search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "painting"

    • இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நடைபெற்றுகடந்த 5-ந் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
    • வாக்களிப்பதே சிறந்தது நிச்சயமாக வாக்களிப்போம்‘ என்று வாசகத்தின் அடிப்படையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    புதுச்சேரி:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நடைபெற்றுகடந்த 5-ந் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி நடக்கிறது.100 சதவித வாக்குப்பதிவை இலக்காக கொண்டு புதுவை தேர்தல் துறை பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. புதுவை பாரதி பூங்காவில் விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. 250 அடி நீளமுள்ள வெள்ளை பேனரில் புதுவையின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் தங்களது கற்பனைக்கு ஏற்ப வாக்காளர் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர்.

    தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் மாணவர்களோடு இணைந்து ஓவியம் வரைந்து உற்சாகப்படுத்தினார். இதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வாக்களிப்பதே சிறந்தது நிச்சயமாக வாக்களிப்போம்' என்று வாசகத்தின் அடிப்படையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கான ஓவிய போட்டி நடத்தப்பட்டது.

    இதில் இளம் வாக்காளர்களான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வாக்களி க்கப்பதன் முக்கிய த்துவத்தை வலியுறுத்தி ஓவியங்களை வரைந்துள்ளனர். வரும் 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினம் காமராஜர் மணி மண்டபத்தில் கொண்டாடப்படுகிறது. இதில் இந்த ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்படும். தலைமை செயலர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறந்த ஓவியங்களுக்கு பரிசளிக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருச்சி மாநகராட்சி வண்ண ஓவியங்களால் மிளிருகிறது.
    • கண்ட இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுத்து

    திருச்சி:திருச்சி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும், கனவு திட்டமாகவும் இருந்த ஒருங்கிணைந்த பஸ் நிலைய திட்டம் நனவாகி உள்ளது. திருச்சியை அடுத்த மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் ரூ.350 கோடியில் பிரமாண்ட பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடிக்கு பாதாள சாக்கடை திட்டப்பணிகள், 24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய புதிய பைப் லைன் பொருத்தம் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது மாநகரை அழகுப்படுத்தும் விதமாக பொதுச் சுவர்கள், அரசு அலுவலகங்கள், பாலங்கள், மேம்பாலங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் என காணும் இடங்களில் எல்லாம் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகளால் சாலைகள் துண்டிக்கப்பட்டு முழுமையாக சீரமைக்கப்படாத நிலையில் இதுபோன்ற அழகுபடுத்தும் பணிகளுக்கு பணத்தை வாரி இறைக்க வேண்டுமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இருப்பினும் மாநகராட்சி நிர்வாகத்தினர் அழகுப்படுத்தும் பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் வைத்திநாதனிடம் கேட்டபோது, திருச்சி மாநகராட்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ஓவியம் தீட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அழகு படுத்துவதற்காக மட்டும் கிடையாது.பொதுச் சுவர்களில் ஒட்டப்படும் சுவரொட்டிகள் கிழிந்து கால்வாய்களை அடைத்துக் கொள்கிறது. இதற்கு நல்ல விடிவு தற்போது பிறந்துள்ளது. தேவையில்லாமல் கண்ட கண்ட இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதும் இதன் மூலம் தடுக்கப்படும். தற்போது சுவரொட்டிகளுக்கு என ஆங்காங்கே மாநகராட்சி சார்பில் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் மட்டுமே சுவரொட்டிகள் ஒட்ட வேண்டும்.அழகுபடுத்தும் பணியில் லைட்டிங் போன்ற சில பணிகளை மட்டுமே மாநகராட்சி செலவில் மேற்கொள்கிறோம். வர்ணம் தீட்டும் செலவினை நன்கொடையாளர்களே தருகிறார்கள் என்றார்.

    • ஓவியம் வரையும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • மாணவர்கள் ஒன்றிணைந்து 75 நிமிடத்தில் 75 அடி நீளத்தில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர்.

    உடுமலை :

    உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு, உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், சுற்றுச்சூழல் சங்கம் மற்றும் தேஜஸ் ரோட்டரி சங்கம் சார்பில் ஓவியம் வரையும் நிகழ்ச்சி எஸ்.கே.பி., பள்ளியில் நடத்தப்பட்டது.தேஜஸ் ரோட்டரி சங்க பட்டயத்தலைவர் சக்கரபாணி தலைமை வகித்தார். முன்னதாக ஆசிரியர் சதீஷ்குமார், வரவேற்றார். மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

    ஓசோன் பாதுகாப்பு என்ற தலைப்பில் மாணவர்கள் ஒன்றிணைந்து 75 நிமிடத்தில் 75 அடி நீளத்தில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர். சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய அறிவியல் அலுவலர் லெனின்தமிழ்க்கோவன், விவேகானந்தா வித்யாலயம் பள்ளி தாளாளர் மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.பின், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விளக்கி பேசினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் செய்திருந்தார். அனைத்து சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.முடிவில் என்.எஸ்.எஸ்., அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.

    • திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணி முழுவீச்சில் முடிந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
    • 500க்கும் மேற்பட்டோர் அமரும் விதமாக கலையரங்கம் மருத்துவ கல்லுாரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணி முழுவீச்சில் முடிந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அனைத்து விதமான நிகழ்ச்சிகளும் நடத்த ஏதுவாக ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் அமரும் விதமாக கலையரங்கம் மருத்துவ கல்லுாரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது.இதன் முகப்பில் தமிழருக்கும் திருப்பூர் மாவட்டத்துக்கும் பெருமை சேர்க்கும் வகையிலான சிமென்டில் புடைப்பு சிற்பம் அமைக்கப்பட்டு, இது பார்வையாளர்களை கவரும் வகையில் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.

    அதில் பண்டை தமிழரின் ஆடல், பாடல்களை குறிப்பிடும் வகையில் ஆண், பெண் இருவரும் ஜோடியாக இணைந்து திருவிழா ஒன்றில் நடனம் ஆடுவது, வண்ணங்களில் தோரணம் கட்டி, களைகட்டிய ஊர்த்திருவிழா, மத்தளம் இசைத்தபடி பெண் கலைஞர்கள், கிராம கோவில்களில் நடக்கும் அன்றைய நாட்டிய நடன நிகழ்ச்சி.திருப்பூர் மாவட்டத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் களம் காண தயாராக இருக்கும் காங்கயம் காளை, பின்னலாடையின் அடையாளமாக வெவ்வேறு நிறங்களில் பளிச்சிடும் நூல் ரகங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரி வந்து செல்பவர்கள் ஓவிய வடிவமைப்பை உற்று கவனித்து வியந்து செல்கின்றனர்.

    • செங்கோட்டை நூலகத்தில் குரூப் 4 குரூப் 2 பயிற்சி தேர்வுகள் நடைபெறுவதை போன்று ஓவிய பயிற்சிகள் தொடர்ந்து 6 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
    • ஓவிய பயிற்சியில் சுமார் 100 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நூலகத்தில் ஓவியப் பயிற்சி நிறைவு விழா நடை பெற்றது.செங்கோட்டை நூலகத்தில் குரூப் 4 குரூப் 2 பயிற்சி தேர்வுகள் நடைபெறுவதை போன்று ஓவிய பயிற்சிகள் தொடர்ந்து 6 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

    அந்த வகையில் இந்த ஆண்டும் கோடை விடுமுறையில் சுமார் 2 வாரங்கள் ஓவியப் பயிற்சி ஓவிய ஆசிரியர் ெரயில்வே முருகையா வழிகாட்டுதலில் நடைபெற்றது. ஓவிய பயிற்சியில் பங்கேற்ற சுமார் 100 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஓவியப் பயிற்சியின் நிறைவு விழாவில் நன்னூலகர் ராமசாமி வரவேற்று பேசினார். நூலக வாசகர் வட்டத்தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நூலக வாசகர் வட்ட இணைச்செயலாளர் செண்பக குற்றாலம், துணைத்தலைவர் ஆதிமூலம், பொருளாளர் தண்டமிழ்தாசன் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர மன்றத் துணைத் தலைவர் எம்.எஸ். நவநீதகிருஷ்ணன், கட்டிட ஒப்பந்ததாரர் சக்திவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். செங்கோட்டை நகராட்சி கமிஷனர் பார்கவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டிப் பேசினார். நூலக வாசகர் வட்டப் பொருளாளர் நன்றி கூறினார்.

    • மாணவ பிரதிநிதி ரத்தினகணேஷ் முன்னிலையில் 16 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓவியம் வரைவதில் ஈடுபட்டனர்.
    • நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி சார்பில் என் குப்பை, எனது பொறுப்பு, என் நகரம் -எனது பெருமை என்ற திட்டத்தின் கீழ் திருப்பூர் தெற்கு பகுதியில் உள்ள உழவர் சந்தையில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 மாணவர்கள் தூய்மை விழிப்புணர்வு ஓவியம் வரைந்தனர்.

    அலகு -2 மாணவர்கள் ஒருக்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமையில் மக்கள் அதிகம் கூடும் பகுதியான உழவர் சந்தை சுற்றுச் சுவரில் பிளாஸ்டிக்கை விடு... துணிப் பையை எடு... மரம் வளர்ப்போம் போன்ற ஓவியத்தை வரைந்தனர். மாணவ பிரதிநிதி ரத்தினகணேஷ் முன்னிலையில் 16 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓவியம் வரைவதில் ஈடுபட்டனர். கண்கவர் விழிப்புணர்வு ஓவியம் அப்பகுதி மக்களை வெகுவாக ஈர்த்தது. இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    நாகை மாவட்டத்தில் நீர் நிலைகளில் ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை கரைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. வருகிற 13-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

    களிமண்ணால் செய்யப்பட்ட மற்றும் எவ்வித ரசாயன கலவையற்றதுமான கிழங்குமாவு மற்றும் மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க வேண்டும்.

    நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்குவிளைவிக்காத இயற்கை வர்ணங்களுடன் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது. மீறி கரைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகை மாவட்டத்தில் நாகை வெட்டாறு (நாகூர் பாலம் அருகில்) மற்றும் புதியகடற்கரை, மயிலாடுதுறையில் காவிரி ஆறு, தரங்கம்பாடி கடற்கரை, பூம்புகார் கடற்கரை ஆகிய இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×