search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nilgiris"

    • சிறுதானிய உணவு திருவிழாவும் நடைபெற்றது
    • 128 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

    அரவேணு, 

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டாரத்துக்கு உட்பட்ட அரக்கோடு, கடினமால் மற்றும் குமரமுடி கிராமத்தில் தேயிலை வாரியம் மற்றும் யூ.என்.சி.எஸ் ஆகியவை சார்பில் பழங்குடியினர் பாரம்பரிய விழா அனுசரிக்கப்பட்டது.

    இதில் தேயிலை வாரிய வளர்ச்சி அலுவலர் உமாமகேஸ்வரி, கோத்தகிரி தாசில்தார் கோமதி, கிராம நிர்வாக அலுவலர்கள் தருமன், ஹேமா மற்றும் யூ.என்.சி.எஸ் அமைப்பினர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடந்த கூட்டத்தில் பழங்குடியினருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    பின்னர் ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு புதிதாக ஆதார் அட்டைவழங்குதல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வழங்குதல் தொடர்பாக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

    இதில் 128 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தொடர்ந்து சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு வகை உணவுப்பொருட்கள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டன. பின்னர் சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • மஞ்சள் நிறத்தில் கொத்து கொத்தாக வசீகரிக்கிறது
    • சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

    அரவேணு, 

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்நாட்டு, வெளிநாட்டு தாவரங்கள் வளர தேவையான காலநிலை நிலவுகிறது. மேலும் இங்கு ஆங்கிலேயர் காலத்தில் நிலச்சரிவை தடுக்கும் வகையில் காட்டு சூரிய காந்தி விதைகள் தூவப்பட்டன.

    இவை தற்போது மண்ணின் உறுதி தன்மையை அதிகரித்து உள்ளன. மேலும் நிலச்சரிவையும் கட்டுப்படுத்தி வருகிறது. கோத்தகிரியில் வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் காட்டு சூரிய காந்தி மலர்கள் பூக்க தொடங்கும். அதன்படி இவை தற்போது கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் வரையிலும், அரவேனு முதல் குஞ்சப்பனை வரையிலும் சாலையோரங்களில் மஞ்சள் நிறத்தில் கொத்து கொத்தாக பூத்துக்குலுங்குகின்றன.

    வாசம் இல்லாத மலராக இருந்தபோதிலுலும் அவை தற்போது காண்போரின் கண்களுக்கு குளிர்ச்சி தரும் வகையில் மலர்ந்து நிற்கின்றன. எனவே அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் காட்டு சூரியகாந்தி மலர்கள் பூத்துக்குலுங்குவதை ரசிப்பதுடன், புகைப்படம் எடுத்தும் மகிழ்ச்சியை பரிமாறி வருகின்றனர்.

    • நீலகிரி மாவட்ட தி.மு.க ஆலோசனை கூட்டம், அவைதலைவர் போஜன் தலைமையில் நடைபெற்றது
    • டேன்டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்-ஆ.ராசா பேச்சு

    ஊட்டி, 

    நீலகிரி மாவட்ட தி.மு.க ஆலோசனை கூட்டம், மாவட்ட அவைதலைவர் போஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிகுமார், லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர்அலி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கழக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ.இராசா கலந்துகொண்டு பேசினார். பின்னர் நடந்த கூட்டத்தில் டேன்டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ், திருத்தப்பட்ட தினசம்பளம் 438 ரூபாய் அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆ.ராசா எம்.பி.க்கு பாராட்டு தெரிவிப்பது,

    கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை தொடர்ந்து சிறப்புடன் நடத்துவது, எம்.பி தேர்தலில் கழக வெற்றிக்கு பாடுபடுவது, சேலத்தில் டிசம்பர் 17-ந்தேதி நடக்க உள்ள தி.மு.க இளைஞரணியின் 2-வது மாநில உரிமை மாநாட்டில் திரளாக கலந்துகொள்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் நகர செயலாளர்கள் ஜார்ஜ், ராமசாமி, இளஞ்செழியன், ஒன்றிய செயலாளர்கள் லியாகத் அலி, பரமசிவன், காமராஜ், லாரன்ஸ், நெல்லை கண்ணன், பிரேம்குமார், பீமன், சுஜேஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, சதக்கத்துல்லா, பில்லன், தொரை, ஷீலாகேத்ரின்,

    பேரூர் கழக செயலாளர்கள் பிரகாஷ்குமார், உதயகுமார், சதீஷ்குமார், நடராஜன், கண்டோன்மென்ட் நகரிய செயலாளர் மார்டின், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் இமயம் சசிகுமார், கோமதி, விவேகானந்தன், வெங்கடேஷ், காந்தல் ரவி, எல்கில் ரவி,

    மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நவுபுல், பாபு, நாகராஜ், பத்மநாபன், பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் ராம்குமார், சுனிதா, கீர்த்தனா, மாயன், நகராட்சி தலைவர்கள் வாணீஸ்வரி, ஷீலாகேத்ரின், பரிமளா, சிவகாமி,

    பேரூராட்சி தலைவர்கள் கௌரி, கலியமூர்த்தி, சத்தியவாணி, ஹேமாமாலினி, பேபி, ராதா, ஜெயகுமாரி, சித்ராதேவி, வள்ளி, பங்கஜம் உட்பட நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் தலைமை செயற்குழு உறுப்பினர் திராவிடமணி நன்றி கூறினார்.

    • தேவா்சோலை பேரூராட்சி மன்றத் தலைவா் வள்ளி திறந்துவைத்தாா்
    • ரூ.30 லட்சம் செலவில் கான்கிரீட் சாலையாக சீரமைக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூா் அடுத்த தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள செம்பக்கொல்லி சாலை, பல ஆண்டுகளாக மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்தது.

    எனவே அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனா். இந்தநிலையில் செம்பக்கொல்லி சாலை தற்போது ரூ.30 லட்சம் செலவில் கான்கிரீட் சாலையாக சீரமைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான திறப்பு விழா நடந்தது. இதில் தேவா்சோலை பேரூராட்சி மன்றத் தலைவா் வள்ளி கலந்துகொண்டு கான்கிரீட் சாலையை திறந்துவைத்தாா்.

    நிகழ்ச்சியில் துணைத் தலைவா் யூனஸ்பாபு, பேரூராட்சி உறுப்பினா்கள் மாதேவ், நாசா், ஹனீபா, முகாஷ், ஜோஸ், ரசீனா, ஷாஹினா, ஷாதியா, ரம்ஷீனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • தனிப்படை போலீசார் தேடுகிறார்கள்
    • 4 பேரும் நேற்று இரவு சேலாஸ் பகுதியில் சுற்றி திரிந்ததாக தகவல்

    அருவங்காடு,

    குன்னூர் அருகே உள்ள கிளிஞ்செடா எம்.ஜி.ஆர் காலனி சதீஷ் மகன் டேவிட் ஜான் (வயது 15), பாரதி நகர் பாலகிருஷ்ணன் மகன் தர்ஷன் (வயது 15), கிருஷ்ணன் மகன் குணா (வயது 15), முரளி மகன் கதிரேசன் (வயது 15 ) ஆகிய 4 பேரும் சேலாஸ் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அவர்கள் சம்பவத்தன்று பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டு சென்றனர். பின்னர் அவர்கள் மீண்டும் வீடு திரும்ப வில்லை. எனவே அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உறவினர்களின் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.

    இதற்கிடையே மாயமான ஒரு மாணவனின் வீட்டில் இருந்து கைப்பட எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், எங்கள் பெற்றோர்கள் ஒழுங்காக படிக்க வேண்டுமென கூறி அடிக்கடி தொந்தரவு செய்து வருகின்றனர். இதற்காக அவர்கள் எங்களை திட்டுவதுடன் அடிக்கவும் செய்கின்றனர்.

    எனவே எங்களுக்கு வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. இதனால் நாங்கள் 4 பேரும் வீட்டை விட்டு வெளியேறுகிறோம். எங்களைத் தேட வேண்டாம், மேலும் போலீ சாரிடம் கூறி எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் கொலகொம்பை போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து மாயமான 4 மாணவர்களையும் தேடி வருகின்றனர்.

    போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அவர்கள் 4 பேரும் நேற்று இரவு சேலாஸ் பகுதியில் சுற்றி திரிந்ததாகவும், பின்னர் அங்கு வந்த ஒரு பஸ்சில் ஏறி வெளியூர் சென்றதாகவும் தெரியவந்து உள்ளது.

    எனவே தனிப்படை போலீசார் நீலகிரி மட்டு மின்றி கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், ஊட்டி ஆகிய பகுதிகளில் உள்ள போலீசாருடன் ஒருங்கிணைந்து மாயமான 4 மாணவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
    • குழந்தைகளின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    அருவங்காடு,

    அருவங்காடு கார்டைட் பேக்டரி பகுதியில் உள்ள அங்கூர் வித்யாமந்திர் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை சிறப்பிக்கும் வகையில், ப்ரீ-கே.ஜி, எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி படிக்கும் குழந்தைகளுக்கான பேச்சுப்போட்டி, கையெழுத்து போட்டி, உச்சரிப்பு போட்டி, மாறுவேடப் போட்டி மற்றும் ஓவிய போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டன.

    இந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. முன்னதாக தலைவர் ஸ்ரீமதி ராஷிகோயல், துணைத் தலைவர் மெளஸ்மி மல்லிக் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    இதில் குழந்தைகளின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்
    • 10 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை

    ஊட்டி,

    கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கே.பி.டி.எல் பவுண்டேஷன், ஆல் த சில்ரன் ஒயிட் அரோ டிரஸ்ட், நீலகிரி உதவும் கரங்கள் ஆகியவை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம், கரியசோலை அரசு உயர்நிலை பள்ளியில் நடைபெற்றது. ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமை தாங்கினார். நீலகிரி உதவும் கரங்கள் அமைப்பு நிர்வாகி சாரதா முன்னிலை வகித்தனர்.

    கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் முகாமினை துவக்கி வைத்தார்.

    ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ குழுவினர் அந்தோனியமமாள், ராகுல் உள்ளிட்டோர் கண் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். முகாமில் 50க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களில் 10 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    • இந்த ஆண்டு மட்டும் 32 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்
    • 841 மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.59.16 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    ஊட்டி,

    ஊட்டியில் 70-ஆவது கூட்டுறவு வார விழா கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற்றது. சுற்றுலா அமைச்சா் கா.ராமசந்திரன், ஆ.ராசா எம்.பி. ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடர்ந்து 64 குழுக்களைச் சோ்ந்த 964 பயனாளிகளுக்கு ரூ.6.39 கோடி மதிப்பில் கடனு தவிகள் வழங்கப்பட்டன.

    தொடா்ந்து அமைச்சா் கா.ராமசந்திரன் நிகழ்ச்சியில் பேசியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு துறை சாா்பில் 20,838 பயனாளிகளுக்கு ரூ.70.57 கோடி மதிப்பில் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல 3,179 சுய உதவி குழுக்களைச் சோ்ந்த 31,996 பயனாளிகளுக்கு ரூ.89.53 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் 2022-2023-ம் நிதியாண்டில் 28,565 விவசாயிகளுக்கு ரூ.240.74 கோடி பயிா்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது. 2023-2024 நிதியாண்டில் 31.10.2023 வரை மட்டும் 12,072 விவசாயிகளுக்கு ரூ.112 கோடி பயிா்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது.

    இதுதவிர மாற்றுத்திறனா ளிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. உரிய காலத்தில் திருப்பி செலுத்துபவா்க ளுக்கு வட்டி முழுவதும் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் 32 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது.

    24 விதவைகளுக்கு ரூ.6 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 841 மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.59.16 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    கூட்டுறவுத்துறை மூலம் 258 முழுநேர நியாய விலைக் கடைகள், 77 பகுதி நேர கடைகள் என மொத்தம் 335 ரேஷன் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் 34 நடமாடும் நியாய விலைக் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடா்ந்து தெங்குமரஹாடா, எடப்பள்ளி கூட்டுறவுச் சங்கங்களுக்கு பொருட்களை கொண்டுச் செல்ல வசதியாக 2 புதிய லாரிகள் வழங்கப்பட்டன. பின்னர் அமைச்சரும், எம்.பி.யும் அங்கு அமைக்க ப்பட்டு இருந்த பல்வேறு கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்டனா்.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளா் வாஞ்சிநாதன், ஊட்டி ஊராட்சி.ஒன்றிய தலைவர் மாயன், நகராட்சி துணைதலைவர் ரவிக்குமார் உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

    • கோத்தகிரி ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் ராஜேஷ்சந்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
    • டானிங்டனில் இருந்து புறப்பட்ட ஊர்வலம்காமராஜர் சதுக்கத்தை அடைந்தது

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, எருமாடு ஆகிய பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

    இதன்ஒருபகுதியாக கோத்தகிரி டானிங்டன் பகுதியில் இருந்து புறப்பட்ட அணிவகுப்பு ஊர்வலத்தை கோத்தகிரி ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் ராஜேஷ் சந்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    நிர்வாகிகள் கணேசன், கன்னாவரை ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டானிங்டனில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், காமராஜர் சதுக்கம், மார்கெட்திடல், பஸ்நிலையம், தாலுகா அலுவலக சாலை, ராம்சந்த் சதுக்கம் வழியாக காமராஜர் சதுக்கத்தை அடைந்தது. தொடர்ந்து அங்குள்ள தனியார் அரங்கில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

    ஆர்.எஸ்.எஸ் பேண்டு வாத்தியத்துடன் சீருடை அணிந்து சென்ற அணிவகுப்பு ஊர்வலத்தில் பெண்கள் உள்பட சுமார் 250 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    ஊர்வலத்தில் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் உருவப்படம் மற்றும் பாரதா மாதா புகைப்படம் ஆகியவை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.

    முன்னதாக ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் செல்லும் பாதையை மாவட்ட எஸ்.பி. சுந்தரவடிவேல் ஆய்வு செய்தார்.

    ஊர்வலம் நடை பெறுவதையொட்டி குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என சுமார் 200 மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • காட்சி முனைக்கு சென்று கிடுகிடு பள்ளத்தாக்கு, நீர்வீழ்ச்சிகளை பார்வையிட்டு மகிழ்ச்சி
    • பகல் நேரத்தில் பனிமூட்டமும் அதிகரித்து இருப்பதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் தற்போது வெண்மையான மேகமூட்டமும். லேசான சாரல் மழையும், இதமான குளிர்ச்சியும் நிலவுகிறது.

    எனவே தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மராட்டிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், குன்னூர் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    குன்னூரில் உள்ள லாம்ஸ்ராக் பகுதியில் உள்ள காட்சி முனைக்கு சென்று கிடுகிடு பள்ளத்தாக்கு, ராட்சத பாறைகள், பெண் உறங்குவது போல அமைந்திருக்கும் மலைகள், நீர்வீழ்ச்சிகளை பார்வையிட்டு புகைப்படம் எடுத்து கொள்கின்றனர்.

    தொடர்ந்து அங்கு நிலவும் இதமான தட்பவெப்ப நிலையை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர். குன்னூரில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.

    பகல் நேரத்தில் பனிமூட்டமும் அதிகரித்து இருப்பதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மலைப்பாதையில் செல்கின்றன.

    • யானைகளை கையாளும் முறை குறித்து கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் விளக்கம்
    • யானைகள் வழித்தடத்தில் உள்ள தடைகள் குறித்து கல்லூரி பேராசிரியர் பேச்சு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், நாடுகாணி பகுதியில் உள்ள தமிழக வனத்துறைக்கு சொந்தமான ஜீன்பூல் காா்டனில், ஊட்டி அரசு கலைக்கல்லூரி வனஉயிரின உயிரியல்துறை, இந்திய வனஉயிரின அறக்கட்டளை சாா்பில் யானைகள் பாதுகாப்பு கருத்தரங்கு நடைபெற்றது.

    நாடுகாணி வனச்சரக அலுவலா் வீரமணி வரவேற்றாா். கருத்தரங்கில் யானைகள் பாதுகாப்பு, மனிதன்- யானை மோதல், முரண்படும் யானைகளை கையாளும் விதம், களைச்செடிகளால் ஏற்படும் பாதிப்பு, களை மேலாண்மை மற்றும் யானைகளின் வாழ்வியல் முறை போன்ற தலைப்புகளில் கலந்தாய்வு நடைபெற்றன.

    இதன்அடிப்படையில் கூடலூா் வனக் கோட்டத்தில் மனிதன்-யானை மோதலை களைய கருத்துரு வழங்கப்பட்டது. ஊட்டி அரசு கலைக் கல்லூரி வனஉயிரின உயிரியல்துறை தலைவா் ராமகிருஷ்ணன் பேசுகையில், கூடலூா் கோட்டத்தில் 1976-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வனப்பரப்பில் ஏற்பட்டு உள்ள மாற்றம், பாதிப்புகள், யானைகள் வழித்தடத்தில் உள்ள தடைகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தாா்.முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் பேசுகையில், மனிதன்-யானை மோதல் ஏற்படும்போது யானைகளை கையாளும் முறை குறித்தும் விளக்கி கூறினார்.

    தொடர்ந்து வன உயிரின மோதல் குறித்த தெளிவுரை, கருத்து பரிமாற்றமும் நடைபெற்றது.

    • ஒவ்வொரு பூத்கமிட்டியிலும் ஆய்வு செய்து புத்தகத்தில் கையெழுத்திட்டனர்
    • சிறப்பாக செயல்பட்ட ஊட்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுக்கு பாராட்டு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி, மகளிர் குழு இளைஞர்-இளம்பெண்கள் பாசறை ஆகிய பணிகள் நிறைவுபெற்றன.

    தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள் அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினர்.மாவட்ட பூத்கமிட்டி பொறுப்பாளரும், புரட்சித்தலைவிஅம்மா பேரவை மாநில இணை செயலாளருமான பொன்ராஜா தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் முன்னிலை வகித்தார்.தொடர்ந்து அனைத்து ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகி மற்றும் பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஒவ்வொரு பூத்கமிட்டியிலும் பொறுப்பாளர் ஆய்வு செய்து புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

    பின்னர் சிறப்பாக செயல்பட்ட ஊட்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநில எம்.ஜி.ஆர் இளைஞர்அணி பாலநந்தகுமார், மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தேனாடு லட்சுமணன், மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் டி.கே.தேவராஜு, பாசறை மாவட்ட செயலாளர் அக்கீம்பாபு, ஊட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பா.குமார், குந்தா மேற்கு ஒன்றிய செயலாளர் சக்சஸ் சந்தின், பேரூராட்சி செயலாளர் கேத்தி கண்ணபிரான், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் எப்பநாடு கண்ணன், மீனவரணி மாவட்ட செயலாளர் விஷாந்த் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    ×