search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "operation"

    • (எண்:12680) 4 நாட்களுக்கு காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ரெயில் இயக்கம் ஆகஸ்டு 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்,ஜூலை.7-

    சென்னையில் மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதால் கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12680) 4 நாட்களுக்கு காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூலை மாத மாதாந்திர பராமரிப்பு, தண்டவாள மேம்பாட்டு பணிகள் நடக்கிறது. இதனால் சென்னை செல்லும் 8 ெரயில்கள் முழுமையாகவும், 4 ெரயில்கள் பகுதியளவிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அந்த பட்டியலின் படி தினமும் காலை 6:20 மணிக்கு புறப்படும் கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12680) ஜூலை 11,18,25 மற்றும், ஆகஸ்டு 1ந் தேதி (செவ்வாய்கிழமைகளில்) ஆகிய நான்கு நாட்கள் காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும்.

    அரக்கோணம், பெரம்பூர், சென்னை சென்ட்ரலுக்கு ெரயில் செல்லாது. மறுமார்க்கமாக சென்னைக்கு பதில் மாலை 4:20 மணிக்கு காட்பாடியில் இருந்து ெரயில் (எண்:12679) இயக்கம் துவங்கும் என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ரெயில் பயணிகள் தொடர் வலியுறுத்தலால், திருவனந்தபுரம் - சென்னை எழும்பூர் இடையே வாராந்திர ரெயில் (எண்:06044) இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு தொடர்ந்து அதிகரித்ததால் ெரயில் இயக்கம் ஆகஸ்டு 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரத்தில் புறப்படும் ெரயில் கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, அரக்கோணம் வழியாக செல்லும். இந்தரெயிலில், 3 ஏசி., 9 படுக்கை வசதி, 5 பொது, 2 சரக்கு பெட்டி இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

    வடமாநிலம் செல்லும் ெரெயில்பயணிகள் வசதிக்காக, ரப்திசாஹர், ஹிம்சாகர், பாட்னா உட்பட 14 எக்ஸ்பிரஸ் ெரயில்கள் நின்று செல்லும் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளன.

    ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் வழியாக செல்லும் 14 எக்ஸ்பிரஸ் ெரயில்கள் நின்று செல்லும் நிலையங்களின் எண்ணிக்கையை தெற்கு மத்திய ெரயில்வே அதிகரித்துள்ளது.

    எர்ணாகுளம் - பரூனி ரப்திசாகர் எக்ஸ்பிரஸ், ஓங்கோல் - விஜயவாடா இடையே, சிரலா நிலைத்தில் 1 நிமிடம் நிற்கும்.ஸ்ரீவைஷ்ணவி தேவி கோவில் - கன்னியாகுமரி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ், நெல்லூர் - ரேணிகுண்டா இடையே குண்டூரில் 2 நிமிடங்கள் நிற்கும்.

    எர்ணாகுளம் - பாட்னா எக்ஸ்பிரஸ் விஜயவாடா - வாரங்கல் இடையே கம்மம், வாரங்கல் - பெலம்பல்லி இடையே ராமகுண்டம் மற்றும் மன்சிர்யல் ஆகிய நிலையங்களில் 1 நிமிடம் நின்று செல்லும்.இவை தவிர மேலும் 11 ரெயில்கள் கூடுதலாக நின்று செல்லும் நிலையங்கள் விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.

    • மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையமும், 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது.
    • புதிய அனல் மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக நேற்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டது .

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையமும், 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது. பழைய அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகள் செயல்பட்டு வருகிறது.

    பராமரிப்பு பணிகள்

    இந்த நிலையில் தற்போது புதிய அனல் மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக நேற்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டது .

    இதன் காரணமாக மின் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.

    1-வது யூனிட்

    இது போன்று பழைய அனல் மின் நிலையத்தில் 1-வது யூனிட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 3 யூனிட்டுகளில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    அதாவது 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையத்தில் தற்போது 630 மெகா வாட் மின் உற்பத்தி மட்டுமே நடை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் தடுப்பதற்கும் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
    • சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனா்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையின் சாா்பில் கடலோர மாவட்டங்களில் சாகா் கவாச் என்னும் தீவிரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை இன்று 2-வது நாளாக நடந்தது.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக நுழைந்த தீவிரவாதிகள், தாக்குதல் நடத்தினா். இதில், நூற்றுக்கும் மேற்பட்டோா் பலியாகினா். இதைத் தொடா்ந்து கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்கவும், மீண்டும் மும்பை தாக்குதல் போன்ற அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் தடுப்பதற்கும் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக கடலோர மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு ஒரு முறை தீவிரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று (29-ந்தேதி) காலை 6 மணிக்கு தொடங்கி, ஒத்திகை நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியிலும் இன்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

    இதில் கடலோர பாதுகாப்பு படை, கமாண்டோ பிரிவு, சட்டம் மற்றும் ஒழுங்கு போலீசாா், குற்றப்பிரிவு போலீசாா், தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம், மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட பாதுகாப்பு மற்றும் காவல் துறையை சோ்ந்த பல்வேறு பிரிவினா் இணைந்து ஒத்திகையை நடத்தினர். நேற்று நடந்த ஒத்திகையில் ராமேசுவரத்தில் வெடிகுண்டுகளுடன் வந்த 16 பேரை மடக்கி பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை இன்று 2-வது நாளாக நடந்தது.

    பாதுகாப்பு ஒத்திகையை முன்னிட்டு ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், தொண்டி, தேவிபட்டினம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி உள்ளிட்ட கடலோர பகுதி முழுவதையும் போலீசார் தங்களின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனா்.

    இதையடுத்து கண்காணிப்பு மற்றும் ரோந்து பணி முடுக்கி விடப்பட்டது. சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனா். கடலோரத்தில் வாழும் மீனவர்களுக்கு சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரும் தென்பட்டால் உடனடியாக தெரிவிக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டது.

    • வயிற்றில் கை, கால்கள், பிறப்பு உறுப்பு மற்றும் சில பகுதிகள், தாடைகள் மற்றும் கை, கால்கள் ஆகியவற்றை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
    • கடந்த 36 ஆண்டுகளாக தனது வயிற்றுக்குள் இரட்டை குழந்தைகளை சுமந்து கொண்டு இருப்பது தெரிய வந்தது.

    நாக்பூர்:

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் சஞ்சு பகத்.

    1963-ம் ஆண்டு பிறந்த இவருக்கு சிறு வயதில் இருந்தே வயிறு மிகவும் பெரிதாக காணப்பட்டது. என்றாலும் அவர் ஆரோக்கியமாகவே இருந்து வந்தார். 20 வயதாகும் வரை அவர் தனது பெரிய வயிற்றை பற்றி கவலைப்படவில்லை.

    அப்பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் வேலை செய்து வந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரது வயிறு மேலும் மேலும் பெரிதாகி பலூன் போல காணப்பட்டது. என்றாலும் சஞ்சுபகத் தனது வீங்கிய வயிற்றை பற்றி கவலைப்படாமல் வேலையை தொடர்ந்து வந்தார்.

    அவரது நண்பர்களும், அப்பகுதி மக்களும் சஞ்சுபகத்தை கர்ப்பிணி என கேலி-கிண்டல் செய்து வந்தனர். இது அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியது.

    ஒரு கட்டத்தில் வயிறு வீக்கம் காரணமாக அவருக்கு சுவாச பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சுவாசிக்க முடியாமல் அவர் திணறினார். இதையடுத்து 1999-ம் ஆண்டு அவரை மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அஜய்மேத்தா, சஞ்சுபகத் கட்டியால் அவதிப்பட்டதாக கருதினார். அவரின் வயிற்றில் பெரிய கட்டி இருக்கலாம் என்று கருதிய டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.

    அப்போது அவரது வயிற்றில் கை, கால்கள், பிறப்பு உறுப்பு மற்றும் சில பகுதிகள், தாடைகள் மற்றும் கை, கால்கள் ஆகியவற்றை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது 'மறைந்து போகும் இரட்டை நோய்க்குறி' என்று கருதினர். அதாவது அவரது இரட்டையர் கர்ப்ப காலத்தில் இறந்து விட்டதாக நினைத்தனர்.

    ஆனால் பின்னர் நடந்த பரிசோதனை மற்றும் ஆய்வில் அவருக்கு இருக்கும் பாதிப்பு அரிதிலும் அரிய நோய் பாதிப்பான 'கருவில் கரு' என்று கண்டறியப்பட்டது. அவர் கடந்த 36 ஆண்டுகளாக தனது வயிற்றுக்குள் இரட்டை குழந்தைகளை சுமந்து கொண்டு இருப்பது தெரிய வந்தது.

    இந்த வகை நோய் பாதிப்பு என்பது பிறக்காத இரட்டை குழந்தை உடலில் ஒரு ஒட்டுண்ணி போல வாழ்கிறது.

    பின்னர் அந்த இரட்டை குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றினர். தனது வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட குழந்தைகளை சஞ்சு பார்க்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    • மேட்டூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மாதேஸ்வரன் மலைக்கோவில் உள்ளது.
    • தமிழக பக்தர்கள் மாதேஸ்வர மலைக்கு எளிதாக செல்வதற்காக ஒவ்வொரு அமாவாசை களிலும், சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மாதேஸ்வரன் மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆருத்ரா தரிசனம், கார்த்திகை தீபம், வைகாசி விசாகம் உட்பட பல திருவிழா நாட்களில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடக்கும்.

    இது தவிர பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதேபோல ஒவ்வொரு அமாவாசை நாட்களில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர்.

    தமிழக பக்தர்கள் மாதேஸ்வர மலைக்கு எளிதாக செல்வதற்காக ஒவ்வொரு அமாவாசை களிலும், சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் வரும் 17-ந் தேதி ஆனி மாத அமா வாசையை முன்னிட்டு, அன்று அதிகாலை முதல் சேலம் புதிய பஸ் நிலையம், மேட்டூர் பஸ் நிலையம், தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து 40 சிறப்பு பஸ்கள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    • கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 7-ந் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று அரசு அறி வித்துள்ளது.
    • இதே போல் வெளி மாவட்டங்களில் இருந்தும் சேலம் மண்டலத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சேலம்:

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 7-ந் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று அரசு அறி வித்துள்ளது. இதன் காரண மாக பஸ் நிலையங்களில் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்காக சேலம் மண்ட லமான சேலம், தர்மபுரி, கிருஷ்ண கிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சென்னை, கோவை, திரு வண்ணாமலை, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும், பெங்க ளூருக்கும் இன்று (சனிக்கி ழமை) முதல் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன.

    இதே போல் வெளி மாவட்டங்களில் இருந்தும் சேலம் மண்டலத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன. இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 7-ந் தேதி வரை இயக்கப்படுகின்றன.

    மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவ டிக்கை எடுக்கப்படும். எனவே பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி பயணிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்து உள்ளார்.

    • அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கிரிவலம் செல்வார்கள்.
    • பக்தர்கள் வந்து செல்ல வசதிக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    சேலம்:

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கிரிவலம் செல்வார்கள். இதையொட்டி பக்தர்கள் வந்து செல்ல வசதிக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    அதன்படி சேலம் கோட்டம் சார்பில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் வருகிற 3-ந் தேதி வைகாசி பவுர்ணமியொட்டி சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 75 சிறப்பு பஸ்களும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், அரூர் உட்பட்ட ஊர்களில் இருந்து 75 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது .

    இந்த சிறப்பு பஸ்கள் நாளை காலை முதல் 4-ந் தேதி வரை இயக்கப்படும். இதனை பக்தர்கள் பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    • குழந்தை பிறப்பதை சுற்றி பல கட்டுக்கதைகள் மற்றும் தவறான புரிதல்கள் உள்ளன.
    • சிலர் ஒரு நல்ல நாள் அல்லது நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க விரும்புவதால் ஆபரேசன் மூலம் குழந்தை பெறுவதை விரும்புகிறார்கள்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் நடந்த மொத்த பிரசவங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை அறுவை சிகிச்சை பிரசவங்கள் என்று தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரியவந்தது.

    இது ஆந்திராவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆபரேசன் மூலம் பிறக்கும் குழந்தைகள் நகர்ப்புறங்களில் 50.5 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 39.3 சதவீதமாகவும் உள்ளனர்.

    குழந்தை பிறப்பதை சுற்றி பல கட்டுக்கதைகள் மற்றும் தவறான புரிதல்கள் உள்ளன. சிலர் ஒரு நல்ல நாள் அல்லது நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க விரும்புவதால் ஆபரேசன் மூலம் குழந்தை பெறுவதை விரும்புகிறார்கள்.

    ஒரு சில மருத்துவமனைகள், தாய்க்கு இயல்பான பிரசவம் செய்யும் திறன் இருந்தபோதிலும், ஆபரேசனை தேர்வு செய்ய பரிந்துரைக்கின்றன. இதனால் சாதாரண பிரசவத்துடன் ஒப்பிடும்போது அதிக கட்டணம் வசூலிக்க முடியும்.

    மேலும் சில சந்தர்ப்பங்களில், பொதுமக்கள் தாங்களாகவே ஆபரேசனை கோருகின்றனர். இது சாதாரண பிறப்பை விட பாதுகாப்பான விருப்பம் என்று நம்புகிறார்கள்.

    இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

    சமீப நாட்களில், மாறிவரும் வாழ்க்கை முறை, தாமதமான கர்ப்பம் மற்றும் செயற்கை கருத்தரிப்பு அதிகரிப்பு ஆகியவற்றால் ஆபரேசன் மூலம் குழந்தை பெறுவது இயல்பானதாக மாறி வருகிறது.

    இது பிரசவிக்கும் போது சிக்கலின் விகிதத்தை அதிகரிக்கிறது. தாய் மற்றும் குழந்தை இருவரின் உயிரையும் காப்பாற்ற, குறிப்பிட்ட சூழ்நிலையில் ஆபரேசன் தேர்வு செய்யப்படுகிறது.

    15 சதவீதத்துக்கும் அதிகமான கர்ப்பங்கள் சிக்கல்களில் இறங்குகின்றன, அறுவை சிகிச்சை தலையீடுகள் தேவைப்படுகின்றன. இங்கே தாய் மற்றும் குழந்தைக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சையாக மாறுகிறது.

    மற்ற அறுவை சிகிச்சைகளைப் போலவே, பிரசவ அறுவை சிகிச்சை மற்றும் மயக்க மருந்து உள்ளார்ந்த அபாயத்தைக் கொண்டுள்ளன.

    புதிதாக பிறந்த குழந்தைகளை தாய்ப்பாலூட்டுவதில் இருந்து தூரமாக்கும் என்ற கவலையும் உள்ளது.

    அறுவை சிகிச்சையின் காரணமாக, மென்மையான கீறல்கள் மற்றும் தையல்களால், தாய்மார்கள் உட்கார்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

    இருப்பினும் ஆரோக்கியமான கர்ப்பத்தை பராமரிப்பது, சிக்கல்களைத் தடுப்பது மற்றும் சாதாரண பிரசவத்தைத் தேர்ந்தெடுப்பது தாய் மற்றும் குழந்தை இருவரின் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

    பிரசவத்திற்கு முந்தைய பரிசோதனையின் போது, தாய்மார்கள் ஆரோக்கியமான உணவைப் பின்பற்ற வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட உடற்பயிற்சிகளையும் செய்ய பரிந்துரைக்கிறோம் என்றனர்.

    • ஐவனூர், எழுத்தூர், மாங்குளம் கிராமங்களில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார்.
    • அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு கிராம பெண்கள் பாராட்டு தெரிவித்துக் கொண்டனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஐவனூர், எழுத்தூர், மாங்குளம் கிராமங்களில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார். அப்பொழுது கிராம ங்களுக்கு தேவையான வசதிகள் குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். எழுத்தூர் கிராமத்தில் குடிநீர் வசதி, கழிவுநீர் வடிகால் வசதிகள், சிமெண்ட் சாலை வசதி செய்து தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    உடனடியாக அதிகாரிகளை அழைத்து கழிவுநீர் வடிகால் வசதிகளையும் குடிநீர் வசதிகளையும் செய்ய உத்தரவிட்டார். அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு கிராம பெண்கள் பாராட்டு தெரிவித்துக் கொண்டனர் .மேலும் ஐயவனூர், மாங்குளம் கிராமத்தில் உள்ள கொவில்களை ஆய்வு செய்து கோவில்களை புனரமைப்பு செய்ய நிதி உதவிஅளித்து உடனடியாக கும்பாபிஷேகம் செய்வ தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புகழ் பெற்ற கோவில்களுக்கு செல்ல ஆன்மீக சுற்றுலா ரெயில் மே 4-ந் தேதி இயக்கப்படுகிறது.
    • சுற்றுலா செல்ல விருப்பமுள்ளர்வர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

    விருதுநகர்

    ஐ.ஆர்.சி.டி.சி. தென் மண்டலப் பொது மேலா ளர் ரவிக்குமார், தெற்கு ரெயில்வே அதிகாரி வெங்கட சுப்பிரமணியன், தென் மண்டல சுற்றுலா பொது மேலாளர் சுப்பிர மணி ஆகியோர் விருது நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்தாண்டு ஜூலை மாதம் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பாரத் கவுரவ் விரைவு ரெயில் இயக்கப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    ரெயில்வே நிர்வாகம், ஐ.ஆர்.சி.டி.சி. இணைந்து இந்தச் சிறப்பு ரெயிலை இயக்குவதால், சுற்றுலா சென்று வருவதற்கான செலவு குறைகிறது. இந்த ஆன்மீக சுற்றுலாவில் ஒரு நபருக்கு ரெயில் கட்டணம், தங்கும் அறை, கோவிலுக்குச் சென்று வருவதற்கான கட்டணம் என ரூ.20 ஆயிரத்து 367 செலுத்த வேண்டும்.

    குளிர்சாதனப் பெட்டியில் பயணம் செய்வோருக்கு கட்டணம் ரூ.35 ஆயிரத்து 651 ஆகும். இவர்களுக்கு தங்கும் அறை, வாகனம் ஆகியவை குளிர்சாதனத்துடன் வழங்கப்படும். மேலும் 5 முதல் 11 வயதுள்ள குழந்தைகளுக்கு கட்டணச் சலுகை உண்டு.

    வருகிற மே 4-ந் தேதி கேரள மாநிலம் கொச்சு வேலியில் இருந்து புறப்படும் இந்த சுற்றுலா சிறப்பு ரெயில் செங்கோட்டை, விருதுநகர் வழியாக தஞ்சை, சென்னை வழியாக, வட மாநிலத்தில் உள்ள பூரி, கோனார்க், கொல்கத்தா, கயா, வாராணசி, திரிவேணி சங்கமம் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று திரும்ப உள்ளது.

    இந்த ரெயிலில் 4 குளிர்சாத னப் பெட்டிகள், 7 படுக்கை வசதி பெட்டிகள் இருக்கும். வட மாநில கோவில்களுக்கு 10 நாட்கள் சுற்றுலா செல்ல விருப்பமுள்ளர்வர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பராமரிப்பில்லாத சித்தார்கோட்டை சமத்துவபுரம் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்று எதிர்பார்க்கின்றனர்.
    • திருவள்ளுவர் சிலைகளையும் பராமரித்து பாதுகாக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பெரியார் பேரவை தலைவர் நாகேசுவரன் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் நினைவு சமத்துவ புரத்தில் உள்ள பெரியார் சிலை கூண்டில் அடைக்கப்பட்டு அந்த பகுதி பராமரிக்கப்படாமல் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இந்த சமத்துவபுரத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

    தமிழக அரசு இந்த ஆண்டு சமத்துவபுரங்களை பராமரிக்கவும், பாதுகாக்கவும் ரூ.63 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக தகவல் வந்த நிலையில், இந்த நிதியை முறையாக பயன்படுத்தி தமிழகம் முழுவதும் பெரியார் நினைவு சமத்துவ புரத்தில் உள்ள பெரியார் சிலைகளையும், திருவள்ளுவர் சிலைகளையும் பராமரித்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று நவாஸ் கனி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • ராமநாதபுரம் மாவட் டத்தை சேர்ந்த மக்கள் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் பணியாற்றி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நாடாளு மன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான நவாஸ் கனி தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    ராமநாதபுரம் மாவட் டத்தை சேர்ந்த மக்கள் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் பணியாற்றி வரு கின்றனர். தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகைக்கு அனைவரும் சொந்த ஊருக்கு வந்து கொண்டாட வேண்டும் என்ற எண்ண த்தில் ஆண்டு தோறும் வந்து செல்கின்றனர்.

    அவர்கள் கூட்ட நெரிசலின்றி எளிதாக வந்து செல்லும் வகையில் சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கிட தெற்கு ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை எழும்பூரில் இருந்து ராமேசுவரம் வரை யிலும், பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக ராமேசுவரம் வழியிலும் இரு மார்க்கமும் சிறப்பு ரெயில்கள் இயக்கிட உரிய நடவடிக்கை எடுத்திட ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.

    ×