search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "opanneerselvam"

    பிரதமர் மோடி தம்பியுடன் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #opanneerselvam

    சென்னை:

    பிரதமர் நரேந்திரமோடியின் இளைய சகோதரர் பிரகலாத்மோடி. சென்னையில் மோடி பிறந்த நாளையொட்டி கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள மருத்துவ முகாம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளை தொடங்கி வைப்பதற்காக பிரகலாத்மோடி நேற்று சென்னை வந்தார்.

    கிண்டி ராஜ்பவனில் தங்கியிருந்த அவரை தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். ஓ.பன்னீர் செல்வத்தின் இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    மேலும் சில முக்கிய பிரமுகர்களும் அவரை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

    நேற்று இரவு பிரகலாத் மோடி திருப்பதி புறப்பட்டு சென்றார். மோடி பிறந்த நாளையொட்டி இன்று அதிகாலையில் சிறப்பு வழிபாடு நடத்தி சாமி தரிசனம் செய்தார்.

    இன்று மதியம் தாம்பரத்தில் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்து இருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.  #opanneerselvam

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதவி வெறியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார் என்று தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். #dinakaran #OPanneerselvam

    தஞ்சாவூர்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, ‘‘ முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே தினகரன் முதல்வராக சதி செய்தார். என்று கூறினார்.

    தினகரனின் சொந்த ஊரில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் இவ்வாறு பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தஞ்சையில் இன்று நடந்த ஒரு திருமண விழாவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார். அவர் பேசுவது எல்லாம் உண்மையல்ல என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். பதவி வெறியில் இவ்வாறு பேசுகிறார்.

    தி,மு.க.வுடன் கைக் கோர்த்து கொண்டே இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தார். பின்னர் டெல்லியில் இருந்து உத்தரவு வந்தவுடன் இந்த ஊழல் ஆட்சியுடன் சேர்ந்து கொண்டு ‘துணை முதல்வர்’ பதவியை வகிக்கிறார். அவரது நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. என்னை சதி செய்தார் என்று கூறுகிறார். இதை யாரும் நம்ப மாட்டார்கள். அவரது மனைவி கூட நம்ப மாட்டார். ஓ.பி.எஸ். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என்னை தெரியும். விரக்தியில் உள்ள ஓ.பி.எஸ். மனநிலை பாதித்தவர் போல் பேசி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நிருபர்கள் குறுக்கிட்டு, ‘தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சி முக்கொம்பு அணையை பார்வையிடும் நேரத்தில் நீங்களும் சுற்றுப்பயணம் செல்கிறீர்களே? என்றனர்.

    இதற்கு தினகரன் பதிலளித்து பேசும் போது, ஸ்டாலின் சுற்றுப்பயணம் பற்றி எனக்கு தெரியாது. கடைமடை பகுதிவரை தண்ணீர் இல்லாததால் ஆகஸ்ட் 19-ந் தேதி நீடாமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து விட்டோம். அதன்படி இன்று மாலை நீடாமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    கடைமடைக்கு தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தூர்வாரும் பணியில் சுமார் ரூ.400 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக ஆதரவு உள்ளது. இதனால் 234 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

    காவிரி வெற்றி விழா பொதுக்கூட்டம் என்று கூத்து நடத்தி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    பேட்டியின் போது மாநில பொருளாளர் ரெங்கசாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். #dinakaran #OPanneerselvam

    அ.தி.மு.க. ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்று திருக்குறுங்குடியில் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். #ttvdinakaran #tngovt

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் டி.டி.வி. தினகரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஓ.பி.எஸ் யார்? அவர் 2001-ல் யாரால் சட்டமன்ற உறுப்பினராகி அமைச்சரானார்?. 2001 செப்டம்பரில் யாரால் முதல்வர் ஆனார் என்பது பெரியகுளம், தேனி மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்றாக தெரியும். அவர் தம்பி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.

    ஓ.பன்னீர்செல்வத்தின் சம்பந்தி கூடுதல் அட்வகேட் ஜெனரலாக உள்ளார். இவர்கள் எல்லாம் ஜெயலலிதாவால் கட்சியில் நீக்கம் செய்யப்பட்டவர்கள். இவர்களது சதியால் எங்களையும் ஜெயலலிதா ஒதுங்கி இருக்க சொன்னார். அப்போது நாங்கள் ஜெயலலிதாவிற்கு எதிராக எந்த வார்த்தையும் சொல்லவில்லை.

    ஓ.பி.எஸ். அவரது குடும்பத்தை கட்சியில் புகுத்தவே, ஒரு குடும்பத்தின் பிடியில் இருக்க மாட்டோம் என்று கூறுகிறார். அவர் யாருடைய ஏஜெண்டாக உள்ளார் என்பதும் மக்களுக்கும் தெரியும். அவர் சொல்வதை மக்கள் புறக்கணிப்பார்கள். ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவருமே துரோகத்தின் மொத்த உருவம்.


    இந்த ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என்பதே மக்கள் விருப்பம். ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். அதன் பின் ஓ.பி.எஸ் தமிழகத்தில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் தோல்வி அடைவார். சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வர வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அவர் உடல்நிலை நன்றாக உள்ளது.

    நான் கடந்த 18-ந் தேதி நேரில் சந்தித்தேன். நன்றாக இருந்தார். தேர்தல் வரும் போது கூட்டணி அமைப்போம். பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் அ.ம.மு.க. கூட்டணி வெற்றி பெறும். வரும் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைதேர்தல்களிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நீதி எங்கள் பக்கம் உள்ளது. எங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ttvdinakaran #tngovt

    வீடுகளில் பிரசவம் பார்ப்பது தவறு. அதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். #HomeMaternity #OPanneerselvam
    தேனி:

    தேனி அருகில் உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் கண்ணன் (29). என்ஜினீயரிங் படித்து முடித்தவர். எலக்ட்ரிக்கல் வேலையை ஒப்பந்தம் எடுத்து செய்து கொடுத்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (25). எம்.பி.ஏ. பட்டதாரி.

    இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மகாலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ஆனால் கணவன், மனைவி இருவரும் சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்றே விரும்பினர். தொடர்ந்து மகாலட்சுமி, மருத்துவமனைக்கு செல்ல மறுத்தார்.

    இதற்கிடையே, நேற்று முன்தினம் மகாலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து கண்ணன் தனது வீட்டில் வைத்தே மகாலட்சுமிக்கு பிரசவம் பார்த்துள்ளார். இரவு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அவர் குழந்தையின் தொப்புள் கொடியுடன் இணைந்துள்ள நச்சுக் கொடியை அகற்றாமல் வைத்துள்ளதாக போலீசாருக்கும், மருத்துவத்துறைக்கும் தகவல் கிடைத்தது.

    இதையடுத்து 2 ஆம்புலன்சுகளுடன் மருத்துவத் துறையினர் அங்கு சென்று நச்சுக் கொடியை அகற்ற வேண்டும். குழந்தையின் உடல் நிலையை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    ஆனால் தம்பதியின் வேண்டுகோளின்படி, அரசு ஆரம்ப சுகாதாரநிலைய சித்த மருத்துவக் குழுவினர் அங்கு வந்து குழந்தையின் தொப்புள் கொடியை துண்டித்து, நச்சுக் கொடியை பாதுகாப்பாக அகற்றினர்.

    இதையடுத்து தாய்க்கும், குழந்தைக்கும் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவ குழுவினர் கூறியும் அந்த தம்பதியினர் ஏற்கவில்லை. இதனால் சுமார் 9 மணிநேரம் அங்கிருந்த மருத்துவ துறை அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.

    இதில், குழந்தைக்கு நச்சுக் கொடியை அகற்றி சிகிச்சை அளிப்பதற்காக சென்ற போது, கண்ணன் அவரது பெற்றோரான தனுஷ்கோடி, அழகம்மாள், ஆகியோர் மருத்துவ குழுவினரை தகாத வார்த்தையால் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    அதன்பேரில் 3 பேர் மீதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி வழக்குப்பதிவு செய்தார். இதில் கண்ணனின் தந்தை தனுஷ்கோடியை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசு விதிகளின்படி மருத்துவமனையிலேயே பிரசவம் பார்க்க வேண்டும். சட்ட விதிகளை மீறி வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறு.  இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார். #HomeMaternity #OPanneerselvam
    ராயப்பேட்டையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அ.தி.மு.க. உயர்நிலை குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வழிகாட்டு குழுவை அமைக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.#Edappadipalanisamy #opanneerselvam

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட்டு வந்த அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்பட்டு வந்த அணியினரும் கடந்த ஆண்டு ஒன்றாக இணைந்தனர். இதையடுத்து ஓ.பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

    அ.தி.மு.க.வை வழி நடத்த ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பேற்றனர். அவர்களுக்கு உதவி செய்ய துணை ஒருங்கிணைப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

    மேலும் அ.தி.மு.க. கட்சி விவகாரங்களை கவனிக்க 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அத்தகைய குழு எதுவும் நியமிக்கப்படவில்லை. அதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ராயப்பேட்டையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அ.தி.மு.க. உயர்நிலை குழு கூட்டம் நடந்தது. பாராளுமன்றம் கூட உள்ள நிலையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

    ஆனால் உண்மையில் வேறு பல வி‌ஷயங்களும் விவாதிக்கப்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது. குறிப்பாக அ.தி.மு.க. ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும் வகையில் வருமான வரித்துறை நடத்தும் சோதனைகள் பற்றி பேசப்பட்டது.

    குறிப்பாக சத்துணவு கூடங்களுக்கு முட்டை விநியோக்கும் கிறிஸ்டி நிறுவனத்தில் நடந்த வருமான வரி சோதனை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாத்துரை வீடு, அலுவலகங்களில் நடந்த வருமான வரி சோதனை பற்றி காரசாரமாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து அ.தி.மு.க. வுக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை துடைக்க வேண்டுமானால் கட்சி நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று கூட்டத்தில் பேசப்பட்டது. அப்போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “ஏற்கனவே பேசப்பட்ட படி கட்சியை வழி நடத்த வழிகாட்டுக் குழுவை உடனே ஏற்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

    அதற்கு கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் ஒப்புதல் தெரிவித்தனர். எனவே அ.தி.மு.க.வை வழிநடத்தும் வழிகாட்டு குழு விரைவில் அமைக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. கட்சி நிர்வாகங்களை மேற்கொள்ள இருக்கும் இந்த வழிகாட்டு குழு மொத்தம் 11 உறுப்பினர்களை கொண்டதாக இருக்கும் அதில் 6 பேர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக இருப்பார்கள்.

    5 பேர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருப்பார்கள். எனவே வழிகாட்டு குழுவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி இருப்பதாக தெரிகிறது.

    இந்த வழிகாட்டு குழு மூலம் அ.தி.மு.க. கட்சியை புத்துணர்ச்சி பெற செய்வதற்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. #Edappadipalanisamy #opanneerselvam

    அ.தி.மு.க. எக்கு கோட்டை. எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் பேசினர். #edappadipalanisamy #opanneerselvam

    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் கட்ட பரவையில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு பூமிபூஜை இன்று நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

    1½ கோடி தொண்டர்கள் நிறைந்த மாபெரும் இயக்கம் அ.தி.மு.க. இந்த இயக்கத்தை வலுவோடும், பொலிவோடும் நடத்தி இந்தியாவிலேயே 3-வது பெரிய கட்சியாக மாற்றி காட்டியவர் புரட்சித்தலைவி அம்மா.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி அலுவலகம் கட்ட அம்மா உத்தரவிட்டார். அதன்படி பல்வேறு மாவட்டங்களில் கட்சி அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த நேரத்தில்தான் அம்மாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    தற்போது அம்மாவின் லட்சிய கனவை நிறைவேற்றும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் கட்சி அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வினர் மட்டுமின்றி பொதுமக்களும் இங்கு தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுக்கலாம். அவர்கள் தெரிவிக்கும் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றி தரப்படும். இந்த இயக்கம் ஏழை எளிய மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். இதை யாராலும் அசைக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    தமிழ் சமுதாயத்திற்காக உழைத்தவர் தந்தை பெரியார். தமிழர்களுக்காக வாழ்ந்தவர் அறிஞர் அண்ணா. ஏழைகளுக்கு பாடு பட்டவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இவர்களின் கொள்கைகளை, லட்சியங்களை செயல்வடிவம் ஆக்கியவர் புரட்சித்தலைவி அம்மா.

    அ.தி.மு.க. தொடங்கும் போது 16 லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால் 1½ கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக மாற்றி காட்டியவர் அம்மா. எனவே அவரது பாதையில் தமிழக மக்களுக்கு நல்லாட்சி நடத்தி வருகிறோம். இந்த இயக்கத்தை தொண்டர்கள் ஆலமரம்போல காத்து வருகிறார்கள்.

    எனவே எக்கு கோட்டையான அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., நிர்வாகிகள் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், பரவை ராஜா, திரவியம், கிரம்மர் சுரேஷ், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், வில்லாபுரம் ரமேஷ், அன்புச்செழியன், சோலைராஜா, கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களின் நலன்கருதி உயர் கல்வி உதவித் தொகைக்கான கூடுதல் நிதிச் சுமையை தமிழக அரசே ஏற்கும் என்று சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #OPannerselvam #TNAssembly #ADMK
    சென்னை:

    சட்டசபையில் நேற்று நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று தி.மு.க. உறுப்பினர் கணேசன் (திட்டக்குடி தொகுதி) பேசினார். அப்போது அவர், பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜலட்சுமி, ‘பஞ்சமி நிலங்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

    தொடர்ந்து பேசிய உறுப்பினர் கணேசன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உயர் கல்வி உதவித் தொகை வழங்கப்படாத நிலை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசியதாவது:-

    மத்திய அரசின் நிதி உதவியோடு செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டம்தான் இந்தத் திட்டம். 2017-2018-ம் ஆண்டுக்கான முதலாண்டு மாணவர்களுக்கும் வழங்க வேண்டிய பராமரிப்பு உதவித்தொகையும், கல்லூரிகளுக்கு வழங்க வேண்டிய நிர்வாகக் கட்டணமும் தவிர, மற்ற அனைத்து உதவித்தொகைகளையும் முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்கான நிதியை உடனடியாக வழங்க தமிழ்நாடு அரசு தற்போது ரூ.850 கோடியை விடுவித்துள்ளது. 2018-2019-ம் ஆண்டிற்கான சேர்க்கை முடிவுற்ற பின்பு, கல்வி உதவிக்கான கேட்பு கணக்கிடப்பட்டு, அதற்கான உதவித்தொகையையும் மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைப்படி, மாநில அரசின் பொறுப்புத் தொகை ரூ.1,526 கோடியே 46 லட்சமாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இத்திட்டத்தின் மொத்த கேட்பு 2018-2019-ம் ஆண்டிற்கு அதற்கு மேல் உயர வாய்ப்பில்லை.

    இந்தநிலையில், மத்திய அரசின் இந்தத் திட்டத்தில், இந்தத் திட்டத்திற்கான முழு நிதியையும் இனிமேல் மாநில அரசு, அதன் நிதி ஆதாரத்தில் இருந்தே வழங்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களின் நலன் கருதி, இந்த நிதிச் சுமையை மாநில அரசே தொடர்ந்து ஏற்று செயல்படுத்தும்.

    அதே நேரத்தில், மற்ற மத்திய அரசின் திட்டங்களைப்போல், நிதிப்பகிர்வில் மத்திய அரசின் நிதி 60 சதவீதம், மாநில அரசின் நிதி 40 சதவீதம் என்ற விகிதாச்சாரத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து பேசிய உறுப்பினர் கணேசன், திட்டக்குடி வெலிங்டன் ஏரி கரை உடைப்பை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “வெலிங்டன் ஏரியை பராமரிக்க ரூ.36 கோடியே 45 லட்சத்தில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது. விரைவில், ஏரி பராமரிப்பு பணிகள் தொடங்கும்” என்றார். #OPannerselvam #TNAssembly #ADMK
    கிருஷ்ணகிரியில் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் 90 ஜோடிகளுக்கு திருமணத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தனர். #edappadipalanisamy #opanneerselvam

    கிருஷ்ணகிரி:

    அ.தி.மு.க. சார்பில் மறைந்த முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி விளையாட்டு மைதானம் அருகே அமைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர்.அரங்கில் இன்று 90 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்பட்டது.

    இந்த திருமணங்களை அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தாலியை எடுத்து கொடுத்து நடத்தி வைத்தனர்.

    இந்த திருமண விழாவுக்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி. முனுசாமி தலைமை தாங்கினார். துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., அசோக்குமார் எம்.பி. மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினார்கள்.

    திருமணம் செய்த 90 ஜோடிகளில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் அடங்குவார்கள். மணமக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் 4 கிராம் தங்கத்தாலி, குத்துவிளக்குகள், காமாட்சி விளக்கு, கட்டில், மெத்தை, தலையணை, சமையல் பாத்திரங்கள், தட்டுகள், பீரோ, குடங்கள், அண்டா, பூஜை சாமான்கள் ஆகியவை உள்ளிட்ட 35 வகையான சீர் வரிசை பொருட்களாக மணமக்களுக்கு வழங்கப்பட்டன.

    மேலும் அவர்களுக்கு ஒரு மாதத்திற்கான மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. மணமகனுக்கு பட்டு வேட்டியும், பட்டு சட்டையும், மணமகளுக்கு பட்டுச் சேலை மற்றும் துணிகளும் வழங்கப்பட்டன. #edappadipalanisamy #opanneerselvam

    தமிழகத்தில் மதவாத கட்சி உள்ளே வர காரணமாக இருந்தவர் ஓ. பன்னீர்செல்வம். அந்த துரோகத்தால் தான் அவரை கட்சி பதவியில் இருந்து நீக்க வேண்டியிருந்தது என்று டி.டி.வி.தினகரன் பேசியுள்ளார். #dinakaran #opanneerselvam

    ஈரோடு:

    கொங்குநாடு வேட்டுவக் கவுண்டர் இளைஞர் நசலச்சங்கத்தின் 3-வது மாநில மாநாடு மற்றும் புதிய கட்சி தொடக்க விழா ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடந்தது. மாநாட்டுக்கு சங்க மாநில பொதுச் செயலாளர் கே.எஸ்.ராஜ்கவுண்டர் தலைமை தாங்கினார். மாநாட்டில் புதிய திராவிட கழகம் என்கிற புதிய கட்சி தொடங்கப்பட்டது.

    மாநாட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.-

    புதிய திராவிட கழகம் என்கிற பெயரில் கட்சி தொடங்கி இருப்பதே , வருங்கால தமிழகம் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை குறிக்கிறது. பெரியார் பிறந்த மண்ணில் இந்த கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

    கொங்கு மண்டலம் எப்போதும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கோட்டையாக இருந்து வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக பதவியில் அமர்த்தியவர் சசிகலா தான்.

    தமிழகத்தில் மதவாத கட்சி உள்ளே வர அவர் காரணமாக இருந்தவர் பன்னீர்செல்வம். அந்த துரோகத்தால் தான் அவரை கட்சி பதவியில் இருந்து நீக்க வேண்டியிருந்தது.

    கடந்த 15-ந் தேதி கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் முடிவு வந்ததும், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து கடிதம் எழுதினார். அதில் தென்னிந்தியாவில் பா.ஜ.க. மலர கதவுகள் திறக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இதில் இருந்தே அவர் துரோகத்தை ஒப்பு கொண்டு உள்ளார்.

    அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் வரும் சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும், பகல் கனவு காண்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு நான் சொல்லுவது, வரும் சட்டமன்ற தேர்தலில் நாங்கள் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்.

    காரணம் மக்கள், குறிப்பாக தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இன்று கூட நான் எடப்பாடிக்கு சென்ற போது அங்குள்ள பொதுமக்கள், பெரியவர்கள் தமிழகத்தில் இன்று நடக்கும் துரோக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்றனர். இந்த மாநாடு நடத்த பல்வேறு தடைகள் வந்தது. அதை தாண்டி தான் நடந்து வருகிறது.

    அதன் பின்னர் தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.-


    கர்நாடகாவில் பெரும் பான்மையை நிரூபிக்க முடியாமல் எடியூரப்பா முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதுபோல் எங்களது கட்சியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும். அப்போது மக்களாட்சி அமையும்.

    கமல்ஹாசன் மாற்றத்தை கொண்டு வருவேன் என்கிறார். அவரால் எப்படி மாற்றம் கொண்டு வர முடியும். மக்கள் தானே மாற்றத்தை கொண்டு வர முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #dinakaran #opanneerselvam

    சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்தது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி என்று மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.#Pannerselvam #Cavery
    மதுரை:

    சென்னைக்கு செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதியம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் காவிரி பிரச்சினையில் மத்திய அரசு வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்துள்ளது. இது தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி. மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு செயல் திட்டத்தை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு அதன் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்து தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்வோம். அதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு வழங்கும் என நம்புகிறோம்.

    தமிழகத்தின் ஜீவாதார உரிமையை விட்டுக்கொடுக்காத வகையில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் வழியில் நடக்கின்ற தற்போதைய தமிழக அரசு கடைசி வரை போராடக்கூடிய வகையில் பதில் வரைவுத்திட்டங்களை சுப்ரீம் கோர்ட்டில் வழங்கி போராடி வெற்றி பெறுவோம். தமிழக மக்களின் ஜீவாதார உரிமையை காப்பாற்றும் கடமையிலும் பொறுப்பிலும் தவறாது செயல்படுவோம்.

    ஒரு மாநிலத்திற்கு சம்பந்தப்பட்ட வழக்கு என்றால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கடமை அந்த மாநில அரசுக்கு உண்டு. காவிரி நதி நீர்பங்கீடு வழக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் சம்பந்தப்பட்டது. அதாவது தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் இந்த வழக்கில் இறுதியாக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு.

    ஆகவே இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் விமர்சனம் குறித்து கவலை இல்லை. எங்களது வெற்றி முயற்சிக்கு அவர்கள் ஆதரவு தந்தால், எதிர்க்கட்சி என்ற பணியை அவர்கள் செய்ய முடியாமல் போய் விடும் என்பதால் விமர்சனம் செய்கிறார்கள்.

    திவாகரன், தினகரன் பிரச்சினை என்பது அவர்கள் குடும்ப பிரச்சினை. அந்த பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக பதில் கூற ஒன்றுமில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.  #Pannerselvam #Cavery

    ×