search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    போலீசார் முன்னிலையில் உறுதிமொழி ஏற்ற இளைஞர்களை படத்தில் காணலாம்.

    தூத்துக்குடியில் 'மாற்றத்தை தேடி' விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் தென்பாகம் போலீஸ் நிலைய பகுதியில் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக போலீசாரின் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி தென்பாகம், தாளமுத்துநகர், முத்தையாபுரம், புதூர், சங்கரலிங்கபுரம் மற்றும் குரும்பூர் ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் தென்பாகம் போலீஸ் நிலை யத்தில் இளைஞர்களிடமும், தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் சோட்டையன் தோப்பு பகுதியில் இளைஞர்களிடமும், முத்தையாபுரம்போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் எம். தங்கம்மாள்புரம் பகுதி பொதுமக்களிடமும், குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமை யிலான போலீசார் குரும்பூர் சாமிநகர் பகுதி பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதேபோல் சங்கரலிங்க புரம் சப் -இன்ஸ்பெக்டர் முத்துமாரி மற்றும் போலீசார் சங்கரலிங்கபுரம் என். வேடப்பட்டி பகுதியில் பொதுமக்களிடமும், புதூர் சப் -இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் புதூர் பஜார் பகுதியில் பொது மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த 'மாற்றத்தை தேடி" விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலமாக கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டங்கள் குறித்தும், குழந்தை திருமண தடைச்சட்டம், குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், காவலன் எஸ்.ஓ.எஸ். செயலி குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இலவச உதவி எண்களான 1098, 1091, 181 ஆகிய செல்போன் எண்கள் குறித்தும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக போலீசாரின் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.'நாம் நமக்காகவும் நம் சந்ததியினருக்காகவும் சாதி, மத வேற்றுமைகள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம். எதிர்மறை சிந்தனைகளை களைந்து பழிக்குப் பழி என்ற எண்ணம் நீங்கி நற்சிந்தனைகளை வளர்த்து மகளிரையும், குழந்தைகளையும், மக்களையும் பாதுகாப்போம். எந்த சூழ்நிலையிலும் எக்காரணம் கொண்டும் கத்தி, அரிவாள் மற்றும் எந்த கொடிய ஆயுதங்களையும் பயன்படுத்த மாட்டோம்" என்னும் உறுதிமொழியை கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் உட்பட அனைவரும் ஏற்று குற்றங்கள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்கு வோம் என்ற அடிப்படையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    Next Story
    ×