search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new bus station"

    • இங்கு, பஸ் நிலையம் பழுதடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
    • புதிய பஸ் நிலையம் அமைக்க, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நடவடிக்கை மேற்கொண்டார்,

    கடலூர்:

    வடலூர் நகராட்சியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில் தற்போது பழுதடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி திட்டத்தின் கீழ் 5 கோடியே 85 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கி புதிய பஸ் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். இதில் நகராட்சி நிர்வாக இயக்குனர் சசிகலா, வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார், ஆணையர் பானுமதி, நகர மன்ற துணைத் தலைவர் சுப்புராயலு, மற்றும் நிர்வாகிகள் கவுன்சிலர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலைய விரிவாக்க பணிகள் அடுத்த மாதம் தொடங்குகிறது.
    • 2 இடங்களில் தற்காலிக நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியா குமரி, கும்பகோணம், புதுக்கோட்டை,திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்ட ங்கள், உள்ளூர் பகுதிகளுக்கு 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் தினமும் இயக்கப் படுகிறது. இங்கு 6ஆயிரம் பேருக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர்.

    பஸ் நிலைய வளாகத்தில் பஸ் நிறுத்தும் பகுதிகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். பஸ் நுழைவு, வெளியேறும் பகுதியில் ஆபத்தான முறையில் காய்கறி, பழங்கள் விற்கின்றனர். பஸ் நிலைய தரைத்தளம் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. பிளாட்பார கடைகளில் கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுகிறது.

    இதையடுத்து ரூ.45 கோடி மதிப்பீட்டில் பஸ் நிலையத்தை சீரமைக்கவும் சந்தை திடல் வரை விரிவு படுத்தவும் நகராட்சி திட்டமிட்டது.இதற்காக நகராட்சி நிர்வாகத்துறை முதற்கட்டமாக ரூ.20 கோடியில் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி யுள்ளது.அடுத்த மாதம் விரிவாக்க பணிகளை தொடங்க நகராட்சி முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், புதிய பஸ் நிலையம் தற்போ தைய வாகன நிறுத்துமிடம் வரை வணிக வளாகத்துடன் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த பணிகள் முதற்கட்டமாக ரூ.20 கோடியில் தொடங்க உள்ளது. தொடர்ந்து கூடுதல் நிதியை பெறுவதற்கு முயற்சி செய்து வருகிறோம்.

    விரிவாக்க பணிக்காக மகர் நோன்பு பொட்டல் வரை பஸ் நிலையம் வர உள்ளதாக தவறான தகவல்களை கூறுகின்றனர். அவ்வாறு இல்லை. பழைய பஸ் நிலைய பகுதி, ராம நாதபுரம்-மதுரை ரோடு பிள்ளையார் கோயில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வீட்டு வசதி வாரிய காலியிடம் என 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர், நகராட்சி மண்டல இயக்குநரிடம் அனுமதி கேட்டுள் ளோம்.

    அனுமதி வந்தபின் போக்குவரத்து அதிகாரிகள் போலீசாருடன் ஆலோசனை நடத்தி பஸ்கள் நிறுத்தப்படும். வழித்தடங்கள் மற்றும் பஸ் நிலைய இடமாற்றம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றனர்.

    • ஆம்னி பஸ், லாரிகள் நுழைய அனுமதிக்காமல் புதிய பஸ் நிலையத்திற்குள் திருப்பி விட வேண்டும்.
    • இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    கீழக்கரையில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் ஜானிடாம் வர்கீசிடம் கீழக்கரை கே.எல்.கே. வெல்பேர் கமிட்டி சார்பில் மனு அளித்தனர்.

    இது குறித்து அந்த நிர்வாகிகளை அழைத்து கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார். கே.எல்.கே. வெல்பேர் கமிட்டி அவைத்தலைவர் சீனா தானா (எ) செய்யது அப்துல் காதர் தலைமையில் குழுவினர் கலெக்டரிடம் விளக்கம் அளித்தனர்.

    இதையடுத்து கீழக்க ரையில் போக்குவரத்து நெருக்கடி நிறைந்த வி. ஏ. ஓ. அலுவலகம் மற்றும் பீசா பேக்கரி பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்கள் அமைத்து கண்காணிப்பதோடு அதன் மூலம் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்.

    கீழக்கரை நகராட்சியுடன் இணைந்து காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 7 மணி வரை ஊருக்குள் வரும் கனரக வாகனங்கள், லாரிகள், ஆம்னி பஸ்களை ஊருக்குள் அனுமதிக்காமல் புதிய பஸ் நிலையத்திற்குள் திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசுக்கு கலெக்டர் பரிந்துரைத்தார்.

    திருச்செந்தூர், நெல்லை, தூத்துக்குடி செல்லும் தொலைதூர பஸ்கள் கீழக்கரை புதிய பஸ் நிலையம் வரை வந்து செல்லவும் நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார். விரைவில் கீழக்கரையில் போக்குவரத்து காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் அமைப்பது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.

    ஆலோசனை கூட்டத்தில் கீழக்கரை காவல்நிலைய ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம், கே.எல்.கே. வெல்பேர் கமிட்டி தலைவர் சாகுல்ஹமீது ஆலிம், துணை தலைவர்கள் உமர் களஞ்சியம், செய்யது அபுதாஹிர், பொருளாளர் ஷபீக், சமூக ஆர்வலர் ஜஹாங்கீர் ஆலிம், ஏர்வாடி தீயணைப்பு நிலைய கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இது குறித்து கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் கூறு கையில், கலெக்டரின் அறிவுரையின்படி, முதற்கட்டமாக நகராட்சி சேர்மன், அதிகாரிகள், மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி வாகனங்கள் நகருக்குள் வந்து செல்ல நேர கட்டுப்பாடு தீர்மானிக்கப்படும். அதன் பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் வாகனங்கள் உள்ளே செல்வதற்கு தடை ஏற்படுத்தப்படும். இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது என்றார்.

    • மொத்தம் 84 கடைகள் உள்ளது
    • கடைகளை ஏலம் விடுவதில் மாநகராட்சி தாமதம்

    வேலுார்:

    வேலுார் மாநகராட்சிக்கு வருவாய் ஏற்படுத்தும் நோக்கிலும், பயணிகள் வசதிக்காகவும், வேலுார் புது பஸ் நிலையத்தில் தரை மற்றும் முதல் தளத் தில் 84 கடைகள் கட்டப்பட்டன.

    இவற்றின் குறைந்தபட்ச அளவு 100 சதுர அடி. இதுதவிர, பரப்பளவு அதிகமாகவும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இங்கு கட்டப்பட்ட கடைகள் பொது ஏலம் மூலம் வாடகைக்கு விட ஏற்பா டுகள் செய்யப்பட்டது. முதல்கட்டமாக இந்த கடைகளுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஏலம் நடத்த மாநகராட்சி திட்டமிட்டது.

    தொடர்ந்து திட்டமிட்டு கொண்டே இருக்கும் மாநகராட்சி இன்று வரை கடைகளை ஏலம் விடவில்லை.

    இந்த நிலையில் பஸ் நிலையத்தில் 66-ம் எண் கடை திறக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "புதிய பஸ் நிலையத்தில் கடந்த முறை கடை வைத்திருந்தவர்கள் புதிய கடைகள் கட்டி ஏலம் விடுவதற்கு முன்னதாக தங்களுக்கு கடைகளை வாடகை விடுவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

    கோர்ட் உத்தரவின்படி வழக்கு தொடர்ந்தவர்க ளுக்கு குலுக்கல் முறை யில் கடைகள் ஒதுக்க, கடந்த நவம்பர் மாதம் கடைகளுக்கான குலுக்கல் நடந்தது. இதில் 4 பேர் கலந்து கொண்டனர்.

    குலுக்கல் முறையில் ஒதுக்கீடு

    குலுக்கலின் முடிவின்படி அருண் குமார் என்பவருக்கு தரை தளத்தில் 66-ம் எண் கடையும் மற்ற 3 பேருக்கு முதல் தளத்தில் கடையும் ஒதுக்கப்பட்டது.அருண் குமார் மட்டும் கடையை ஏற்றுக் கொண்டார்.

    மற்ற 3 பேரும் முதல் தளத்தில் கடை வேண்டாம் என்று கூறிவிட்டனர். அதன்படி அருண்குமாருக்கு கடை ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

    • தமிழகத்தில் முக்கிய தொழில் நகரமாக நாமக்கல் விளங்குகிறது.
    • இங்கிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ,வெளிநாடுகளுக்கும் தினமும் 4.5 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    நாமக்கல்:

    தமிழகத்தில் முக்கிய தொழில் நகரமாக நாமக்கல் விளங்குகிறது. இங்கிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ,வெளிநாடுகளுக்கும் தினமும் 4.5 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது .

    முட்டை ஏற்றுமதியில் நாமக்கல் மண்டலம் முன்னிலை வகிக்கிறது. அதேபோல கறிக்கோழி ஏற்றுமதியில் தமிழகத்தில் நாமக்கல் மண்டலம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இங்கிருந்து தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    மேலும் லாரி தொழிலிலும் நாமக்கல் முக்கிய இடத்தை பிடித்து உள்ள நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த லாரிகள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் இயக்கப்படுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து அதிக அளவில் நாமக்கல் நகருக்குள் லாரிகள் வந்து செல்கின்றன.

    மேலும் நாமக்கல் வழியாக திருச்சி, மதுரை, கும்பகோணம், தஞ்சாவூர் ,ஓசூர் ,பெங்களூர், கோவை ,திருப்பூர், ஈரோடு, சேலம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நாமக்கல்லில் இருந்து மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், குமாரபாளையம், பள்ளிபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் நாமக்கல் நகரில் முக்கிய சாலையான சேலம் சாலை, மோகனூர், திருச்சி சாலை மற்றும் பரமத்தி வேலூர், திருச்செங்கோடு சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

    இதையடுத்து நகரின் வெளிப்பகுதியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை மாவட்ட தி.மு.க.செயலாளரும் எம்.பி.யுமான ராஜேஷ்குமார் , அமைச்சர் மதிவேந்தன், ராமலிங்கம் எம்.எல்.ஏ மற்றும் திமுக நிர்வாகிகள் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

    இதையடுத்து சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சா லையில் முதலைப்பட்டி பைபாஸ் அருகே புதிய பஸ் நிலையம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது. அதனை தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ. 20 கோடி செலவில் பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது . சேலம், தர்மபுரி, மதுரை , திருச்சி, நாகை, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்பட வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் வகையில் இந்த பஸ் நிலையம் பிரமாண்டமாக ரிங் ரோடு வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    4 நடைமேடைகளுடன் 60 பஸ்கள் ஒரே நேரத்தில் பஸ் நிலையத்தில் நிற்கும் வகையில் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பயணிகள் அமர நவீன இருக்கைகளுடன் கட்டிடங்கள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் உட்பட பல்வேறு வசதிகளும் செய்யப்பட உள்ளது .

    இந்த பணிகள் ஓர் ஆண்டுக்குள் முடிக்கும்

    வகையில் திட்டமி டப்பட்டுள்ளது.இந்த பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வரும் போது நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
    • 83 கடைகளில் 68 கடைகள் மட்டுமே வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளன

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலைய வளாகத்தில் மொத்தம் 83 கடைகள் உள்ளன. இதில் 68 கடைகள் மட்டுமே வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளன.

    வேலூர் மாநகராட்சி டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்பட்டதால், புதிய பஸ் நிலைய கடைகள் மூடப்பட்டு உள்ளன.

    இதன் விளைவாக, புதிய பஸ் நிலையத்தில் சிறு வியாபாரிகள் அமர்ந்து தண்ணீர் குளிர்பானம் பிஸ்கட் தின்பண்டங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.வியாபாரிகள் விற்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகமாக உள்ளது.

    பெரும்பாலும் நீண்ட தூரப் பயணிகள், வளாகத்தில் வியாபாரிகள் விற்கும் பொருட்களை வாங்க வேண்டியுள்ளது. பண்டிகை விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில், வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    பெண்கள் மற்றும் முதியோர்கள் உட்பட பயணிகள் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்து பொருட்களை வாங்க முடியவில்லை. இதனால் அதிக அளவு விலை கொடுத்து பொருட்களை வாங்கி அவதிப்படுகின்றனர்.

    புதிய பஸ் நிலைய வளாகத்தில் ஏ.டி.எம்.களை அமைக்க வங்கி அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தபடுகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூறுகையில்:-

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் ஏலம் விடுவதற்கு எதிராக கோர்ட்டில் 14 வழக்குகள் தொடரப்பட்டது. இதை பல கட்டங்களாக மாநகராட்சி எதிர்கொண்டது. ஒரு வழியாக அந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது.

    வருகிற 25-ந் தேதி புதிய பஸ் நிலைய கடைகள் ஏலம் விட அறிவிப்பு செய்யப்ப ட்டுள்ளது. மற்றபடி வேறு எந்த தடையும் இல்லை. ஏலம் முடிந்து கடைகள் கண்டிப்பாக இந்த மாத இறுதியில் திறக்கப்படும் என்றார்.

    • 6 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு
    • ஏ.டி.எம். அமைக்க வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையம் 9.25 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.53.13 கோடி செலவில் கட்டப்பட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் புதிய பஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.

    புதிய பஸ் நிலைய வளாகத்தில் மொத்தம் 83 கடைகள் உள்ளன.இதில் 68 கடைகள் மட்டுமே வணிக நோக்கத்திற்காக பயன்படுத்த ப்பட உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு கடை எண் 16 ஒதுக்கப்பட்டுள்ளது. கடையின் குறைந்தபட்ச அளவு 100 சதுர அடி. 540 சதுரடி, 800 சதுரடி, 1,200 சதுரடி மற்றும் 1,600 சதுரடி கொண்ட பெரிய கடைகளும் உள்ளன.

    வேலூர் மாநகராட்சி டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்பட்டதால், புதிய பஸ் நிலைய கடைகள் மூடப்பட்டு உள்ளன.

    இதன் விளைவாக, புதிய பஸ் நிலையத்தில் சிறு வியாபாரிகள் அமர்ந்து தண்ணீர் குளிர்பானம் பிஸ்கட் தின்பண்டங்கள் விற்பனை செய்து வருகின்றனர். வியாபாரிகள் விற்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகமாக உள்ளது.

    பெரும்பாலும் நீண்ட தூரப் பயணிகள், வளாகத்தில் வியாபாரிகள் விற்கும் பொருட்களை வாங்க வேண்டியுள்ளது.

    பண்டிகை விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில், வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    பெண்கள் மற்றும் முதியோர்கள் உட்பட பயணிகள் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்து பொருட்களை வாங்க முடியவில்லை.

    இதனால் அதிக அளவு விலை கொடுத்து பொருட்களை வாங்கி அவதிப்படுகின்றனர்.

    புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடைகள் வெகுதூரத்தில் இருப்பதால் எங்களுக்கு வேறு வழியில்லை. எனவே, பஸ் நிலையத்தில் உள்ள வியாபாரிகளிடம் இருந்து பொருட்கள் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

    சில வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பதையும் தவிர்க்க முடியவில்லை என பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்:-

    கடந்த மாதம் நடந்த மாநகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில், புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளுக்கான அடிப்படை விலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    விண்ணப்ப தாரர்களிடம் இருந்து டெண்டர் கோரும் பணி நடைபெற்று வருகிறது. பின்னர், அவர்களில் அதிக விலைக்கு ஏலம் எடுப்பவர்களுக்கு கடைகள் ஒதுக்கப்படும்.

    புதிய பஸ் நிலையத்தில் தரை தளத்தில் 1,800 சதுர அடி மற்றும் 900 சதுர அடி அளவில் 2 உணவகங்களும் வருகின்றன. தவிர, ஆவின் விற்பனை நிலையங்களும் இருக்கும்.

    ஒரு மருந்தகம், காலணிகள், ஆடைகள் மற்றும் ஆடம்பரமான பொருட்களின் விற்பனை நிலையங்கள் மற்றும் ஒரு பேக்கரி அமைய உள்ளது. புதிய பஸ் நிலைய வளாகத்தில் ஏ.டி.எம்.களை அமைக்க வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தபடுகிறது.

    இந்த புதிய கடைகளில் பெரும்பாலான அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்றனர்.

    • பஸ் நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றுவதற்கு மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும்.
    • அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் மாநகர புதிய பஸ் நிலையம் செல்வதற்கு அதிக தூரம் இருப்பதால் பஸ் நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றுவதற்கு மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட திருமணத்தை திரும்ப பெற வேண்டும். கடலூர் மாநகராட்சிக்கு அளித்துள்ள வல்லுனர் குழு அறிக்கை தவறான தகவலை கொடுப்பதால் திரும்ப பெற வேண்டும். கொண்டங்கி ஏரி அருகில் பஸ் நிலையம் அமைத்ததால் சுற்றுச்சூழல் மாசுபடும். கலெக்டர் அலுவலகம் அருகே வெள்ள அபாய பகுதி என கூறி பஸ் நிலையம் அமைப்பதை தடுக்க கூடாது.

    புதிய பஸ் நிலையம் அமைக்க பொருத்தமான இடம் கிடைக்கும் வரை தற்போது உள்ள பஸ் நிலையத்தை நவீனப்படுத்திட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் குளோப், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரஹீம், அனைத்து குடியிருப்போர் சங்க பொதுச் செயலாளர் மருதவாணன், தலைவர் வெங்கடேசன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் பாலு, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் மன்சூர், அனைத்து பொது நல அமைப்புகளின் செயலாளர் ரவி, பொது நல அமைப்பு தலைவர் திருவரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் அமர்நாத் மாவட்ட குழு உறுப்பினர் பக்கிரான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் நாகராஜ், எழுத்தாளர் சங்க மாவட்ட செயலாளர் பால்கி, தமிழ்நாடு மீனவர் பேரமைப்பு தலைவர் சுப்புராயன், தனியார் பஸ் பேருந்து தொழிலாளர் சங்க தலைவர் குரு ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    • கொட்டாம்பட்டியில் புதிய பஸ் நிலையம் கட்ட ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி மந்தை தெற்கு தெருவில் பகுதி நேர ரேசன் கடை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கொட்டாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.என்.எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கொட்டாம்பட்டி கூட்டுறவு சங்க பதிவாளர் பரமசிவம் வரவேற்றார். கூட்டுறவு சங்கங்களின் மதுரை மண்டல இணை பதிவாளர் குருமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    இதில் வெங்கடேசன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பகுதி நேர ரேசன் கடையை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். இதை தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.1000 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, முழுகரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில், கொட்டாம் பட்டி பகுதி வளர்ச்சிக்கு தனி கவனம் செலுத்தி வருகிறேன். இங்கு புதிய பஸ் நிலையம் அமைக்க முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். அதன்படி புதிய பஸ் நிலையத்திற்கு ரூ.5 கோடி அரசு ஒதுக்கி உள்ளது என்றார்.

    மேலும் கொட்டாம்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமை எம்.பி. தொடங்கி வைத்தார். இதில் 2400 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க மாவட்ட துணை பதிவாளர் ராஜேந்திரன், மாவட்ட வழங்கல் அலு வலர் முருகேஸ்வரி, மேலூர் மேலாண்மை இயக்குனர் பாரதிதாசன், கொட்டாம்பட்டி கூட்டு றவு சங்கத் தலைவர் வெங்கடாசலம், மேலூர் வட்ட வழங்க அலுவலர் அரவிந்தன், தும்பைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அயூப்கான், கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவ லர் அன்பரசன், கொட்டாம்பட்டி ஊராட்சி செயலர் சிவராமகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • குறைதீர்வு கூட்டத்தில் வலியுறுத்தல்
    • நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி

    வேலூர்:

    வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு குறைத்தீர்வு முகாம் இன்று காலை நடந்தது. முகாமிற்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தெரிவித்த கோரிக்கைகள் விவரம் வருமாறு:-

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடைகள் ஒதுக்க வேண்டும். மேலும் மாற்றுத்திற னாளிகளுக்கு வீடுகள் மற்றும் வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாற்றுத்திறனாளிகள் பலர் கடன் பெற்று தொழில் செய்து வருகின்றனர். அவர்களுக்கான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் ஊனத்திற்கு ஏற்ப பெற்று வரும் உதவித்தொகை உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேரம் வேலை உள்ளிட்ட சலுகைகள் கொண்டு வர அதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

    அரசு அலுவலங்களில் மாற்றுத்திறனாளிகள் நடப்பது சிரமமாக உள்ளது. எனவே அவர்கள் எளிதாக செல்லும் வகையில் சாய்வு தளம் அமைக்கப்பட வேண்டும். வேலை வாய்ப்புக்காக பலர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். தொழில் பயிற்சி பள்ளி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதற்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பதிலளித்து பேசுகையில், வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கடைகள் ஒதுக்கி தருவது தொடர்பாக மாநகராட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அனுமதி கிடைக்கப்பெற்ற பின் கடைகள் ஒதுக்கப்படும். வீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்பாக மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பட்டா கேட்பவர்களுக்கும் பட்டா வழங்கப்படும்.

    மாற்றுத்திறனாளிக்கான கடன் தள்ளுபடி குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் மேலும் உங்களது கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    • நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் இன்று புதிய பஸ்நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என வியாபாரிகளிடம் தெரிவித்துள்ளோம் என்று மேயர் கூறினார்.

    நெல்லை:

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை புதிய பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டது.

    மேயர் ஆய்வு

    இதனை கடந்த ஆண்டு டிசம்பர் 8-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

    இந்நிலையில் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் இன்று புதிய பஸ்நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, மேலப்பாளையம் மண்டல உதவி கமிஷனர் ஜகாங்கீர் பாதுஷா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது பிளாட்பாரங் கள் சுத்தமாக வைக்கப்பட்டுள் ளதா? கடைகள் முன்பு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து கடைகளின் முன்பு கூரை அமைத்தவர்களை உடனடியாக அகற்றவும், பழக்கடைகளில் அழுகிய பழங்களை விற்க கூடாது எனவும் டீக்கடைகளில் பஜ்ஜி உள்ளிட்ட பண்டங்களை வாழை இலைகளில் வழங்கவும் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து முதல் தளத்தில் அறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மேயர் சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஓய்வறை

    புதிய பஸ்நிலையத்தை ஆய்வு செய்து நடைபாதை வரை கடைகள் விரிவாக்கம் செய்யப்பட்டதை உடனடியாக அகற்ற உத்தரவிட்டுள்ளோம். டீக்கடைகளில் சுகாதாரமான முறையில் தரமான உணவுகளை வழங்க உத்தரவிட்டுள்ளோம். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என வியாபாரிகளிடம் தெரிவித்துள்ளோம்.

    இரவு நேரங்களில் புதிய பஸ்நிலையத்தில் ஆய்வு செய்த போது பெண்கள், முதியவர்கள், பிளாட்பாரங்களில் படுத்திருப்பது காண முடிந்தது. எனவே அவர்களுக்கு பாதுகாப்பான முறையில் புதிய பஸ்நிலையதில் முதல் தளத்தில் ஓய்வறைகள் விரைவில் கட்டி கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

    இங்கு தங்குபவர்கள் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டையை காண்பித்து தங்க அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு வாடகை வாங்கலாமா அல்லது இலவசமாக வழங்கலாமா என ஆய்வு செய்து வருகிறோம்.

    டெங்கு காய்ச்சலை தடுக்க மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் குறித்து தவறான சிகிச்சை அளித்த 38 தனியார் மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    நெல்லை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 84 பணிகள் மேற்கொள்ளப்பட்டு 62 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 22 பணிகள் நடந்து வருகிறது.

    மாநகராட்சிக்கு சொந்தமான சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகிறது. இதனை அகற்றி அந்த சுவர்களில் அரசு திட்டங்கள் குறித்து விளம்பரங்களை எழுத முடிவு செய்துள்ளோம். பழைய பேட்டை பகுதியில் சரக்கு முனையம் அமைக்கும் பணி தற்போது முடிவடைந்துள்ளது.

    இதில் குளிர்சாதன கிடங்கு அமைக்கப்பட்டு தற்போது பரிசோதனை நடந்து வருகிறது. இன்னும் 20 நாட்களில் அதனை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி கூறும் போது, மாநகரில் 4 மண்டலங்களில் சாலைகளில் சுற்றித்திரிந்த 160 மாடுகள் இதுவரை பிடிக்கப்பட்டுள்ளது. அதில் 97 மாடுகளின் உரிமையாளர்களிடம் ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு மாடுகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

    மற்ற மாடுகள் ஏலம் விடப்பட்டுள்ளது. இதுவரை மாடுகள் ஏலம் மற்றும் அபராதம் மாநகராட்சிக்கு ரூ.10 லட்சம் கிடைத்துள்ளது. இந்த தொடர் நடவடிக்கையால் மாநகர சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் எண்ணிக்கை 60 சதவீதம் குறைந்துள்ளது என்றார்.

    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நவகைலாய கோவில்களுக்கு இன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
    • இந்த சிறப்பு பஸ் வருகிற 25-ந் தேதி மற்றும் ஜனவரி 1, 8-ந் தேதி ஆகிய 3 ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை மண்டல தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நவகைலாய கோவில்களுக்கு இன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று காலை நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஆன்மீக சுற்றுலா பயணி களை ஏற்றிக்கொண்டு சிறப்பு பஸ்கள் புறப்பட்டது. இந்த பஸ் பாபநாசம், சேரன்மகாதேவி, கோடக நல்லூர், குன்னத்தூர்

    ( செங்காணி), முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூ மங்கலம் ஆகிய நவகைலாய கோவில்களை சென்றடைந்து மீண்டும் நெல்லை புதிய பஸ் நிலையம் வந்ததடைந்தது.

    இந்த சிறப்பு பஸ் வருகிற 25-ந் தேதி மற்றும் ஜனவரி 1, 8-ந் தேதி ஆகிய 3 ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு காலை 8 மணி முதல் இரவு 8 மணி செய்து கொள்ளலாம் என்று நெல்லை போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    ×