என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவிலில் பெயிண்டர் கொலை வழக்கில் வாலிபர் கைது
    X

    கோப்புபடம்

    வெள்ளகோவிலில் பெயிண்டர் கொலை வழக்கில் வாலிபர் கைது

    • கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
    • கடலூரில் பதுங்கியிருந்த அருண்குமாரை கைது செய்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள கே.வி பழனிச்சாமி நகரில் கடந்த 18 ந் தேதியன்று நாமக்கல் மாவட்டம் வேலூர் பகுதியை சேர்ந்த பெயிண்டர் மோகன்ராஜ் (வயது 32) என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதேவி கொலை வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    இந்நிலையில் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கரூர் பகுதியை சேர்ந்த அருண்குமார் (27) என்பவர் கடலூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் கடலூர் விரைந்தனர். அங்கு பதுங்கியிருந்த அருண்குமாரை கைது செய்த போலீசார் காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். நீதிபதி உத்தரவின் பேரில் அருண்குமார் திருப்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஹக்கீம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×