என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kudankulam Nuclear Power Plant"

    • அணு உலைகளில் பராமரிப்பு பணி, எரிபொருள் நிரப்பும் பணி உள்ளிட்டவற்றின்போது மின் உற்பத்தி பணிகள் நிறுத்தப்படுவது வழக்கம்.
    • அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும்.

    நெல்லை:

    நாட்டின் அணுசக்தித் துறையில் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டுமான பணி கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில், புதிதாக 5 மற்றும் 6-வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த அணு உலைகளில் பராமரிப்பு பணி, எரிபொருள் நிரப்பும் பணி உள்ளிட்டவற்றின்போது மின் உற்பத்தி பணிகள் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பராமரிப்பு மற்றும் அணு எரிபொருளை மறுநிரப்பும் பணிகளுக்காக அணு உலை 2-ன் முழு உற்பத்தித் திறனான ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என அணு உலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தேசிய தொகுப்பில் பகிரப்பட்டாலும், மின் பகிர்வு ஒப்பந்தத்தின்படி தமிழகத்திற்கு அதிகபட்சமாக 562 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த மின் உற்பத்தி தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.

    நீண்ட காலத்திற்கு பிறகு அலகு 2-ல் மேற்கொள்ளப்படும் இந்த முழுமையான பராமரிப்பு பணிகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் பணி சுமார் 2 மாதங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கூடங்குளத்தில் இந்தியா மற்றும் ரஷ்யா கூட்டாக இணைந்து அணுமின் உலை அமைத்துள்ளது.
    • அணுமின் நிலைய வளாகத்தில் உள்ள குடோன்களில் எரிகோல்கள் இறக்கி வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா மற்றும் ரஷ்யா கூட்டாக இணைந்து அணுமின் உலை அமைத்துள்ளது.

    இதில் முதல் மற்றும் 2-வது அணு உலைகள் இயங்கி வருகிறது. இதில் இருந்து தலா 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து 3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 5 மற்றும் 6-வது அணு உலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்த அணு உலையில் எரிக்க பயன்படுத்தும் எரிகோல்கள் ரஷ்யாவில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் ரஷ்யாவில் இருந்து விமானம் மூலம் எரிகோல்கள் மதுரை விமான நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்து நேற்று 3 கண்டெய்னர் லாரிகளில் எரிகோல்கள் ஏற்றப்பட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் இன்று அதிகாலை கூடங்குளம் வந்தடைந்தது.

    அங்கு அணுமின் நிலைய வளாகத்தில் உள்ள குடோன்களில் எரிகோல்கள் இறக்கி வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    • மத்திய அரசு போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்திட வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் அறிவித்தது.
    • நாளை(சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் புகுந்து அங்குள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது.

    இதனிடையே நாடு முழுவதும் முக்கிய இடங்கள், பாதுகாப்பு முக்கியத்துவம் உள்ள பகுதிகளில் மத்திய அரசு போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்திட வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் அறிவித்தது.

    அதன்படி இன்று மாலை 4 மணிக்கு கூடங்குளம் அணுமின்நிலையம், வட சென்னை அனல்மின் நிலையம் அலகு-2 ஆகிய இடங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்பட்டது.

    இதேபோல், நாளை(சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.

    இந்த பயிற்சியின்போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எந்தவிதமான அவசர கால சூழலையும் எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்பட்டது.

    இந்த ஒத்திகை பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய இடங்களில் ஆயத்த நிலையை சரிபார்த்து கொள்வதற்கான ஒத்திகை ஆகும்.

    மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம்போல் இயங்கும். இதுகுறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
    • 3, 4-வது அணு உலைகள் கட்டுமானப் பணிகளும் நடந்து வருகின்றன. மேலும் 5, 6-வது அணு உலைகளும் அமைக்கப்பட உள்ளன.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர 3, 4-வது அணு உலைகள் கட்டுமானப் பணிகளும் நடந்து வருகின்றன. மேலும் 5, 6-வது அணு உலைகளும் அமைக்கப்பட உள்ளன.

    இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் ரஷிய நாட்டின் மாஸ்கோவில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு நேற்று வந்தது.

    அங்கிருந்து மிகுந்த பாதுகாப்புடன் சாலை மார்க்கமாக இந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் இன்று காலை கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    தனி விமானம் மூலம் ரஷியாவில் இருந்து வந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிக்கோல்கள் 3 ட்ரெய்லர் லாரிகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழக காவல்துறையுடன் மிகுந்த பாதுகாப்புடன் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அதிகாலை 3 மணி அளவில் வந்து சேர்ந்தது.

    ஒவ்வொரு எரிபொருளும் 4.57 மீட்டர் நீளமும், 705 கிலோ கிராம் எடையும் கொண்டது. அணு உலையில் 163 எரிக்கோல்கள் ஒரு பண்டல் ஆக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும். தற்பொழுது 45 பண்டல்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • 1-வது அணு உலை மூலம் மட்டும் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.
    • கூடங்குளத்தில் மேலும் 4 அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த 2 அணு உலைகள் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று காலையில் 2-வது அணு உலையில் பராமரிப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. 2-வது அணு உலையில் பராமரிப்பு மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருட்கள் நிரப்பும் பணி இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என்று அணுமின் நிலைய வட்டாரம் தெரிவித்துள்ளது. தற்போது 1-வது அணு உலை மூலம் மட்டும் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே கூடங்குளத்தில் மேலும் 4 அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுமார் 300 டன் எடை கொண்ட இந்த எந்திரம் கடந்த 7-ந்தேதி தூத்துக்குடிக்கு வந்தது.
    • மிதவையின் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் இருப்பதினால் அதனை சரி செய்யும் பணிகளில் இதனை ஏற்றி வந்த ஒப்பந்தக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான நீராவி உற்பத்தி செய்யும் எந்திரம் ரஷியாவில் இருந்து கொண்டு வரப்பட்டது.

    சுமார் 300 டன் எடை கொண்ட இந்த எந்திரம் கடந்த 7-ந்தேதி தூத்துக்குடிக்கு வந்தது. நேற்று தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இழுவை கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டது. அப்போது இழுவை கப்பலுக்கும், மிதவைக்கும் இடையிலான கயிறு அறுந்து விட்டதினால் நீராவி உற்பத்தி எந்திரத்தின் மிதவை அங்குள்ள பாறை இடுக்குகளில் சிக்கி உள்ளது. அதனை சரி செய்யும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.

    இதனால் மிதவையின் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் இருப்பதினால் அதனை சரி செய்யும் பணிகளில் இதனை ஏற்றி வந்த ஒப்பந்தக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    அணுமின் நிலையத்தின் சிறிய துறைமுக பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் பாறை இடுக்குகளில் சிக்கியுள்ள அந்த மிதவையானது கடலின் நீர்மட்டத்தின் உயர்வு மற்றும் காற்றின் வேகத்தை பொறுத்து மீண்டும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள அந்த சிறிய துறைமுகத்திற்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடல் அலையின் காரணமாக மிதவை கப்பலின் ஒரு பகுதியானது அருகில் இருந்த பாறையின் ஒரு பகுதியில் அமர்ந்து சரிந்த நிலையில் காணப்பட்டது.
    • இன்று அமாவாசை தினம் என்பதால் கடல் நீர்மட்டம் அதிகரிக்கலாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5-வது மற்றும் 6-வது அணு உலைகள் கட்டுமான பணிகள் ரூ.49 ஆயிரத்து 621 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இழுவை கப்பல் மூலமாக 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான தலா 300 டன் எடை கொண்ட 2 ஸ்டீம் ஜெனரேட்டர்கள் கடல் மார்க்கமாக எடுத்து வரப்பட்டது. கூடங்குளம் அணுமின் நிலைய சிறிய துறைமுக நுழைவு வாயில் பகுதியில் வரும்போது இழுவை கப்பலின் பின்னால் இழுத்து வரப்பட்ட பார்ஜி எனப்படும் மிதவை கப்பல் பாறை இடுக்கில் சிக்கியதால் இழுவை கப்பலில் உள்ள உலகத்தரத்திலான கயிறு அறுந்து தரை தட்டி நின்று விட்டது.

    அப்பொழுது அடித்த கடல் அலையின் காரணமாக மிதவை கப்பலின் ஒரு பகுதியானது அருகில் இருந்த பாறையின் ஒரு பகுதியில் அமர்ந்து சரிந்த நிலையில் காணப்பட்டது. இதனை மீட்கும் பணிகள் சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை மற்றும் மும்பை துறைமுக பகுதிகளில் இருந்து வல்லுனர் குழுவினர் வரவழைக்கப்பட்டு கப்பலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அதிக விசை கொண்ட இழுவை கப்பல்கள் மும்பை அல்லது கொச்சின் துறைமுகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட பின்னர் தான் இந்த மீட்புப் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் அதிக விசை திறன் கொண்ட இழுவை கப்பல்கள் வரும்போது, அவை கடல் பகுதியில் குறைவான தண்ணீரில் தரை தட்டிவிடும் நிலை இருக்கிறது என்பதால் இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து கூடங்குளத்திற்கு வந்துள்ள அதே விசை திறன் கொண்ட இழுவை கப்பல் கொண்டு வரப்படுகிறது.

    இந்த கப்பலானது நேற்று இரவு நிலவரப்படி கூடங்குளத்தில் இருந்து 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் வந்து கொண்டிருந்தது. இன்று அந்த கப்பல் கூடங்குளத்திற்கு வந்து விடும். அதேநேரத்தில் இன்று அமாவாசை தினம் என்பதால் கடல் நீர்மட்டம் அதிகரிக்கலாம் அல்லது திடீரென கடல் உள்வாங்கலாம் என்றும், சில நேரங்களில் கடல் சீற்றமும் அதிகரிக்கலாம் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    இதன் காரணமாக கொழும்புவில் இருந்து கொண்டுவரப்பட உள்ள மீட்பு கப்பல், சம்பவ இடத்திற்கு வரும் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அல்லது இரவு கூடங்குளம் பகுதிக்கு அந்த கப்பல் கொண்டுவரப்பட்டு, நாளை காலையில் மிதவை கப்பலை மீட்கும் பணிகள் தொடங்கும் என அணுமின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • மிதவை கப்பலை மீட்பதற்காக சென்னை, மும்பையில் இருந்து வந்த மீட்பு குழுவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
    • மிதவை கப்பல் 620 டன் வரை தான் எடை கொண்டிருக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு 4 அணு உலைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இதில் 5, 6-வது அணு உலைகளுக்கான நான்கு நீராவி ஜெனரேட்டர்கள் ரஷியாவில் இருந்து கடந்த மாதம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து 2 ஜெனரேட்டர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு கடல் வழியாக ஏற்கனவே கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து மற்ற 2 நீராவி ஜெனரேட்டர்களும் கடந்த 7-ந்தேதி மிதவை கப்பலில் ஏற்றி, இழுவை கப்பல் மூலமாக கூடங்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது தரை தட்டியது.

    இதையடுத்து மிதவை கப்பலை மீட்பதற்காக சென்னை, மும்பையில் இருந்து வந்த மீட்பு குழுவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனாலும் அதனை மீட்க முடியவில்லை.

    தொடர்ந்து பாறையில் தரைதட்டி நிற்கும் மிதவை கப்பலை மீட்பதற்காக, இலங்கையில் இருந்து அதிக இழுவைத்திறன் கொண்ட ஓரியன் என்ற பெயரிலான அதிநவீன இழுவை கப்பல் நேற்று கூடங்குளம் வந்து சேர்ந்தது. எனினும் தரைதட்டிய மிதவை கப்பலை மீட்பதற்கான பணிகளை உடனே தொடங்கவில்லை.

    இன்று மதியத்திற்கு மேல் மீட்பு பணிகள் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த கப்பலை ஓரியன் இழுவை கப்பலை மட்டும் கொண்டு இழுத்து விடலாமா என்று ஒரு குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்று மதியம் ஓரியன் கப்பலின் தலைமை செயல் அதிகாரி கூடங்குளம் வருகிறார். அவர் வந்த பின்னரே ஆலோசனை நடத்தி மீட்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    அதே நேரத்தில் தற்போது ஓரியன் கப்பலுடன் வந்துள்ள குழுவினர் கூறுகையில், கடற்கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் 1000 டன் எடை கொண்ட கப்பலை கூட எங்களது இழுவை கப்பலால் இழுத்து இருக்கிறோம். இந்த மிதவை கப்பல் 620 டன் வரை தான் எடை கொண்டிருக்கிறது. அதுவும் கடலில் தான் இருக்கிறது. எனவே எளிதாக இழுத்து விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

    • முதல் மற்றும் 2-வது அணுஉலையில் இருந்து தலா 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
    • விரைவில் பணிகள் சரிசெய்யப்பட்டு மின்உற்பத்தி தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி முதல் மற்றும் 2-வது அணுஉலையில் இருந்து தலா 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த இரு அணு உலைகளில் இருந்தும் உற்பத்தியாகும் மின்சாரம் நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3,4-வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் 2-வது அணு உலையில் இன்று ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கு மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அங்கிருந்து உற்பத்தியாகும் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இதைத்தொடர்ந்து பழுதை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    விரைவில் பணிகள் சரிசெய்யப்பட்டு மின்உற்பத்தி தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. முதலாவது அணு உலையில் இருந்து வழக்கம் போல் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    • வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிந்து 79 நாட்களுக்கு பிறகு இன்று காலை மின்சார உற்பத்தி மீண்டும் தொடங்கியது.
    • ஏற்கனவே 2-வது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி முதல் அணு உலையில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டு இருந்தது.

    வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிந்து 79 நாட்களுக்கு பிறகு இன்று காலை மின்சார உற்பத்தி மீண்டும் தொடங்கியது. சுமார் 300 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கிய நிலையில் படிப்படியாக அதிகரித்து நாளைக்குள் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை எட்டிவிடும் என அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 2-வது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    • கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த பராமரிப்பு பணி முடிந்து நேற்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
    • 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அணுமின் நிலையத்தில் 2 உலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இவற்றின் மூலம் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தொடர்ந்து அவ்வப்போது பராமரிப்பு பணிகளால் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி 2-வது அணு உலையில் கடந்த மே மாதம் 13-ந்தேதி வருடாந்திர பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த பராமரிப்பு பணி முடிந்து நேற்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

    தொடக்கத்தில் 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் இன்று காலை திடீர் பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. சுமார் 57 நாட்களுக்கு பிறகு நேற்று மின் உற்பத்தி தொடங்கிய நிலையில் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக இன்று காலை மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பழுதை சரி செய்யும் முயற்சியில் அணுமின் நிலைய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    அணுமின்நிலையத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், 5 மற்றும் 6-வது அணு உலைகள் கட்டுவதற்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • 3 மற்றும் 4-ம் அணு உலைகள் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது.
    • கூடங்குளம் அனுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் மற்றும் இரண்டாம் அணு உலைகள் மூலம் தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 3 மற்றும் 4-ம் அணு உலைகள் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. மேலும் 5 மற்றும் 6-வது அணு உலைகள் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கடந்த 1-ந்தேதி திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது. அந்த கோளாறை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அந்த பழுது இன்று அதிகாலையில் சரி செய்யப்பட்டது.

    தொடர்ந்து இன்று காலை முதல் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. தொடக்கத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று மாலைக்குள் ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும் என கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கூடங்குளம் அனுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    ×