search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govt Medical College"

    • மாணவர்-பெற்றோர் நலசங்கம் வலியுறுத்தல்
    • கடந்த 2019-ம் ஆண்டு முதலாமாண்டு இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை 150-இடங்களிலிருந்து 180-ஆக உயர்த்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மாநில மாணவர்-பெற்றோர் நலசங்கத் தலைவர் வை.பாலா புதுவை கவர்னர் மற்றும் முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    2023-ம் ஆண்டு மே மாதத்தில் தேசிய மருத்துவ ஆணையம் புதுவை இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது இந்த மருத்துவக்கல்லூரியை ஆய்வு செய்ததின் அடிப்படையில் பேராசியர்கள், உதவியாளர்கள், 80-க்கும் மேற்பட்டோர் மற்றும் உள் கட்டமைப்பு வசதிகளை சரி செய்து உயர்த்த வேண்டிய நிலையில் உள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு முதலாமாண்டு இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை 150-இடங்களிலிருந்து 180-ஆக உயர்த்தப்பட்டது.

    இதனை தேசிய மருத்துவக் கவுன்சில் எந்தவித ஆய்வும் செய்யாமல், அனுமதி அளித்தது.

    தற்போது தேசிய மருத்துவ ஆணையம் புதியதாக செலுத்தப்பட்ட விதி மற்றும் நெறிமுறைகள் அடிப்படையில் 2024-ஜனவரி மாத இறுதியில் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரியை ஆய்வு செய்ய உள்ளது.

    எனவே தற்போது 180-இளநிலை மருத்துவ இடங்களுக்கு உண்டான உதவியாளர்கள், ஊழியர்கள் பணி அமர்த்தியும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புதுவை அரசும், சுகாதாரத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 26-ஐ எட்டியுள்ளது.
    • முதல்வர் கே.சி.ஆரின் மருமகன், சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தெலுங்கானா மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரியாவது நிறுவ வேண்டும் என்ற அரசின் குறிக்கோளின் ஒரு பகுதியாக, தெலுங்கானா முதல்வர் முதல்வர் கே.சி.சந்திரசேகர் ராவ் 9 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தார்.

    காமரெட்டி, கரீம்நகர், கம்மம், கும்ரம் பீம் ஆசிபாபாத், ஜெயசங்கர் பூபாலப்பள்ளி, ஜங்கான், நிர்மல், ராஜண்ணா சிர்சில்லா மற்றும் விகாராபாத் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிகழ்ச்சியில், முதல்வர் கே.சி.ஆரின் மருமகன், சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறியதாவது:-

    நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தெலங்கானாவில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 26-ஐ எட்டியுள்ளது. மேலும், 8 கல்லூரிகள் அடுத்த கல்வியாண்டு தொடக்கத்தில் திறக்கப்பட உள்ளன.

    2014-ல் மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 2,850 ஆக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 8,515 ஆக அதிகரித்து உள்ளது. அடுத்த எட்டு புதிய கல்லூரிகள் திறப்பு விழாவுடன் மாநிலத்தில் ஆண்டுக்கு 10,000 மருத்துவர்களை உருவாக்கும்.

    2014ல் மாநிலத்தில் மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கை 17,000 ஆக இருந்தது. தற்போது அது 34,000ஐ எட்டியுள்ளது. அந்த எண்ணிக்கை விரைவில் 50,000 ஐ எட்டும், மேலும் மருத்துவமனைகளில் உள்ள அனைத்து 50,000 படுக்கைகளும் விரைவில் ஆக்ஸிஜன் வசதிகளைக் கொண்டிருக்கும். எந்த நெருக்கடியான சூழலையும் சமாளிக்க தெலுங்கானா 500 டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதுடன், பாராமெடிக்கல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க நர்சிங் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களை நிறுவுமாறு சுகாதார அமைச்சர் டி. ஹரிஷ் ராவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    சுகாதாரம் தொடர்பான குறிகாட்டிகளில் எஐடிஐ ஆயோக் வழங்கிய தரவரிசையில் தெலுங்கானா 2014ல் 11 வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு வந்துள்ளது. மாநிலத்தில் தாய் இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் இன்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • போராட்டம் காரணமாக இது வரை ஊதியம் வழங்க வில்லை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை செயல்பட்டு வரு கிறது. இங்கு தூய்மை பணி, காவலர், ஹவுஸ் கீப்பிங் ஆகிய பணிகளில் தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் வேலை செய்து வரு கிறார்கள்.

    இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்த குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும். மேலும் வார விடுமுறை சூழற்சி முறையில் வழங்க வேண்டும். ஒப்பந்த முறை ப்படி 3 சிப்ட் வழங்க வேண்டும்.

    பெண் ஊழியர்களுக்கு இரவு பணி வழங்க கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 6-ந் முதல் தமிழக மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கி நடந்து வருகிறது.

    அவர்கள் நேற்று 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் இன்று (வெள்ளிக்கிழமை) 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

    நாங்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மருத்துவமனை டீன் எங்களி டம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர் பேசும் போது, தனி யார் நிறுவனம் தான் உங்களின் கோரிக்கை ஏற்க வேண்டும் என தெரிவி த்தனர்.

    மேலும் மாதம் தோறும் 7-ந் தேதி எங்களுக்கு ஊதியம் வழங்கப்படும். ஆனால் போராட்டம் காரணமாக இது வரை ஊதியம் வழங்க வில்லை. போராட்டம் கைவிட பல அழுத்தம் கொடுக்க ப்படுகிறது. கோரிக்கைகள் நிறை வேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.

    • உலகம் முழுவதிலும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பற்றிய ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பிங்க் மாதமாக கடைபிடிக்கப்படுகிறது
    • பேரணியில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், புற்றுநோய் குறித்த முழக்கங்களை முழங்கியும் சென்றனர்.

    நெல்லை:

    பெண்களை அதிகமாக பாதிக்ககூடிய புற்றுநோய் களில் மார்பகப் புற்றுநோய் முதலிடத்தில் இருக்கிறது.

    பிங்க் மாதம்

    எனவே உலகம் முழுவதிலும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பற்றிய ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பிங்க் மாதம் என்று அறிவிக்கப்பட்டு அதன் அறிகுறிகள் முதல் மீண்டு வருவது வரை கடைபிடிக்க வேண்டிய விழிப்புணர்வு வழிமுறைகளை வலியுறுத்தி வருவதே இம்மாதத்தின் முக்கிய நோக்கமாகும்.

    இதனையொட்டி, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் வழிகாட்டு தலின்படி, புற்றுநோய் மருத்துவ சிகிச்சைப் பிரிவு சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

    கலந்துரையாடல்

    பேரணியை மருத்துவ கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், புற்றுநோய் குறித்த முழக்கங்களை முழங்கியும் சென்றனர். தொடர்ந்து புற்றுநோயை வென்றவர்களின் சாதனை கூட்டத்தை கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கலந்துரை யாடலும் நடைபெற்றது.

    புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. புற்றுநோய் மருத்துவ சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் ஆறுமுகம் வரவேற்புரை ஆற்றி, மார்பக புற்றுநோய் குறித்து பெண்கள் பலர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    மார்பக புற்று நோயிலிருந்து விடுபட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவ பயனாளிகள் கொரோனா காலம் தொட்டு இன்றுவரை தாங்கள் பயணித்து வந்த உணர்வு பூர்வமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டது கேட்போரை கண் கலங்க செய்தது.

    தொடர்ந்து, அவர்கள் கூறுகையில், இங்கு எங்களுக்கு அனைத்து வகையான சிகிச்சைகளும் மருத்துவமனைகளில் இலவசமாக முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஹீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் ரேடியோ தெரபி சிகிச்சைகளும் பெற்று வருகிறோம். அனைவரின் சார்பிலும் மருத்துவமனை நிர்வாகத்தி ற்கும், மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நமது அரசாங்கத்திற்கும் நன்றி கூறுவது மிகவும் பெருமையாக கருதுகிறோம் என்றனர்.

    நிகழ்ச்சியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்துகளை உள்ளடக்கிய கைப்பிரதிகள் வழங்கப்பட்டன. முன்னதாக செவிலியர்கள் கலந்து கொண்ட மார்பக புற்றுநோய் குறித்த பட்டி மன்றம் நடந்தது.

    தொடர்ந்து மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த கவிதை, ஓவிய போட்டி மற்றும் விநாடி வினா நிகழ்ச்சியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும், வெற்றி கேடயங்களும் வழங்கப்பட்டன.‌

    நிகழ்ச்சியில் கதிரியக்க துறைத் தலைவர் தெய்வநாயகம், செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் பியூலா, தலைமை செவிலி யர் கண்காணிப்பாளர் திருமால் தாய், செவிலியர் போதகர் ஆயிரத்தம்மாள் மற்றும் பல்வேறு மருத்துவத் துறையை சேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் பிங்க் கலர் பலூன்களை பறக்கவிட்டனர். புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தீபா நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சிகளை செவிலியர் பயிற்றுநர் செல்வன் தொகுத்து வழங்கினார்.

    • திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணி முழுவீச்சில் முடிந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
    • 500க்கும் மேற்பட்டோர் அமரும் விதமாக கலையரங்கம் மருத்துவ கல்லுாரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணி முழுவீச்சில் முடிந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அனைத்து விதமான நிகழ்ச்சிகளும் நடத்த ஏதுவாக ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் அமரும் விதமாக கலையரங்கம் மருத்துவ கல்லுாரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது.இதன் முகப்பில் தமிழருக்கும் திருப்பூர் மாவட்டத்துக்கும் பெருமை சேர்க்கும் வகையிலான சிமென்டில் புடைப்பு சிற்பம் அமைக்கப்பட்டு, இது பார்வையாளர்களை கவரும் வகையில் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.

    அதில் பண்டை தமிழரின் ஆடல், பாடல்களை குறிப்பிடும் வகையில் ஆண், பெண் இருவரும் ஜோடியாக இணைந்து திருவிழா ஒன்றில் நடனம் ஆடுவது, வண்ணங்களில் தோரணம் கட்டி, களைகட்டிய ஊர்த்திருவிழா, மத்தளம் இசைத்தபடி பெண் கலைஞர்கள், கிராம கோவில்களில் நடக்கும் அன்றைய நாட்டிய நடன நிகழ்ச்சி.திருப்பூர் மாவட்டத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் களம் காண தயாராக இருக்கும் காங்கயம் காளை, பின்னலாடையின் அடையாளமாக வெவ்வேறு நிறங்களில் பளிச்சிடும் நூல் ரகங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரி வந்து செல்பவர்கள் ஓவிய வடிவமைப்பை உற்று கவனித்து வியந்து செல்கின்றனர்.

    • வார்டுகளுக்கு கதவு, ஜன்னல் பொருத்தும் பணி, வயரிங் செய்து, தரைத்தளம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
    • ஆகஸ்டு இறுதிக்குள் திருப்பூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை 850 படுக்கைகளுடன் செயல்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கலாம் என்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் நடப்பாண்டு ஜனவரியில் மருத்துவ கல்லூரி துவங்கப்பட்டது. மருத்துவப்படிப்புக்கான 100 இடங்கள் திருப்பூருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. தற்போது 98 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.மருத்துவ கல்லூரி மருத்துவமனை இரண்டுக்குமான பணி ஒரே நேரத்தில் துவங்கினாலும் மாணவர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மருத்துவ கல்லூரி பணி முடிந்து விரைவாக திறக்கப்பட்டு விட்டது.

    ஓராண்டுக்கு முன் துவங்கப்பட்டாலும் இந்தாண்டு மார்ச் மாதத்துக்கு பின்புதான் மருத்துவமனை பணி சுறுசுறுப்பாகியது. கடந்த மே மாதம் அப்போதைய சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், கடந்த மாதம் சட்டசபை நிதிக்குழுவினர் கட்டுமான பணிகளை பார்வையிட்டு சென்னைக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.இந்நிலையில் 6 தளங்களில் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ள நிலையில் தற்போது வார்டுகளுக்கு கதவு, ஜன்னல் பொருத்தும் பணி, வயரிங் செய்து, தரைத்தளம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. வெளிவளாகத்தை சுற்றிலும் சுண்ணாம்பு பூச்சு பணி ஒரு வாரமாக நடந்து வருகிறது.

    திருப்பூர் தாராபுரம் ரோட்டில் இருந்து மருத்துவமனைக்குள் வரும் வழித்தடம், மருத்துவமனை சுற்றி பாதுகாப்புச்சுவர், மைய கட்டடத்துக்கான 2 நுழைவு வாயில்களுக்கு இறுதி கருத்துரு தயாராகியுள்ளது. ஓரிரு நாளில் இப்பணிகளும் துவங்கவுள்ளது.

    இது குறித்து பொதுப்பணித்துறையினர் கூறுகையில், மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணி, 60 சதவீதம் நிறைவுற்ற நிலையில் நடப்பு மாத இறுதிக்குள் 90 சதவீத பணியை முடித்து விட ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு இறுதிக்குள் திருப்பூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை 850 படுக்கைகளுடன் செயல்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கலாம் என்றனர்.

    ×