search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி
    X

    மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி

    • சுவற்றில் தண்ணீர் அடிப்பதற்காக மின்மோட்டாரை இயக்கியபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
    • திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    நெல்லை:

    பாளை மேலகுலவணிகர்புரம் ஜெபமாலை 1-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). பெயிண்டர்.இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் ரமேஷ் இன்று இட்டேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெயிண்ட் அடிப்பதற்காக சென்றார். அப்போது அவர் சுவற்றில் தண்ணீர் அடிப்பதற்காக மின்மோட்டாரை இயக்கினார். அதில் எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதில் தூக்கிவீசப்பட்ட அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு ெகாண்டு சென்றனர். அவரை பரிசோரித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×