search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "protest for 4th day"

    • கல்குவாரி கிரசர் மணல் மற்றும் குவாரி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • தமிழகம் முழுவதும் இன்று 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது

    பெருந்துறை,

    தமிழ்நாடு கல்குவாரி கிரசர் மணல் மற்றும் குவாரி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

    கூட்டத்தில் 2016-ம் ஆண்டு நடை முறையில் உள்ள சிறு கனிம விதிகளை பெரும் கனிம விதிகளுடன் சேர்த்தது. கல் குவாரியில் அனைத்து அதிகாரிகளும் ஆய்வு செய்த பின்பு அனுமதி வழங்கப்பட்ட குவாரிக்கு தனிநபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் குவாரியை இயங்க விடாமல் அதிகாரிகள் அனுமதி மறுப்பது, சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற பெயரில் பணம் பறிக்கும் நோக்கத்தில் தொழிலை நடத்த விடாமல் செய்பவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்ற ப்பட்டது.

    தமிழக அரசும் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழ்நாடு கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி தமிழகம் முழுவதும் இன்று 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் முழு வதும் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட கல் குவாரி கள் மற்றும் கிரசர் மணல் குவாரிகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சரளை பகுதியில் கிரஷர் லாரி உரிமையாளர்கள் 100-க்கும் மேற்பட்ட லாரிகளை ஒரே இடத்தில் நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ஈரோடு மாவட்டம் முழுவதும் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கட்டுமான பணிகள் சார்ந்த தொழிலாளர்களுக்கும் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    • தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் இன்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • போராட்டம் காரணமாக இது வரை ஊதியம் வழங்க வில்லை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை செயல்பட்டு வரு கிறது. இங்கு தூய்மை பணி, காவலர், ஹவுஸ் கீப்பிங் ஆகிய பணிகளில் தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் வேலை செய்து வரு கிறார்கள்.

    இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்த குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும். மேலும் வார விடுமுறை சூழற்சி முறையில் வழங்க வேண்டும். ஒப்பந்த முறை ப்படி 3 சிப்ட் வழங்க வேண்டும்.

    பெண் ஊழியர்களுக்கு இரவு பணி வழங்க கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 6-ந் முதல் தமிழக மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கி நடந்து வருகிறது.

    அவர்கள் நேற்று 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் இன்று (வெள்ளிக்கிழமை) 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

    நாங்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மருத்துவமனை டீன் எங்களி டம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர் பேசும் போது, தனி யார் நிறுவனம் தான் உங்களின் கோரிக்கை ஏற்க வேண்டும் என தெரிவி த்தனர்.

    மேலும் மாதம் தோறும் 7-ந் தேதி எங்களுக்கு ஊதியம் வழங்கப்படும். ஆனால் போராட்டம் காரணமாக இது வரை ஊதியம் வழங்க வில்லை. போராட்டம் கைவிட பல அழுத்தம் கொடுக்க ப்படுகிறது. கோரிக்கைகள் நிறை வேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.

    ×