என் மலர்
நீங்கள் தேடியது "Extreme War Tension"
- பாதுகாப்பு ஒத்திகை நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
- இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உள்ள நிலையில் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதலின்போது மக்களை பாதுகாப்பது தொடர்பாக நாடு முழுவதும் மே 7ம் தேதி அன்று ஒத்திகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
வான் வழித்தாக்குதல் எனும் பட்சத்தில் எனும் பட்சத்தில் எச்சரிக்கும் வகையில் சைரன் அமைப்பை நிறுவ மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உள்ள நிலையில் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- இறுதிக்கட்ட போருக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது.
- கடந்த 2 வாரமாக தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் படையினர் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த போரில் 38 ஆயிரம் பேர் வரை பலியாகி விட்டனர்.
இந்த நிலையில் காசாவில் இறுதிக்கட்ட போருக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. கடந்த 2 வாரமாக தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

இதையடுத்து காசாவில் இருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட பாதை வழியாக உடனே வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
போர் நடவடிக்கையை அதிகப்படுத்த இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவில் தற்போது 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இஸ்ரேல் ராணுவம் எச்ரிக்கையால் அவர்கள் பீதி அடைந்துள்ளனர். இஸ்ரேலின் இந்த நடவடிக்கை மிகவும் கவலை அளிப்பதாக ஐ.நா. தெரிவித்து இருக்கிறது.






