search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு ஒத்திகை"

    • கஞ்சா, போதைப் பொருட்கள் கடத்துவது, இங்கிருந்து மருந்துகள், மஞ்சள், பீடி இலை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் கடத்துவது நடந்து வருகிறது.
    • மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவு பகுதியிலும் போலீசார் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.

    தொண்டி:

    தமிழகத்தில் 180 கி.மீ. நீள கடற்கரை மாவட்டமாக ராமநாதபுரம் விளங்கி வருகிறது. இங்கு ராமநாதபுரம், ஏர்வாடி, கீழக்கரை, ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மீனவர்கள் வாரத்தில் 3 நாட்கள் கடலுக்கு சென்று வருகின்றனர்.

    அண்டை நாடான இலங்கை, ராமநாதபுரத்துக்கு கடல் வழியாக 20 மைல் தொலைவில் உள்ளது. இதன் காரணமாக கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இலங் கையில் இருந்து கஞ்சா, போதைப் பொருட்கள் கடத்துவது, இங்கிருந்து மருந்துகள், மஞ்சள், பீடி இலை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் கடத்துவது நடந்து வருகிறது.

    இதனை தடுக்க கடலோர காவல்படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் இலங்கையில் இருந்து அகதிகளாகவும் இங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கண்காணிக்கவும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் எஸ்.பி.பட்டனம் முதல் சாயல்குடி ரோஸ்மா நகர் வரை கடற்கரை உள்ளது. பாக் நீரினை, மன்னார் வளைகுடா பகுதிகளை உள்ளடக்கிய இந்தப்பகுதியில் அன்னிய ஊடுருவல், கடத்தல்களை தடுக்க இன்று கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் "சஜாக்" என்ற ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. கூடுதல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் யாசர் மவுலானா, அய்யனார், முகமது தாரிக், கண்ணன் மற்றும் 60-க்கும் மேற்பட்ட கடலோர போலீசார் 4 குழுக்களாக பிரிந்து அதிவேக படகுகளில் கடலில் ரோந்து சென்று கண்காணிப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

    அப்போது கடற்கரை பகுதிகளில் புதிய நபர்கள் நடமாட்டம் குறித்து மீனவர்கள் உடனடியாக கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கடற்கரையில் இருந்து 7 கடல் மைல் தொலைவில் "சஜாக்" பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. மேலும் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவு பகுதியிலும் போலீசார் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.

    • “சாகர்கவாச் ஆபரேஷன்” என்ற பாதுகாப்பு ஒத்தி கையை 2 நாட்கள் நடத்தினர்.
    • 10-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளில் போலீசார் இரவு- பகலாக அதிரடி வாகன சோதனை நடத்தினார்கள்

    கன்னியாகுமரி :

    தமிழ்நாட்டில் 13 மாவட்டங்கள் கடலோர பகுதியில் உள்ள மாவட் டங்கள் ஆகும். இதனால் இந்த மாவட்டங்களில் கடல் வழியாக படகு மூலம் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க அடிக்கடி கடலில் படகு மூலம் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது வழக்கம்.

    அதேபோல தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு போலீசார், இந்திய கடலோர காவல் படை, இந்திய கடற்படை, மீன்வளத்துறை மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து தமிழ கத்தின் கடலோரப் பகுதியில் "சாகர்கவாச் ஆபரேஷன்" என்ற பாதுகாப்பு ஒத்தி கையை 2 நாட்கள் நடத்தினர்.

    கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு போலீசார் 2 அதி நவீன ரோந்து படகு மூலம் பாதுகாப்பு ஒத்திகையில் 2-வது நாளாக ஈடுபட்டனர். கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் இந்த பாது காப்பு ஒத்திகை நடந்தது. சின்ன முட்டம் துறை முகத்தில் இருந்து கூடங்கு ளம் கடல் பகுதி வரை ஒரு குழுவினரும், குளச்சல் கடல் பகுதி வரை ஒரு குழுவினரும் அதி நவீன படகில் சென்று கண் காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இது தவிர கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 72 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்து உள்ள 48 கடற்கரை கிராமங்களில் போலீசார் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து ஜீப் மூலம் போலீ சார் கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றி கண்கணித்த னர். நெல்லை, குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள 10-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளில் போலீசார் இரவு- பகலாக அதிரடி வாகன சோதனை நடத்தினார்கள். அதேபோல லாட்ஜ்களிலும் சந்தேகப் படும் படியான நபர்கள் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்று உள்ளூர் போலீசாரும் தீவிர சோதனை நடத்தினார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து படகு மூலம் கடலுக்கு சென்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பாதுகாப்பு ஒத்திகயைானது இன்றும், நாளையும் (2 நாட்கள்) கடலோர பகுதிகளில் நடைபெற உள்ளது.

    வேதாரண்யம்:

    இந்திய கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதை தடுக்கும் பொருட்டு கடலோர கிராமங்களில் அரசு சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக நடக்கிறதா? என்பதை பரிசோதிக்கும் வகையில், இந்திய கடலோர காவல் படையினர், தமிழக மரைன் போலீசார் மற்றும் மாநில போலீசார் இணைந்து சாகர் கவாச் (கடல்கவசம்) பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை தமிழகத்தின் கடலோர பகுதியில் இன்று தொடங்கியது.

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் கடலோர மீனவ கிராமங்களான ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது.

    அதன்படி, ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும டி.எஸ்.பி.சுரேஷ் தலைமையில் கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து படகு மூலம் கடலுக்கு சென்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலுக்கு செல்லும் வழியில் தென்படும் மீனவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரையும் கண்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த பாதுகாப்பு ஒத்திகயைானது இன்றும், நாளையும் (2 நாட்கள்) கடலோர பகுதிகளில் நடைபெற உள்ளது.

    • பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • ஆற்றில் தவறிவிழந்தவர்களையும், நீரில் அடித்து செல்பவர்களையும் எவ்வாறு மீட்டெடுப்பது குறித்தான மாதிரி ஒத்திகை பயிற்சியும் செயல்முறை விளக்கமும் செய்து காண்பித்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம். போச்சம்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் பேரிடம் மீட்பு வெள்ள தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. கனமழை, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பருவ மழை பேரிடர் காலங்களில் ஆறு, ஏரிகுளம், அணை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    வரஉள்ள வட கிழக்கு பருவமழையின்போது வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு பாதுகாப்புடன் மீட்பது என்பது குறித்து தத்ரூபாமாக தீயணைப்பு மற்றும் பணி வீரர்கள் விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்தனர். இந்நிலையில் தற்போது தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதனால் போச்சமபள்ளி அருகில் உள்ள மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றுக்கு புனித நீராட குடும்பத்துடன்  வருகிறார்கள். இதனை வைத்து போச்சம்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு அலுவலர் சக்திவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் தவறிவிழந்தவர்களையும், நீரில் அடித்து செல்பவர்களையும் எவ்வாறு மீட்டெடுப்பது குறித்தான மாதிரி ஒத்திகை பயிற்சியும் செயல்முறை விளக்கமும் செய்து காண்பித்தனர். இதனால் ஆற்றுக்கு புனித நீராட வந்த பக்தர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.

    • காவலர் குழுவினர் தணிக்கைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வாகனசோதனை மற்றும் ரோந்துப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
    • ‘சாகர் கவாச்’ என்ற பெயரில் இந்த ஆண்டுக்கான முதல் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை தொடங்கியது.

    சென்னை:

    மும்பையில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் நாடு முழுவதும் கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் 2 முறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் உள்ள 14 கடலோர பகுதிகளிலும் சென்னை முதல் குமரி வரை 'சாகர் கவாச்' என்ற பெயரில் இந்த ஆண்டுக்கான முதல் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை தொடங்கியது. இன்று மாலை வரை ஒத்திகை நடைபெறுகிறது.

    கடலோர பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு துறையினர் ஒருங்கிணைந்து இப்பாதுகாப்பு ஒத்திகை யினை நடத்தி வருகிறார்கள். இப்பாதுகாப்பு ஒத்திகை சம்பந்தமாக கூடுதல் காவல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்களுக்கு சென்னை கமிஷனர் விரிவான அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

    இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் கூடுமிடங்கள், உயர் மட்டப் பாதுகாப்பு நிலைகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் காவல் அதிகாரிகளின் கண்காணிப்பில் காவலர் குழுவினர் தணிக்கைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வாகனசோதனை மற்றும் ரோந்துப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    நேற்று காலை முதல் சென்னையில் நடைபெற்று வரும் இப்பாதுகாப்பு ஒத்திகையின்போது, காவல் நிலைய எல்லையில் 3 பேர் திருவான்மியூர் எல்லையில் 2 பேர், காசிமேடு துறைமுகம் காவல் நிலைய எல்லையில் 3 பேர் மற்றும் துறைமுகம் காவல் நிலைய எல்லையில் 3 பேர் என சென்னை பெரு நகர காவல் எல்லைக்குள் ஊடுருவ முயன்ற மொத்தம் 11 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் தடுப்பதற்கும் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
    • சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனா்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையின் சாா்பில் கடலோர மாவட்டங்களில் சாகா் கவாச் என்னும் தீவிரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை இன்று 2-வது நாளாக நடந்தது.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக நுழைந்த தீவிரவாதிகள், தாக்குதல் நடத்தினா். இதில், நூற்றுக்கும் மேற்பட்டோா் பலியாகினா். இதைத் தொடா்ந்து கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்கவும், மீண்டும் மும்பை தாக்குதல் போன்ற அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் தடுப்பதற்கும் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக கடலோர மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு ஒரு முறை தீவிரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று (29-ந்தேதி) காலை 6 மணிக்கு தொடங்கி, ஒத்திகை நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியிலும் இன்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

    இதில் கடலோர பாதுகாப்பு படை, கமாண்டோ பிரிவு, சட்டம் மற்றும் ஒழுங்கு போலீசாா், குற்றப்பிரிவு போலீசாா், தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம், மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட பாதுகாப்பு மற்றும் காவல் துறையை சோ்ந்த பல்வேறு பிரிவினா் இணைந்து ஒத்திகையை நடத்தினர். நேற்று நடந்த ஒத்திகையில் ராமேசுவரத்தில் வெடிகுண்டுகளுடன் வந்த 16 பேரை மடக்கி பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை இன்று 2-வது நாளாக நடந்தது.

    பாதுகாப்பு ஒத்திகையை முன்னிட்டு ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், தொண்டி, தேவிபட்டினம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி உள்ளிட்ட கடலோர பகுதி முழுவதையும் போலீசார் தங்களின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனா்.

    இதையடுத்து கண்காணிப்பு மற்றும் ரோந்து பணி முடுக்கி விடப்பட்டது. சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனா். கடலோரத்தில் வாழும் மீனவர்களுக்கு சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரும் தென்பட்டால் உடனடியாக தெரிவிக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டது.

    • 48 கடற்கரை கிராமங்களில் ரோந்து பணி தீவிரம்
    • தீவிரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்க ஒத்திகை

    கன்னியாகுமரி :

    தமிழ்நாட்டில் 13 மாவட்டங்கள் கடலோர பகு தியில் உள்ள மாவட்டங்கள் ஆகும். இதனால் இந்த மாவட்டங்களில் கடல் வழியாக படகு மூலம் தீவிரவாதிகள் ஊடுரு வலை தடுக்க ஆண்டுதோறும் கடலில் படகுமூலம் போலீ சார் பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டு தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு போலீசார் இந்திய கடலோர காவல் படை இந்திய கடற்படை மீன்வளத்துறை மற்றும் உள்ளூர் போலீசார் இணை ந்து தமிழகத்தின் கடலோர பகுதியில் "சாகர்கவாச் ஆப ரேஷன்"என்ற பாதுகாப்பு ஒத்திகையை நடத்தினார்கள். அதன்படி கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு போலீ சார் 2 அதிநவீன ரோந்து படகுமூலம் பாது காப்பு ஒத்திகையில் ஈடுப ட்டனர்.

    கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் அவர்கள் பாது காப்பு ஒத்திகையில் ஈடுப ட்டனர். சின்ன முட்டம் துறைமுகத்தில் இருந்து கூடங்குளம் கடல் பகுதிவரை ஒரு ஒரு குழுவினர் அதிநவீன ரோந்து படகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அதேபோல இன்னொரு குழுவினர் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து குளச்சல் கடல் பகுதி வரை க்கும் அதிநவீன படகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதுதவிர கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை யிலான 72 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள 48 கடற்கரை கிராமங்களில் போலீசார் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டனர்.

    மேலும் கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து ஜீப் மூலம் போலீ சார் கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றி கண்க ணித்தனர். நெல்லை, குமரி மாவட்ட கடலோர பகுதிகளில் அமைந்துள்ள 10-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளில் போலீசார் இரவு-பகலாக அதிரடி வாகன சோதனை நடத்தினார்கள். அதேபோல லா ட்ஜ்களிலும் சந்தேகப்ப டும்ப டியான நபர்கள் யாரா வது தங்கி இருக்கிறார்களா? என்று உள்ளூர் போலீசாரும் தீவிர சோதனை நடத்தினார்கள்.

    • பாதுகாப்பு ஒத்திகையில் 213 பேர் பங்கேற்றனர்.
    • ஒத்திகையில் விமானத்துக்கு பதில் பஸ் பயன்படுத்தப்பட்டது.

    கோவை,

    கோவை பீளமேடு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா ஆகிய வெளிநாடுகளுக்கும், உள்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. மத்திய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் விமான நிலையத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பான ஒத்திகை நிகழ்வு நேற்று மாலை நடந்தது. மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஒத்திகையில் விமானத்துக்கு பதில் பஸ் பயன்படுத்தப்பட்டது. பயணிகள் வேடத்தில் வந்த 4 தீவிரவாதிகள் பயணிகளை பிடித்து விமானத்தை கடத்த முயற்சிப்பது போலவும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மற்றும் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் துப்பாக்கியுடன் தீவிரவாதிகளை பிடிக்க முயற்சிப்பது போலவும், மீட்புப் படையைச் சேர்ந்த காவலர் ஒருவர் மருத்துவர் போல சென்று தீவிரவாதிகள் நால்வரையும் பிடித்து பயணிகளை மீட்பது போலவும் ஒத்திகை நடத்தப்பட்டது.

    இந்த ஒத்திகையில் மத்திய தொழில் பாதுகாப்புப்படையினர் 135 பேர், விமான நிலையத்தைச் சேர்ந்த 15 பணியாளர்கள், தீயணைப்பாளர்கள் 4 பேர், காவலர்கள் 16 பேர், தேசிய பாதுகாப்புப் படையினர், விமான நிலைய ஊழியர்கள் என மொத்தம் 213 பேர் பங்கேற்றனர். 40 நிமிடங்கள் நடைபெற்ற ஒத்திகையை விமான போக்குவரத்து பாதுகாப்பு துணை இயக்குநர் வினு சச்சின் தேவ் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    • கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் இவர்கள் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
    • லாட்ஜ்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்று உள்ளூர் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

    கன்னியாகுமரி:

    தமிழ்நாட்டில் 13 மாவட்டங்கள் கடலோர பகுதியில் உள்ள மாவட்டங்கள் ஆகும். இதனால் இந்த மாவட்டங்களில் கடல் வழியாக படகு மூலம் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஆண்டுதோறும் கடலில் படகுமூலம் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டு தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு போலீசார் இந்திய கடலோர காவல் படை இந்திய கடற்படை மீன்வளத்துறை மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து தமிழகத்தின் கடலோரப் பகுதியில் "சஜாக் ஆபரேஷன்"என்ற பாதுகாப்பு ஒத்திகையை நடத்தினர். அதன்படி கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு போலீசார் 2 அதிநவீன ரோந்து படகு மூலம் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் இவர்கள் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். சின்ன முட்டம் துறைமுகத்தில் இருந்து கூடங்குளம் கடல் பகுதி வரை ஒரு குழுவினர் அதிநவீன ரோந்து படகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல இன்னொரு குழுவினர் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து குளச்சல் கடல் பகுதி வரைக்கும் அதிநவீன படகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இது தவிர கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 72 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள 48 கடற்கரை கிராமங்களில் போலீசார் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து ஜீப் மூலம் போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றி கண்காணித்தனர்.

    நெல்லை குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள 10-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளில் போலீசார் இரவு-பகலாக அதிரடி வாகன சோதனை நடத்தினார்கள். அதேபோல லாட்ஜ்களிலும் சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்று உள்ளூர் போலீசாரும் தீவிர சோதனை நடத்தினர்.

    • திருச்சி விமான நிலையத்தில் தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடந்தது
    • தீவிரவாதத்தை தடுக்கும் முறைகள்

    திருச்சி:திருச்சி விமான நிலையத்திற்கு தமிழகத்தில் அதிக அளவில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் சென்னைக்கு அடுத்தபடியாக விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான சேவைகளால் திருச்சி விமான நிலையத்திற்கு அதிக அளவில் பயணிகள் வந்து செல்கின்றது வாடிக்கை. இந்த நிலையில் ஆண்டுதோறும் திருச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நுழைவதை தடுக்கும் விதமாக பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பாதுகாப்பு ஒத்திகை திருச்சி விமான நிலைய வளாகத்தில் நடத்தப்பட்டது இதில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தமிழக போலீசார் கமாண்டோ படையினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி , மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரி சிங் நயால் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கு பெற்றனர். இந்த நிகழ்வில் தீவிரவாதத்தை தடுக்கும் முறை பற்றி ஒத்திகை முறையில் நடத்தி காண்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கடலோர பகுதிகள் அனைத்தும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
    • கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

    சென்னை:

    மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் ஆண்டுக்கு 2 முறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

    'சிவிஜில் 2022' என்ற பெயரில் நேற்று தொடங்கிய இந்த பாதுகாப்பு ஒத்திகை தமிழகம் முழுவதும் இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள 13 கடலோர மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்களுடன் உள்ளூர் போலீசாரும் இந்த ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் மெரினா கடற்கரை மற்றும் பட்டினப்பாக்கம் கடலோர பகுதிகளில் 2-வது நாளாக பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

    கடலோர மாவட்டங்களில் பயங்கரவாதிகள் போல ஊடுருவியவர்களை பல இடங்களில் போலீசார் மடக்கி பிடித்தனர். சில பகுதிகளில் கோட்டையும் விட்டுள்ளனர். இறுதி நாளான இன்றும் கடலோர பாதுகாப்பு படையினருடன் சுங்கத்துறையினரும் இணைந்து ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையடுத்து கடலோர பகுதிகள் அனைத்தும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

    கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 2 அதிநவீன ரோந்து படகுகள் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சின்னமுட்டம், பஞ்சலிங்கபுரம், மகாதானபுரம், தேங்காய்பட்டணம், கூடங்குளம் உள்பட 10 இடங்களில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீசுக்கு சொந்தமான சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அப்போது 4 பேர் கடற்கரை வழியாக பயங்கரவாதிகள் போல் நடித்து ஒரு படகில் தப்பிசெல்ல முயன்றனர். அவர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மடக்கி பிடித்தனர்.

    • கடல் வழியாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தடுக்க இன்று பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
    • கடலோர பாதுகாப்பு படை, இந்திய கடற்படை, உள்ளூர் போலீசார் இணைந்து சீ விஜில் என்ற ஒத்திகையை நடத்தினர்.

    மாமல்லபுரம்:

    தமிழ்நாடு கடலோர மாவட்ட கடல் பகுதிகளில் கடலோர காவல் பாதுகாப்பு குழுமத்தின் பாதுகாப்பு ஒத்திகை ஆபரேஷன் சீ விஜில் என்ற பெயரில் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. இந்த ஆபரேஷன் நாளை மாலை 6 மணி வரை நடக்கிறது.

    இதில் தீவிரவாதிகள் வேடத்தில் கடல் வழியாக வந்து மாவட்டங்களின் முக்கிய நகரங்களுக்குள் நுழையும், மத்திய கடலோர பாதுகாப்பு படை வீரர்களை எப்படி அடையாளம் கண்டு கைது தமிழக கடலோர காவல் படையினர் கைது செய்கிறார்கள், அவர்களிடம் விசாரிக்கும் விதம் எப்படி இருக்கிறது, கடல்பகுதி தகவல் தொடர்பு கருவிகளை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை கண்டறியவே இந்த ஒத்திகை நடைபெறுகிறது.

    வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் மாமல்லபுரம் வருவதால் அவர்களைத் தாக்கவும், மாமல்லபுரம் கடற்கரை கோயில் வழியாக நுழையலாம். ஆபத்தான அணு உலை கல்பாக்கத்தில் உள்ளதால் அதை தகர்த்து எரிய சட்ராஸ் பகுதி கடலோரம் வழியாக நுழையலாம் என்பது போன்ற ஒத்திகையில் கடலோர காவல் படையினர், போலீசார் மற்றும் மீனவர்கள் உதவியுடன் கடலுக்கு உள்ளேயும் வெளியேயும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கோவளம் கடலில் சந்தேகத்திற்கு இடமான படகில் வந்த நபர்கள் 8 பேரை கடலோர காவல்படை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஒத்திகைக்காக தீவிரவாதிகள் வேடத்தில் வந்தவர்கள் என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து டம்மி வெடிகுண்டு, துப்பாக்கி, வாக்கி டாக்கி போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

    கடலோர காவல் படைவீரர்கள் அவசர அவசரமாக கடலுக்குள் படகை இறக்கி, வேகமாக எடுத்துச் செல்வதைப் பார்த்த மீனவர்கள் இடையே பதட்டம் ஏற்பட்டது. அதன்பின் அது ஒத்திகை என தெரிய வந்ததும் இயல்பு நிலை திரும்பியது.

    ×