search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "security drill"

    • பாதுகாப்பு ஒத்திகையில் 213 பேர் பங்கேற்றனர்.
    • ஒத்திகையில் விமானத்துக்கு பதில் பஸ் பயன்படுத்தப்பட்டது.

    கோவை,

    கோவை பீளமேடு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா ஆகிய வெளிநாடுகளுக்கும், உள்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. மத்திய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் விமான நிலையத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பான ஒத்திகை நிகழ்வு நேற்று மாலை நடந்தது. மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஒத்திகையில் விமானத்துக்கு பதில் பஸ் பயன்படுத்தப்பட்டது. பயணிகள் வேடத்தில் வந்த 4 தீவிரவாதிகள் பயணிகளை பிடித்து விமானத்தை கடத்த முயற்சிப்பது போலவும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மற்றும் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் துப்பாக்கியுடன் தீவிரவாதிகளை பிடிக்க முயற்சிப்பது போலவும், மீட்புப் படையைச் சேர்ந்த காவலர் ஒருவர் மருத்துவர் போல சென்று தீவிரவாதிகள் நால்வரையும் பிடித்து பயணிகளை மீட்பது போலவும் ஒத்திகை நடத்தப்பட்டது.

    இந்த ஒத்திகையில் மத்திய தொழில் பாதுகாப்புப்படையினர் 135 பேர், விமான நிலையத்தைச் சேர்ந்த 15 பணியாளர்கள், தீயணைப்பாளர்கள் 4 பேர், காவலர்கள் 16 பேர், தேசிய பாதுகாப்புப் படையினர், விமான நிலைய ஊழியர்கள் என மொத்தம் 213 பேர் பங்கேற்றனர். 40 நிமிடங்கள் நடைபெற்ற ஒத்திகையை விமான போக்குவரத்து பாதுகாப்பு துணை இயக்குநர் வினு சச்சின் தேவ் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    • கடல் வழியாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தடுக்க இன்று பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
    • கடலோர பாதுகாப்பு படை, இந்திய கடற்படை, உள்ளூர் போலீசார் இணைந்து சீ விஜில் என்ற ஒத்திகையை நடத்தினர்.

    மாமல்லபுரம்:

    தமிழ்நாடு கடலோர மாவட்ட கடல் பகுதிகளில் கடலோர காவல் பாதுகாப்பு குழுமத்தின் பாதுகாப்பு ஒத்திகை ஆபரேஷன் சீ விஜில் என்ற பெயரில் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. இந்த ஆபரேஷன் நாளை மாலை 6 மணி வரை நடக்கிறது.

    இதில் தீவிரவாதிகள் வேடத்தில் கடல் வழியாக வந்து மாவட்டங்களின் முக்கிய நகரங்களுக்குள் நுழையும், மத்திய கடலோர பாதுகாப்பு படை வீரர்களை எப்படி அடையாளம் கண்டு கைது தமிழக கடலோர காவல் படையினர் கைது செய்கிறார்கள், அவர்களிடம் விசாரிக்கும் விதம் எப்படி இருக்கிறது, கடல்பகுதி தகவல் தொடர்பு கருவிகளை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை கண்டறியவே இந்த ஒத்திகை நடைபெறுகிறது.

    வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் மாமல்லபுரம் வருவதால் அவர்களைத் தாக்கவும், மாமல்லபுரம் கடற்கரை கோயில் வழியாக நுழையலாம். ஆபத்தான அணு உலை கல்பாக்கத்தில் உள்ளதால் அதை தகர்த்து எரிய சட்ராஸ் பகுதி கடலோரம் வழியாக நுழையலாம் என்பது போன்ற ஒத்திகையில் கடலோர காவல் படையினர், போலீசார் மற்றும் மீனவர்கள் உதவியுடன் கடலுக்கு உள்ளேயும் வெளியேயும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கோவளம் கடலில் சந்தேகத்திற்கு இடமான படகில் வந்த நபர்கள் 8 பேரை கடலோர காவல்படை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஒத்திகைக்காக தீவிரவாதிகள் வேடத்தில் வந்தவர்கள் என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து டம்மி வெடிகுண்டு, துப்பாக்கி, வாக்கி டாக்கி போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

    கடலோர காவல் படைவீரர்கள் அவசர அவசரமாக கடலுக்குள் படகை இறக்கி, வேகமாக எடுத்துச் செல்வதைப் பார்த்த மீனவர்கள் இடையே பதட்டம் ஏற்பட்டது. அதன்பின் அது ஒத்திகை என தெரிய வந்ததும் இயல்பு நிலை திரும்பியது.

    ×