search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Park"

    • தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பூங்கா (ஸ்டெம் பூங்கா) அமைக்கப்பட்டுள்ளது.
    • பூங்காவில் வாகனம் நிறுத்துமிடத்தின் சுற்றுச்சுவர் பழுதடைந்து காணப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருளானந்த நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.11.50 கோடி மதிப்பில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பூங்கா ( ஸ்டெம் பூங்கா ) அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்டெம் பூங்காவை வருகிற 27 ஆம் தேதி முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த பூங்காவில் வாகனம் நிறுத்தும் இடத்தின் சுற்று சுவர் பழுது அடைந்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பூங்கா முன்பு அமைந்துள்ள சாலைகள் சேதமடைந்து காணப்படுவதாகவும் கூறுகின்றனர்.

    எனவே பூங்கா திறக்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் அதற்குள் சுற்று சுவரை சீரமைத்து சாலையை சீர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருச்சியில் கலாச்சாரம், வரலாற்றை பிரதிபலிக்கும் புரதான பூங்கா கட்டப்பட்டு உள்ளது
    • இந்த மாத இறுதியில் திறக்கப்படுகிறது

    திருச்சி,

    திருச்சியின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் மலைக்கோட்டை அருகே பட்டர்வொர்ட் சாலையில் பாரம்பரிய பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் நடப்பு மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது.ஒரு காலத்தில் குதிரை லாயமாக பயன்படுத்த ப்பட்ட 1.27 ஏக்கர் நிலப்ப ரப்பில் கட்டப்பட்டு வரும் இந்த பூங்கா, ஸ்மார்ட் சிட்டிஸ் திட்டத்தின் கீழ் 6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. தற்போதும் அந்த தொழுவத்தின் வளைவு இடிக்கப்படாமல் அப்படியே வைக்கப்பட்டுள்ளது. இது பூங்காவின் முக்கிய நுழை வாயிலாக பயன்படுத்தப்படுகிறது.பூங்காவின் கட்டுமான பணிகள் கடந்த 2019 டிசம்பரில் தொடங்கப்பட்டது. கொரோனா வைரஸ் மற்றும் சிலைகள் வாங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2020 டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்ட தேதிக்கு அப்பால் இத்திட்டம் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. பூங்காவில் ஓவியங்கள், சிலைகள் மற்றும் நகரின் பழமையான வரலாற்றை அறியும் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்ட உள்ளது. திருச்சியை ஆண்ட ராணி மங்கம்மாள், கரிகால் சோழன் மற்றும் ராஜ ராஜா சோழன் உட்பட நாட்டை ஆண்ட முன்னாள் மன்னர்களின் சிலைகளும் இதில் இடம்பெறுகிறது.கல்லால் செதுக்கப்பட்ட வளைவு நுழைவாயில், குழந்தைகள் விளையாடும் இடம், திறந்த உடற்பயிற்சி கூடம், நடைப் பாதை, பல்வேறு வகைகளைக் கொண்ட பெரிய மூலிகைத் தோட்டம் மருத்துவ தாவரங்கள் மற்றும் ரோஜாக்கள், இயற்கையை ரசித்தல் மற்றும் நீரூற்றுகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை நடத்தக்கூடிய ஒரு ஆம்பிதியேட்டர் ஆகியவை புரதான பூங்காவின் சிறப்பம்சங்களாகும். பூங்காவில் ஓய்வறைகள், குடிநீர் வசதி, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் இடம், பார்வையாளர்களின் பாது காப்பிற்காக கண்காணிப்பு கேமராக்களும் இடம் பெறுகிறது.இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது, அறிவியல் பூங்காக்களை போன்று இந்த வரலாற்றை சொல்லும் புரதான பூங்கா மாணவர்களின் அறிவிப்பசி போக்க உதவும் என்றார்.

    • தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் நடப்பு மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது.
    • ராணி மங்கம்மாள், கரிகால் சோழன் மற்றும் ராஜ ராஜா சோழன் உட்பட நாட்டை ஆண்ட முன்னாள் மன்னர்களின் சிலைகளும் இதில் இடம்பெறுகிறது.

    திருச்சி:

    திருச்சியின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை பிரதி பலிக்கும் வகையில் மலை க்கோட்டை அருகே பட்டர்வொர்ட் சாலையில் பாரம்பரிய பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் நடப்பு மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது.

    ஒரு காலத்தில் குதிரை லாயமாக பயன்படுத்தப்பட்ட 1.27 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு வரும் இந்த பூங்கா, ஸ்மார்ட் சிட்டிஸ் திட்டத்தின் கீழ் 6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. தற்போதும் அந்த தொழுவத்தின் வளைவு இடிக்கப்படாமல் அப்படியே வைக்கப்பட்டுள்ளது. இது பூங்கவின் முக்கிய நுழை வாயிலாக பயன்படுத்தப்படுகிறது.

    பூங்காவின் கட்டுமான பணிகள் கடந்த 2019 டிசம்பரில் தொடங்கப்பட்டது. கொரோனா வைரஸ் மற்றும் சிலைகள் வாங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2020 டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்ட தேதிக்கு அப்பால் இத்தி ட்டம் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. பூங்காவில் ஓவியங்கள், சிலைகள் மற்றும் நகரின் பழமையான வரலாற்றை அறியும் பலகை கள் காட்சிப்படுத்தப்பட்ட உள்ளது. திருச்சியை ஆண்ட ராணி மங்கம்மாள், கரிகால் சோழன் மற்றும் ராஜ ராஜா சோழன் உட்பட நாட்டை ஆண்ட முன்னாள் மன்னர்களின் சிலைகளும் இதில் இடம்பெறுகிறது.

    கல்லால் செதுக்கப்பட்ட வளைவு நுழைவாயில், குழந்தைகள் விளையாடும் இடம், திறந்த உடற்பயிற்சி கூடம், நடைப்பாதை, பல்வேறு வகைகளைக் கொண்ட பெரிய மூலிகைத் தோட்டம் மருத்துவ தாவரங்கள் மற்றும் ரோஜாக்கள், இயற்கையை ரசித்தல் மற்றும் நீரூற்றுகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை நடத்தக்கூடிய ஒரு ஆம்பிதியேட்டர் ஆகியவை புரதான பூங்காவின் சிறப்பம்சங்களாகும். பூங்காவில் ஓய்வறைகள், குடிநீர் வசதி, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் இடம், பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்களும் இடம் பெறுகிறது.

    இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது, அறிவியல் பூங்காக்களை போன்று இந்த வரலாற்றை சொல்லும் புரதான பூங்கா மாணவர்களின் அறிவுப்பசி போக்க உதவும் என்றார்.

    • சுற்று சுவர் மற்றும் இரும்பு தகடுகளால் கொட்டகை அமைத்து இருந்தனர்.
    • சொத்தின் மதிப்பு ரூ.1½ கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு, பத்மாவதி நகரில் பூங்காவுக்கு என்று ஒதுக்கப்பட்ட நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. அதில் சுற்று சுவர் மற்றும் இரும்பு தகடுகளால் கொட்டகை அமைத்து இருந்தனர்.

    இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நகராட்சி கமிஷனர் இளம்பரிதி தலைமையில் ஊழியர்கள் அதிரடியாக பூங்கா ஆக்கிரமிப்பு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டனர். இந்த சொத்தின் மதிப்பு ரூ.1½ கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கும் 10 பூங்காக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பணிகள் தொடங்கிய நாளில் இருந்து 18 மாதங்க–ளில் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    கோவில் மாநகராக போற்றப்படும் மதுரையில் மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக திகழ்வது பூங்காக் கள் மட்டுமே. அரசின் பங்க–ளிப்போடு பிரமாண்ட–மாக அமைக்கப்படும் பூங்காங்கள் பல இன்று முறையான பராமரிப்பின்றி காணப்படு–கின்றன.

    மதுரை மாநகராட்சி, மாநகர பகுதிகளில் உள்ள பராமரிக்கப்படாமல் சிதி–லமடைந்து கிடக்கும் பூங்காக் களை கண்டறிந்து, அவற்றை சீரமைத்து, பசுமையை பாது–காக்கும் வகையில் மறு உரு–வாக்கம் செய்யும் பணியை தொடங்கி உள்ளது.

    குறிப்பாக இதில் பெத்தானியாபுரம் அம்மா பூங்கா, அண்ணாநகர் பூங்கா, ஜார்ஜ் ஜோசப் பூங்கா, பழங்காத்தம் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பூங்காக்கள் உரிய பராம–ரிப்பு இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் உள் ளன. மாநகராட்சிக்கு உட் பட்ட பகுதிகளில் மொத்தம் 199 பூங்காக்கள் உள்ளன. இதில் 80 பூங்காக்களில் பாதுகாப்பு கருதி வேலி அமைக்கப்பட்டுள்ளது. 34 பூங்காக்களுக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. 33 பூங்காக்களுக்கு இன்னும் வேலி கூட அமைக்காமல் இன்னும் திறந்தவெளியா–கவே காட்சி அளிக்கிறது.

    இதுபற்றி பெத்தானியா–புரம் குடியிருப்பு வாசி ஒருவர் கூறுகையில், நகரில் உள்ள அம்மா குழந்தைகள் பூங்காவின் ஒரு பகுதியாக கட்டப்பட்ட பூங்காக்களில் பெத்தானியாபுரத்தில் உள்ள பூங்காவும் ஒன்று. கடந்த 3 ஆண்டுகளாக பூங்கா பராமரிப்பின்றி உள்ளது. பெரும்பாலும் மது அருந்துபவர்கள் மற்றும் பிற சட்டவிரோத செயல்க–ளின் ஈடுபடுவோரின் கூடா–ரமாக இந்த பூங்கா இருந்து வருகிறது என்றார்.

    இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பாழடைந்த நிலையில் முதற் கட்டமாக 10 பூங்காக்கள் கண்டறியப்பட்டு புதுப்பிக் கப்பட இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக பழங்காநத்தம் மற்றும் பசுமை குடில் பூங் காக்கள் ரூ.1.5 கோடி செல–வில் புதுப்பிக்கப்படும்.

    அதுமட்டுமின்றி, பயன்ப–டுத்தப்படாத மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை கண்ட–றிந்து, அதனை சிறுவர்க–ளுக்கான விளையாட்டு உபகரணங்கள் கொண்ட பூங்காவாக மாற்ற, குடிமைப் பணித்துறை முடிவு செய் துள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் குடியிருப் ேபார் நலச்சங்கங்கள் உதவி–யுடன் வேலி அமைக் கப் பட்ட பூங்காக்கள் மேம்ப–டுத் தப்பட உள்ளன.

    இதுகுறித்து மேயர் இந்தி–ராணி கூறும்போது, மாநக–ராட்சி பட்ஜெட்டில் பூங்காக் களை சீரமைக்க திட்டமிட் டுள்ளோம். அதன் ஒரு பகுதியாக பழகாநத்தம் பூங்கா ரூ.75 லட்சம் செலவி–லும், பசுமை குடில் பூங்கா ரூ.35 லட்சம் செலவிலும் சீரமைக்கப்படும்.

    இதேபோல், மாநகர பகுதிகளில் மோசமாக பரா–மரிக்கப்படும் பூங்காக்கள் குறித்து பரிந்துரை செய்ய அனைத்து கவுன்சி–லர்கள் மற்றும் மண்டல தலைவர்க–ளுக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது என்று கூறினார்.

    கடந்த 2022 நவம்பரில், பொதுப் பூங்காக்களை வசதிகள் மற்றும் பொது பொழுதுபோக்கிற்கான இடமாக கருதாமல், சமூக மற்றும் சூழலியல் தேவை–யாக மதிப்பதும், மாற்றுவதும் அவசியம் என்று கருதி, மதுரை ஐகோர்ட்டு மாநக–ராட்சிக்கு உத்தரவிட்டது. அதன்படி 199 பூங்காங்கள் முறையான பராமரிப்பை உறுது செய்துள்ளது. வண்டி–யூர் தெப்பக்குளத்தை அழகு–படுத்தும் பணிகள் இந்த மாத (ஜூலை) இறுதிக்குள் தொடங்கும். இதற்காக ரூ.41.2 கோடி நிதி ஒதுக்கி தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும் 2 புதிய பூங்காக் கள் அமைக்கவும், அதற்கான பணிகள் தொடங்கிய நாளில் இருந்து 18 மாதங்க–ளில் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கலைஞர் நூற்றாண்டு பூங்காவை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
    • பூங்காவிற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறப்பு விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பூங்காவை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசிய தாவது:-

    திருப்புவனம் பேரூராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக இப்பேரூராட்சி பகுதியில் வளர்ச்சி பணி களை மேற்கொள்ளும் பொருட்டு, ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா ஒன்றும், பூங்காவிற்கு பெருமை சேர்க்கின்ற வகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    மேலும் இப்பேரூ ராட்சிக்குட்பட்ட பகுதி களில் மக்களுக்கும் கூடுதல் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்திடும் பொருட்டு அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் மேம்பாட்டு பணி களுக்கென ரூ.16.52 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில், விவசாய பெருங்குடி மக்களுக்கு பயனுள்ள வகையிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு பல்வேறு வகையான கடனு தவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசி னார்.விழாவில் திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணியினை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.16.52 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டி 211 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 52 ஆயிரம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் ஜூனு, சிவகங்கை சரக துணைப்பதிவாளர் பாலசந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் மாரிச்சாமி, சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா, திருப்புவனம் பேரூ ராட்சி தலைவர் சேங்கை மாறன், மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா, பேரூராட்சி துணை தலை வர் ரகமத்துல்லாகான், பேரூராட்சி செயல் அலு வலர் ஜெயராஜ் மற்றும் 1-வது வார்டு உறுப்பினர் செல்வி ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப் பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
    • தூத்துக்குடியில் இருந்து மிகச்சிறந்த வீரர்களை, வீராங்கனைகளை இந்த நாட்டிற்கும், உலகிற்கும் உருவாக்கி காட்டுவோம் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப் பைக்கான விளை யாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிச ளிப்பு விழா நடைபெற்றது.

    வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்

    விழாவுக்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி னார். மீன்வளம் -மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண் டேயன், சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் வரவேற்று பேசினார்.

    தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கனிமொழி எம்.பி., பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான அரசு, விளை யாட்டில் ஆர்வம் இருக்கக்கூடியவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள சுந்தர வேல்புரம், அசோக்நகர், பழைய மாநகராட்சி அருகில், புல் தோட்டம் ஆகிய 4 பகுதிகளில் உள் விளையாட்டு அரங்குகள் ஷட்டில் காக் விளை யாட்டி ற்காக விரைவில் திறக்கப்படும்.

    தூத்துக்குடியில் இருந்து மிகச்சிறந்த வீரர்களை, வீராங்கனைகளை இந்த நாட்டிற்கும், உலகிற்கும் உருவாக்கி காட்டுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன்

    பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், தமிழ்நாடு எல்லா வகையிலும் உயர வேண்டும் என்ற வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். நமது மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்கள் இந்திய அளவிலும், ஆசிய அளவிலும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி, பயிற்சி கலெக்டர் தாக்கரேசுபம் ஞானதேவ் ராவ், டி.ஆர்.ஓ. அஜய் சீனிவாசன், சப்-கலெக்டர் கவுரவ்குமார், துணை மேயர் ஜெனிட்டா, ஆவின் தலைவர் சுரேஷ்குமார், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோ ரன்ஸ், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, வக்கீல் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார், மாநகர துணைச்செயலாளர் பிரமிளா, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், பகுதி செயலாளர்கள் மேகநாதன், ஜெயக்குமார், மாநகர இளைஞர் அணி அமைப்பா ளர் ஆனந்த கபரியேல்ராஜ், மருத்துவ அணி அமை ப்பாளர் அருண்குமார், மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர் மச்சாது, மாவட்ட பிரதிநிதி நாராயணன், கவுன்சிலர்கள் ரிக்டா, பொன்னப்பன், சந்திரபோஸ், கண்ணன், விஜயகுமார், ராஜதுரை, கந்தசாமி, வட்டச் செயலா ளர்கள் சுப்பையா, டென்சிங், முன்னாள் மேயர் கஸ்தூரிதங்கம், மகளிர் அணி ரேவதி, சத்யா, மற்றும் மகேஸ்வ ரசிங், வக்கீல் கிருபாகரன், கபடிகந்தன், பிரபாகர், பாஸ்கர், தாசில்தார் பிரபாகர், முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூடைபந்து பயிற்சியாளர் ஆனந்த் நன்றி கூறினார்.

    • ஏற்காடு மலை அடிவாரத்தில்‌ குரும்பப் பட்டி வன உயிரியல்‌ பூங்கா அமைந்துள்ளது.
    • சுற்றுலாப்‌ பயணி களின்‌ வசதிக்காக மூன்று பேட்டரி வாகனங்கள்‌ இயக்கப்பட்டு வருகின்றன.

    சேலம்:

    சேலம் மாநகரப் பகுதியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் ஏற்காடு மலை அடிவாரத்தில் குரும்பப் பட்டி வன உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. 1981-ல் சிறு பூங்காவாகத் தொடங்கப்பட்டு, 2008-இல் சுமார் 78 ஏக்கர் அளவுக்கு பூங்கா விரிவாக்கம் செய்யப்பட்டது.

    இந்த வன உயிரியல் பூங்காவில் கடமான், புள்ளிமான், முதலை, ஆமை, மலைப்பாம்பு, நரி, மயில், குரங்கு, வெளிநாட்டு நீர்ப்பறவைகள், பல்வேறு வகை கிளிகள் பராமரிக்கப் பட்டு வருகின்றன. வண்ணத்துப்பூச்சி பூங்கா, பன்னம் செயற்கை அருவி ஆதியவை அமைக்கப்பட்டு பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளது.

    இதனிடையே, சிறுபூங்கா என்ற தர நிலையில் இருந்து நடுத்தர பூங்கா என்ற நிலைக்கு மேம்படுத்த ரூ. 8 கோடி நிதி ஒதுக்கி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், அட்டவணை 1-இல் உள்ள சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட 10 வகை விலங்குகளை கொண்டுவர வனத்துறை திட்டமிட்டுள்ளது.

    மேலும், பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணி களின் வசதிக்காக மூன்று பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்களில் பூங்காவை சுற்றிப் பார்க்க பெரியவர்களுக்கு ரூ. 70-ம், சிறுவர்களுக்கு ரூ. 35-ம் கட்டணமாக வசூலிக்கப்படு கிறது.

    இதனிடையே பூங்காவை சுற்றிப் பார்க்கும் வகையில் பேட்டரியில் இயங்கும் இ-சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக சுமார் 10 சைக்கிள் கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த வகை சைக்கிள்கள் ஒவ்வொன்றும் தலா ரூ. 32 ஆயிரம் மதிப்புடையதாகும்.

    இந்த சைக்கிள்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 50 கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அரை மணி நேரத்துக்கு ரூ. 30 என கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. சைக்கிள் ஓட்ட ஆர்வமுள்ளவர்கள் இ-சைக்கிள் மூலம் பூங்காவை சுற்றிப் பார்க்க லாம்.

    இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், சைக்கிள் ஓட்டுபவரின் உடல் ஆரோக்கியம் மே ம்படுகிறது என்று வனத் துறையினர் தெரிவித்தனர்.

    • மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக அமராவதி அணை அமைந்துள்ளது.
    • அணையில் படகு சவாரியும் துவக்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக அமராவதி அணை அமைந்துள்ளது. பொதுப்பணித்துறை சார்பில் அணைக்கரையில் பூங்காவும் அமைக்க ப்பட்டுள்ளது. கேரளாவிலுள்ள முக்கிய சுற்றுலா தலமான மூணாறுக்கு செல்லும் வழியில் இருப்பதால் அமராவதி அணை பூங்காவுக்கும், சுற்றுலா பயணிகளிடையே முன்பு வரவேற்பு இருந்தது.

    எனவே அப்பகுதியில் முதலை பண்ணை, அரிய வகை கள்ளிச்செடிகளை உள்ளடக்கிய கள்ளிப்பூங்கா, உயிரியல் பூங்கா, மலைவாழ் மக்களுக்கான விற்பனையகம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா அம்சங்கள் மேம்படுத்த ப்பட்டது. அணையில் படகு சவாரியும் துவக்கப்பட்டது.இவ்வாறு வார விடுமுறை நாட்களிலும் கோடை விடுமுறையின் போதும் பிசியாக இருந்த அமராவதி அணை மற்றும் பூங்கா தற்போது எட்டிப்பார்க்க ஆளில்லாமல் பரிதாப நிலையில் உள்ளது. காரணம் அணை பூங்காவில் பசுமை காணாமல் போய் நீருற்றுகள், நடைபாதை, சிலைகள் அனைத்தும் உடைந்து உள்ளே செல்லவே பயப்பட வேண்டியுள்ளது.

    உயிரியல் பூங்காவில் பறவைகள், விலங்குகள் எதுவும் இல்லாமல் வெறும் கட்டடம் மட்டுமே காணப்படுகிறது. சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து மாயமாகி உள்ளது.அணை பூங்காவை பராமரித்து மேம்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பிட்ட இடைவெளியில் பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கப்படும் குறைந்த அளவு நிதியிலும் எவ்வித முறையான பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை.ஒவ்வொரு முறையும் அமராவதிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலா பயணிகள் தற்போது அப்பகுதிக்கு செல்வதை தவிர்த்து விடுகின்றனர்.இனியாவது திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அணை பூங்காவை மேம்படுத்தவும், படகு சவாரி விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • அறிவியல் பூங்காவில் ராக்கெட், பூமி உருண்டை உருவங்கள் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
    • பூங்கா செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.

    கோவை,

    கோவை டாடாபாத் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவில் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.

    கோவை டாடாபாத் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சிலை, ராக்கெட், பூமி உருண்டை உருவங்கள் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் பூங்கா செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.

    அதைத்தொடர்ந்து, பெரிய கடைவீதி, ராஜவீதி, கிராஸ்கட் சாலை ஆகிய பகுதிகளில் ரூ.7.48 கோடி மதிப்பில் 1.75 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோட்டார் இல்லாத வாகனப் போக்குவரத்து திட்டத்தில் நடைபாதை அமைக்கும் பணி மற்றும் மின்விளக்குகள் அமைக்கும் பணியை பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின் போது, செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவிப் பொறியாளர் கணேசன், சுகாதார ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • மேட்டூர் அணையில் கிழக்கு மேற்கு கால்வாய் பகுதியிலும், காவிரி பாலம் பகுதியிலும் சுற்றுலா பயணிகள் நீராடினர்.
    • மேட்டூர் அணை பூங்காவுக்கு நேற்று ஒரே நாளில் 11,295 பேர் வந்து சென்றனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம், மேட்டூர் அணை பூங்கா 33 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோடை விடுமுறை முடிய 2 நாட்களே உள்ளதால் நீர்வளத் துறையின் பராமரிப்பில் உள்ள இந்த பூங்காவிற்கு நேற்று சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் உட்பட வெளி மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    காவிரி ஆற்றில் வெகு நேரம் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள், பின்னர் பூங்காவில் பொழுதை கழித்தனர். பூங்காவில் இருந்த பாம்பு, முயல் பண்ணைகளை கண்டு மகிழ்ந்தனர்.

    சிறியவர் பெரியவர் என வயது வித்தியாசம் இன்றி ஊஞ்சலாடியும் சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனர். பூங்காவில் அமர்ந்து குடும்பத்துடன் உணவு அருந்தியும் ஓய்வு எடுத்தும் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.

    சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக சாலையோர கடைகளில் அதிக விற்பனை காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் மேட்டூர் அணை மீன்களை வாங்கி சமைத்து சுவைத்தனர். இதனால் மீன் வியாபாரம் களை கட்டியது.

    பல்வேறு இடங்களில் இருந்து வாகனங்களில் வந்திருந்ததால் மேட்டூர் - கொளத்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    மேட்டூர் அணையில் கிழக்கு மேற்கு கால்வாய் பகுதியிலும், காவிரி பாலம் பகுதியிலும் சுற்றுலா பயணிகள் நீராடினர்.

    மேட்டூர் அணை பூங்காவுக்கு நேற்று ஒரே நாளில் 11,295 பேர் வந்து சென்றனர். இதன் மூலம் பார்வையாளர்கள் கட்டண மாக 56 ஆயிரத்து 475 வசூல் ஆனது. அணையின் வலது கரையில் உள்ள பவள விழா கோபுரத்தை காண 886 பேர் வந்து சென்றனர்.

    • சென்னை மாநகராட்சி பூங்காக்களில் பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத 76 ஒப்பந்த நிறுவனங்களுக்கு ரூ. 1.54 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    • 571 பூங்காக்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காக்களில் பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத 76 ஒப்பந்த நிறுவனங்களுக்கு ரூ. 1.54 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    பெருநகர சென்னை மாநகராட்சி, பூங்காத்துறையின் சார்பில் மாநகரில் சுற்றுச்சூழலை பேணி காக்கவும், பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காகவும், 738 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 571 பூங்காக்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் பராமரிப்பில் உள்ள பூங்காக்களில் ஒப்பந்ததாரர்கள் புல்வெளிகளை வெட்டி பராமரித்தல், தேவையான நேரத்தில் புல்வெளிகளுக்கிடையேயான களைகளை அகற்றுதல், நடைபாதை மற்றும் செடி, கொடிகளை சரியாக பராமரிக்க வேண்டும்.

    மேலும், ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி தேவையான எண்ணிக்கையில் தகுதியுடைய பணியாளர்களை நியமித்தல், பார்வையாளர்கள் புகார்களை தெரிவிக்க ஒவ்வொரு பூங்காவிலும் புகார் பதிவேடு மற்றும் பூங்காவின் நுழைவு வாயிலில் பார்வை நேரம், பணியாளர்களின் எண்ணிக்கை அடங்கிய விவரங்கள் காட்சிப்படுத்தி இருக்க வேண்டும்.

    மாநகராட்சி, பூங்காத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத 76 ஒப்பந்த நிறுவனங்களுக்கு ரூ.1,54,718 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பூங்காக்கள் பராமரிப்பு பணியில் தொடர்ந்து குறைபாடு மற்றும் தொய்வு கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×