search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "State Rights Conference"

    • நீலகிரி மாவட்ட தி.மு.க ஆலோசனை கூட்டம், அவைதலைவர் போஜன் தலைமையில் நடைபெற்றது
    • டேன்டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்-ஆ.ராசா பேச்சு

    ஊட்டி, 

    நீலகிரி மாவட்ட தி.மு.க ஆலோசனை கூட்டம், மாவட்ட அவைதலைவர் போஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிகுமார், லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர்அலி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கழக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ.இராசா கலந்துகொண்டு பேசினார். பின்னர் நடந்த கூட்டத்தில் டேன்டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ், திருத்தப்பட்ட தினசம்பளம் 438 ரூபாய் அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆ.ராசா எம்.பி.க்கு பாராட்டு தெரிவிப்பது,

    கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை தொடர்ந்து சிறப்புடன் நடத்துவது, எம்.பி தேர்தலில் கழக வெற்றிக்கு பாடுபடுவது, சேலத்தில் டிசம்பர் 17-ந்தேதி நடக்க உள்ள தி.மு.க இளைஞரணியின் 2-வது மாநில உரிமை மாநாட்டில் திரளாக கலந்துகொள்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் நகர செயலாளர்கள் ஜார்ஜ், ராமசாமி, இளஞ்செழியன், ஒன்றிய செயலாளர்கள் லியாகத் அலி, பரமசிவன், காமராஜ், லாரன்ஸ், நெல்லை கண்ணன், பிரேம்குமார், பீமன், சுஜேஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, சதக்கத்துல்லா, பில்லன், தொரை, ஷீலாகேத்ரின்,

    பேரூர் கழக செயலாளர்கள் பிரகாஷ்குமார், உதயகுமார், சதீஷ்குமார், நடராஜன், கண்டோன்மென்ட் நகரிய செயலாளர் மார்டின், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் இமயம் சசிகுமார், கோமதி, விவேகானந்தன், வெங்கடேஷ், காந்தல் ரவி, எல்கில் ரவி,

    மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நவுபுல், பாபு, நாகராஜ், பத்மநாபன், பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் ராம்குமார், சுனிதா, கீர்த்தனா, மாயன், நகராட்சி தலைவர்கள் வாணீஸ்வரி, ஷீலாகேத்ரின், பரிமளா, சிவகாமி,

    பேரூராட்சி தலைவர்கள் கௌரி, கலியமூர்த்தி, சத்தியவாணி, ஹேமாமாலினி, பேபி, ராதா, ஜெயகுமாரி, சித்ராதேவி, வள்ளி, பங்கஜம் உட்பட நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் தலைமை செயற்குழு உறுப்பினர் திராவிடமணி நன்றி கூறினார்.

    ×