search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அருவங்காடு கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழா
    X

    அருவங்காடு கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழா

    • வாசிப்பின் முக்கியத்தும், நூலகத்தின் பயன்பாடு பற்றி நிர்வாகிகள் பேச்சு
    • வெடிமருந்து தொழிற்சாலை மேல் நிலைப்பள்ளி ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் பங்கேற்பு

    அருவங்காடு,

    அருவங்காடு கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் 56-வது தேசிய நூலக வார விழா, புத்தக கண்காட்சியுடன் துவங்கியது.

    ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அமல்ராஜ் முதல் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசுகையில், வாசிப்பின் முக்கியத்தும், நூலகத்தின் பயன்பாடு பற்றி எடுத்துரைத்தார்.நிகழ்ச்சியில் டெம்ஸ் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் நந்தகுமார், சுந்தர்ராஜ் மெட்டில்டா , வெடிமருந்து தொழிற்சாலை மேல் நிலைப்பள்ளி ஆசிரியைகள் புனிதா, வித்யாசினி, நியூசெஞ்சுரி புக்ஹவுஸ் மேலாளர் ரங்கராஜன் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் ஆகியோர் பங்கேற்றனர். நூலகர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.

    Next Story
    ×