search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏற்பு"

    • சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சிவகுமார் சமீபத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாறுதல் செய்யப்பட்டார்.
    • இதையடுத்து சென்னை டி.நகர் போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றிய அருண் கபிலன் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாறுதல் செய்யப்பட்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சிவகுமார் சமீபத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை டி.நகர் போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றிய அருண் கபிலன் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாறுதல் செய்யப்பட்டார்.

    இவர் இன்று காலை சேலம் நெத்திமேட்டில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.

    2019-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் திண்டுக்கல் ஏ.எஸ்.பி.யாகவும், சென்னை டி.நகர் போலீஸ் துணை கமிஷனராகவும் பணியாற்றியவர். தற்போது சேலம் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவருக்கு சேலம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் செல்வம், கண்ணன், துணைக் காவல் கண்காணிப்பாளர் இளமுருகன், சின்னசாமி, தனிப்பிரிவு ஆய்வாளர் செந்தில்குமார், நிர்வாக அதிகாரிகள் மற்றும் போலீசார் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

    • அம்பேத்காரின் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சமத்துவ நாள் உறுதிமொழி அனைவரும் ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் ஸ்டாலின், நமது அரசியலமைப்பு சட்டத்தை வகுத்துத்தந்த அண்ணல் அம்பேத்காரின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டா டப்படும் என்று அறிவித்து, சமத்துவ நாள் உறுதிமொழி அனைவரும் ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையொட்டி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய, அண்ணல் அம்பேத்காரின் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உறுதி மொழியை வாசித்தார். அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உறுதி மொழியை ஏற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவ சுப்பிரமணியம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட பிற்ப டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுகந்தி, கலால்துறை உதவி கமிஷனர் செல்வி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • கொத்தடிமை தொழிலாளர் முறை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
    • தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் தொழி லாளர் உதவி ஆணை யர் மணிகண்ட பிரபு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    குமரி மாவட்ட கலெக் டர் பி.என். ஸ்ரீதரின் அறிவு ரையின்படி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் அய்யப்பா மகளிர் கல்லூரியில் கொத்த டிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் மணிகண்ட பிரபு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து கிராமிய கலைஞர் பழனியாப்பிள்ளை குழுவி னர் கலைநிகழ்ச்சிகள் மூலம் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மேலும் வடசேரி பஸ் நிலையம், செண்பக ராமன்புதூர், ஆரல்வாய் மொழி அரசு பள்ளி மற்றும் தோவாளை பகுதி களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் மேற் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சி யில் தொழிலாளர் துணை ஆய்வாளர் குமரேசன், உதவி ஆய்வாளர்கள் மன்னன் பெருமாள், ஈவ்லின் சர்மி, ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் கொத்தடிமை தொழி லாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கப் பட்டது. கொத்தடிமை தொழிலாளர் முறை முற்றிலு மாக தடை செய்யப்பட் டுள்ளது. இதனை மீறி தொழிலாளர்களை கொத்த டிமைகளாக பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும்.

    எனவே, தொழிலாளர் களை கொத்தடிமைகளாக பணிக்கு அமர்த்துவது ஆய்வின்போது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவல்துறை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்க உரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவல்துறை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பரமத்தி வேலூர் டி.எஸ்.பி. கலையரசன் தலைமை வகித்து போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் குறித்தும், போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்க உரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் முன்னிலை வைத்தார். நிகழ்ச்சியில் வேலூர் பேரூராட்சி தலைவர் லட்சுமி மூர்த்தி, துணைத்தலைவர் ராஜா,வேலூர் வர்த்தகர்கள் சங்கத் தலைவர் சுந்தரம், கரூர் அரசு மகளிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் நடேசன், வேலூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், அரசு மகளிர் கல்வி நிறுவன மாணவிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    ×