search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதியபஸ்நிலையம்"

    • இங்கு, பஸ் நிலையம் பழுதடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
    • புதிய பஸ் நிலையம் அமைக்க, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நடவடிக்கை மேற்கொண்டார்,

    கடலூர்:

    வடலூர் நகராட்சியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில் தற்போது பழுதடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி திட்டத்தின் கீழ் 5 கோடியே 85 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கி புதிய பஸ் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். இதில் நகராட்சி நிர்வாக இயக்குனர் சசிகலா, வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார், ஆணையர் பானுமதி, நகர மன்ற துணைத் தலைவர் சுப்புராயலு, மற்றும் நிர்வாகிகள் கவுன்சிலர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×