என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அருவங்காட்டில் குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி
    X

    அருவங்காட்டில் குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி

    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
    • குழந்தைகளின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    அருவங்காடு,

    அருவங்காடு கார்டைட் பேக்டரி பகுதியில் உள்ள அங்கூர் வித்யாமந்திர் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை சிறப்பிக்கும் வகையில், ப்ரீ-கே.ஜி, எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி படிக்கும் குழந்தைகளுக்கான பேச்சுப்போட்டி, கையெழுத்து போட்டி, உச்சரிப்பு போட்டி, மாறுவேடப் போட்டி மற்றும் ஓவிய போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டன.

    இந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. முன்னதாக தலைவர் ஸ்ரீமதி ராஷிகோயல், துணைத் தலைவர் மெளஸ்மி மல்லிக் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    இதில் குழந்தைகளின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×