search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி விமான நிலையத்தில் தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை
    X

    திருச்சி விமான நிலையத்தில் தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை

    • திருச்சி விமான நிலையத்தில் தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடந்தது
    • தீவிரவாதத்தை தடுக்கும் முறைகள்

    திருச்சி:திருச்சி விமான நிலையத்திற்கு தமிழகத்தில் அதிக அளவில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் சென்னைக்கு அடுத்தபடியாக விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான சேவைகளால் திருச்சி விமான நிலையத்திற்கு அதிக அளவில் பயணிகள் வந்து செல்கின்றது வாடிக்கை. இந்த நிலையில் ஆண்டுதோறும் திருச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நுழைவதை தடுக்கும் விதமாக பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பாதுகாப்பு ஒத்திகை திருச்சி விமான நிலைய வளாகத்தில் நடத்தப்பட்டது இதில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தமிழக போலீசார் கமாண்டோ படையினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி , மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரி சிங் நயால் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கு பெற்றனர். இந்த நிகழ்வில் தீவிரவாதத்தை தடுக்கும் முறை பற்றி ஒத்திகை முறையில் நடத்தி காண்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×