search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வார விழா"

    • வாசிப்பின் முக்கியத்தும், நூலகத்தின் பயன்பாடு பற்றி நிர்வாகிகள் பேச்சு
    • வெடிமருந்து தொழிற்சாலை மேல் நிலைப்பள்ளி ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் பங்கேற்பு

    அருவங்காடு,

    அருவங்காடு கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் 56-வது தேசிய நூலக வார விழா, புத்தக கண்காட்சியுடன் துவங்கியது.

    ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அமல்ராஜ் முதல் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசுகையில், வாசிப்பின் முக்கியத்தும், நூலகத்தின் பயன்பாடு பற்றி எடுத்துரைத்தார்.நிகழ்ச்சியில் டெம்ஸ் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் நந்தகுமார், சுந்தர்ராஜ் மெட்டில்டா , வெடிமருந்து தொழிற்சாலை மேல் நிலைப்பள்ளி ஆசிரியைகள் புனிதா, வித்யாசினி, நியூசெஞ்சுரி புக்ஹவுஸ் மேலாளர் ரங்கராஜன் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் ஆகியோர் பங்கேற்றனர். நூலகர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார். 

    • மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
    • பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் கூட்டுறவு துறையின் மூலம் 70-வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது.

    ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, 5 ஆயிரத்து 47 பேருக்கு ரூ. 34கோடியே 30 லட்சம் மதிப்பில் பல்வேறு கடன் உதவிகளையும், சிறப்பாக செயல்பட்ட 40 கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்களையும், கூட்டுறவு வார விழாவையொட்டி நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கி பேசினார்.

    இதில் ஆற்காடு ஜெ.எல். ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ.முன்னிலை வகித்தார்.

    கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சிவக்குமார் வரவேற்றார்.

    வேலூர் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் (பொறுப்பு) முருகேசன் திட்ட விளக்கயுரை யாற்றினார்.

    பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் சிவமணி கூட்டுறவு வார விழா உறுதிமொழியை வாசித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஒன்றிய குழு தலைவர்கள் புவனேஸ்வரி சத்தியநாதன்,அனிதா குப்புசாமி, நகரமன்றத் தலைவர் மேல்விஷாரம் முகமது அமீன், ராணிப்பேட்டை நகர மன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம் உள்பட கூட்டுறவு துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், மகளிர் குழுவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    • இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது
    • கொடியேற்று விழா நடைபெற்றது

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நேற்று தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு திருவண்ணா மலையில்உள்ள தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய மண்டல அலுவலக வளாகத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது.

    கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் கோ.நடராஜன் தலைமை தாங்கினார். மத்திய கூட்டுறவுவங்கியின் இணைப்பதிவாளர் கா.ஜெயம் கூட்டுறவு கொடியை ஏற்றி கூட்டுறவு வார விழாவை தொடங்கி வைத்தார்.

    இதில் துணை பதிவாளர்கள் ராஜசேகரன், சித்ரா, செயலாட்சியர்கள் மீனாட்சிசுந்தரம், சுரேஷ்குமார், தீபன் சக்கரவர்த்தி, சார்பதிவாளர் விஜயகுமாரி, டான்பெட்மண்டல மேலாளர் சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு இன்று உறுப்பினர் சேர்க்கை மற்றும் கடன் மேளா நடைபெற உள்ளது.

    நாளை செங்கம்அடுத்த அந்தனூர் கிராமம் மற்றும் செய்யாறு அடுத்த கடம்பை ஆகிய கிராமங்களில் இலவச கால்நடைசிகிச்சை முகாம்கள் நடைபெறும். 17-ந் தேதி பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலுதலைமையில் திருவண்ணாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவு வார விழா நடைபெறுகிறது.

    18-ந் தேதி திருவண்ணா மலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு வார விழா கருத்த ரங்கம்ந டைபெறுகிறது. 19-ந் தேதி நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்நடைபெற உள்ளது.

    20-ந் தேதி திருவண்ணா மலை வேளாண் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு சங்கம்மற்றும் செய்யாறு கிளை அலுவலகத்தில் ரத்த தான முகாம் நடைபெறும் என கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் கோ.நடராஜன் தெரிவித்தார்.

    • உலக தாய்ப்பால்‌ வார விழா "தாய்ப்பால்‌ ஊட்டலை சாத்தியமாக்குவோம்‌ பணிபுரியும்‌ பெற்றோரின்‌ வாழ்வில்‌ மாறுதலை உருவாக்குவோம்‌" என்ற தலைப்பில்‌ நடைபெற்றது.
    • தாய்க்கும்‌ சேய்க்கும்‌ பல நலத்திட்டங்களை செயல்படுத்தி, மக்கள்‌ நலனில்‌ அதிக கவனம்‌ செலுத்தி வருகிறார்கள்‌.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா "தாய்ப்பால் ஊட்டலை சாத்தியமாக்குவோம் பணிபுரியும் பெற்றோரின் வாழ்வில் மாறுதலை உருவாக்குவோம்" என்ற தலைப்பில் நடைபெற்றது.

    விழாவில் கலெக்டர் உமா பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மகளிரும், குழந்தைகளும் நலமுடன் வாழ்ந்தால் மாநிலம் செழிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, தாய்க்கும் சேய்க்கும் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி, மக்கள் நலனில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    பெண்கள் மற்றும் குழந்தை களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் 2023 ஆம் ஆண்டு உலகத் தாய்ப்பால் வாரத்தின் கருத்தாக "தாய்ப்பால் ஊட்டலை சாத்தியமாக்குவோம் பணிபுரியும் பெற்றோரின் வாழ்வில் மாறுதலை உருவாக்குவோம்" என்ற தலைப்பில் நடைபெற்று வருகிறது

    பிறந்த குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் தேவை யான ஊட்டச்சத்துகள் தாய்ப்பாலில் மட்டுமே சரிவிகிதத்தில் உள்ளது. தாய்ப்பால் கொடுப்பது தாயின் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. குழந்தையின் சிறப்பான ஆரோக்கியமான வளர்ச்சி, மேம்பாடு மற்றும் உடல் நலத்திற்காக பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் எடைக்குறைபாடு உள்ளிட்ட ஊட்டச்சத்து குறைபாடில்லாத ஆரோக்கியமான குழந்தையாக வளருவார்கள்.

    தாய்ப்பால் உட்கொள்வ தால் குழந்தைகள், கூர்ந்த அறிவுத் திறன் வாய்ந்தவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவை பிற்காலத்தில் வருவதை தடுக்கிறது. தாய்ப்பால் புகட்டுவதால் தாய்மார்களுக்கு பிரசவத்துக்கு பின் வரும் இரத்த கசிவு போன்ற ஆபத்து குறைகிறது. பிறந்த குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் தாய்ப்பாலில் மட்டுமே சரிவிகிதத்தில் அமைந்துள்ளன. எனவே அனைத்து தாய்மார்களும் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் தாய்ப்பால் தானம் வழங்கிய தாய்மார்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், பிரசவித்த தாய்மார்களுக்கு குழந்தை நல பெட்டகங்களையும் கலெக்டர் டாக்டர். உமா தலைமையில் நாமக்கல் எம்.எல்.ஏ. ராமலிங்கம் முன்னிலையில் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தாஅருள்மொழி, இணை பேராசிரியர் டாக்டர் சுரேஷ் கண்ணன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் குணசேகரன், நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கண்ணப்பன், குழந்தைகள் நல டாக்டர்மஹாலட்சுமி, மற்றும் தாய்மார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி தலைமை வகித்தார்.

    சாயல்குடி

    கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடலாடி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் உலக தாய்ப்பாயல் வார விழா நடைபெற்றது. கடலாடி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி தலைமை வகித்தார்.

    ஒன்றிய ஆணையாளர் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மயிலம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்ட பெண்கள் உலக தாய்ப்பால் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் முனியசாமி பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் குமரையா, ராஜேந்திரன், பிச்சை, செய்யதுராபியா, வாசுகி, வட்டார மேற்பார்வையாளர் பண்ணையரசி, வட்டார ஒருங்கிணைப்பாளர் மைதிலி, வட்டார திட்ட உதவியாளர் வெள்ளை பாண்டியன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான உணவு வகைகள், இரும்பு சத்துள்ள உணவு, சத்தான காய்கறிகள் போன்றவைகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.
    • பேரணியில் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய மேற்கு நடுநிலைப்பள்ளியில் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது, அதை தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது, இந்த விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான உணவு வகைகள், இரும்பு சத்துள்ள உணவு வகைகள். சத்தான காய்கறிகள் போன்றவைகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.

    இந்த பேரணியில் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் முத்துராம லட்சுமி, மேற்பார்வையாளர் லட்சுமி , உதவியாளர் யோக பாரதி ஆகியோர் செய்திருந்தனர்.

    ×