search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "novak djokovic"

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது.
    • இப்போட்டி அடுத்த மாதம் 11ம் தேதி நிறைவடைகிறது.

    நியூயார்க்:

    செர்பியா நாட்டைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் (35). உலக தரவரிசையில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச், வருகிற திங்கட்கிழமை தொடங்க இருக்கிற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி தொடரில் பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதன்படி, வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜோகோவிச் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், அமெரிக்க ஓபனில் விளையாட இந்த முறை என்னால் நியூயார்க்குக்கு பயணிக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

    • நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 7வது முறையாக கோப்பை வென்றார்.
    • இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசை ஜோகோவிச் தோற்கடித்தார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடைபெற்றது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் ஆகியோர் மோதினர்.

    இதில் முதல் செட்டை கிர்கியோஸ் 6-4 என கைப்பற்றினார். இதனால் சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் அதிரடியாக ஆடி 6-3, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் அடுத்த 3 சுற்றுகளை வென்றார். இதன்மூலம் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இதையடுத்து, விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை 7வது முறையாக நோவக் ஜோகோவிச் கைப்பற்றினார்.

    • நடால் 22 பட்டத்துடன் முதல் இடத்திலும், பெடரர், ஜோகோவிச் ஆகியோர் தலா 20 பட்டத்துடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
    • விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஒரே ஒரு முறைதான் ஜோகோவிச் தோற்றுள்ளார்.

    லண்டன்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த அரை இறுதியில் நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பி யனுமான ஜோகோவிச் (செர்பியா) அரை இறுதியில் 9-வது வரிசையில் உள்ள கேமரூன் நோரியை (இங்கிலாந்து) எதிர் கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 2-6, 6-3, 6-2, 6-4 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு 8-வது முறையாக முன்னேறினார். ஒட்டு மொத்தமாக கிராண்ட் சிலாம் போட்டியில் 32-வது தடவையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

    இதன் மூலம் அவர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) சாதனையை முறியடித்தார்.

    ஜோகோவிச் நாளை மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் நிக் கார்கியோசை (ஆஸ்திரேலியா) எதிர் கொள்கிறார். அவரை வீழ்த்தி 21-வது கிராண்ட் சிலாம் பட்டம் வெல்லும் வேட்கையில் உள்ளார்.

    நடால் 22 பட்டத்துடன் முதல் இடத்திலும், பெடரர், ஜோகோவிச் ஆகியோர் தலா 20 பட்டத்துடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

    நாளை வெற்றி பெற்றால் ஜோகோவிச் முன்னேறி பெடரரை பின்னுக்கு தள்ளி விடுவார்.

    ஜோகோவிச் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஒரே ஒரு முறைதான் (2013) தோற்றுள்ளார்.

    • முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
    • இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசுடன் ஜோகோவிச் மோதுகிறார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இங்கிலாந்தின் கேமரூன் நூரியுடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை கேமரூன் நுரி 6-2 என கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் அதிரடியாக ஆடி 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் அடுத்த 3 சுற்றுகளை வென்றார். இதன்மூலம் ஜோகோவிச் 8-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் உலகின் 2-ம் நிலை வீரரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால், ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசுடன் மோத இருந்தார். ஆனால், வயிற்று தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக நடால் அரையிறுதியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    இதையடுத்து, விம்பிள்டன் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச், நிக் கிர்கியோஸ் ஆகியோர் மோதுகின்றனர்.

    • உலகின் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
    • இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் காலிறுதி சுற்றில் ஜோகோவிச்சிடம் தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் ஜானிக் சின்னருடன் மோதினார்.

    இதில் முதல் இரு செட்களை 7-5, 6-2 என சின்னர் கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் அதிரடியாக ஆடி 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் அடுத்த 3 சுற்றுகளை வென்றார். இதன்மூலம் ஜோகோவிச் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதி சுற்றில் பெல்ஜியத்தின் டேவிட் கோபின், அமெரிக்காவின் கேமரூன் நூரியுடன் மோதினார். இதில் இருவரும் தலா 2 செட்களைக் கைப்பற்றினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் இறுதி செட்டை நூரி கைப்பற்றினார். இதன்மூலம் 3-6, 7-5, 2-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்ற நூரி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    அரையிறுதியில் நூரி உலகின் நம்பர் 1 வீரரான ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார்.

    • உலகின் முன்னணி வீரரான ஜோகோவிச் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
    • ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 4வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நெதர்லாந்தின் ரிஜ்தோவெனுடன் மோதினார். இதில் 6-2, 4-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ஜோகோவிச் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு சுற்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார். இதில் 6-1, 6-4, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் சின்னர்.

    நாளை நடைபெறும் காலிறுதியில் ஜோகோவிச், சின்னரை எதிர்கொள்கிறார்.

    • நார்வே, இங்கிலாந்து வீரர்களும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில், துனிசியா வீராங்கனை வெற்றி பெற்றுள்ளார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில், மிக உயரியதாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நேற்று தொடங்கின.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில், தென்கொரியாவின் சூன்வோகிவோனை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் இளம் வீரர் கார்லோஸ் அல்கராஸ், ஜெர்மனியின் ஜான் லெனார்ட் ஸ்ட்ரஃப்பை 4-6, 7-5, 4-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதேபோல் கேஸ்பர் ரூட் (நார்வே), கேமரூன் நோரி (இங்கிலாந்து) உள்ளிட்டோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜாபியர், சுவீடனின் மிர்ஜாம் பிஜோர்க்லுன்டை 6-1, 6-3 என்ற நேர்செட்டில் வீழ்த்தினார்.

    • நோவக் ஜோகோவிச்சை பின்னுக்குத் தள்ளி மெத்வதேவ் முதலிடம் பிடித்தார்.
    • டென்னிஸ் தரவரிசையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்தவர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் என்பது குறிப்பிடத்தக்கது.

    லண்டன்:

    சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலை ஏ.டி.பி. இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 7,950 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறினார்.

    ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7,075 புள்ளிகளுடன் 2-ம் இடத்துக்கு முன்னேறினார்.

    தொடர்ந்து பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6,770 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.

    பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்ற ஸ்பெயினின் ரபேல் நடால் 4-வது இடம் பிடித்துள்ளார்.

    நான்காவது சுற்றில் அர்ஜென்டினா வீரர் டியாகோ ஸ்வாட்ஸ்மேன் தோல்வி அடைந்தார்.
    பாரீஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. 

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற போட்டியில்,  நடப்பு சாம்பியனும், 'நம்பர் ஒன்' வீரருமான செர்பியோவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச், அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வாட்ஸ்மேனை எதிர்கொண்டார். 

    இந்த போட்டியில் ஜோகோவிச் 6-1, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்வாட்ஸ்மேனை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், செர்பியாவின் ஜோகோவிச் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 2-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

    இதில், 11 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் ஜெர்மனியின் தகுதி சுற்று வீரர் யான்னிக் ஹன்ப்மனை எதிர்கொண்டார். இதில் 6-2, 6-1, 6-3 என்ற நேர்செட்டில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.



    மற்றொரு ஆட்டத்தில், நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் போலந்து வீரர் ஹூபெர்ட் ஹூர்காச்சை எதிர்கொண்டார். இதில், 6-4, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் ஹூர்காச்சை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 
    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபெல் நடாலும், பெண்கள் பிரிவில் கரோலினா பிளிஸ்கோவா சாம்பியன் பட்டம் பெற்றனர்.
    ரோம்:

    பிரெஞ்ச் ஓபனுக்கு முன்னோட்டமாக இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்தது. களிமண் தரை போட்டியான இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), 2-ம் நிலை வீரர் ரபெல் நடாலும் (ஸ்பெயின்) பலப்பரீட்சை நடத்தினர். விறுவிறுப்பான இந்த மோதலில் நடால் 6-0, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி 9-வது முறையாக இந்த பட்டத்தை வசப்படுத்தினார். இந்த ஆட்டம் 2 மணி 25 நிமிடங்கள் நீடித்தது. ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய மாஸ்டர்ஸ் பட்டத்தை நடால் வெல்வது இது 34-வது முறையாகும். வெற்றி பெற்ற நடாலுக்கு ரூ.7½ கோடியும், 2-வது இடம் பிடித்த ஜோகோவிச்சுக்கு ரூ.3¾ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.



    பெண்கள் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜோஹன்னா கோன்டாவை (இங்கிலாந்து) தோற்கடித்து வாகை சூடினார். 1978-ம் ஆண்டுக்கு பிறகு செக்குடியரசு வீராங்கனை ஒருவர் இந்த பட்டத்தை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும். மொத்தத்தில் பிளிஸ்கோவா கைப்பற்றிய 13-வது சர்வதேச பட்டமாக இது அமைந்தது.
    மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை, ஸ்பெயின் வீரர் பாவ்டிஸ்டா அகுட் 6-1, 5-7, 3-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெளியேறினார். #MiamiOpen #NovakDjokovic #BautistaAgut
    மியாமி:

    மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை, ஸ்பெயின் வீரர் பாவ்டிஸ்டா அகுட் 6-1, 5-7, 3-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெளியேறினார். #MiamiOpen #NovakDjokovic #BautistaAgut

    மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவக் ஜோகோவிச் (செர்பியா), ஸ்பெயின் வீரர் பாவ்டிஸ்டா அகுட்டை சந்தித்தார்.



    2 மணி 29 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான ஜோகோவிச் 6-1, 5-7, 3-6 என்ற செட் கணக்கில் பாவ்டிஸ்டா அகுட்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இந்த சீசனில் பாவ்டிஸ்டா அகுட், ஜோகோவிச்சை சாய்த்து இருப்பது இது 2-வது முறையாகும்.

    மற்றொரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் 7-5, 7-5 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சனை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 1 மணி 51 நிமிடம் நடந்தது. இன்னொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜான் இஸ்னர் (அமெரிக்கா) 7-6 (7-5), 7-6 (7-3) என்ற நேர்செட்டில் இங்கிலாந்து வீரர் கைல் எட்முன்டை சாய்த்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். கால்இறுதியில் ஜான் இஸ்னர், பாவ்டிஸ்டா அகுட்டுடன் மோதுகிறார்.

    மற்ற ஆட்டங்களில் டெனிஸ் ஷபோவாலோவ் (கனடா), போர்னா கோரிச் (குரோஷியா), பிரான்சஸ் டியாபோ (அமெரிக்கா), பெலிக்ஸ் அகெர் (கனடா) ஆகியோர் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள ஆஷ்லிக் பார்டி (ஆஸ்திரேலியா) 2 மணி 30 நிமிட போராட்டத்துக்கு பிறகு 7-6 (8-6), 3-6, 6-2 என்ற செட் கணக்கில் 2-ம் நிலை வீராங்கனையான கிவிடோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். ஆஷ்லிக் பார்டி, கிவிடோவாவை தோற்கடித்தது இதுவே முதல்முறையாகும்.

    மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் எஸ்தோனியா வீராங்கனை அனெட் கோன்டாவெய்ட் 3-6, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் ஹிசை சு வெய்யை விரட்டியடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தார்.
    ×