search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்லடம் அருகே பெயிண்டருக்கு கத்திக்குத்து- 2 வாலிபர்கள் கைது
    X

    பல்லடம் அருகே பெயிண்டருக்கு கத்திக்குத்து- 2 வாலிபர்கள் கைது

    பல்லடம் அருகே முன் விரோத தகராறில் பெயிண்டரை கத்தியால் குத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பச்சாபாளையம் பழனி கவுண்டர் வீதியை சேர்ந்தவர் பிரகாஷ் (37) பெயிண்டர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரேம் (24) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் பிரகாஷ் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். பச்சாப்பாளையம் மகாளியம்மன் கோவில் வீதியில் வந்த போது பிரேம் ரோட்டின் குறுக்கே நின்றுள்ளார்.

    அவரை தள்ளி நிற்கும் படி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை பிரேம் தனது நண்பர் மனோஜூக்கு தெரிவித்துள்ளார். அவரும் அங்கு விரைந்து வந்துள்ளார்.

    அவர்கள் பிரகாசை கத்தியால் குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு பின் சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    பிரகாஷ் பல்லடம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் பிரேம், மனோஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×