search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோழவந்தான் சிவாலயங்களில் சனி மகா பிரதோஷம்
    X

    சோழவந்தான் சிவாலயங்களில் சனி மகா பிரதோஷம்

    • சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் சனி மகா பிரதோஷ விழா நடந்தது.
    • சிவனுக்கு பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் சனி மகா பிரதோஷ விழா நடந்தது. சனீஸ்வரன். லிங்கம். நந்திகேஸ்வரர். சிவனுக்கு பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை வலம் வந்தனர். விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் சுவாமியுடன் கோவிலை வலம் வந்தனர். சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடைபெற்றது. பா.ஜனதா விவசாய அணி மாநில துணைத் தலைவர், எம்.வி.எம். குழும தலைவர் மணி முத்தையா, நிர்வாகி வள்ளிமயில், எம்.வி.எம். தாளாளர்-சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருதுபாண்டியன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலிலும், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருதோதைய ஈஸ்வரர் ஆலயத்திலும், மன்னாடிமங்கலம் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவிலிலும், பேட்டை அருணாசல ஈஸ்வரர் ஆலயத்திலும், திருவாலவாயநல்லூர் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும் சனி பிரதோஷ விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×