search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை விழிப்புணர்வு ஓவியம்
    X

    ஓவியம் வரைந்த மாணவர்கள்.

    தூய்மை விழிப்புணர்வு ஓவியம்

    • மாணவ பிரதிநிதி ரத்தினகணேஷ் முன்னிலையில் 16 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓவியம் வரைவதில் ஈடுபட்டனர்.
    • நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி சார்பில் என் குப்பை, எனது பொறுப்பு, என் நகரம் -எனது பெருமை என்ற திட்டத்தின் கீழ் திருப்பூர் தெற்கு பகுதியில் உள்ள உழவர் சந்தையில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 மாணவர்கள் தூய்மை விழிப்புணர்வு ஓவியம் வரைந்தனர்.

    அலகு -2 மாணவர்கள் ஒருக்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமையில் மக்கள் அதிகம் கூடும் பகுதியான உழவர் சந்தை சுற்றுச் சுவரில் பிளாஸ்டிக்கை விடு... துணிப் பையை எடு... மரம் வளர்ப்போம் போன்ற ஓவியத்தை வரைந்தனர். மாணவ பிரதிநிதி ரத்தினகணேஷ் முன்னிலையில் 16 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓவியம் வரைவதில் ஈடுபட்டனர். கண்கவர் விழிப்புணர்வு ஓவியம் அப்பகுதி மக்களை வெகுவாக ஈர்த்தது. இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    Next Story
    ×