search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    விம்பிள்டன் டென்னிஸ் - ஜோகோவிச், நூரி அரையிறுதிக்கு முன்னேறினர்
    X

    ஜோகோவிச்

    விம்பிள்டன் டென்னிஸ் - ஜோகோவிச், நூரி அரையிறுதிக்கு முன்னேறினர்

    • உலகின் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
    • இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் காலிறுதி சுற்றில் ஜோகோவிச்சிடம் தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் ஜானிக் சின்னருடன் மோதினார்.

    இதில் முதல் இரு செட்களை 7-5, 6-2 என சின்னர் கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் அதிரடியாக ஆடி 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் அடுத்த 3 சுற்றுகளை வென்றார். இதன்மூலம் ஜோகோவிச் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதி சுற்றில் பெல்ஜியத்தின் டேவிட் கோபின், அமெரிக்காவின் கேமரூன் நூரியுடன் மோதினார். இதில் இருவரும் தலா 2 செட்களைக் கைப்பற்றினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் இறுதி செட்டை நூரி கைப்பற்றினார். இதன்மூலம் 3-6, 7-5, 2-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்ற நூரி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    அரையிறுதியில் நூரி உலகின் நம்பர் 1 வீரரான ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார்.

    Next Story
    ×