search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tourist train"

    • புகழ் பெற்ற கோவில்களுக்கு செல்ல ஆன்மீக சுற்றுலா ரெயில் மே 4-ந் தேதி இயக்கப்படுகிறது.
    • சுற்றுலா செல்ல விருப்பமுள்ளர்வர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

    விருதுநகர்

    ஐ.ஆர்.சி.டி.சி. தென் மண்டலப் பொது மேலா ளர் ரவிக்குமார், தெற்கு ரெயில்வே அதிகாரி வெங்கட சுப்பிரமணியன், தென் மண்டல சுற்றுலா பொது மேலாளர் சுப்பிர மணி ஆகியோர் விருது நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்தாண்டு ஜூலை மாதம் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பாரத் கவுரவ் விரைவு ரெயில் இயக்கப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    ரெயில்வே நிர்வாகம், ஐ.ஆர்.சி.டி.சி. இணைந்து இந்தச் சிறப்பு ரெயிலை இயக்குவதால், சுற்றுலா சென்று வருவதற்கான செலவு குறைகிறது. இந்த ஆன்மீக சுற்றுலாவில் ஒரு நபருக்கு ரெயில் கட்டணம், தங்கும் அறை, கோவிலுக்குச் சென்று வருவதற்கான கட்டணம் என ரூ.20 ஆயிரத்து 367 செலுத்த வேண்டும்.

    குளிர்சாதனப் பெட்டியில் பயணம் செய்வோருக்கு கட்டணம் ரூ.35 ஆயிரத்து 651 ஆகும். இவர்களுக்கு தங்கும் அறை, வாகனம் ஆகியவை குளிர்சாதனத்துடன் வழங்கப்படும். மேலும் 5 முதல் 11 வயதுள்ள குழந்தைகளுக்கு கட்டணச் சலுகை உண்டு.

    வருகிற மே 4-ந் தேதி கேரள மாநிலம் கொச்சு வேலியில் இருந்து புறப்படும் இந்த சுற்றுலா சிறப்பு ரெயில் செங்கோட்டை, விருதுநகர் வழியாக தஞ்சை, சென்னை வழியாக, வட மாநிலத்தில் உள்ள பூரி, கோனார்க், கொல்கத்தா, கயா, வாராணசி, திரிவேணி சங்கமம் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று திரும்ப உள்ளது.

    இந்த ரெயிலில் 4 குளிர்சாத னப் பெட்டிகள், 7 படுக்கை வசதி பெட்டிகள் இருக்கும். வட மாநில கோவில்களுக்கு 10 நாட்கள் சுற்றுலா செல்ல விருப்பமுள்ளர்வர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • காசியிலும், ஜனக்பூரிலும் என 2 இரவு பயணிகள் ஓட்டலில் தங்கலாம்.
    • நந்திகிராமில் பாரத் மந்திருக்கு செல்லலாம்.

    புதுடெல்லி :

    'பாரத கவுரவ சுற்றுலா ரெயில்' என அழைக்கப்படும் இந்த ரெயில், அடுத்த மாதம் (பிப்ரவரி) 17-ந்தேதி டெல்லியில் இருந்து பயணத்தை தொடங்குகிறது. 'ஸ்ரீராம்-ஜானகி யாத்திரை: அயோத்தியில் இருந்து ஜனக்பூருக்கு' என்று இந்த ரெயில் பயணத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இந்த சுற்றுலா ரெயில், நந்திகிராம், சீத்தாமர்கி, காசி, பிரயாக்ராஜ் வழியாக நேபாளம் செல்லும். காசியிலும், ஜனக்பூரிலும் என 2 இரவு பயணிகள் ஓட்டலில் தங்கலாம்.

    முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த நவீன, சொகுசு ரெயிலில் 2 உணவகங்கள், ஒரு நவீன சமையலறை, ஷவர்கள், சென்சார் அடிப்படையில் இயங்கும் கழிப்பறைகள், கால்களுக்கு மசாஜ் செய்யும் எந்திரங்கள் போன்றவை இடம்பெற்றிருக்கும்.

    7 நாட்கள் கொண்ட இந்த ரெயில் பயணத்தில் முதல் நிறுத்தமாக, ராமர் பிறந்த இடமான அயோத்தி இருக்கும். அங்கு சுற்றுலாவாசிகள் ராம ஜென்ம பூமி கோவில், அனுமான் கோவில் போன்ற இடங்களுக்குச் செல்லலாம். அதேபோல நந்திகிராமில் பாரத் மந்திருக்கு செல்லலாம்.

    இந்த ரெயில் கடைசி நிறுத்தமாக பீகாரின் சீத்தாமர்கி ரெயில் நிலையத்தில் நிற்கும். அங்கிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நேபாளத்தின் ஜனக்பூருக்கு பஸ்கள் மூலம் சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த ரெயிலில் ஒருவருக்கான கட்டணம் ரூ.39 ஆயிரத்து 775 ஆக இருக்கும். அதில் உணவு, தங்குமிட வசதிக்கான கட்டணம் உள்பட அனைத்தும் அடங்கும்.

    இந்த சுற்றுலா ரெயில், இந்தியா-நேபாளம் இடையிலான இருதரப்பு, கலாசார உறவை மேலும் வலுப்படுத்தும் என இந்திய ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

    • சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் சனி மகா பிரதோஷ விழா நடந்தது.
    • சிவனுக்கு பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் சனி மகா பிரதோஷ விழா நடந்தது. சனீஸ்வரன். லிங்கம். நந்திகேஸ்வரர். சிவனுக்கு பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை வலம் வந்தனர். விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் சுவாமியுடன் கோவிலை வலம் வந்தனர். சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடைபெற்றது. பா.ஜனதா விவசாய அணி மாநில துணைத் தலைவர், எம்.வி.எம். குழும தலைவர் மணி முத்தையா, நிர்வாகி வள்ளிமயில், எம்.வி.எம். தாளாளர்-சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருதுபாண்டியன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலிலும், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருதோதைய ஈஸ்வரர் ஆலயத்திலும், மன்னாடிமங்கலம் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவிலிலும், பேட்டை அருணாசல ஈஸ்வரர் ஆலயத்திலும், திருவாலவாயநல்லூர் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும் சனி பிரதோஷ விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் இருந்து காசிக்கு 18-ந் தேதி ஆன்மீக சுற்றுலா ெரயில் இயக்கப்படுகிறது.
    • பயண கட்டணம், உணவு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து ஆகியவை சேர்த்து குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

     மதுரை

    இந்தியாவின் பாரம்பரிய வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தலங்களை தரிசிக்க, தென்னக ெரயில்வே பாரத் கௌரவ் சுற்றுலா ரயில்களை இயக்கி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக மதுரையில் இருந்து காசிக்கு வருகிற 18-ந் தேதி சிறப்பு ெரயில் இயக்கப்பட உள்ளது. இது திண்டுக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, விஜயவாடா வழியாக 19-ந் தேதி உ.பி மாநிலம் சித்திரக்கூடம் செல்லும்.

    நவம்பர் 20-ந் தேதி சர்வ ஏகாதசி அன்று ராம்காட்டில் புனித நீராடி குப்த கோதாவரி குகை கோயில், காம்தகரி, சதி அனுசுயா கோவில்களை தரிசனம் செய்யலாம். 21-ந் தேதி பிரதோஷம் அன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி ராமஜன்ம பூமி கோவில் தரிசனம். 22-ந் தேதி சிவராத்திரி அன்று காசி கங்கையில் நீராடி காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி கோவில்களில் தரிசனம். 23-ந் தேதி சர்வ அமாவாசை அன்று சிரோ கயாவில் முன்னோர்கள் வழிபாடு முடிந்து விஷ்ணு பாத தரிசனம்.

    24-ந் தேதி ஒடிசாவில் பூரி ஜெகநாதர் ஆலயம், கொனார்க் சூரியனார் கோவில் தரிசனம். 26-ந் தேதி ராமேஸ்வரம் ராம நாதசுவாமி கோவில் 21 தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம். 27-ம் தேதி சுற்றுலா ரயில் மதுரை வரும்.

    பயண கட்டணம், உணவு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து ஆகியவை சேர்த்து குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மதுரை- காசி சுற்றுலா ரயிலில் பயணம் செல்ல www.ularail.com இணைய தளத்தில் பதிவு செய்யலாம்" என்று மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • மதுரை - அமிர்தசரஸ் சுற்றுலா ரெயில் கூடல் நகர் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை புறப்படுகிறது.
    • இதுவரை 6 ஆன்மிகச் சுற்றுலா ரெயில்களை தெற்கு ரெயில்வே இயக்கியது. இதன் மூலம் ரூ.6.3 கோடி வருவாய் கிடைத்தது.

    மதுரை

    மதுரை - அமிர்தசரஸ் சுற்றுலா ரெயில் கூடல்நகர் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (3-ந் தேதி) புறப்படுகிறது.

    நாட்டின் பாரம்பரிய மிக்க வரலாற்றுச் சிறப்புடைய சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கும் வகையில் ''பாரத் கவுரவ்'' என்ற ஆன்மிகச் சுற்றுலா ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அனுபவம் மிக்க சுற்றுலா நிறுவனங்கள் மூலமாக இதுவரை 6 ஆன்மிகச் சுற்றுலா ரெயில்களை தெற்கு ரெயில்வே இயக்கியது. இதன் மூலம் ரூ.6.3 கோடி வருவாய் கிடைத்தது.

    இதன் தொடர்ச்சியாக 7-வது சுற்றுலா ரெயில், மதுரையில் இருந்து அமிர்தசரசுக்கு நாளை இயக்கப்படுகிறது. கூடல்நகர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ரெயில் தெலுங்கானா மவுலாளி, ஜெய்ப்பூர்,ஆக்ரா, அமிர்தசரஸ், கோவா போன்ற சுற்றுலாத் தலங்களை இணைத்து இந்த ரெயில் இயக்கப்படுகிறது.

    கூடல்நகர்- அமிர்தசரஸ்-கூடல்நகர் சுற்றுவட்ட சுற்றுலா ரெயில் (06905/06906) கூடல் நக ரில் இருந்து நாளை (வியாழக்கிழமை) இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில், திரு வனந்தபுரம், பாலக்காடு, போத்தனூர், சேலம், காட்பாடி வழியாக சென்று வருகிற 6-ந் தேதி மவுலாளி, 8-ந் தேதி ஜெய்ப்பூர், நவம்பர் 9-ந் தேதி ஆக்ரா, 10-ந் தேதி டெல்லி, 11-ந் தேதி அமிர்தசரஸ், 13-ந் தேதி கோவா போன்ற சுற்றுலாத் தலங்களை இணைக்கிறது.

    பின்பு மங்களூர், திருச்சூர், கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில் வழியாக வருகிற 16-ந் தேதி அதிகாலை 2.30 மணிக்கு கூடல்நகர் வந்து சேருகிறது.

    ×