search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கல் பண்டிகையையொட்டி திருச்செந்தூர் கோவிலுக்கு அலகு குத்தி, காவடி எடுத்து பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்

    • நெல்லை மாநகர பகுதியில் கடந்த 2 நாட்களாக பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • பொங்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், நாளை பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

    நெல்லை:

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஆங்கில புத்தாண்டு, பொங்கல், தைப்பூசம் ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம்.

    பொங்கல் வைத்து வழிபாடு

    பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் அவர்கள் பொங்கல் பண்டிகை அன்று வீட்டில் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.

    வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, கடையம், அம்பை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கடந்த 1 வாரமாக வே பாத யாத்திரை யாக திருச்செந்தூருக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

    வேண்டுதல் நிறைவேற...

    இதே போல் மதுரை, விருதுநகர், சிவகாசி, கோவில்பட்டி பகுதியை சேர்ந்த வர்களும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பக்தர்களும் பாத யாத்திரை செல்கிறார்கள்.

    பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு இணங்க காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக செல்கிறார்கள்.

    நெல்லை மாநகர பகுதியில் கடந்த 2 நாட்களாக பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாறு செல்லும் பக்தர்கள் கொக்கிரகுளத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு தைப்பூச மண்டபத்தில் ஓய்வு எடுத்து செல்கிறார்கள்.

    பொங்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், நாளை பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

    Next Story
    ×