோட்டையன் தோப்பு பகுதியில் இளைஞர்களிடமும், முத்தையாபுரம்போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் எம். தங்கம்மாள்புரம் பகுதி பொதுமக்களிடமும், குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமை யிலான போலீசார் குரும்பூர் சாமிநகர் பகுதி பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதேபோல் சங்கரலிங்க புரம் சப் -இன்ஸ்பெக்டர் முத்துமாரி மற்றும் போலீசார் சங்கரலிங்கபுரம் என். வேடப்பட்டி பகுதியில் பொதுமக்களிடமும், புதூர் சப் -இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் புதூர் பஜார் பகுதியில் பொது மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த 'மாற்றத்தை தேடி" விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலமாக கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டங்கள் குறித்தும், குழந்தை திருமண தடைச்சட்டம், குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், காவலன் எஸ்.ஓ.எஸ். செயலி குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இலவச உதவி எண்களான 1098, 1091, 181 ஆகிய செல்போன் எண்கள் குறித்தும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக போலீசாரின் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.'நாம் நமக்காகவும் நம் சந்ததியினருக்காகவும் சாதி, மத வேற்றுமைகள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம். எதிர்மறை சிந்தனைகளை களைந்து பழிக்குப் பழி என்ற எண்ணம் நீங்கி நற்சிந்தனைகளை வளர்த்து மகளிரையும், குழந்தைகளையும், மக்களையும் பாதுகாப்போம். எந்த சூழ்நிலையிலும் எக்காரணம் கொண்டும் கத்தி, அரிவாள் மற்றும் எந்த கொடிய ஆயுதங்களையும் பயன்படுத்த மாட்டோம்" என்னும் உறுதிமொழியை கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் உட்பட அனைவரும் ஏற்று குற்றங்கள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்கு வோம் என்ற அடிப்படையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • அம்பேத்காரின் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சமத்துவ நாள் உறுதிமொழி அனைவரும் ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் ஸ்டாலின், நமது அரசியலமைப்பு சட்டத்தை வகுத்துத்தந்த அண்ணல் அம்பேத்காரின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டா டப்படும் என்று அறிவித்து, சமத்துவ நாள் உறுதிமொழி அனைவரும் ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையொட்டி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய, அண்ணல் அம்பேத்காரின் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உறுதி மொழியை வாசித்தார். அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உறுதி மொழியை ஏற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவ சுப்பிரமணியம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட பிற்ப டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுகந்தி, கலால்துறை உதவி கமிஷனர் செல்வி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    திருப்பூர்:

    அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் சமத்துவநாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூகஅடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடையஉரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள்எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்பு சட்டத்தை வகுத்து தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தைஅமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களை சாதியின்பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம்சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என அனைத்துத்துறை அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது)விஜயராஜ், (நிலம்) துரை, தனிதுணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) அம்பாயிரநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நலஅலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.  

    • மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றனர்.
    • அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    மதுரை

    அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 14-ந்தேதியை சமத்துவ நாளாக கடைப்பிடிக்க தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. இதில் அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி ஒதுக்கப்பட்டவர்க ளுடைய உரிமைகளுக்காக வும், ஒடுக்கப்பட்ட வர்களுடைய சமத்துவத் திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமை களை பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியல மைப்பு சட்டத்தை வகுத்து தந்த அம்பேத்கர் பிறந்த நாளில் சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களை சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சகமனிதர்களிடம் சமத்து வத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என்று இந்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் நாகராஜன், துணை ஆணையாளர்கள்முஜிபூர் ரகுமான், தயாநிதி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி ஆணையாளர் (கணக்கு) விசா லாட்சி, உதவி ஆணை யாளர் (பணி) ஆறுமுகம், கண்காணிப்பாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சங்கரன்கோவில் நகராட்சியில் சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் தலைமையில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் மகளிர் குழு தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள், பொதுமக்கள், மாணவ- மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சி சார்பில் சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் தலைமையில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்க உறுதிமொழி எடுக்கப்பட்டு ஊர் குளத்தை சுத்தம் செய்யும் பணியை பார்வையிட்டனர். மேற்கண்ட பணிகளை நகராட்சி சுகாதார அலுவலர் பாலச்சுந்தர் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் மாரிச்சாமி, மாரிமுத்து, கருப்பசாமி, வெங்கட்ராமன், தூய்மை திட்ட பணியாளர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    நிகழ்ச்சியில் மகளிர் குழு தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள், பொதுமக்கள், மாணவ- மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அந்தியூர் பேரூராட்சியில் செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
    • முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள் வன்முறைகள் எவ்வித த்திலும் இழைக்கப்படுவதை தடுத்திட பாடுபடுவேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் பேரூராட்சியில் செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    அப்போது அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்திய குடிமகன், குடிமக்களாகிய நான் முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் .

    மனரீதியாகவும், உடல்ரீ தியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன். அவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளித்து மருத்துவமனை, வங்கி, பஸ் நிலையம் போன்ற இடங்களில் முதியோ ர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள் வன்முறைகள் எவ்வித த்திலும் இழைக்கப்படுவதை தடுத்திட பாடுபடுவேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்

    சீர்காழி நகராட்சியில் பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கி உறுதிமொழி ஏற்கப்பட்டது.
    சீர்காழி:

    சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் மெகா தூய்மைப் பணி முகாம் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். ஆணையர் (பொ) ராஜகோபாலன், துணை தலைவர் சுப்பராயன், நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், வேல்முருகன், ராஜசேகரன், முபாரக்அலி, ரம்யா, ஜெயந்தி, வள்ளி, ரேணுகாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர்செ ல்வம் பங்கேற்று தூய்மைபணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து ஒவ்வொரு கடையாக நெகிழி ஒழிப்பை முன்னெடுக்கும் வகையில் மஞ்சல் பைகளை எம்எல்ஏ பன்னீர்செல்வம் வழங்கினார்.

    கைவிளா ஞ்சேரி பிரதானசாலை முதல் கச்சேரி சாலை வரையில் ஒவ்வொரு வார்டிலும் உள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டுசேகரி க்கும் பணி, நீர்நிலைகளை சீரமைக்கும் பணி,பிளா ஸ்டிக் நெகிழிபொரு ட்கள் தனியே சேகரித்து பொதும க்களுக்குவிழிப்பு ணர்வு ஏற்படுத்துவதுஆகிய பணிகளை தூய்மைப்பணி முகாமில் சுமார் 90 க்கும்மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பங்கேற்று மேற்கொ ண்டனர்.

    இதில் நகரமைப்பு ஆய்வாளர் நாகராஜன், திமுக ஒன்றிய பொறுப்பா ளர் பிரபாகரன்,மாவட்ட கவுன்சிலர் விஜேயே ஸ்வரன், பந்தல். முத்து, ஜெ.கே.செந்தில், இரா.தனராஜ், பாரூக், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ×