search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "murder case"

    • எடப்பாடி அருகே உள்ள பணிக்கனூரைச் சேர்ந்தவர் தனபால். இவரது தம்பி கனகராஜ் கார் ஓட்டுநராக இருந்தார்.
    • தனபால் கொட நாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஆவணங்களை அழித்ததாக கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீ னில் வெளியே வந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பணிக்கனூரைச் சேர்ந்தவர் தனபால். இவரது தம்பி கனகராஜ் கார் ஓட்டுநராக இருந்தார்.

    தனபால் கொட நாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஆவணங்களை அழித்ததாக கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீ னில் வெளியே வந்தார்.

    இதனிடையே கடந்த 2020-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட நில மோசடி வழக்கில் கடந்த ஜுலை மாதம் 29-ந் தேதி தனபால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் இந்த வழக்கிலும் ஜாமீன் பெற்றார்.

    இந்த நிலையில் இவர் கடந்த சில நாட்களாக கொடநாடு வழக்கு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.

    இதனிடையே கடந்த 14-ந் தேதி கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு தனபால் விசாரணைக்கு ஆஜராகினார். இந்த நிலையில் இன்று காலை வீட்டிலிருந்த அவருக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். 

    • தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தனபால் தற்போது ஜாமீனில் உள்ளதால் சம்மன் அனுப்பி அவரிடம் விசாரித்துக் கொள்ள கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ந் தேதி கொள்ளை சம்பவம் நடந்தது. எஸ்டேட்டில் இருந்த சில ஆவணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு கொள்ளை கும்பல் தப்பியது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி ஓம்பகதூர் படுகொலை செய்யப்பட்டார்.

    தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வருகிறது. தற்போது வழக்கை தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியது. கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் எஸ்.பி. முருகவேல் தலைமையிலான போலீசார் மறுவிசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் இதுவரை 300-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரித்து உள்ளனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலியானார். வழக்கு தொடர்பான சில விவரங்கள் தெரிந்திருந்தும், அதனை மறைத்ததாக கூறி கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். அவர்கள் 2 பேரும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.

    இந்நிலையில் தனபால், பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். தனது தம்பி கனகராஜ் விபத்தில் உயிரிழக்கவில்லை, அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்பது போன்ற பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்து வருகிறார். இதனால் தனபாலிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    இதற்காக ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தனபாலிடம் விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி. தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தனபால் தற்போது ஜாமீனில் உள்ளதால் சம்மன் அனுப்பி அவரிடம் விசாரித்துக் கொள்ள கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

    இதையடுத்து தனபாலுக்கு சம்மன் அனுப்ப சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது. அவர் வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்களை தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கொடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

    இதுகுறித்து அரசு தரப்பு வழக்கில் ஆனந்த் கூறுகையில் கனராஜின் அண்ணன் தனபாலிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி. தரப்பில் ஊட்டி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது இதற்கு தனியாக உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. சம்மன் அளித்து விசாரித்துக் கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்றார்.

    • கல்குவாரியில் வேலை செய்வதற்காக கடந்த 15ந்தேதி புறப்பட்டு வந்தனர்.
    • பிரகாசை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க குவாரியில் பணியாற்றும் சக தொழிலாளர்கள் முடிவு செய்தனர்.

    சென்னை:

    ஈரோட்டில் இருந்து சென்னை வந்த ரெயிலில் பாதுகாப்புக்காக கட்டி போடப்பட்ட வெளி மாநில வாலிபர் கழுத்து இறுகி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடைந்ததும் பயணிகள் அளித்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் இந்த விவகாரத்தில் கொலை வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். மிகவும் பரிதாபத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(25), இவர் உட்பட 10 பேர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் வேலை செய்வதற்காக கடந்த 15ந்தேதி புறப்பட்டு வந்தனர். பின்னர் அனைவரும் ஈரோடு கல்குவாரிக்கு சென்று வேலை செய்து வந்தனர்.

    அப்போது பிரகாசுக்கு திடீரென மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் உடன் பணியாற்றும் சக தொழிலாளர்களுடன் பிரகாஷ் தகராறில் ஈடுபட்டார். இது குறித்து சத்தீஸ்கரில் உள்ள பிரகாசின் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக சொந்த ஊருக்கு அழைத்து வருமாறு தெரிவித்துள்ளனர்.

    இதைதொடர்ந்து பிரகாசை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க குவாரியில் பணியாற்றும் சக தொழிலாளர்கள் முடிவு செய்தனர்.

    இதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ராம்குமார் மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய இருவரும் நேற்று பிரகாசை அழைத்துக் கொண்டு சத்தீஸ்கர் செல்வதற்காக ரப்திகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் ஏறி புறப்பட்டனர்.

    அப்போது பிரகாஷ் பயங்கரமாக கூச்சலிட்டு பயணிகளுக்கு நொந்தரவு கொடுத்துள்ளார்.

    இதனால் ராம்குமாரும் சிறுவனும் சேர்ந்து பிரகாஷின் கை கால்களை கயிற்றால் கட்டி போட்டுள்ளனர். அப்போதும் பிரகாஷ் கூச்சல் போட்டுக்கொண்டே இருந்தார். இதனால் பிரகாசை இருக்கையின் கீழே படுக்க வைத்துள்ளனர்.

    பின்னர் அவர் சத்தம் போடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கழுத்தை துணியால் கட்டியுள்ளனர். பின்னர் இருக்கையுடன் சேர்த்து கம்பியால் கட்டிபோட்டனர். அப்போது பிரகாசுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அவர் உயிருக்கு போராடினார். இருக்கைக்கு கீழே தள்ளி படுக்க வைத்திருந்ததால் அது யாருக்கும் தெரியவில்லை. பின்னர் சத்தமில்லாமலேயே பிரகாசின் மூச்சு அடங்கியது. அவர் கழுத்து இறுகி மூச்சு திணறல் ஏற்பட்டு ஓடும் ரெயிலிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதன் பிறகே ரெயில் பயணிகள் பிரகாஷ் இறந்து கிடந்ததை பார்த்தனர். இது தொடர்பாக ரெயில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடைத்ததும் ரெயில்வே போலீசிடம் புகார் அளித்தனர். இதையடுத்து சென்ட்ரல் ரெயில்வே இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து பிரகாசின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    பிரகாசின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் ராம்குமாரை கைது செய்தனர். சிறுவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக பிரகாசின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சென்னைக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.

    பாதுகாப்பு என கருதி கழுத்தில் கட்டப்பட்ட துணியே வாலிபருக்கு எமனாக மாறிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    • கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
    • கடலூரில் பதுங்கியிருந்த அருண்குமாரை கைது செய்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள கே.வி பழனிச்சாமி நகரில் கடந்த 18 ந் தேதியன்று நாமக்கல் மாவட்டம் வேலூர் பகுதியை சேர்ந்த பெயிண்டர் மோகன்ராஜ் (வயது 32) என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதேவி கொலை வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    இந்நிலையில் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கரூர் பகுதியை சேர்ந்த அருண்குமார் (27) என்பவர் கடலூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் கடலூர் விரைந்தனர். அங்கு பதுங்கியிருந்த அருண்குமாரை கைது செய்த போலீசார் காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். நீதிபதி உத்தரவின் பேரில் அருண்குமார் திருப்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஹக்கீம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தேனி மாவட்டம் கு.துரைசாமிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி மகன் பாண்டி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த காட்டுராஜா மனைவி பாக்கியத்துக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது.
    • கடந்த 2014 செப்டம்பர் 17ந் தேதி தனது வீட்டு அருகே நின்றிருந்த பாண்டியை பாக்கியத்தின் மகன் மணி, மருமகன் விஜயபாண்டி, மகள் பிரேமா ஆகியோர் கத்தியால் குத்தி அருகில் இருந்த கிணற்றில் தள்ளினர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் கு.துரைசாமிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி மகன் பாண்டி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த காட்டுராஜா மனைவி பாக்கியத்துக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 2014 செப்டம்பர் 17ந் தேதி தனது வீட்டு அருகே நின்றிருந்த பாண்டியை பாக்கியத்தின் மகன் மணி, மருமகன் விஜயபாண்டி, மகள் பிரேமா ஆகியோர் கத்தியால் குத்தி அருகில் இருந்த கிணற்றில் தள்ளினர்.

    இதில் பாண்டி உயிரிழந்தார். இது குறித்து பாண்டியின் மகள் மலர்மணி அளித்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்கியம், மணி, விஜயபாண்டி, பிரேமா ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன் பாண்டியை கொலை செய்த மணி, விஜயபாண்டிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் பாக்கியம், பிரேமா ஆகியோரை வழக்கில் இருந்து விடுவித்தும் உத்தரவிட்டார்.

    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி அஞ்சு அசோக், தனது குழந்தைகளுடன் வீட்டில் உணர்வற்ற நிலையில் கிடந்தார்.
    • ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது 3 பேரும் இறந்துவிட்டது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சஜூ சவுலவன் (வயது 52). இவரது மனைவி அஞ்சு அசோக். கோட்டயம் மாவட்டம் வைக்கம் பகுதியை சேர்ந்த இவர் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

    இதனால் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் அங்குள்ள கெட்டரிங் பகுதியில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி அஞ்சு அசோக், தனது குழந்தைகளுடன் வீட்டில் உணர்வற்ற நிலையில் கிடந்தார். அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது 3 பேரும் இறந்துவிட்டது தெரியவந்தது.

    அவர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சஜூ சவுலவன் தான் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்திருப்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு இங்கிலாந்தின் நார்த்தாம்டன் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சஜூ சவுலவனுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.

    • காளியம்மாள் (வயது 47). இவர் முதல் கணவரை விட்டு பிரிந்து மேட்டூரை சேர்ந்த ரவுடி ரகுவை காதலித்து 2-ம் திருமணம் செய்துகொண்டார்.
    • உடலில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரித்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சீரகா பாடி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 47). இவர் முதல் கணவரை விட்டு பிரிந்து மேட்டூரை சேர்ந்த ரவுடி ரகுவை காதலித்து 2-ம் திரு மணம் செய்துகொண்டார். அவர் கடந்த, 20-ந் தேதி உடலில் வெட்டு காயங்களு டன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரித்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:

    காளியம்மாள், ரகு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்துக்கு முதல்நாள் இரவு ரகு, அவரது நண்பர்களுடன் வீட்டுக்கு வந்து சென்றார். இதனால், காளியம்மாள் கொலை தொடர்பாக தனிப்படை போலீசார், ரகுவை தேடி வந்த நிலை யில் நேற்றுமுன்தினம் ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் ஜே.எம்., 2 நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார். அவரை, சேலம் நீதிமன்றத்தில் நாளை ஒப்படைப்பார்.

    பின் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து அதற்கான நடவ டிக்கைகளை எடுத்து வருகி றோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • எரிக் ரிச்சின்ஸ் இறப்பிற்கு காரணம் பெண்டனில் எனப்படும் சக்திவாய்ந்த வலிநிவாரணி மருந்துதான் காரணம் என தெரியவந்தது.
    • கணவருக்கு ஓட்கா மதுபானம் அளித்ததாகவும், அதன் பிறகு அவர் மூர்ச்சையானதாகவும் மனைவி கோரி ரிச்சின்ஸ் கூறியிருந்தார்.

    அமெரிக்காவில் உள்ள உட்டா மாநிலத்தில், சம்மிட் கவுண்டியில் வசித்தவர், கோரி டார்டன் ரிச்சின்ஸ் (33). இவரது கணவர் எரிக் ரிச்சின்ஸ். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் எரிக் ரிச்சின்ஸ் திடீரென காலமானார்.

    இதனையடுத்து சில நாட்கள் கழித்து, கோரி ரிச்சின்ஸ் தனது கணவரின் மரணத்திற்கு பிறகு தாம் அனுபவித்து வந்த சோகத்தை பற்றி குழந்தைகளுக்கு, "என்னோடு இருக்கிறீர்களா?" (Are You With Me?), என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி பிரபலமானார். தனக்கும், தன் குழந்தைகளுக்கும் நிம்மதி கிடைக்க வேண்டியே இந்த புத்தகத்தை தாம் எழுதியிருப்பதாக பேட்டி அளித்திருந்தார். இவருக்கு பலரும் தமது அனுதாபங்களை தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கில் திடுக்கிடும் திருப்பமாக, எரிக் இறப்பிற்கு காரணம் அதிக அளவு அவர் உடலில் காணப்பட்ட, 'ஃபெண்டனில்' (Fentanyl) எனப்படும் சக்திவாய்ந்த வலிநிவாரணி மருந்துதான் என்றும், அதை அளவுக்கதிகமாக அவருக்கு கொடுத்தது அவர் மனைவி, கோரி ரிச்சின்ஸ் தான் என்றும் காவல்துறை ஆதாரத்துடன் கண்டுபிடித்து அவரை கைது செய்திருக்கிறது.

    செய்திகளின் அடிப்படையில், மூன்று குழந்தைகளின் தாய் கோரி, தனது கணவர் எரிக் ரிச்சின்ஸுக்கு, மார்ச் 2022ல் ஃபெண்டனில் என்ற வலி நிவாரணி மருந்தை அளவுக்கதிகமாக கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். விசாரணையில், அவர் கூகுள் தளத்தில் குற்றச்செயல் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்களை தேடியது தெரியவந்துள்ளது.

    அதாவது, உட்டாவில் உள்ள நீண்ட கால சிறைதண்டனை கைதிகளுக்கான சிறைச்சாலைகள் மற்றும் அமெரிக்காவில் உள்ள பணக்காரர்களுக்கான சொகுசு சிறைச்சாலைகள் பற்றிய தகவல்களை அவர் இணையத்தில் தேடியிருக்கிறார்.

    மேலும் தான் தேடும் செய்திகளை நீக்கிவிட்டாலும், நீக்கப்பட்ட செய்திகளை புலனாய்வாளர்களால் பார்க்க முடியுமா? ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீட்டு உரிமை கோருபவர்களுக்கு பணம் செலுத்த எவ்வளவு நேரம் எடுக்கும்? உண்மை கண்டறியும் சோதனைக்கு போலீசார் ஒருவரை கட்டாயப்படுத்த முடியுமா? மற்றும் இறப்பு சான்றிதழில் மரணத்திற்கான காரணத்தை மாற்ற முடியுமா? என்றெல்லாம் அவர் வலைதளங்களில் தேடியுள்ளார்.

    விசாரணையின்போது வெளியான இந்த தகவல்களால், அவரால் சமூகத்திற்கு கணிசமான ஆபத்து என நீதிபதி குறிப்பிட்டார். அத்துடன், அவரை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.

    "புலனாய்வு விசாரணையின் கீழ் இருப்பதற்கான அறிகுறிகள்" மற்றும் "இறப்புக்கான காரணத்துடன் நிலுவையில் உள்ள மரணச் சான்றிதழுக்கான இழப்பீடு வழங்குவதில் தாமதம்" என்று தலைப்பிடப்பட்ட கட்டுரைகளை கோரி படித்ததாக ஊடக செய்தி தெரிவித்துள்ளது.

    இதேபோல் "நலோக்சோன் ஹெராயின் போன்றதா?", "இயற்கைக்கு மாறான மரணம் என்று கருதப்படுவது என்ன?" மற்றும் "கோரி ரிச்சின்ஸ் கமாஸின் நிகர மதிப்பு" ஆகிய தகவல்களை தேடியதாகவும் அச்செய்தி தெரிவிக்கிறது.

    இதுபற்றி அவரது தரப்பு வழக்கறிஞர் கிளேட்டன் சிம்ஸ் கூறும்போது, ஆதாரங்கள் எவ்வாறு சேகரிக்கப்படுகின்றன என்பதைப் பார்ப்பதற்கு வெறுமனே தனது வழக்கு குறித்து ஆராய்ந்ததாகவும், "அவர் குற்றவாளி என சுட்டிக்காட்டும் எதுவும் அங்கு இல்லை" என்றும் தெரிவித்தார்.

    எரிக் ரிச்சின்ஸின் சகோதரி ஏமி ரிச்சின்ஸ் அளித்த வாக்குமூலத்தில், "எரிக் பயங்கரமான சூழ்நிலையில் இறந்தார். அவர் என்னவெல்லாம் சகித்து கொண்டிருக்கிறார் என்பதை நினைத்து நான் வேதனைப்படுகிறேன்" என கூறியிருக்கிறார். ஒரு புறம் எனது சகோதரனின் இறப்பிலிருந்து ஆதாயம் தேடிக் கொண்டு, மறுபுறம் துக்கத்தில் இருக்கும் விதவையாகவும், பாதிக்கப்பட்டவராகவும் கோரி தன்னை காட்டிக்கொண்டிருக்கிறார் எனவும் ஏமி ரிச்சின்ஸ் கூறியுள்ளார்.

    மார்ச் 2022ல் ஒருநாள் நள்ளிரவில் கோரி ரிச்சின்ஸ், காவல்துறையை தொடர்புகொண்டு தனது கணவர் அசைவற்று கிடப்பதாகவும், உடல் குளிர்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். தனது கணவருக்கு ஓட்கா பான கலவை அளித்ததாகவும், அதன் பிறகு சில மணி நேரத்தில் அவர் மூர்ச்சையாகி கிடந்ததாகவும் அதிகாரிகளிடம் கோரி ரிச்சின்ஸ் கூறியிருந்தார்.

    ஆனால், எரிக் ரிச்சின்ஸ் உடலை பரிசோதித்த மருத்துவர், அவர் ஃபெண்டனில் எனப்படும் மருந்தை வழக்கமாக உட்கொள்வதைவிட ஆபத்தை விளைவிக்கும் வகையில் 5 மடங்கு அதிகமாக உட்கொண்டதால் இறந்திருப்பதாக தெரிவித்தார்.

    நீதிமன்றத்தில் தாக்கல் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, டிசம்பர் 2021 மற்றும் பிப்ரவரி 2022க்கு இடைப்பட்ட காலத்தில், எரிக் ரிச்சின்ஸ், போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு நபருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், முதுகு வலிக்காக ஒரு முதலீட்டாளருக்கு பரிந்துரைக்கப்பட்ட வலி மருந்துகள் தேவைப்படுவதால், அதன் பெயரை அனுப்புமாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த காலத்தில் கோரி ஹைட்ரோகோடோன் மாத்திரைகளை பெற்றுள்ளார். அதற்கு பிறகு அதை விட வீரியமிக்க ஒரு மருந்தை கேட்டுள்ளார். மூன்று நாட்களுக்குப் பிறகு அந்த மருந்துகளைப் பெற்றுள்ளார். பிறகு கணவன்-மனைவி இருவரும் காதலர் தின விருந்து சாப்பிட்டுள்ளனர். அதற்கு பிறகு எரிக் ரிச்சின்ஸ் நோய்வாய்ப்பட்டார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, கோரி ரிச்சின்ஸ் மேலும் அதிக ஃபெண்டனிலை பெற்றிருக்கிறார்.

    இந்த வழக்கு அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண்குமார்
    • கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு அருண்குமார், அன்பரசனை கொலை செய்து அங்கிருந்து தப்பிவிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண்குமார், கோர்க்காட்டை சேர்ந்தவர் அன்பரசன்  ஆகியோர் மயிலம் போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றனர். இவர்களை வானூர் அருகே செங்கமேடு-திருவக்கரை சாலையில் மர்மகும்பல் சுற்றி வளைத்தது. இக்கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு அருண்குமார், அன்பரசனை கொலை செய்து அங்கிருந்து தப்பிவிட்டனர்.

    இது தொடர்பான வழக்கு வானூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமை யிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அரி கிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டது.

    இதில் வழுதாவூரைச் சேர்ந்த முகிலனின் கூட்டாளி களான பிரபு, சந்துரு சில மாதங்களுக்கு முன்பாக கொலை செய்யப்பட்டனர். இதில் அருண்குமார், அன்பரசன் ஆகியோருக்கு தொடர்பிருந்தது. இதனால் பழிக்குப்பழி வாங்க இவர்களை முகிலன் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    இதில் தனிப்படை போலீ சார் முகிலனை தேடி சென்ற போது அவர் தப்பி யோடியது தெரியவந்தது. தொடர்ந்து புதுவை மாநி லம் வில்லியனூர் பகுதி, விழுப்புரம் மாவட்டம் வழுதாவூர், வானூர் பகுதி களில் உள்ள முகிலனின் கூட்டாளிகள் 10-க்கும் மேற்பட்டோரிடம் போலீ சார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், வானூரில் நடந்த இரட்டை கொலையில், புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதி கொடாத்தூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 20), விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த மாத்தூரை சேர்ந்த வீரசெழியன் , வழுதாவூரைச் சேர்ந்த ஜெகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பியோடி தலை மறைவாக உள்ள வழுதாவூர் முகிலனை தனிப்படை போலீசார் தேடி வருகின்ற னர். இந்த வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர் புள்ளதா என்பது குறித்தும் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பண்ருட்டியில் 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
    • பழிவாங்கும் நோக்கத்துடன் ரவுடிகள்சுற்றி திரிவதாக பண்ருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்த் என்கிற வசந்தகுமார்(18),சுமன் (24) கொக்குபாளையம் குணா(22) இவர்கள் மூவரும் கொலை வழக்கு ஒன்றில்கைதாகிஜா மீனில் ்வெளிவந்துள்ளனர். நேற்று முன்தினம் ரவுடி வசந்த் என்ற வசந்தகுமாரை கருணா கத்தியால் குத்தினார்.

    இந்த சம்பவத்துக்கு பழிவாங்கும் நோக்கத்துடன் ரவுடிகள்சுற்றி திரிவதாகபண்ருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா உத்தரவின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் தங்கவேலு , தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் ரவுடிகள் சுமன் ,குணா இருவரையும் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

    • ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பெண்ணை முன்கூட்டியே விடுதலை செய்ய நீதிபதிகள் உத்தரவு.
    • நீதிமன்றம் முடிவுகளை எடுக்கும்போது சட்டத்தின் ஆட்சிக்கு கட்டுப்பட்டது என்றும் நீதிபதிகள் கூறினர்.

    புதுடெல்லி:

    தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

    கள்ளக்காதலனின் டார்ச்சர் காரணமாக குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்ய அந்த பெண் முடிவெடுத்திருக்கிறார். அதன்படி குழந்தைகளுக்கு முதலில் விஷம் கொடுத்துள்ளார். பின்னர் விஷத்தை தான் குடிப்பதற்காக ஒரு டம்ளரில் ஊற்றியபோது, அவது மருமகள் தட்டிவிட்டுள்ளார். துரதிர்ஷ்டவசமாக இரண்டு குழந்தைகளும் உயிரிழக்க, தாய் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆயுள் தண்டனை வழங்கியது. அதன்படி தண்டனை அனுபவித்து வந்தார்.

    ஏறக்குறைய 20 ஆண்டுகள் சிறையில் இருந்ததாக கூறி, முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு அந்தப் பெண் மனு கொடுத்தார். ஆனால், அவர் செய்த குற்றத்தின் கொடூரமான தன்மையைக் கருத்தில் கொண்டு, மாநில அளவிலான குழு அளித்த பரிந்துரையை தமிழக அரசு நிராகரித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தை அந்த பெண் நாடினார்.

    இவ்வழக்கின் விசாரணை முடிந்து நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, இரண்டு குழந்தைகளைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பெண்ணை முன்கூட்டியே விடுதலை செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

    மேலும் நீதிமன்றம் என்பது, ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகள் குறித்து சமூகத்திற்கு போதனை செய்யும் நிறுவனம் அல்ல என்றும், முடிவுகளை எடுக்கும்போது அது சட்டத்தின் ஆட்சிக்கு கட்டுப்பட்டது என்றும் கூறினர்.

    'பெண்ணை முன்கூட்டியே விடுவிப்பது குறித்து, மாநில அளவிலான குழு அளித்த பரிந்துரையை அரசு ஏற்காததற்கு சரியான அல்லது நியாயமான காரணம் இல்லை. அந்த பெண் செய்த குற்றத்தை நாங்கள் மறக்கவில்லை. ஆனால் மேல்முறையீடு செய்த அந்த பெண் விதியின் கொடூரமான தாக்கத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளார் என்பதையும் நாங்கள் மறந்துவிடவில்லை.

    எனவே, அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரின் கையொப்பமிட்டு, உள்துறையால் (சிறைச்சாலை-IV) வெளியிடப்பட்ட அரசாணையின்படி, மேல்முறையீடு செய்தவர் முன்கூட்டிய விடுதலையின் பயனைப் பெறுகிறார். அதன்படி, மேல்முறையீட்டாளர் வேறு எந்த வழக்கிலும் தேவைப்படாவிட்டால், உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம்' என நீதிபதிகள் கூறினர்.

    • புதுவை மாநிலத்தை சேர்ந்த பர்கத்துல்லா, ஏழுமலையை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர்.
    • இந்த விசாரணையில் மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்கலாம் என தெரிய வருகிறது.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே எக்கிய குப்பம் மீனவர் பகுதி வம்பா மேடு பகுதியில் விற்பனை செய்த கள்ள சாராயத்தை குடித்துவிட்டு 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது சம்பந்தமாக அப்பகு தியில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 6 பேர்களை மரக்காணம் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் புதுவை மாநிலம் முத்தி யால்பேட்டை பகுதி யை சேர்ந்த பர்கத்துல்லா மற்றும் தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த ஏழுமலை என்ற மொத்த வியாபாரி களிடம் கள்ளச்சாராயத்தை வாங்கினோம். இந்த சாரா யத்தை நாங்கள் எக்கியர் குப்பம் மீனவர் பகுதியில் விற்பனை செய்தோம் என்று மரக்காணம் பகுதி யில் கைது செய்யப்பட்ட சாராய வியாபாரிகள் போலீசாரிடம் கூறியுள்ளனர் .

    இதனைத் தொடர்ந்து புதுவை மாநிலத்தை சேர்ந்த பர்கத்துல்லா மற்றும் ஏழுமலையை போலீசார் நேற்று கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சென்னை வான கரம் பகுதியில் தொழிற்சா லை அமைத்து அங்கு தயா ரிக்கப்படும் மெத்தனாலை அப்பகுதியை சேர்ந்த இளைய நம்பி வயது (55)ராபர்ட் (50) ஆகியோர் எங்களுக்கு மொத்தமாக வழங்கினர். இந்த மெத்த னால் கலந்த எரி சாரா யத்தை தான் நாங்களும் மரக்காணம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியில் உள்ள சாராய வியாபாரிகளுக்கு விற்பனை செய்தோம் என்று கூறியுள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் சென்னை வானகரம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை அமைத்து மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை விற்பனை செய்த இளைய நம்பி மற்றும் ராபர்ட் உள்ளிட்ட வர்களை கைது செய்து மரக்காணம் போலீஸ் நிலையத்தில் வைத்து தொடர்ந்து ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்கலாம் என தெரிய வருகிறது. இதற்கிடையே சாராய வழக்கை கொலை வழக்காக மாற்றி டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். அதன் படி கைது செய்யப்பட்ட சாராய வியாபாரிகள் 11 பேர் மீது கோட்டக் குப்பத்தில் டி.எஸ்.பியாக இருந்த சுனில் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

    ×