search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child Labor Day"

    • குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • அனைவருக்கும் தொடக்கக் கல்வி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    தமிழ்நாடு அரசு குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றிடும் நோக்கில் பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சிறார் அனைவருக்கும் தொடக்கக் கல்வி கட்டாயம் ஆக்கப்பட் டுள்ளது. கல்வி இடை நிற்றலை தடுப்பதற்கும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் குழந்தைகளின் அடிப்ப டை உரிமைகள் குறித்தும், குழந்தைத் தொழி லாளர் முறையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பொது மக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி குழந்தைத் தொழி லாளர் முறை எதிர்ப்புத் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்புத்தினத்தை முன்னிட்டு கலெக்டர் சங்கீதா தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இந்த நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், சமூக பாது காப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சவுந்தர்யா, மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் கார்த்தி கேயன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
    பெரம்பலூர்:

    ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந்தேதி உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தொழிலாளர் நலத்துறையின் சார்பில், பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகில் நடைபெற்ற குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த ஊர்வலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். செய்யும் தொழிலே தெய்வம், அதை குழந்தைகள் செய்தால் பாவம், குழந்தைகளின் வருமானம், பெற்றோருக்கு அவமானம், புத்தகம் ஏந்தும் கைகள், பத்து பாத்திரம் ஏந்தலாமா?, குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிவதை கண்டால் 1098 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்,

    “குழந்தை தொழிலாளர்களையோ, வளரும் இளம் பருவத்தினரையோ எவ்வகையான தொழிலிலும் ஈடுபடுத்தினால், அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ-மாணவிகள் கையில் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலமானது புதிய பஸ் நிலையம் சென்று மீண்டும் ஊர்வலம் தொடங்கிய இடத்திற்கு வந்து முடிவடைந்தது. இதில் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், தொழிலாளர் உதவி ஆணையர் முகமது யூசுப், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி அருள்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    குழந்தை தொழிலாளர் தினத்தையொட்டி கரூரில் குழந்தை தொழிலாளர்கள் யாரேனும் சட்டத்திற்கு புறம்பாக கடைகள் - நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனரா? என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    கரூர்:

    கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் தலைமையில் கரூர் தொழிலாளர் துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன், உதவி ஆய்வாளர்கள் நல்லசிவம், சின்னையன், ஜோதிமாணிக்கம் ஆகியோர் கொண்ட குழுவினர் கரூரில் குழந்தை தொழிலாளர்கள் யாரேனும் சட்டத்திற்கு புறம்பாக கடைகள் - நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனரா? என ஆய்வு செய்தனர்.

    அப்போது குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டம் 1986-ன் கீழ் 51 கடைகள், 27 உணவு நிறுவனங்கள், மற்றும் 19 ஆட்டோ மொபைல் ஒர்க்ஷாப்புகளில் ஆய்வு நடந்தது.

    இந்த ஆய்வில் குழந்தை தொழிலாளர்கள் அங்கு பணியமர்த்தப்படவில்லை என தெரியவந்தது. மேலும் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தை தொழிலாளர்களை யாரேனும் பணியமர்த்தினால் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் அளிக்கப்படும் என தொழிலாளர் துறை அதிகாரிகள் கடைகள்- நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

    மேலும் இது போன்ற ஆய்வுகள் தொடர்ச்சியாக நடத்தி குழந்தை தொழிலாளர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் நலத்துறையினர் தெரிவித்தனர்.
    ×