search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் சூப்பிரண்டாக அருண் கபிலன் பதவி ஏற்பு
    X

    அருண்கபிலன்

    போலீஸ் சூப்பிரண்டாக அருண் கபிலன் பதவி ஏற்பு

    • சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சிவகுமார் சமீபத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாறுதல் செய்யப்பட்டார்.
    • இதையடுத்து சென்னை டி.நகர் போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றிய அருண் கபிலன் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாறுதல் செய்யப்பட்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சிவகுமார் சமீபத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை டி.நகர் போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றிய அருண் கபிலன் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாறுதல் செய்யப்பட்டார்.

    இவர் இன்று காலை சேலம் நெத்திமேட்டில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.

    2019-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் திண்டுக்கல் ஏ.எஸ்.பி.யாகவும், சென்னை டி.நகர் போலீஸ் துணை கமிஷனராகவும் பணியாற்றியவர். தற்போது சேலம் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவருக்கு சேலம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் செல்வம், கண்ணன், துணைக் காவல் கண்காணிப்பாளர் இளமுருகன், சின்னசாமி, தனிப்பிரிவு ஆய்வாளர் செந்தில்குமார், நிர்வாக அதிகாரிகள் மற்றும் போலீசார் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

    Next Story
    ×