search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா ரெயில்"

    • புகழ் பெற்ற கோவில்களுக்கு செல்ல ஆன்மீக சுற்றுலா ரெயில் மே 4-ந் தேதி இயக்கப்படுகிறது.
    • சுற்றுலா செல்ல விருப்பமுள்ளர்வர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

    விருதுநகர்

    ஐ.ஆர்.சி.டி.சி. தென் மண்டலப் பொது மேலா ளர் ரவிக்குமார், தெற்கு ரெயில்வே அதிகாரி வெங்கட சுப்பிரமணியன், தென் மண்டல சுற்றுலா பொது மேலாளர் சுப்பிர மணி ஆகியோர் விருது நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்தாண்டு ஜூலை மாதம் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பாரத் கவுரவ் விரைவு ரெயில் இயக்கப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    ரெயில்வே நிர்வாகம், ஐ.ஆர்.சி.டி.சி. இணைந்து இந்தச் சிறப்பு ரெயிலை இயக்குவதால், சுற்றுலா சென்று வருவதற்கான செலவு குறைகிறது. இந்த ஆன்மீக சுற்றுலாவில் ஒரு நபருக்கு ரெயில் கட்டணம், தங்கும் அறை, கோவிலுக்குச் சென்று வருவதற்கான கட்டணம் என ரூ.20 ஆயிரத்து 367 செலுத்த வேண்டும்.

    குளிர்சாதனப் பெட்டியில் பயணம் செய்வோருக்கு கட்டணம் ரூ.35 ஆயிரத்து 651 ஆகும். இவர்களுக்கு தங்கும் அறை, வாகனம் ஆகியவை குளிர்சாதனத்துடன் வழங்கப்படும். மேலும் 5 முதல் 11 வயதுள்ள குழந்தைகளுக்கு கட்டணச் சலுகை உண்டு.

    வருகிற மே 4-ந் தேதி கேரள மாநிலம் கொச்சு வேலியில் இருந்து புறப்படும் இந்த சுற்றுலா சிறப்பு ரெயில் செங்கோட்டை, விருதுநகர் வழியாக தஞ்சை, சென்னை வழியாக, வட மாநிலத்தில் உள்ள பூரி, கோனார்க், கொல்கத்தா, கயா, வாராணசி, திரிவேணி சங்கமம் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று திரும்ப உள்ளது.

    இந்த ரெயிலில் 4 குளிர்சாத னப் பெட்டிகள், 7 படுக்கை வசதி பெட்டிகள் இருக்கும். வட மாநில கோவில்களுக்கு 10 நாட்கள் சுற்றுலா செல்ல விருப்பமுள்ளர்வர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • காசியிலும், ஜனக்பூரிலும் என 2 இரவு பயணிகள் ஓட்டலில் தங்கலாம்.
    • நந்திகிராமில் பாரத் மந்திருக்கு செல்லலாம்.

    புதுடெல்லி :

    'பாரத கவுரவ சுற்றுலா ரெயில்' என அழைக்கப்படும் இந்த ரெயில், அடுத்த மாதம் (பிப்ரவரி) 17-ந்தேதி டெல்லியில் இருந்து பயணத்தை தொடங்குகிறது. 'ஸ்ரீராம்-ஜானகி யாத்திரை: அயோத்தியில் இருந்து ஜனக்பூருக்கு' என்று இந்த ரெயில் பயணத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இந்த சுற்றுலா ரெயில், நந்திகிராம், சீத்தாமர்கி, காசி, பிரயாக்ராஜ் வழியாக நேபாளம் செல்லும். காசியிலும், ஜனக்பூரிலும் என 2 இரவு பயணிகள் ஓட்டலில் தங்கலாம்.

    முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த நவீன, சொகுசு ரெயிலில் 2 உணவகங்கள், ஒரு நவீன சமையலறை, ஷவர்கள், சென்சார் அடிப்படையில் இயங்கும் கழிப்பறைகள், கால்களுக்கு மசாஜ் செய்யும் எந்திரங்கள் போன்றவை இடம்பெற்றிருக்கும்.

    7 நாட்கள் கொண்ட இந்த ரெயில் பயணத்தில் முதல் நிறுத்தமாக, ராமர் பிறந்த இடமான அயோத்தி இருக்கும். அங்கு சுற்றுலாவாசிகள் ராம ஜென்ம பூமி கோவில், அனுமான் கோவில் போன்ற இடங்களுக்குச் செல்லலாம். அதேபோல நந்திகிராமில் பாரத் மந்திருக்கு செல்லலாம்.

    இந்த ரெயில் கடைசி நிறுத்தமாக பீகாரின் சீத்தாமர்கி ரெயில் நிலையத்தில் நிற்கும். அங்கிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நேபாளத்தின் ஜனக்பூருக்கு பஸ்கள் மூலம் சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த ரெயிலில் ஒருவருக்கான கட்டணம் ரூ.39 ஆயிரத்து 775 ஆக இருக்கும். அதில் உணவு, தங்குமிட வசதிக்கான கட்டணம் உள்பட அனைத்தும் அடங்கும்.

    இந்த சுற்றுலா ரெயில், இந்தியா-நேபாளம் இடையிலான இருதரப்பு, கலாசார உறவை மேலும் வலுப்படுத்தும் என இந்திய ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

    • மதுரை - அமிர்தசரஸ் சுற்றுலா ரெயில் கூடல் நகர் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை புறப்படுகிறது.
    • இதுவரை 6 ஆன்மிகச் சுற்றுலா ரெயில்களை தெற்கு ரெயில்வே இயக்கியது. இதன் மூலம் ரூ.6.3 கோடி வருவாய் கிடைத்தது.

    மதுரை

    மதுரை - அமிர்தசரஸ் சுற்றுலா ரெயில் கூடல்நகர் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (3-ந் தேதி) புறப்படுகிறது.

    நாட்டின் பாரம்பரிய மிக்க வரலாற்றுச் சிறப்புடைய சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கும் வகையில் ''பாரத் கவுரவ்'' என்ற ஆன்மிகச் சுற்றுலா ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அனுபவம் மிக்க சுற்றுலா நிறுவனங்கள் மூலமாக இதுவரை 6 ஆன்மிகச் சுற்றுலா ரெயில்களை தெற்கு ரெயில்வே இயக்கியது. இதன் மூலம் ரூ.6.3 கோடி வருவாய் கிடைத்தது.

    இதன் தொடர்ச்சியாக 7-வது சுற்றுலா ரெயில், மதுரையில் இருந்து அமிர்தசரசுக்கு நாளை இயக்கப்படுகிறது. கூடல்நகர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ரெயில் தெலுங்கானா மவுலாளி, ஜெய்ப்பூர்,ஆக்ரா, அமிர்தசரஸ், கோவா போன்ற சுற்றுலாத் தலங்களை இணைத்து இந்த ரெயில் இயக்கப்படுகிறது.

    கூடல்நகர்- அமிர்தசரஸ்-கூடல்நகர் சுற்றுவட்ட சுற்றுலா ரெயில் (06905/06906) கூடல் நக ரில் இருந்து நாளை (வியாழக்கிழமை) இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில், திரு வனந்தபுரம், பாலக்காடு, போத்தனூர், சேலம், காட்பாடி வழியாக சென்று வருகிற 6-ந் தேதி மவுலாளி, 8-ந் தேதி ஜெய்ப்பூர், நவம்பர் 9-ந் தேதி ஆக்ரா, 10-ந் தேதி டெல்லி, 11-ந் தேதி அமிர்தசரஸ், 13-ந் தேதி கோவா போன்ற சுற்றுலாத் தலங்களை இணைக்கிறது.

    பின்பு மங்களூர், திருச்சூர், கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில் வழியாக வருகிற 16-ந் தேதி அதிகாலை 2.30 மணிக்கு கூடல்நகர் வந்து சேருகிறது.

    ×