search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nilgiris"

    • கோத்தகிரி ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் ராஜேஷ்சந்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
    • டானிங்டனில் இருந்து புறப்பட்ட ஊர்வலம்காமராஜர் சதுக்கத்தை அடைந்தது

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, எருமாடு ஆகிய பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

    இதன்ஒருபகுதியாக கோத்தகிரி டானிங்டன் பகுதியில் இருந்து புறப்பட்ட அணிவகுப்பு ஊர்வலத்தை கோத்தகிரி ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் ராஜேஷ் சந்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    நிர்வாகிகள் கணேசன், கன்னாவரை ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டானிங்டனில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், காமராஜர் சதுக்கம், மார்கெட்திடல், பஸ்நிலையம், தாலுகா அலுவலக சாலை, ராம்சந்த் சதுக்கம் வழியாக காமராஜர் சதுக்கத்தை அடைந்தது. தொடர்ந்து அங்குள்ள தனியார் அரங்கில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

    ஆர்.எஸ்.எஸ் பேண்டு வாத்தியத்துடன் சீருடை அணிந்து சென்ற அணிவகுப்பு ஊர்வலத்தில் பெண்கள் உள்பட சுமார் 250 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    ஊர்வலத்தில் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் உருவப்படம் மற்றும் பாரதா மாதா புகைப்படம் ஆகியவை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.

    முன்னதாக ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் செல்லும் பாதையை மாவட்ட எஸ்.பி. சுந்தரவடிவேல் ஆய்வு செய்தார்.

    ஊர்வலம் நடை பெறுவதையொட்டி குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என சுமார் 200 மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • காட்சி முனைக்கு சென்று கிடுகிடு பள்ளத்தாக்கு, நீர்வீழ்ச்சிகளை பார்வையிட்டு மகிழ்ச்சி
    • பகல் நேரத்தில் பனிமூட்டமும் அதிகரித்து இருப்பதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் தற்போது வெண்மையான மேகமூட்டமும். லேசான சாரல் மழையும், இதமான குளிர்ச்சியும் நிலவுகிறது.

    எனவே தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மராட்டிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், குன்னூர் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    குன்னூரில் உள்ள லாம்ஸ்ராக் பகுதியில் உள்ள காட்சி முனைக்கு சென்று கிடுகிடு பள்ளத்தாக்கு, ராட்சத பாறைகள், பெண் உறங்குவது போல அமைந்திருக்கும் மலைகள், நீர்வீழ்ச்சிகளை பார்வையிட்டு புகைப்படம் எடுத்து கொள்கின்றனர்.

    தொடர்ந்து அங்கு நிலவும் இதமான தட்பவெப்ப நிலையை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர். குன்னூரில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.

    பகல் நேரத்தில் பனிமூட்டமும் அதிகரித்து இருப்பதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மலைப்பாதையில் செல்கின்றன.

    • யானைகளை கையாளும் முறை குறித்து கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் விளக்கம்
    • யானைகள் வழித்தடத்தில் உள்ள தடைகள் குறித்து கல்லூரி பேராசிரியர் பேச்சு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், நாடுகாணி பகுதியில் உள்ள தமிழக வனத்துறைக்கு சொந்தமான ஜீன்பூல் காா்டனில், ஊட்டி அரசு கலைக்கல்லூரி வனஉயிரின உயிரியல்துறை, இந்திய வனஉயிரின அறக்கட்டளை சாா்பில் யானைகள் பாதுகாப்பு கருத்தரங்கு நடைபெற்றது.

    நாடுகாணி வனச்சரக அலுவலா் வீரமணி வரவேற்றாா். கருத்தரங்கில் யானைகள் பாதுகாப்பு, மனிதன்- யானை மோதல், முரண்படும் யானைகளை கையாளும் விதம், களைச்செடிகளால் ஏற்படும் பாதிப்பு, களை மேலாண்மை மற்றும் யானைகளின் வாழ்வியல் முறை போன்ற தலைப்புகளில் கலந்தாய்வு நடைபெற்றன.

    இதன்அடிப்படையில் கூடலூா் வனக் கோட்டத்தில் மனிதன்-யானை மோதலை களைய கருத்துரு வழங்கப்பட்டது. ஊட்டி அரசு கலைக் கல்லூரி வனஉயிரின உயிரியல்துறை தலைவா் ராமகிருஷ்ணன் பேசுகையில், கூடலூா் கோட்டத்தில் 1976-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வனப்பரப்பில் ஏற்பட்டு உள்ள மாற்றம், பாதிப்புகள், யானைகள் வழித்தடத்தில் உள்ள தடைகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தாா்.முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் பேசுகையில், மனிதன்-யானை மோதல் ஏற்படும்போது யானைகளை கையாளும் முறை குறித்தும் விளக்கி கூறினார்.

    தொடர்ந்து வன உயிரின மோதல் குறித்த தெளிவுரை, கருத்து பரிமாற்றமும் நடைபெற்றது.

    • ஒவ்வொரு பூத்கமிட்டியிலும் ஆய்வு செய்து புத்தகத்தில் கையெழுத்திட்டனர்
    • சிறப்பாக செயல்பட்ட ஊட்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுக்கு பாராட்டு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி, மகளிர் குழு இளைஞர்-இளம்பெண்கள் பாசறை ஆகிய பணிகள் நிறைவுபெற்றன.

    தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள் அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினர்.மாவட்ட பூத்கமிட்டி பொறுப்பாளரும், புரட்சித்தலைவிஅம்மா பேரவை மாநில இணை செயலாளருமான பொன்ராஜா தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் முன்னிலை வகித்தார்.தொடர்ந்து அனைத்து ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகி மற்றும் பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஒவ்வொரு பூத்கமிட்டியிலும் பொறுப்பாளர் ஆய்வு செய்து புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

    பின்னர் சிறப்பாக செயல்பட்ட ஊட்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநில எம்.ஜி.ஆர் இளைஞர்அணி பாலநந்தகுமார், மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தேனாடு லட்சுமணன், மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் டி.கே.தேவராஜு, பாசறை மாவட்ட செயலாளர் அக்கீம்பாபு, ஊட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பா.குமார், குந்தா மேற்கு ஒன்றிய செயலாளர் சக்சஸ் சந்தின், பேரூராட்சி செயலாளர் கேத்தி கண்ணபிரான், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் எப்பநாடு கண்ணன், மீனவரணி மாவட்ட செயலாளர் விஷாந்த் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • பிரதான புல்தரை மைதானத்தில் குடும்பத்தினருடன் நடனமாடி மகிழ்கின்றனர்
    • ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஒரே நாளில், 18 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தின் முக்கிய வாழ்வாதாரமே சுற்றுலாதான். இதனை நம்பி அங்கு லட்சக்கணக்கானோர் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இங்கு கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலா வணிகம் களைகட்டி வருகின்றது.

    ஊட்டியில் ஆண்டுக்கு இரண்டு சீசன் என்பது போய் தற்போது வாரஇறுதி. நாட்கள் எல்லாம் சீசன் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

    அந்தளவுக்கு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வார இறுதி நாட்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    அதிலும் குறிப்பாக கேரளா, கர்நாடகா சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஊட்டிக்கு வந்திருந்து அங்கு நிலவும் குளுகுளு சீசனை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    பின்னர் அவர்கள் அங்குள்ள பிரதான புல்தரை மைதானத்தில் குடும்பத்தினருடன் நடனமாடி மகிழ்கின்றனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் விடுமுறை நாளான சனிக்கிழமை ஒரே நாளில், 18 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    மேலும் ஊட்டி படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா காட்சிமுனை, ஷூட்டிங் மட்டம் உள்ளிட்ட பிற சுற்றுலா தலங்களிலும் கணிசமான அளவில் சுற்றுலா பயணிகளை பார்க்க முடிந்தது.

    நீலகிரி மாவட்டத்துக்கு நவம்பர் மாத குளிரிலும் சுற்றுலாபயணிகள் படை யெடுத்து வருவதால், அங்கு உள்ள வியாபாரிகள் மற்றும் தொழில்முனைவோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • அந்த பகுதி கவுன்சிலரும், நகர தி.மு.க செயலாளருமான ராமசாமி முயற்சிக்கு வெற்றி
    • பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் பணிகள் நடந்து வருகிறது

    அருவங்காடு,

    குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட மவுண்ட் பிளசன்ட் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள கூட்டுறவு பண்டகசாலைக்கு சொந்த கட்டிடம் இல்லை. இதுகுறித்து பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதுகுறித்து அந்த பகுதி கவுன்சிலரும், நகர தி.மு.க செயலாளருமான ராமசாமி, நீலகிரி எம்பி ராசாவிடம் வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து மவுண்ட்பிளசன்ட் பகுதியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் கூட்டுறவு பண்டகசாலை கட்டும் பணி நடந்து வருகிறது. இதனை அந்த பகுதி கவுன்சிலர் ராமசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • வாசிப்பின் முக்கியத்தும், நூலகத்தின் பயன்பாடு பற்றி நிர்வாகிகள் பேச்சு
    • வெடிமருந்து தொழிற்சாலை மேல் நிலைப்பள்ளி ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் பங்கேற்பு

    அருவங்காடு,

    அருவங்காடு கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் 56-வது தேசிய நூலக வார விழா, புத்தக கண்காட்சியுடன் துவங்கியது.

    ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அமல்ராஜ் முதல் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசுகையில், வாசிப்பின் முக்கியத்தும், நூலகத்தின் பயன்பாடு பற்றி எடுத்துரைத்தார்.நிகழ்ச்சியில் டெம்ஸ் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் நந்தகுமார், சுந்தர்ராஜ் மெட்டில்டா , வெடிமருந்து தொழிற்சாலை மேல் நிலைப்பள்ளி ஆசிரியைகள் புனிதா, வித்யாசினி, நியூசெஞ்சுரி புக்ஹவுஸ் மேலாளர் ரங்கராஜன் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் ஆகியோர் பங்கேற்றனர். நூலகர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார். 

    • கேழ்வரகு அடை, பாசிபருப்பு பாயாசம், சிவப்பு அரிசிபுட்டு செய்து அசத்தல்
    • பர்லியார் பஞ்சாயத்துக்கு முதல் பரிசு

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில், குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் வட்டார அளவிலான மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு இடையே பராம்பரிய சிறுதானிய உணவு தயாரிப்பு போட்டி நடைபெற்றது. திட்டஇயக்குனர் முத்து தலைமை தாங்கினார்.

    பராம்பரிய சிறுதானிய உணவு தயாரிப்பு போட்டியில் 6-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலந்து கொண்டு கேழ்வரகு அடை, பாசிபருப்பு பாயாசம், சிவப்பு அரிசிபுட்டு, கேழ்வரகு இடியாப்பம், அவல் வடை, எள்ளு சிம்லி, கம்பு குழிபணியாரம், கேழ்வரகு அல்வா, சத்துமாவு கேக், பிரண்டை துவையல், கொள்ளு அவல் கஞ்சி, உளுந்து பனைவெல்லம் கஞ்சி, எள் உருண்டை ஆகிய பல வகை உணவுகளை தயாரித்தனர்.

    இதில் சுவை மிகுந்த பாரம்பரிய உணவுகள் தயாரித்த மகளிர் குழுவினருக்கு ஊராட்சி ஒன்றிய தலைவி சுனிதா நேரு, வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரமங்கலம் ஆகியோர் பரிசுகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் பர்லியார் பஞ்சாயத்து முதல் பரிசும், மேலூர் பஞ்சாயத்து 2-வது பரிசும், உபதலை பஞ்சாயத்து 3-வது பரிசும் பெற்றது. அவர்கள ஊட்டியில் வருகிற 21-ந்தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    • ஊட்டி, சி.எஸ்.ஐ., சி.எம்.எம். மேல்நிலைப்பள்ளியில் 28, 29-ந்தேதிகளில் நடக்கிறது
    • 24-ந்தேதிக்குள் விண்ணப்பங்களை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டுகோள்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க 2023-2024-ஆம் ஆண்டில் நீலகிரி மாவட்டத்தில் 28.11.2023 அன்று அண்ணல் காந்தியடிகள் மற்றும் 29.11.2023 அன்று ஜவகர்லால் நேரு ஆகியோர்களின் பிறந்த நாளையொட்டி மாவட்ட த்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் ஊட்டி, சி.எஸ்.ஐ., சி.எம்.எம். மேல்நிலைப்பள்ளியில் பகல் 10 மணிக்கு நடத்தபெற உள்ளன.

    இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பெற உள்ளன.

    அத்துடன் பள்ளி மாணவர்களுக்கென நடத்த பெறும் பேச்சு போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களில் சிறப்புடன் திறமையை வெளிப்படுத்தும் அரசு பள்ளி மாணவர்கள் இருவரை மட்டும் தெரிவு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்க பெற உள்ளன.

    காந்தியடிகள் பிறந்தநாள் பேச்சு போட்டிக்கான தலைப்புகள் 1. காந்தியடி களின் வாழ்க்கை வரலாறு 2. தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் 3. வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள், ஜவகர் லால் நேரு பிறந்த நாள் பேச்சு போட்டிக்கான தலைப்புகள்: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் 1. ஆசிய ஜோதி 2. மனிதருள் மாணிக்கம் போட்டி களுக்கான தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை போட்டி நடைபெறும் நேரத்தில் மாணவர்கள் குலுக்கல் சீட்டு முறையில் தெரிவு செய்து அந்த தலைப்பில் மட்டுமே பேசுவதற்கு அனு மதிக்க பெறுவர்.

    எனவே தரப்பட்டுள்ள அனைத்து தலைப்புகளிலும் பேசுவதற்கு உரிய தயாரிப்புடன் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.

    மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் உரிய பங்கேற்பு படிவத்தை பூர்த்தி செய்து பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன் ஒப்பமும் பெற்று 24.11.2023-க்குள் ootytamilvalarchi@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்புதல் வேண்டும். பேச்சு போட்டிகளில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 25 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் தொடங்கின
    • சேரங்கோடு உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு

    ஊட்டி,

    கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சேரங்கோடு ஊராட்சி கொளப்பள்ளி பகுதியில் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரெப்கோ வங்கியின் உதவியுடன் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான சமுதாயக்கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை செய்து தொடங்கிவைக்கபட்டது.

    நிகழ்ச்சியில் சேரங்கோடு ஊராட்சி தலைவர், துணை தலைவர், பொதுமக்கள், வியாபார சங்க உறுப்பினர்கள், பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் நீலகிரி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

    • குன்னூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பாஸ்டியர் இன்ஸ்டியூட் நிறுவனத்தில் நேரடி ஆய்வு
    • கோவை பிரஸ் காலனி பகுதியில் மேலும் ஒரு ஆய்வகம் அமைக்க 30 ஏக்கர் நிலம் வாங்க திட்டம்

     அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பாஸ்டியர் இன்ஸ்டியூட் ஆரம்பத்தில் ரேபிஸ் எனும் வெறிநாய்கடிக்கான தடுப்பூசி மற்றும் கக்குவான், ரண ஜன்னி உள்ளிட்ட முத்தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் இடமாக இருந்தது.

    இந்நிலையில் இங்கு மத்திய அரசின் சுகாதார துறையின் கட்டுப்பாட்டில் உலகளாவிய நோய் தடுப்பு திட்டத்தில் முத்தடுப்பு மருந்துகள் தயாரிக்க 137 கோடி ரூபாயில் உலக தர கட்டுமானம் மற்றும் உள் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மத்திய சுகாதார துறை இணை அமைச்சர் பாரதி பர்வீன் பவார் அங்கு ஆய்வு மேற்கொண்டார். அங்கு மருந்துகள் தயாரிக்கப்படும், இடங்களை பார்வையிட்டு ஆய்வக விவரங்களை கேட்டறிந்தார். பின்பு அவர் கூறியதாவது:-

    குன்னூர் பாஸ்டியர் நிறுவனம் 137 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் கோவிட் 19 தடுப்பூசி ஆய்வகமாக செயல்பட்டது. இந்த ஆய்வகம் பல உயிர்காக்கும் மருந்துகளை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வகத்தை பலப்படுத்தும் வகையில் மற்றுமொரு ஆய்வகம் கோவையில் பிரஸ் காலனி பகுதியில் அமைக்க 30 ஏக்கர் நிலத்தை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது இதனால் மேலும் பல அரியவகை உயிர் காக்கும் மருந்துகளை தயாரிக்க முடியும்.

    இப்பணிகளுக்காக பல ஆண்டுகளாக பணிபுரியும் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களின் பணி பாராட்டுதலுக்குரியது. அவர்களை நான் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து குன்னூர் உப்பாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய மந்திரி பாரதி பர்வீன் பவார், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்திற்கான காப்பீடு அட்டைகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில் கடந்த 5 ஆண்டுகளாக தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 27 கோடி பேருக்கு இத்திட்டத்தின் கீழ் காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

    இது மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனை உள்ளிட்ட 27 ஆயிரம் மருத்துவமனைகளிலும் இதனை செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் 53 லட்சம் பேருக்கு இந்த அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார். 

    • முதலில் பேட்டிங் செய்த மசினகுடி யூத் கிளப் அணி 10 ஓவா்களில் 63 ரன்கள் குவித்தது
    • 9.2 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்கள் எடுத்து அசத்தல்

    ஊட்டி,

    ஊட்டி அருகே மசினகுடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது. மாயாா், பொக்காபுரம், ஆச்சக்கரை, பூதநத்தம், செம்ம நத்தம், மாவனல்லா, வாழைத்தோட்டம், சொக்கநல்லி, ஆனைகட்டி, சிறியூா் உள்ளிட்ட பகுதிகளைச் சாா்ந்த 25 அணிகள் கலந்து கொண்டன.

    நாக்அவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளில் அரை இறுதி ஆட்டத்துக்கு மசினகுடி ஸ்டாா் பாய்ஸ் - மாயாா் அணிகளும், மசினகுடி யூத் கிளப் - மசினகுடி புளூ போ்ட்ஸ் அணிகள் தகுதி பெற்று விளையாடின.

    அதில் மாயாா் அணியும் - மசினகுடி யூத் கிளப் அணியும் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்று விளையாடின.முதலில் பேட்டிங் செய்த மசினகுடி யூத் கிளப் ணிஅ நிா்ணயிக்கபட்ட 10 ஓவா்களில் 63 ரன்களை குவித்தது. பின்னா் ஆடிய மாயாா் அணி 9.2 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    முதலிடம் பெற்ற மாயாா் அணிக்கு கோப்பை ரூ.20 ஆயிரம் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த மசினகுடி யூத் கிளப் அணிக்கு ரூ.12,500 ரொக்கமும், கோப்பையும், மூன்றாமிடம் பிடித்த மசினகுடி ஸ்டாா் பாய்ஸ் அணிக்கு ரூ.7500 ரொக்கமும் கோப்பையும் வழங்கப்பட்டன.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு கூடலூா் எம்.எல்.ஏ. பொன். ஜெயசீலன் பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.

    ×