search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "painter"

    • வடலூரில் இன்று மின்சாரம் தாக்கி பெயிண்டர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    • வடலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. அவரது மகன் பிரான்சிஸ் (வயது 28). பெயிண்டர். இவர் இன்று காலை வடலூர் கும்பகோணம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பெயிண்டு அடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக உயர் அழுத்த மின்கம்பி சென்றது. இதை கவனிக்காமல் பிரான்சிஸ் குனிந்து நிமிர்ந்தபோது அவரது தலை மின்கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி பிரான்சிஸ் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெயிண்டர் கொலையில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    • உறவினர் பெண்ணை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் முத்தாள் நகரைச் சேர்ந்த சங்கர் என்பவர் மகன் மாரிச்செல்வம் (வயது 19), பெயிண்டர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரது உறவினர் பெண்ணை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுெதாடர்பாக விஜய் மற்றும் அஜித்குமார், ராஜூ ஆகியோர் மாரிச்செல்வத்திடம் தட்டிக்கேட்டுள்ளனர். இருந்தபோதிலும் மாரிச்செல்வம் தொடர்ந்து அந்த பெண்ணை தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விஜய், அஜித்குமார், ராஜூ ஆகியோர் மாரிச்செல்வத்துக்கு மது வாங்கிக்கொடுத்துள்ளனர். அவர் போதையில் இருந்தபோது அவரை கொலை ெசய்துவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.

    இதுபற்றி மாரிச்செல்வ த்தின் தந்தை சங்கர் பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய், அஜித்குமார், ராஜூ ஆகிய 3 பேரையும் பிடித்து மாரிச்செல்வம் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த தனது கணவரிடம் மகேஸ்வரி குடும்ப செலவுக்கு பணம் கொடுக்கும்படி கேட்டார்.
    • படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கோவை:

    கோவை சொக்கம்புதூர் அருகே உள்ள கருப்பண்ணபதியை சேர்ந்தவர் திலிப்குமார். பெயிண்டர். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 24). வேலைக்கு செல்லும் திலிப்குமார் தினசரி மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவார்.

    இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த தனது கணவரிடம் மகேஸ்வரி குடும்ப செலவுக் கு பணம் கொடுக்கும்படி கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த திலிப்குமார் தனது மனைவியை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து அவர் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை தாக்கிய பெயிண்டரை கைது செய்து ெஜயிலில் அடைத்தனர்.

    • சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
    • சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் '6-ம் வகுப்பு படிக்கும் மகனுக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக' மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் தங்கதுரை மேற்பார்வையில், தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட 6-ம் வகுப்பு சிறுவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், "நான் தெருவில் விளையாடிக் கொண்டு இருந்தேன். நாங்கள் வசிக்கும் அதே பகுதியில் குடியிருந்து வரும் பெயிண்டர் திடீரென என்னை வீட்டுக்குள் தூக்கி சென்றார். நான் சத்தம் போட்டேன். அவர் என்னை விடவில்லை. வீட்டுக் கதவை பூட்டிக்கொண்டு எனக்கு உடல் ரீதியாக தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். எனவே நான் கதறி அழுது கூச்சல் போட்டேன். இதன் காரணமாக அந்த நபர் தப்பிச் சென்று விட்டார் என்று போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவன் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து 6-ம் வகுப்பு சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜெய்ஹிந்த்புரம் அருண்குமார் (29) என்பவரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கைது செய்தனர்.

    • சுவற்றில் தண்ணீர் அடிப்பதற்காக மின்மோட்டாரை இயக்கியபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
    • திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    நெல்லை:

    பாளை மேலகுலவணிகர்புரம் ஜெபமாலை 1-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). பெயிண்டர்.இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் ரமேஷ் இன்று இட்டேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெயிண்ட் அடிப்பதற்காக சென்றார். அப்போது அவர் சுவற்றில் தண்ணீர் அடிப்பதற்காக மின்மோட்டாரை இயக்கினார். அதில் எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதில் தூக்கிவீசப்பட்ட அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு ெகாண்டு சென்றனர். அவரை பரிசோரித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம் அருகே முன் விரோத தகராறில் பெயிண்டரை கத்தியால் குத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பச்சாபாளையம் பழனி கவுண்டர் வீதியை சேர்ந்தவர் பிரகாஷ் (37) பெயிண்டர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரேம் (24) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் பிரகாஷ் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். பச்சாப்பாளையம் மகாளியம்மன் கோவில் வீதியில் வந்த போது பிரேம் ரோட்டின் குறுக்கே நின்றுள்ளார்.

    அவரை தள்ளி நிற்கும் படி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை பிரேம் தனது நண்பர் மனோஜூக்கு தெரிவித்துள்ளார். அவரும் அங்கு விரைந்து வந்துள்ளார்.

    அவர்கள் பிரகாசை கத்தியால் குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு பின் சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    பிரகாஷ் பல்லடம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் பிரேம், மனோஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    நாமக்கல்லில் கல்லூரி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த பெயிண்டருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கியது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாரிகங்காணி தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் ராஜ்குமார் (வயது 21). இவர் நாமக்கல்லில் உள்ள லாரி பட்டறை ஒன்றில் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ந் தேதி நாமக்கல் அருகே உள்ள கொமரகவுண்டனூரை சேர்ந்த 17 வயது நிரம்பிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று இளம்வயது திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து அந்த பெண்ணின் தாயார் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ராஜ்குமாரை கைது செய்தனர்.

    பின்னர் அவர் மீது நாமக்கல் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுசீலா வாதாடினார். இவ்வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ராஜ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி இளங்கோ தீர்ப்பு கூறினார்.

    இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராஜ்குமாரை போலீசார் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு கொண்டு சென்றனர்.
    குலசேகரம் அருகே பெயிண்டருடன் விதவை பெண் போலீசில் தஞ்சம் அடைந்தது குறித்து அவரது குழந்தைகளை தர மறுத்து உறவினர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
    குலசேகரம்:

    குலசேகரத்தை அடுத்த அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோய் (வயது 41). பெயிண்டர்.

    ஜோய்க்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தினமும் இவர் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவார். இவரது வீடு அருகே வசித்து வந்தவர் சுபி (30). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    சுபியின் கணவர் கடந்த ஆண்டு இறந்து விட்டார். இதனால் சுபி, தன் குழந்தைகளுடன் வீட்டில் தனியாக தங்கி இருந்தார்.

    பெயிண்டர் ஜோய், தினமும் வேலைக்கு செல்லும் போது சுபியின் வீட்டை தாண்டி செல்ல வேண்டும். அப்போது இருவரும் சந்தித்து பேசிகொள்வது வழக்கம். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.

    இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று ஜோய்யும், சுபியும் கருதினர். எனவே அவர்கள் இருவரும் நேற்று குலசேகரம் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

    போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் இருவரும் மேஜர் என்பதால், முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே பெயிண்டர் ஜோயுடன், சுபி போலீசில் தஞ்சம் அடைந்த தகவல் சுபியின் உறவினர்களுக்கு தெரியவந்தது.

    அவர்கள் உடனே சுபியின் வீட்டுக்கு சென்று அவரது இரண்டு குழந்தைகளையும் தங்களுடன் அழைத்து சென்றுவிட்டனர். போலீஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பிய சுபி, குழந்தைகளை காணாது அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அவர்கள் உறவினர் வீடுகளில் இருப்பதை அறிந்து அவர்களை தேடி சென்றார். அப்போது உறவினர்கள், சுபியிடம் குழந்தைகளை கொடுக்க மறுத்து தகராறு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட் டது.

    இதையடுத்து சுபி, குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க கேட்டு போலீசில் புகார் கொடுக்க உள்ளதாக தெரிவித்தார். #tamilnews
    ×