என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "padayatra"
- 6 -ந் தேதி மகம் நட்சத்திரத்தன்று மலைக்கோவிலில் காவடி செலுத்திய பின் நடந்தே வீடு திரும்புவார்கள்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் பாரம்பரியமிக்க நகரத்தார் காவடிகள் வந்து சேர்ந்தன. 291 சர்க்கரை காவடியுடன் ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் இந்த காவடிகள் கடந்த 29-ந்தேதி குன்றக்குடியில் இருந்து 19 நாட்கள் பயணமாக புறப்பட்டு சிங்கம்புணரி வந்தடைந்தது.
நெற்குப்பை, கண்டனுார், காரைக்குடி அரண்மனை பொங்கல், உள்ளிட்ட நகரத்தார்கள் கடந்த 400 ஆண்டுகளாக பாதயாத்திரையாக சென்று பழனி முருகனுக்கு காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தி வருகிறார்கள். அதன்பின் நடந்தே வீடு திரும்புவது இவர்களது தனிச்சிறப்பு.
பிப்ரவரி 4-ந் தேதி தைப்பூச தினத்தன்று பழனி சென்றடைந்து அதன் பின் 6 -ந் தேதி மகம் நட்சத்திரத்தன்று மலைக்கோவிலில் காவடி செலுத்திய பின் நடந்தே வீடு திரும்புவார்கள்
சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோவிலில் நேற்று காலை மகேஸ்வர பூஜை நடந்தது. பக்தர்கள் முன்னிலையில் காவடி சிந்து பாடப்பட்டு காவடிகள் பழனியை நோக்கி புறப்பட்டன. சிங்கம்புணரியில் வணிகர்கள் சார்பில் நகரத்தார்கள் பாதயாத்திரை பக்தர்களுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
- தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர்
- பக்தர்கள் நடை பயணத்தின் போது வள்ளலாரின் அருள் மொழிகளை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறினர்.
கந்தர்வகோட்டை:
வடலூர் வள்ளலார் கோவிலில் நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த பாண்டி மண்டல சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய பாதயாத்திரை குழுவைச் சேர்ந்த சன்மார்க்க சங்கத்தினர் மதுரையிலிருந்து வடலூர் வரை கடந்த 60 ஆண்டுகளாக பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சிவஜோதி தலைமையில் 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் மதுரையிலிருந்து பாதயாத்திரை மேற்கொண்டு, கந்தர்வகோட்டை வள்ளலார் மடத்தில் தங்கி, தொடர்ந்து வடலூருக்கு பாதயாத்திரை மேற்கொண்டனர். சன்மார்க்க சங்க பக்தர்கள் நடை பயணத்தின் போது அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல், உயிர் பலி தவிர்த்தல் உள்ளிட்ட வள்ளலாரின் அருள் மொழிகளை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி நடை பயணம் மேற்கொண்டனர்.
- அரியாங்குப்பம் ஒருங்கிணைந்த வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில இந்திய அளவில் வடமாநிலங்களில் பாதயாத்திரை மேற் கொண்டு வரும் ராகுல் காந்தி எம்.பி.க்கு ஆதரவு தெரிவிக்கின்ற வகையில் அரியாங்குப்பம் தொகுதியில் பாதயாத்திரை மேற்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் ஒருங்கிணைந்த வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில இந்திய அளவில் வடமாநிலங்களில் பாதயாத்திரை மேற் கொண்டு வரும் ராகுல் காந்தி எம்.பி.க்கு ஆதரவு தெரிவிக்கின்ற வகையில் அரியாங்குப்பம் தொகுதியில் பாதயாத்திரை மேற்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளரும், அரியாங்குப்பம் தொகுதி பொறுப்பாளருமான சங்கர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வட்டார கிழக்கு காங்கிரஸ் தலைவர் அய்யப்பன் முன்னிலை வகித்தார். வட்டார காங்கிரஸ் தலைவர் (மேற்கு) சிவராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் புதுவை புதுவை மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் அகில இந்தியமீனவர் காங்கிரஸ் செயலாளர் காங்கேயன் மாநில பி.சி.சி. செந்தில்குமரன், அன்புமணி செயலாளர் சூசைராஜ்மற்றும் அனைத்து கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் நிர்வாகிகள் புதுவை மாநில அனைத்து பிரிவுகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கான ஏற்பாடுகளை வட்டார காங்கிரஸ் தலைவர் அய்யப்பன் தலைமையில் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து பஞ்சாயத்து ராஜ், அரியாங்குப்பம் தொகுதி தலைவர் சங்கர் பாபு மற்றும் தொகுதி பொருளாளர் பாபு, தொகுதி பொறுப்பாளர்கள் பாஸ்கர், கருணா, கர்ணன், கருணாகரன், சசிகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.
கூட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் ஜம்மு காஷ்மீரில் நடைபெறுகிறது.
- பாதுகாப்பு அளிக்கும்வரை நடைபயணத்தை தொடங்கப் போவதில்லை என காங்கிரஸ் அறிவித்தது.
ஜம்மு:
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்த யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. தற்போது இந்த நடைபயணம் ஜம்மு-காஷ்மீரின் பனிஹாலில் இருந்து மீண்டும் தொடங்கி நடைபெற்றது. காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாகமாக மூவர்ணக் கொடியை ஏந்தியபடி நடைப்பயணத்தைத் தொடர்ந்தனர்.
இதற்கிடையே, காஷ்மீரின் காசிகுண்ட் பகுதியில் நடைபெற்ற ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் பாதுகாப்பு காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பு அளிக்கும் வரை நடைபயணத்தை மீண்டும் தொடங்கப் போவதில்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
இந்நிலையில், இதுகுறித்து ஜம்மு போலீசார் கூறுகையில், ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் எவ்வித பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லை. காஷ்மீரில் நடைபெற்றுவரும் ஒற்றுமை நடைபயணத்தில் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பயணத்தின்போது பங்கிஹாலில் பெருங்கூட்டம் இணைவது குறித்து அமைப்பாளர்கள் எந்த தகவலும் தரவில்லை என விளக்கமளித்தனர்.
- காஷ்மீரில் பாதயாத்திரையின் நடந்து செல்லும் தூரம் குறைக்கப்பட்டுள்ளது.
- பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றது காங்கிரஸ்.
சிம்லா:
ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாதயாத்திரை லக்கன்பூர் வழியாக காஷ்மீரில் நுழைகிறது. இம்மாதம் 30-ம் தேதி அங்கு தேசிய கொடி ஏற்றுவதுடன் பாதயாத்திரை நிறைவடைகிறது. அதே சமயம், காஷ்மீரில், நடந்து செல்லும் தூரம் குறைக்கப்படும் என்று தெரிகிறது.
காஷ்மீரில் மக்களுக்கு இடையூறு இல்லாதவகையில் சில இடங்களில் வாகனங்கள் மூலமாகவும், வேறு சில இடங்களில் நடைபயணமாகவும் யாத்திரை செல்ல அனுமதிக்கப்படும் என காஷ்மீர் போலீஸ் டி.ஜி.பி. தில்பக்சிங் ஏற்கனவே கூறியுள்ளார்
இந்நிலையில், பாதயாத்திரையை ஒருங்கிணைத்து வரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சிம்லாவில் நிருபர்களிடம் கூறியதாவது:
ராகுல் காந்தி காஷ்மீரில் பாதயாத்திரை செல்வது உறுதி. அதே சமயத்தில், பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.
பாதுகாப்பு தொடர்பாக மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அங்கு நடந்து செல்லும் தூரம் குறைக்கப்பட வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.
- வெளிச்சம் இல்லாத இடங்களில் பாதயாத்திரை பக்தர்கள் மீது வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
- பக்தர்களின் ஆடையில் இரவில் ஒளிரும் பிரதிபலிப்பான் வில்லைகளை ஓட்டினர்.
பல்லடம் :
புகழ்பெற்ற முருகன் திருத்தலமான பழனி மலைக்கு தைப்பூசவிழாவுக்கு பாதயாத்திரையாக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். திருப்பூர்,கோவை மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பல்லடம் வழியாக பாத யாத்திரை செல்கின்றனர்.
இந்த நிலையில் பகல் நேரங்களில் வெயில் அதிகமாக இருப்பதன் காரணமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பாத யாத்திரையாக பக்தர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இதற்கிடையே,போதிய வெளிச்சம் இல்லாத இடங்களில் பாதயாத்திரை பக்தர்கள் மீது வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
கடந்த காலங்களில் பக்தர்கள் பலர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். இதனைத் தவிர்க்கும் பொருட்டு இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்க்க போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர் இந்த நிலையில் பல்லடத்தில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையில்,போக்குவரத்து போலீசார் பழனி மலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு விபத்தினை தவிர்க்கும் பொருட்டு பக்தர்களின் ஆடையில் இரவில் ஒளிரும் பிரதிபலிப்பான் வில்லைகளை ஓட்டினர்.
+2
- நெல்லை மாநகர பகுதியில் கடந்த 2 நாட்களாக பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- பொங்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், நாளை பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
நெல்லை:
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஆங்கில புத்தாண்டு, பொங்கல், தைப்பூசம் ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம்.
பொங்கல் வைத்து வழிபாடு
பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் அவர்கள் பொங்கல் பண்டிகை அன்று வீட்டில் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.
வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, கடையம், அம்பை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கடந்த 1 வாரமாக வே பாத யாத்திரை யாக திருச்செந்தூருக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
வேண்டுதல் நிறைவேற...
இதே போல் மதுரை, விருதுநகர், சிவகாசி, கோவில்பட்டி பகுதியை சேர்ந்த வர்களும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பக்தர்களும் பாத யாத்திரை செல்கிறார்கள்.
பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு இணங்க காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக செல்கிறார்கள்.
நெல்லை மாநகர பகுதியில் கடந்த 2 நாட்களாக பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாறு செல்லும் பக்தர்கள் கொக்கிரகுளத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு தைப்பூச மண்டபத்தில் ஓய்வு எடுத்து செல்கிறார்கள்.
பொங்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், நாளை பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
- தைப்பூச விழாவுக்கும்,பங்குனி உத்திரத்திற்கும் பழனிக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர்.
- பக்தர்களின் சிரமத்தினை குறைக்க அரசு போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பல்லடம் :
ஆண்டு தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் தைப்பூச விழாவுக்கும்,பங்குனி உத்திரத்திற்கும் பழனிக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர். திருப்பூர், கோவை மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரை செல்கின்றனர்.
பெரும்பாலும் சாலையோரமாகவும்,நெடுஞ்சாலைகளை கடந்தும் செல்வதால் பக்தர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. எனவே பாதயாத்திரை மேற்கொள்பவர்களுக்கான தனி நடைபாதை திண்டுக்கல் முதல் பழனி வரை இருப்பதை போல் திருப்பூர் - பழனி,கோவை - பழனி ஆகிய ரோடுகளில் தனி நடைபாதை அமைக்க வேண்டும்.
மேலும் பக்தர்கள் தங்குவதற்கான ஒய்வு இடங்கள்,நெடுஞ்சாலைகள் ஓரமாக அமைக்கப்பட வேண்டும்.பழனியில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும். சிறப்பு பேருந்து என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது. சாதாரண கட்டணத்தில் அதிக பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்து தர வேண்டும். பக்தர்களின் சிரமத்தினை குறைக்க அரசு போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- யாத்திரையில் ராகுல் உள்பட தொண்டர்கள் தங்குவதற்கு 64 கண்டெய்னர்களில் படுக்கை வசதி, கழிப்பறை, குளியலறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
- மீண்டும் கொரோனா வெளிநாடுகளில் வேகமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாரத ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி கன்னியா குமரியில் இருந்து புறப்பட்டார்.
இந்த யாத்திரை 9 மாநிலங்களை கடந்து 108-வது நாளான நேற்று காலையில் டெல்லியை சென்றது. டெல்லி மாநில எல்லையான பதர்பூர் சென்றதும் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அங்கிருந்து செங்கோட்டையை நோக்கி ராகுல் நடைபயணம் சென்றார். இந்த யாத்திரையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். வழிநெடுக ரோட்டின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாகமாக வரவேற்றார்கள்.
சோனியா, பிரியங்கா, ராபர்ட் வதேரா உள்பட ராகுல் குடும்பத்தினரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்களும் பேரணியில் பங்கேற்றார்கள்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தனது கட்சியினர் 250 பேருடன் பேரணியில் பங்கேற்றார். பின்னர் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல், கார்கே, கமல் உள்ளிட்டோர் பேசினார்கள்.
மீண்டும் கொரோனா வெளிநாடுகளில் வேகமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பேரணியில் பங்கேற்றவர்கள் யாரும் முகக்கவசம் அணியவில்லை.
சோனியா முகக்கவசம் அணிந்து இருந்தார். பிரமாண்ட கூட்டத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒருசிலர் மட்டுமே முகக்கவசம் அணிந்து வந்தனர்.
நேற்றைய நடைபயண நிறைவில் ராகுல் பேசும்போது, `2,800 கிலோ மீட்டர் நடந்து வந்துள்ளேன். நாட்டில் எங்கேயும் நான் வன்முறையை பார்க்கவில்லை.
இந்த பாதயாத்திரை இந்தியாவை இணைப்பதை தான் நோக்கமாக கொண்டுள்ளது. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சமூக வெறுப்பு, வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வை தான் பரப்பும்' என்றார்.
நடைபயணத்துக்கு 7 நாட்கள் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதயாத்திரையில் கலந்து கொண்டவர்கள் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். மீண்டும் 1-ந்தேதி அவரவர் கண்டெய்னர்களில் வந்து ஆஜர் ஆக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த யாத்திரையில் ராகுல் உள்பட தொண்டர்கள் தங்குவதற்கு 64 கண்டெய்னர்களில் படுக்கை வசதி, கழிப்பறை, குளியலறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
தற்போது டெல்லியில் கடும் குளிர் வாட்டி எடுக்கிறது. கண்டெய்னர்களில் தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். இதனால் குளிர் சாதன வசதிகளை அகற்றி விட்டு ஹீட்டர்கள் பொருத்தப்படுகிறது. இந்த பணிகள் அடுத்த சில நாட்களில் நிறைவடையும். அதன்பிறகு மீண்டும் பாதயாத்திரையை ராகுல் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.
- மீண்டும் ராகுல்காந்தி 6-ந் தேதி நடைபயணத்தை தொடங்க திட்டமிட்டு உள்ளார்
- சோனியா, ராகுல் இருவரும் இணைந்து நடைபயணம் மேற்கொள்வதால் கர்நாடகாவில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த உள்ளனர்.
பெங்களூரு:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை கடந்த மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். கேரளா மாநிலம் வழியாக அவரது பாத யாத்திரை பயணம் தொடர்ந்தது.
தற்போது ராகுல்காந்தி கர்நாடகா மாநிலத்தில் பாத யாத்திரை மேற்கொண்டு வந்தார். அவரது நடைபயணம் இதுவரை சுமார் 630 கி.மீ. தொலைவை நிறைவு செய்து உள்ளது.
இன்று (திங்கட்கிழமை) காலை 6.30 மணிக்கு ராகுல்காந்தியும், காங்கிரஸ் தொண்டர்களும் மைசூரில் நடைபயணத்தை தொடங்கினார்கள். இன்று காலை 11 மணிக்கு அவரது நடைபயணம் மாண்டியா மாவட்டத்துக்குள் சென்றது.
ஸ்ரீரங்கபட்டினத்தில் அவரது நடைபயணத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று மாலை பாண்டவர்புரத்தில் அவரது நடைபயணம் முடிகிறது. இதையடுத்து நாளை, நாளை மறுநாள் 2 நாட்கள் நடைபயணத்துக்கு ஓய்வு அளிக்க ராகுல்காந்தி முடிவு செய்து உள்ளார்.
நாளை ஆயுதபூஜை, நாளை மறுநாள் விஜயதசமி என்பதால் 2 நாட்களும் நடைபயணத்தை ராகுல்காந்தி நிறுத்தி உள்ளார். இன்று மாலை நடைபயணம் குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் விமானம் மூலம் கூர்க் மலைப்பகுதிக்கு ராகுல் செல்ல உள்ளார்.
காங்கிரஸ் செயல் தலைவர் சோனியா காந்தியும் இன்று டெல்லியில் இருந்து கர்நாடகாவுக்கு வந்தார். அவரும் கூர்க் பிராந்தியத்துக்கு செல்கிறார். அங்குள்ள தனியார் ஓட்டலில் சோனியாவும், ராகுலும் தங்குகிறார்கள்.
அடுத்த 2 நாட்கள் சோனியா, ராகுல் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அங்கு தங்கியிருந்து காங்கிரசின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்க உள்ளனர்.
மீண்டும் ராகுல்காந்தி 6-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபயணத்தை தொடங்க திட்டமிட்டு உள்ளார். அப்போது அவருடன் சோனியாவும் நடைபயணத்தில் கலந்து கொள்கிறார்.
சோனியா, ராகுல் இருவரும் இணைந்து நடைபயணம் மேற்கொள்வதால் கர்நாடகாவில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த உள்ளனர். பிரியங்காவும் நடைபயணத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- வழிநெடுகிலும் அவரை ஏராளமான பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.
- இந்த யாத்திரை 12 முதல் 15 மாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாட்னா :
பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். இதற்காக 'ஜன் சுராஜ்' என்ற பெயரில் பிரசார தளம் ஒன்றை தொடங்கி உள்ளார். இதன் ஒரு பகுதியாக பீகாரில் பாதயாத்திரை நடத்தப்போவதாக அவர் அறிவித்து இருந்தார்.
அதன்படி காந்தி பிறந்த தினமான நேற்று, பீகாரின் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள பிதிகர்வரா காந்தி ஆசிரமத்தில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கினார். வழிநெடுகிலும் அவரை ஏராளமான பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.
மாநிலம் முழுவதும் 3,500 கி.மீ. தொலைவுக்கு தனது ஆதரவாளர்களுடன் பாதயாத்திரை மேற்கொள்ளும் பிரசாந்த் கிஷோர், ஒவ்வொரு பஞ்சாயத்துகளுக்கும் சென்று மக்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளார். இந்த யாத்திரை 12 முதல் 15 மாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக பாதயாத்திரை குறித்து துனது டுவிட்டர் தளத்தில், 'மிகவும் பின்தங்கிய மற்றும் ஏழை மாநிலமான பீகாரின் அமைப்பு முறையை மாற்ற முடிவு செய்துள்ளேன்' என குறிப்பிட்டு இருந்தார்.
- பாரத் ஜோடோ பாதயாத்திரையில் வரும் 6-ம் தேதி சோனியா காந்தி கலந்து கொள்கிறார்.
- அவருடன் பிரியங்கா காந்தியும் இணைய உள்ளார். இதனால் அவர்கள் கர்நாடகம் செல்கிறார்கள்.
பெங்களூரு:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. இவர் பாரத் ஜோடோ என்ற பெயரில் பாதயாத்திரையை கடந்த மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.
தமிழகத்தைத் தொடர்ந்து கேரளாவில் 19 நாட்கள் பாதயாத்திரை நடைபெற்றது. ராகுல் காந்தியின் பாதயாத்திரை கடந்த 30-ம் தேதி கர்நாடகத்துக்குள் நுழைந்தது.
இந்நிலையில், இந்தப் பாதயாத்திரையில் ஒருநாள் மட்டும் கலந்து கொள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் விரைவில் கர்நாடகம் வருகிறார்கள். அவர்கள் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மைசூருவுக்கு வரவுள்ளனர். வரும் 6-ம் தேதி அவர்கள் ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. சிறிது தூரம் அவர்கள் பாதயாத்திரையில் பங்கேற்று நடப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
சோனியா காந்தி, பிரியங்கா காந்தி வருகையையொட்டி அவர்கள் தங்கவுள்ள ரெசார்ட் உள்பட பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்