search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old man death"

    பாலக்கோடு அருகே ஒற்றை யானை தாக்கியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரிகுட்டனூர் கிராமத்தை சேர்ந்த பொன்னூகான் (வயது50) என்பவர் வனப்பகுதியில் மாடுகளை மேய்த்து வருபவர். இவர் வழக்கம்போல் காலை வேளையில் 50-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளை மொரப்பூர் வனசரகத்திற்க்கு உட்பட்ட சீங்காடு வனப்பகுதியில் மாடுகளை மேச்சலுக்கு விட்டுள்ளார். மாலை நேரத்தில் மாடுகளை ஓட்டிக்கொண்டு வீடு திரும்பும்போது எதிர்பாரத விதமாக அவ்வழியாக தண்ணீர் தேடிவந்து ஒற்றை யானை பொன்னூகானை தாக்கி உள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    இதனை பார்த்த அப்பகுதி ஆடு, மாடு மற்றும் விறகு வெட்டுபவர்கள் பாலக்கோடு வனத்துறை மற்றும் மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பிரேதத்தை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தண்ணீர் தேடிவரும் யானைகளால் தொடர்ந்து அசம்பாவிதங்களை தடுக்க பொதுமக்கள் வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துசெல்ல வனத்துறை தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    போச்சம்பள்ளி அருகே நின்று கொண்டிருந்த முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவியை அடுத்த வேடர்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சீனன் (வயது62). இவரது மனைவி சாவித்ரி (57). இவர்களுக்கு 2 மகள்களும், 4 மகன்களும் உள்ளனர்.

    போச்சம்பள்ளியை அடுத்த வேடர்பட்டபசுல் கிராமத்தில் சீனன் தனது மகள்களை திருமணம் செய்து கொடுத்துள்ளார். அதனால் மகள்கள் வீட்டிற்கு நேற்று முன்தினம் சீனன் சென்றார். அப்போது அங்குள்ள ரேசன் கடையின் முன்பு நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. 

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் 65 வயது முதியவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    திருச்சி:

    திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சுமார் 65 வயது முதியவர் ஒருவர் உடல்நிலை சரியில்லாததால், உறவினர்கள் யாருமின்றி தனியாக வந்து சிகிச்சையில் சேர்ந்தார். 4-ந் தேதி முதல் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    அவரின் அனுமதி பதிவேட்டில் அவர், திருச்சி சுப்பிரமணியபுரம் ரெங்காநகரை சேர்ந்த சூசைராஜ் (வயது 65) என பதிவு செய்யப்பட்டிருந்தது. இது குறித்து அரசு ஆஸ்பத்திரி போலீசார் கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த முகவரி தவறானது என்று தெரியவந்தது. இறந்த முதியவர் வெள்ளை நிற வேஷ்டி மட்டுமே அணிந்துள்ளார். அவர் குறித்த வேறு எந்த தகவலும் தெரியவில்லை. 

    இது குறித்து திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீசார் மற்றும் கே.கே.நகர் போலீசார், இறந்த நபரின் புகைப்படத்தை வைத்து அவர் யார்? எதற்காக தவறான முகவரி அளித்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி அருகே நடந்து சென்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே உள்ள பையனப்பள்ளி பகுதியை சேர்ந்த விவசாயி ராமசாமி (வயது 65), இவர் நேற்று கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பையனப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த நேரம் அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. 

    இதில் ராமசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சர்தார்உசேன் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கோவையில் சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்ட புகாரில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட முதியவர் உயிரிழந்தார்.

    கோவை:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் சுப்பன் (வயது 77). இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் முதியவர் சுப்பனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    சிறையில் இருந்த சுப்பனுக்கு கடந்த 4-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு கைதிகளுக்கான சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த அவர் இரவு இறந்து விட்டார்.

    மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    திருவொற்றியூர்:

    சென்னை எண்ணூர் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது60). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவரது மகள் லட்சுமிக்கு திருமணமாகி நேகாஸ்ரீ (2½) என்ற குழந்தை உள்ளது. இந்த குழந்தை விம்கோ நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிரிகேஜி படித்து வந்தது.

    இன்று காலை குழந்தையை பள்ளியில் விடுவதற்காக கிருஷ்ணமூர்த்தி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். எண்ணூர் விரைவு சாலை சக்திநகர் பகுதியில் சென்றபோது எதிரே திருவொற்றியூரில் இருந்து மாதவரம் நோக்கி கண்டெய்னர் லாரி வேகமாக வந்தது.

    திடீரென்று லாரி தறிகெட்டு ஓடி சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு மறுபுறம் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் கிருஷ்ண மூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த குழந்தை நேகா ஸ்ரீயை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த விபத்து நடந்ததும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். டிரைவரை பிடித்து வைத்துக் கொண்டு அப்பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து அங்கு போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்தனர். பின்னர் டிரைவரை பொதுமக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர்.

    இது தொடர்பாக மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்டெய்னர் லாரி டிரைவரை கைது செய்தனர். அவரது பெயர் காளிதாஸ் (40), திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்தவர். அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

    போலீசாரை கண்டித்து, இறந்த முதியவரின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
    தோகைமலை:

    கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கல்லடை ஊராட்சி க.புதூரை சேர்ந்தவர் முருகன்(வயது 66). இவர் கடந்த 11-ந்தேதி கடவூர் தரகம்பட்டி அருகே தென்னிலை ஊராட்சி பொசியம்பட்டியில் தனது அண்ணன் சீரங்கன் இறந்ததையொட்டி, 3-ம் நாள் துக்க காரியத்திற்கு சென்றார். அங்கு துக்க காரியம் நடந்தபோது, அதே ஊரை சேர்ந்த தங்கராசு என்பவர் முருகனிடம் தகராறு செய்துள்ளார். அப்போது தனது அண்ணன் இறந்த துக்க காரியத்தில் தகராறு செய்ய வேண்டாம் என்று முருகன், தங்கராசுவிடம் கூறினார். அங்கிருந்த முருகன் உறவினர்களும் தகராறு செய்த தங்கராசுவை கண்டித்ததாக கூறப்படுகிறது.

    இதில் ஆத்திரம் அடைந்த தங்கராசு தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை முருகன் உள்பட 5 பேரின் கண்களின் மீது தூவியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு கைகலப்பு ஏற்பட்டது. இது குறித்து முருகன் சிந்தாமணிபட்டியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரனை நடத்தினர்.

    மேலும் தங்கராசுவும், தன்னை முருகன் தரப்பினர் அடித்ததாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் முருகன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த உமாபதி, குமார், கணேசன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் மிளகாய் பொடி பட்டதில் முருகனின் கண்பார்வை குறைந்ததால், மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது சிந்தாமணிபட்டி போலீசார், முருகன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருவது அவருக்கு தெரியவந்தது.

    இதனால் தான் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் ஒருதலை பட்சமாக தங்கராசு அளித்த புகார் மீது வழக்கு பதிவு செய்து தன்னையும், தனது தரப்பினரையும் போலீசார் தேடிவருகிறார்களே என்று மனவேதனையில் அரசு மருத்துவமனையில் இருந்த முருகன் நேற்று முன்தினம் இரவு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். பின்னர் க.புதூர் வீட்டிற்கு நேற்று முருகன் உடலை கொண்டு வந்த உறவினர்கள், இது குறித்து சிந்தாமணிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் அங்கிருந்த போலீசார் புகார் மனுவை வாங்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முருகனின் மனைவி லட்சுமி மற்றும் உறவினர்கள் போலீசாரை கண்டித்து, தோகைமலை திருச்சி-மெயின் ரோட்டில் உள்ள க.புதூர் பஸ் நிறுத்தம் முன்பு முருகன் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முருகனின் உறவினர்கள், தங்கராசு உள்பட அவரது தரப்பை சேர்ந்தவர்களை கைது செய்ய வேண்டும். முருகன் அளித்த புகார் மனு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆவேசமாக கூறினர். இதையடுத்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கப் படும் என்று உறுதியளித்ததால் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆனால் உடனடியாக நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் மாலை முருகன் உடலை திருச்சி-தோகைமலை மெயின் ரோட்டில் க.புதூர் பஸ் நிறுத்தம் முன்பு சாலையில் வைத்து மீண்டும் மறியல் போராட்டம் செய்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார் தலைமையில் தோகைமலை இன்ஸ்பெக்டர் முகமதுஇத்ரீஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், மறியல் கைவிடப்பட்டது. இதையடுத்து முருகனின் உடலை உறவினர்கள் எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    சங்கரன்கோவில் நடந்து சென்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் புதுமனை 4-வது தெரு பகுதியை சேர்ந்தவர் சங்கரப்பன் (வயது 55). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள காமாட்சியம்மன் கோவில் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சங்கரப்பன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. 

    இதில் படுகாயமடைந்து மயங்கிய நிலையில் கிடந்தவரை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு  ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

    சம்பவம் பற்றி சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த முதியவர் உயிரிழந்ததையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. #Swineflu
    மதுரை:

    ராமாதபுரம் மாவட்டம், சக்கரக்கோட்டை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தீனுல்லா (வயது 68). இவருக்கு கடந்த 15 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை.

    இந்த நிலையில் தீனுல்லாவை மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து தீனுல்லா கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி தீனுல்லா பரிதாபமாக இறந்தார். இதனால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலுக்கு 49 பேரும், பன்றி காய்ச்சலுக்கு 5 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். #Swineflu

    திருக்காட்டுப்பள்ளி அருகே லாரி கவிழ்ந்து வீட்டு முன்பு படுத்து தூங்கிய முதியவர் பலியான சம்பவம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பவளமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். விவசாயி.

    இந்நிலையில் இளங்கோவன் வீட்டுக்கு அவரது மாமனார் நடராஜன் (வயது 70) வந்திருந்தார். நேற்று இரவு வீட்டு முன்பு கட்டிலில் நடராஜன் தூங்கினார்.

    இன்று அதிகாலை வீட்டு முன்புள்ள சாலை வழியாக ஜல்லிகற்களை ஏற்றிய ஒரு லாரி சென்றது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தாறுமாறாக ஓடி, இளங்கோவன் வீட்டு முன்பு கவிழ்ந்தது. இதில் கட்டிலில் தூங்கி கொண்டிருந்த நடராஜன் மீது ஜல்லிக்கற்கள் கொட்டியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்தில் லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    இந்த விபத்து குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகிருஷ்ணா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தனார்.

    ஜல்லி லாரி கவிழ்ந்து வீட்டு முன்பு படுத்து தூங்கிய முதியவர் பலியான சம்பவம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருவாரூர் அருகே இருவருக்குள் ஏற்பட்ட தகராறை தடுக்க முயன்ற முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் அருகே உள்ள காட்டூரை சேர்ந்த ராமையன் என்பவர் மகன் இளையராஜா. (வயது 35). இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆசைதம்பி (40) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ள முயன்றனர்.

    இதனை கண்ட ராமையன் அவர்களை சமாதானம் செய்ய முயன்றார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுபற்றி காட்டூர் கிராம நிர்வாக அலுவலர் உமாமகேஸ்வரி திருவாரூர் தாலுக்கா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    செல்போனில் பேசியதை தட்டிக் கேட்ட முதியவரை கீழே தள்ளியதில் மரணமடைந்தார். இது குறித்து வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே மணல்மேடு போலீஸ் சரகம் கிழாய் கிராமம் பாரதி நகரை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 60). விவசாய கூலி. அதே பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் மணிமாறன் (வயது 28). விவசாய கூலி. சம்பவதன்று அப்பகுதி பஸ் ஸ்டாப்பில் குமாரசாமி படுத்திருந்த போது அங்கு நின்று கொண்டு மணிமாறன் செல்போனில் சத்தமாக பேசி கொண்டு இருந்தாராம்.

    இதனால் அவரை குமாரசாமி கண்டித்ததால் ஆத்திரமடைந்த மணிமாறன் அவரை பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்கு வந்து இது குறித்து கூறியுள்ளார். அவர்கள் சென்று பார்த்தபோது குமாரசாமி மயங்கி கிடந்ததால் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் மணல்மேடு இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குபதிவு செய்து மணிமாறனை கைது செய்தார். #tamilnews
    ×