search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "raza"

    • இந்த ஆண்டு மட்டும் 32 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்
    • 841 மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.59.16 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    ஊட்டி,

    ஊட்டியில் 70-ஆவது கூட்டுறவு வார விழா கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற்றது. சுற்றுலா அமைச்சா் கா.ராமசந்திரன், ஆ.ராசா எம்.பி. ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடர்ந்து 64 குழுக்களைச் சோ்ந்த 964 பயனாளிகளுக்கு ரூ.6.39 கோடி மதிப்பில் கடனு தவிகள் வழங்கப்பட்டன.

    தொடா்ந்து அமைச்சா் கா.ராமசந்திரன் நிகழ்ச்சியில் பேசியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு துறை சாா்பில் 20,838 பயனாளிகளுக்கு ரூ.70.57 கோடி மதிப்பில் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல 3,179 சுய உதவி குழுக்களைச் சோ்ந்த 31,996 பயனாளிகளுக்கு ரூ.89.53 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் 2022-2023-ம் நிதியாண்டில் 28,565 விவசாயிகளுக்கு ரூ.240.74 கோடி பயிா்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது. 2023-2024 நிதியாண்டில் 31.10.2023 வரை மட்டும் 12,072 விவசாயிகளுக்கு ரூ.112 கோடி பயிா்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது.

    இதுதவிர மாற்றுத்திறனா ளிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. உரிய காலத்தில் திருப்பி செலுத்துபவா்க ளுக்கு வட்டி முழுவதும் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் 32 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது.

    24 விதவைகளுக்கு ரூ.6 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 841 மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.59.16 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    கூட்டுறவுத்துறை மூலம் 258 முழுநேர நியாய விலைக் கடைகள், 77 பகுதி நேர கடைகள் என மொத்தம் 335 ரேஷன் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் 34 நடமாடும் நியாய விலைக் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடா்ந்து தெங்குமரஹாடா, எடப்பள்ளி கூட்டுறவுச் சங்கங்களுக்கு பொருட்களை கொண்டுச் செல்ல வசதியாக 2 புதிய லாரிகள் வழங்கப்பட்டன. பின்னர் அமைச்சரும், எம்.பி.யும் அங்கு அமைக்க ப்பட்டு இருந்த பல்வேறு கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்டனா்.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளா் வாஞ்சிநாதன், ஊட்டி ஊராட்சி.ஒன்றிய தலைவர் மாயன், நகராட்சி துணைதலைவர் ரவிக்குமார் உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

    • பாகிஸ்தானுக்கு எதிராக 3 முக்கிய விக்கெட்டுகளை ராசா கைப்பற்றினார்.
    • ஜிம்பாப்வேயின் கடைசி 4 வெற்றிகளில் 3 ஆட்டநாயகன் விருதுகளை ராசா தட்டிச் சென்றுள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 24-வது லீக் போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் பாகிஸ்தானை கத்துக்குட்டியாக கருதப்படும் ஜிம்பாப்வே வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து வரலாறு படைத்தது.

    இந்த வெற்றியால் 2 போட்டிகளில் 3 புள்ளிகளை பெற்ற ஜிம்பாப்வே புள்ளி பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் 2 போட்டிகளில் தோல்வியடைந்த பாகிஸ்தான் நாக்-அவுட் செல்லும் வாய்ப்பையும் குறைத்துக் கொண்டுள்ளது.

    ஜிம்பாப்வேயின் இந்த வெற்றிக்கு பேட்டிங்கில் 9 ரன்கள் எடுத்தாலும் பந்து வீச்சில் 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்த சிக்கந்தர் ராசா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். உலகக்கோப்பை போட்டியில் சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்கள் கலங்கி விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று போட்டியின் முடிவில் நெகிழ்ச்சியாக பேசினார். மேலும் இவர் பாகிஸ்தானில் பிறந்து இன்று அந்நாட்டுக்கு எதிராகவே சம்பவம் செய்து மிரட்டியுள்ளார்.

    ஜிம்பாப்வேயின் கடைசி 4 வெற்றிகளில் 3 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ள அவர் இந்த வருடம் மட்டும் டி20 கிரிக்கெட்டில் 7 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை தகர்த்த அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

    1. சிக்கந்தர் ராசா : 7* (2022)

    2. விராட் கோலி : 6 (2016)

    3. சூர்யகுமார் யாதவ் : 5 (2022)*

    4. முகமது ரிஸ்வான் : 5 (2021)

    5. ஷேன் வாட்சன் : 5 (2012)

    ×