குரும்பபட்டி உயிரியல் பூங்காவை சுற்றிபார்க்க இ-சைக்கிள் வசதி

ஏற்காடு மலை அடிவாரத்தில்‌ குரும்பப் பட்டி வன உயிரியல்‌ பூங்கா அமைந்துள்ளது.சுற்றுலாப்‌ பயணி களின்‌ வசதிக்காக மூன்று பேட்டரி வாகனங்கள்‌ இயக்கப்பட்டு வருகின்றன.
குரும்பபட்டி உயிரியல் பூங்காவை சுற்றிபார்க்க இ-சைக்கிள் வசதி
Published on

சேலம்:

சேலம் மாநகரப் பகுதியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் ஏற்காடு மலை அடிவாரத்தில் குரும்பப் பட்டி வன உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. 1981-ல் சிறு பூங்காவாகத் தொடங்கப்பட்டு, 2008-இல் சுமார் 78 ஏக்கர் அளவுக்கு பூங்கா விரிவாக்கம் செய்யப்பட்டது.

இந்த வன உயிரியல் பூங்காவில் கடமான், புள்ளிமான், முதலை, ஆமை, மலைப்பாம்பு, நரி, மயில், குரங்கு, வெளிநாட்டு நீர்ப்பறவைகள், பல்வேறு வகை கிளிகள் பராமரிக்கப் பட்டு வருகின்றன. வண்ணத்துப்பூச்சி பூங்கா, பன்னம் செயற்கை அருவி ஆதியவை அமைக்கப்பட்டு பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளது.

இதனிடையே, சிறுபூங்கா என்ற தர நிலையில் இருந்து நடுத்தர பூங்கா என்ற நிலைக்கு மேம்படுத்த ரூ. 8 கோடி நிதி ஒதுக்கி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், அட்டவணை 1-இல் உள்ள சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட 10 வகை விலங்குகளை கொண்டுவர வனத்துறை திட்டமிட்டுள்ளது.

மேலும், பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணி களின் வசதிக்காக மூன்று பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்களில் பூங்காவை சுற்றிப் பார்க்க பெரியவர்களுக்கு ரூ. 70-ம், சிறுவர்களுக்கு ரூ. 35-ம் கட்டணமாக வசூலிக்கப்படு கிறது.

இதனிடையே பூங்காவை சுற்றிப் பார்க்கும் வகையில் பேட்டரியில் இயங்கும் இ-சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக சுமார் 10 சைக்கிள் கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த வகை சைக்கிள்கள் ஒவ்வொன்றும் தலா ரூ. 32 ஆயிரம் மதிப்புடையதாகும்.

இந்த சைக்கிள்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 50 கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அரை மணி நேரத்துக்கு ரூ. 30 என கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. சைக்கிள் ஓட்ட ஆர்வமுள்ளவர்கள் இ-சைக்கிள் மூலம் பூங்காவை சுற்றிப் பார்க்க லாம்.

இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், சைக்கிள் ஓட்டுபவரின் உடல் ஆரோக்கியம் மே ம்படுகிறது என்று வனத் துறையினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com